பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,182      💚 மே 05, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"ஆதலால்நாம் இரக்கத்தைப் பெறவும்ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும்தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

பழைய ஏற்பாட்டுக்கால ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் கிருபாசனம் இருந்ததுகிருபாசனத்தின்மேல் உடன்படிக்கையின் பெட்டி இருந்ததுஅங்கிருந்துதான் தேவன் மோசேயுடன் பேசுவார். "அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்." ( யாத்திராகமம் 25 : 22 ) என்று வாசிக்கின்றோம்

ஆனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிரதான ஆசாரியன்  மட்டுமே இந்த மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் செல்ல  முடியும்மேலும் இந்த இடத்தைக்குறித்து மக்களிடையேயும்  ஆசாரியர்களிடமும் ஒருவித அச்சம் இருந்ததுகாரணம்  தவறுதலாக அல்லது தகுந்த முன் தயாரிப்பின்றி இங்கு  செல்வோரை தேவன் அழித்துவிடுவார்எனவே பழைய  ஏற்பாட்டுக்கால  மக்கள் தேவனை அச்சத்துடனேயே பார்த்தனர்

ஆனால்இந்த பயத்தையும் தேவனிடம் ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தைரியமாகப் பேசும் உரிமையையும் நமது புதிய ஏற்பாட்டின் பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து நமக்கு உருவாக்கியுள்ளார்எனவேபழைய ஏற்பாட்டுக்கால ஆசாரியர்கள்போலவும் மக்களைப்போலவும் நாம் அச்சப்படத் தேவையில்லைகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அனைவருமே ஆசாரியர்கள்தான்எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோஉங்களை அந்தகாரத்தினின்று தன்னுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்பரிசுத்த ஜாதியாயும்அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1பேதுரு 2:9) என்று கூறுகின்றார்.

இன்று தேவன் நம்மோடு பேசுவது ஒரு இனிய அனுபவமாக இருக்கின்றதுஅதற்காக ஆவலாய் ஏங்குகின்றோம்ஆனால் பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனது குரலைக் கேட்டு அஞ்சினர்எனவேதான்,  "மோசேயை நோக்கிநீர் எங்களோடே பேசும்நாங்கள் கேட்போம்தேவன் எங்களோடே பேசாதிருப்பாராகபேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )"

அன்பானவர்களேஇஸ்ரவேல் மக்களைப்போல நாம் பயப்படாமல்அவரது இரக்கத்தைப் பெறவும்ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும்தைரியமாய் அவரிடத்தில் நெருங்கிச் சேர்ந்து அவரோடு ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தனிப்பட்ட உறவுடன் பேச முடியும்கிருபையாய் நமக்கு இந்த உரிமையைப் பெற்றுத்தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...