Sunday, August 23, 2026

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 58 / 1 Corinthians 15:58

 தியானம் - 2027

"ஆதவன்" ஆகஸ்ட் 27 வியாழன் 2026


"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2027

"AATHAVAN" – August 27, Thursday 2026

"Therefore, my beloved brethren, be ye stedfast, unmoveable, always abounding in the work of the Lord, forasmuch as ye know that your labour is not in vain in the Lord." — 1 Corinthians 15:58

When we eagerly perform acts of charity, offer help, and engage in ministry for the Lord, these works must not be done for self-promotion or publicity. If they are done out of genuine love, the Lord will remember them and reward us. Furthermore, we should not even perform these good deeds merely expecting a reward in return; rather, serving the Lord ought to spring forth naturally from within us.

Generally, people in this world quickly forget the help others extend to them. No matter how great the assistance rendered, only a very few remember it with gratitude throughout their lives. However, our Lord is not like that; today’s verse reminds us that He never forgets. Because our labour for the Lord is never in vain, the Apostle Paul urges us to remain firm and abound continually in those works done for Him.

Consider this illustration: we cannot survive without breathing air, yet we do not sit around consciously reminding ourselves to breathe. Instead, breathing happens naturally without us even thinking about it. In the exact same way, doing good works for the Lord should become second nature to us. The Lord will never forget such actions.

Scripture assures us that God is not unrighteous to forget the loving deeds we perform in His name:

"For God is not unrighteous to forget your work and labour of love, which ye have shewed toward his name, in that ye have ministered to the saints, and do minister." — Hebrews 6:10

Our God is not unrighteous like some worldly people who live without justice or integrity.

Some people continually boast about and publicize the good deeds they have done. Others complain, saying, "I have done so much good, yet God has done nothing for me." Dearly beloved, God will never forget any work performed with truth and sincerity. He is not unrighteous to forget the labor of love shown toward His name. Moreover, the Lord remains indebted to no one. If this truth is firmly rooted within us, we will continue doing good works for the Lord without expecting anything in return.

Therefore, let us strive to live according to the words of the Apostle Paul, knowing that our labour in the Lord is not in vain, remaining steadfast, unmoveable, and always abounding in the work of the Lord.

May the Lord bless us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          


🦋 Meditation verse - ஏசாயா 58 : 11 / Isaiah 58:11

 தியானம் - 2026

"ஆதவன்" ஆகஸ்ட் 26 புதன் 2026


"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

ஒரு மகனோ மகளோ பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய குழந்தைகள் கேட்பதை மறுக்காமல் அந்தப்பெற்றோர் அவர்களுக்குச் செய்வார்கள். மட்டுமல்ல, அந்தப்பிள்ளைகள் எதிரிபார்ப்பதற்கும் மேலாக பெற்றோர்கள் அவர்களுக்கு நன்மையே செய்வார்கள். 

இதுபோல, நாம் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். எனவே நாம் எதனைப்பற்றியும் பெரிய எதிர்பார்ப்போ கவலையோ இன்றி வாழமுடியும். ஆம், நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். அதாவது, துன்பகாலங்களிலும் நம்மை நிலைகுலையாமல் காப்பாற்றுவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலைகள்  என்பார்கள். அன்பானவர்களே, இதுபோல நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச்  சோலைகள்போல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" என்று. நாம் பராமரிக்கும் தோட்டத்திற்கு நாம் தினசரி நீர்பாய்ச்சுவதுபோல தேவன் நீர்பாய்ச்சி நம்மைப் பராமரிப்பார்; வற்றாத நீரூற்று இருக்குமானால் அந்த இடத்திலுள்ள மரம், செடி, கொடிகள் கோடை வெப்பத்தையும் தங்கி செழித்து வளர்வதுபோல நாமும் இருப்போம். 

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். பணமிருந்தாலும் சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் மனநிம்மதிக்காக மதுவுக்கும், இதர பாவச் செயல்களுக்கும் அடிமையாகி பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2026                                                    "AATHAVAN" – August 26, Wednesday 2026

"And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not." — Isaiah 58:11 (KJV)

When a son or a daughter lives in total obedience to their parents, it brings great joy to the parents. Such parents will not withhold good things from obedient children; moreover, they will do far beyond what the children expect for their well-being.

