ஆதவன் தியானம்
எண் :- 2052 நாள் :- 21.09.2026
"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." ( ஏசாயா 55 : 6 )
எந்த ஒரு விலைமதிப்பற்ற பொருளும் நமக்குச் சும்மா கிடைக்காது. அவற்றைப் பெற்றிட நாம் ஆர்வமுள்ளவர்களாகவும் அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சியெடுப்பவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தேவாதி தேவனை கண்டடைய நாம் முயற்சியெடுக்கவேண்டியது அவசியம்.
இன்றைய தியான வசனம், "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்" என்று கூறுவது பலருக்கு, "அது என்ன கண்டடையத்தக்க சமயம்?" என மனதில் ஒரு கேள்வியை எழுப்பலாம். அது வேறு ஒன்றுமல்ல, மனம்திரும்புதலுக்கான நற்செய்தி என்றெல்லாம் நமக்குத் தரப்படுகின்றதோ அந்த நாளெல்லாம் அவரைக் கண்டடையத்தக்கச் சமயம்தான்; அப்போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருகின்றார் என்று பொருள்.
எனவேதான் ஏசாயா இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 ) என்று கூறுகின்றார்.
மேலும், சில சோதனைகள், துன்பங்கள் நமக்கு ஏற்படுவதும் அவர் நமக்குச் சமீபமாய் இருக்கின்றார் என்பதற்கு அடையாளம். அவற்றை நாம் புரிந்துகொண்டவர்களாக அவரிடம் திரும்பவேண்டியது அவசியம். "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, இந்த உலகத்தில்கூட நாம் நமக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால் எவ்வளவு சிரமமெடுத்துத் தேடுகின்றோம்; யார் யாரிடமெல்லாமோ சென்று கேட்கின்றோம்; எத்தனை உயர் அதிகாரிகளது வீடுகளை உதவி வேண்டித் தட்டுவதற்கும் துணிகின்றோம். இதனையே ஆண்டவர் இயேசு கூறினார், "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்று.
இந்த உலக காரியங்களுக்காக இப்படி சிரமமெடுக்கும் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வுக்காக இப்படி சிரமமெடுத்துத் தேடவேண்டாமா?
இன்று நமக்குப் பல்வேறு சமயங்களில் பல்வேறு முறைகளில் ஆண்டவரின் வார்த்தைகள் வந்து சேர்கின்றன. அந்த வேளைகளெல்லாம் அவர் சமீபமாயிருக்கிறார்; அந்த நற்செய்திக்கு நாம் செவிகொடுக்கின்றோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். தேவன் வலுக்கட்டாயமாக எவரது உள்ளத்திலும் நுழைந்துவிடுவதில்லை. அவர் மனிதர்களது தனித்துவத்தை மதிக்கின்றார். நாம் அவரைத் தேடினால் நமக்குள் வருவதற்கு வர ஆவலாக இருக்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் சுவிசேஷத்தைக் கேட்கும்போதெல்லாம் அவர் நமது இருதயத்தின் கதவுகளைத் தட்டுகின்றார் என்று பொருள். நாம் கதவைத் திறந்தால் அவர் உள்ளே வருவார். அவரை உள்ளே அனுமதிப்பதும் வெளியிலேயே நிறுத்திவிடுவதும் நமது கையில்தான் இருக்கின்றது. "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )
சுவிசேஷ அறிவிப்புகள் நமக்கு எரிச்சல்மூட்டவேண்டாம்; அவற்றுக்குச் செவிகொடுப்போம். துன்பங்கள் நெருக்கும்போது தேவன் நமது அருகில் இருக்கின்றார் என்பதனை உணர்ந்து அவரைத் தேடுவோம். ஆம், "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )
அவரை உண்மையான உள்ளத்துடன் தேடுவோமானால் அவரை வாழ்வில் நாம் கண்டுகொள்ளலாம். அவர் நமக்குச் செவிகொடுப்பார்; நமக்கு உதவுவார்.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN
MEDITATION
No.: 2052 | Date: 21.09.2026
"Seek the LORD while He
may be found; Call upon Him while He is near." (Isaiah 55:6)
No priceless thing comes to
us for nothing. To obtain them, it is essential that we be eager and make an
effort to receive them. This is what today's meditation verse tells us. It is
essential that we make an effort to find the Lord of lords.
Today's meditation verse
says, "Seek the LORD while He may be found" — this may raise a
question in many minds: "What is that time when He may be found?" It
is nothing else — all the days when the good news of repentance is given to us
are the time when He may be found; it means that during those times He is near
to us.
That is why Isaiah,
continuing today's meditation verse, says, "Let the wicked forsake his way
and the unrighteous man his thoughts; And let him return to the LORD, And He
will have compassion on him, And to our God, For He will abundantly pardon."
(Isaiah 55:7)
Furthermore, certain trials
and troubles that come upon us are also a sign that He is near to us. We must
understand them and return to Him. We read, "Those whom I love, I reprove
and discipline; therefore, be zealous and repent." (Revelation 3:19)
Dear ones, even in this
world, if we need a job opportunity, how much effort we take to search for it;
we go and ask so many people; we even dare to knock on the doors of so many
high officials seeking help. This is what the Lord Jesus said: "For everyone
who asks receives, and he who seeks finds, and to him who knocks it will be
opened." (Matthew 7:8)
If we take such effort for
the things of this world, should we not take such effort and seek for our
spiritual life?
Today, the Lord's words come
to us at various times and in various ways. All those moments are times when He
is near; He is waiting to see whether we listen to that good news. God does not
force His way into anyone's heart. He respects the uniqueness of human beings.
If we seek Him, He is eager to come into us.
Yes, dear ones, whenever we
hear the gospel, it means He is knocking at the doors of our hearts. If we open
the door, He will come in. Whether we let Him in or leave Him standing outside
is in our hands. "Behold, I stand at the door and knock; if anyone hears
My voice and opens the door, I will come in to him and will dine with him, and
he with Me." (Revelation 3:20)
Let the gospel proclamations
not irritate us; let us listen to them. When troubles press in, let us realize
that God is near us and seek Him. Yes, "for He says, 'At the acceptable
time I listened to you, And on the day of salvation I helped you.' Behold, now
is 'the acceptable time,' behold, now is 'the day of salvation.'" (2
Corinthians 6:2)
If we seek Him with a
sincere heart, we can find Him in our lives. He will listen to us; He will help
us.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