In the same way, when we live a life acceptable to the Lord, the Lord Himself will guide us. Therefore, we can live without overwhelming anxieties or great worries. Yes, if our life is led by God, we will not be anxious or restless about anything. He Himself will satisfy our soul in times of drought and strengthen our bones—meaning He will keep us steadfast and preserve us even during seasons of affliction.

Even in the harshest deserts, certain spots remain lush and fruitful; these are called oases. Beloved, when we rely on the Lord in this manner, no matter what severe troubles or sorrows come upon us, our soul will find sweet rest in the midst of afflictions, just like an oasis in a desert.

Today, speaking to those who live a life pleasing to Him, the Lord says: "thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not." Just as we water a garden that we tend every day, God will water us and care for us. Where there is an unfailing spring of water, the trees, plants, and vines endure the summer heat and flourish—and so shall we.

We see wealthy people in the world who live without God. We see many individuals who possess immense fame and riches. Yet we observe that their lives are dark, restless, and devoid of true prosperity. Though they have money, many live without peace. Consequently, seeking peace of mind, many become addicted to alcohol and other sinful acts, ending up in despair and perishing through suicide.

The one who pleases the Lord will think upon things pleasing to Him and meditate on His words. If one lives meditating on the Lord's words day and night, the Scripture declares:

"And he shall be like a tree planted by the rivers of water, that bringeth forth his fruit in his season; his leaf also shall not wither; and whatsoever he doeth shall prosper." — Psalm 1:3 (KJV)

Beloved, the scriptures are given by God, and His words will not lie. We must believe them. When we believe, live a life acceptable to Him, and meditate on His words, the blessing spoken in today's verse belongs to us. The Lord shall guide us continually, satisfy our soul in times of great drought, and make our bones strong; we shall be like a watered garden and like an unfailing spring of water.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - ஆதியாகமம் 1 : 2 / Genesis 1:2

 தியானம் - 2025

"ஆதவன்" ஆகஸ்ட் 25 செவ்வாய் 2026


"பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." ( ஆதியாகமம் 1 : 2 )

இந்த பூமியின் ஆரம்பகால நிகழ்வுகள் நமது வாழ்க்கையுடன் ஒன்றித்தே இருக்கின்றது. தேவன் எதனையும் நேர்த்தியான முறையில்தான் உருவாக்குவார். ஆனால் இன்றைய வசனத்தில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது" என்று கூறுகின்றது. ஒழுங்கற்ற நிலையில் தேவன் எதனையும் உருவாக்க மாட்டார். எனவே, சில வேத அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறும்போது, தேவனுக்கு எதிராகச் சாத்தான் கலகம் செய்தது இந்தகாலகட்டத்தில் இருக்கலாம் என்கின்றனர். (ஏசாயா 14:10-17 மற்றும் எசேக்கியேல் 28) எனவே, கலகம் செய்து வீழ்ச்சியடைந்த சாத்தான் இதனைச் செய்திருக்கலாம். எனவேதான் தேவனால் உருவாக்கப்பட்ட பூமியானது ஒழுங்கற்றுப் போனது என்கின்றனர்.   

அன்பானவர்களே, இதுபோலவே மனிதர்களையும் தேவன் செம்மையானவர்களாகவே  உருவாக்கினார். தேவ சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் சாத்தானின் தந்திரத்தால் மனிதன் தேவ சாயலை இழந்தான். தான் இழந்த பரலோக இன்பத்தை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகச் சாத்தான் மனிதர்களை வஞ்சித்து வைத்துள்ளான். இதனால் பூமிக்கு நேர்ந்த கதியே மனிதர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்து இருள் சூழ்ந்து இருந்ததுபோல  மனிதர்களும் வெறுமையும் இருளும் சூழ்ந்தவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், ஆதியில் "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." அதனால் பூமி மாற்றமடைந்தது. தேவன் மனிதர்களும்  இப்படியே மாற்றமடைய விரும்புகின்றார். எனவேதான் தூய ஆவியானவரை அவர் மனிதர்களுக்குத் துணையாகத் தந்துள்ளார். மட்டுமல்ல, தனது வார்த்தையான வெளிச்சத்தையும் மனிதர்களுக்குள் அனுப்பியுள்ளார். இதனையே நாம் "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று."( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

மனிதர்கள் மாற்றமடைய கிறிஸ்துவாகிய மெய்யான ஒளியை பிதாவாகிய தேவன் நமக்குத் தந்துள்ளார். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) ஆம், ஒழுங்கற்றும் இருள்சூழ்ந்தும் இருந்த பூமியை மாற்றி உயிர்க்கோளமாக மாற்றியதுபோல தேவன் மனிதர்களைக் கிறிஸ்துவின் ஒளியின் மூலம் புதிதாக மாற்றுகின்றார். 

ஆம், அன்று "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்"; எனவே பூமி புத்துயிர் பெற்றது. இதுபோல தேவனின் ஆவியானவர் நம்மேல் அசைவாடிட நாம் இடம்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி ஆவியானவர் நமக்குள் அசைவாடிடும்போது நாம் தேவன் அருளும் ஞானத்தை பெற்றவர்களாக மாறமுடியும். "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருக்கின்றதும் ஆழத்தின்மேல் இருள் சூழ்ந்ததுமான நமது வாழ்க்கை ஒளிபெறவேண்டுமானால் ஒளியான கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது அவசியம்; அதுபோல ஆவியானவரின் அசைவாடுதல் நமக்குத் தேவை. நமது வாழ்க்கையினை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். ஒழுங்கற்று இருள் சூழ்ந்திருந்த பூமி புத்துயிர் பெற்றதுபோல நமது வாழ்கையினையும் அவர் மாற்றி மகிழ்விப்பார்.  
 
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2025                                                                                   "AATHAVAN" – August 25 Tuesday 2026

"And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters." — Genesis 1:2 (KJV)

The initial events of this earth closely mirror our own lives. God creates everything in an orderly and perfect manner. Yet today's verse states, "And the earth was without form, and void; and darkness was upon the face of the deep." God does not create anything in a state of chaos or disorder. Therefore, when explaining this passage, some scholars suggest that Satan's rebellion against God may have occurred during this period (Isaiah 14:10–17 and Ezekiel 28). Thus, Satan, who rebelled and fell, may have caused this destruction, resulting in the earth made by God becoming formless and void.

Beloved, in the same way, God created human beings upright and in His own image. But through Satan's subtlety, man lost the image of God. Satan has deceived humanity so that people might not attain the heavenly joy he himself lost. Consequently, the same fate that befell the earth has happened to human lives. Just as the earth was without form, void, and enveloped in darkness, human beings are also filled with emptiness and surrounded by darkness.

However, in the beginning, "the Spirit of God moved upon the face of the waters," and because of this, the earth was transformed. God desires that human beings undergo this very same transformation. That is why He has given the Holy Spirit as a helper to mankind. Furthermore, He has sent the light of His Word into humans. This is what we read:

"And God said, Let there be light: and there was light." — Genesis 1:3 (KJV)

Indeed,

"That was the true Light, which lighteth every man that cometh into the world." — John 1:9 (KJV)

On that day, the Spirit of God moved upon the face of the waters, and thus the earth was revived. Similarly, it is essential that we yield and make room for the Spirit of God to move upon us. When the Holy Spirit moves within us, we become recipients of the wisdom that God grants. As the Apostle Paul writes:

"Now we have received, not the spirit of the world, but the spirit which is of God; that we might know the things that are freely given to us of God." — 1 Corinthians 2:12 (KJV)

If our lives—which may be formless, void, and surrounded by darkness over the deep—are to receive light, Christ, who is the Light, must come into us. Likewise, we need the moving of the Holy Spirit. Let us surrender our lives to God in prayer. Just as the chaotic and dark earth was renewed, He will transform our lives and fill us with joy.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Saturday, August 22, 2026

🦋 Meditation verse - ஓசியா 14 : 9 / Hosea 14:9

 தியானம் - 2024

"ஆதவன்" ஆகஸ்ட் 24  திங்கள் 2026


"இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்." ( ஓசியா 14 : 9 )

தேவன் தனது பிள்ளைகளுக்கு வைத்துள்ள வழிகள் மேலானவைகள், ஆனால் இடுக்கமானவைகள். இந்த இடுக்கமான வழியிலேயேதான் நமது ஆவிக்குரிய பயணம் அமையவேண்டும். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்."  ( மத்தேயு 7 : 13-14 ) என்று கூறினார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? என்று கேள்வியெழுப்புகின்றது.  

நீதிவாழ்க்கை வாழ்பவர்களுக்கு கர்த்தரின் நீதிவழிகள் கடினமாகத் தெரியாது. ஆனால் துன்மார்க்கர்களுக்கு அப்படியல்ல, அந்த நீதியின் வழிகள் அவர்களுக்கு இடறுதலுக்குரிய வழியாகவே இருக்கும். அவர்களுக்கு நாம் நேர்வழியைப் போதித்தாலும் அதனை உணர்ந்துகொள்ளமாட்டார்கள். எனவேதான் அவர்களை இன்றைய தியான வசனம் பாதகர்கள் என்று கூறுகின்றது.  அவர்கள் எந்த நீதி வழியையும் அறியாமல் படுபாதக செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள். 

இத்தகைய துன்மார்க்க பாதகர்களைக் கட்டுப்படுத்தவே பலவித சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு எத்தனை பெரிய இரக்கம் காண்பித்தாலும் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஆம், "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

ஆனால், கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள் என்று இன்றைய தியான வசனம்கூறுகின்றபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ள நீதிமான்களாகிய நாம்  அவரது வழிகளில் நடக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆவியானவர் நம்மை அந்த வழியில் நடத்துகின்றார். எனவேதான் "ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்." (உபாகமம் 8:6) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 
 
ஆம் அன்பானவர்களே, இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவர்களாகவும் இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவர்களாகவும் நாம் வாழவேண்டியது அவசியம்.  கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் வேரூன்றி வளரவேண்டியது அவசியம். ஆவியானவர் நமக்கு அவற்றைத் தெளிவுபடுத்தி நம்மை அந்த வழியில் நடத்தவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் தேவ ஞானத்தில் வளர்ந்து பாதக செயல்களுக்கு விலகிடமுடியும். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2024

“AATHAVAN” – August 24, Monday, 2026

“Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them? for the ways of the LORD are right, and the just shall walk in them: but the transgressors shall fall therein.” Hosea 14:9 (KJV)

The ways that God has ordained for His children are higher and better, yet they are narrow and demanding. It is along this narrow way that our spiritual journey must be lived. Our Lord Jesus Christ Himself said:

“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” — Matthew 7:13–14 (KJV)

This is precisely what today’s meditation verse asks: “Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them?”

For those who live a righteous life, the righteous ways of the Lord will not appear difficult or burdensome. But it is not so with the wicked. The ways of righteousness become a stumbling block to them. Even when the right path is taught to them, they fail to understand or accept it. That is why today’s meditation verse refers to them as transgressors. Without knowing or following the ways of righteousness, they do not hesitate to commit even the most grievous acts of wickedness.

It is to restrain such wicked and transgressive people that various laws have been enacted. Yet, however much mercy and kindness are shown to them, they often refuse to change their ways. Indeed, the Scripture says:

“Let favour be shewed to the wicked, yet will he not learn righteousness: in the land of uprightness will he deal unjustly, and will not behold the majesty of the LORD.” — Isaiah 26:10 (KJV)

But, as today’s meditation verse declares, “the ways of the LORD are right, and the just shall walk in them.” We, who have been redeemed by the precious blood of Christ and made righteous through Him, are called to walk in His ways. The Holy Spirit leads us along this path. Therefore, the Word of God instructs us:

“Thou shalt keep therefore the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.” — Deuteronomy 8:6 (KJV)

Yes, dear beloved, it is essential that we live as people who are wise enough to understand these things and prudent enough to discern them. The Word of the Lord must take root in us and grow within our hearts. It is equally essential that the Holy Spirit enlighten our understanding and lead us in the right way.

Only then can we grow in the wisdom of God and turn away from sinful and transgressive ways. Let us surrender ourselves completely to the guidance of the Holy Spirit and pray that He may lead us continually in the ways of the Lord.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Friday, August 21, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 119 : 71 / Psalm 119:71

 தியானம் - 2023

"ஆதவன்" ஆகஸ்ட் 23  ஞாயிறு 2026


"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் நல்லவை என்று யாரும் கூறமாட்டார்கள். பொதுவாக நாம் எல்லா காரியங்களிலும் உபத்திரவப்படாமல் எளிதாக எதையும் அடைந்திடவே விரும்புவோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. உபத்திரவங்கள் மூலமே நாம் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப்  பெறுகின்றோம். தற்போது நாம்  உபத்திரவப்படுவதுபோலத் தெரிந்தாலும் பிற்காலத்தில் சங்கீத ஆசிரியர் கூறுவதுபோல நாமும், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்று கூறுவோம். 

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். தேர்வுபோன்ற சோதனைகள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் முன்னேற உதவுகின்றன. 

நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவந்த உடனேயே என்னோடு பயின்ற மாணவர்கள் பலரும், எனது ஊரில் என்வயதுடைய பலரும் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அது அப்போது எனக்கு மிகப்பெரிய துன்பமாகத் தெரிந்தது. சோர்ந்துபோய், மனம் வெறுத்துப் போயிருந்தேன். தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதுகூடப் பிடிக்கவில்லை.  கவலையுடன் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். ஆனால், அந்தச் சூழல்தான் நான் தேவனை அறிய உதவியது. பின்னர் நான் கூறினேன், "எனக்கு உலகவேலை கிடைக்காமல் போனது நல்லது, கிடைத்திருந்தால் நான் தேவனை அறிந்திருக்கமாட்டேன்." ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது நன்மைக்காகத் தேவன் இப்படி நம்மை உபத்திரவத்தின் பாதையில் நடத்துவார். 

இப்படி தேவன் நம்மை உபத்திரவப்படுத்துவது நமது  நன்மைக்கே. இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவேதான்  அப்படி நான் உபாத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2023

"AATHAVAN" — August 23

Sunday, 2026

"It is good for me that I have been afflicted; that I might learn thy statutes." — Psalm 119:71

No one would say that afflictions are good. Generally, we desire to attain everything easily without suffering through anything. But spiritual life is not like that. It is through afflictions that we receive higher spiritual experiences. Even if it seems right now that we are suffering, in the future, like the Psalmist, we too will say, "It is good for me that I have been afflicted."

In schools and colleges, examinations are conducted for students. Exams are a test—a test to determine whether a student is eligible to proceed to higher studies. When we undergo a test, we advance to the next stage of life. Furthermore, when these exams bring us to the next level, our joy increases. Tests like examinations help us progress more and more in our spiritual life.

Immediately after I graduated from college, many students who studied with me and many people of my age in my hometown joined good jobs and started earning. But I did not get any job. That seemed like a huge distress to me at the time. I was discouraged and heart-broken. I did not even like going to functions at the homes of acquaintances or relatives. I stayed shut inside my house with sorrow. However, it was that very situation that helped me know God. Later I said, "It is good that I did not get a worldly job; if I had gotten one, I would not have known God." Yes, beloved, sometimes God leads us on the path of affliction for our own good.

God bringing us through affliction in this manner is for our benefit. This is why the devotee Job also says, "When he hath tried me, I shall come forth as gold." (Job 23:10) Gold extracted from a gold mine initially looks like ordinary dirt. It is put into the fire and melted to be converted into gold. We do not know the path of suffering that the beautiful, shining gold ornaments in jewellery shops have passed through. They are refined in fire, beaten, and bent to be shaped into jewellery. Only then do they shine beautifully in jewellery shops to attract onlookers.

In our spiritual life as well, if we are to become suitable and acceptable to God, it is essential to overcome the tests God gives us. That is why the Apostle James says:

"Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him." — James 1:12

Realizing this, the Psalmist says, "It is good for me that I have been afflicted; that I might learn thy statutes." We learn the methods of obeying God's statutes—that is, His commandments—through afflictions. That is why this Psalmist says that it was good that he was afflicted.

It is natural for us to be caught in troubles and sorrows. But instead of being discouraged by troubles like others, we should try to understand the messages God gives us through those troubles. We must try to correct our life's paths. Yes, it is good for us to be afflicted, so that we learn God's statutes.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Thursday, August 20, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 115 : 17, 18 / Psalm 115:17, 18

 தியானம் - 2022

"ஆதவன்" ஆகஸ்ட் 22  சனி 2026


"மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா." ( சங்கீதம் 115 : 17, 18 )

நாம் அதிகமான வசனங்களை அடுக்கி ஜெபிக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம்; அல்லது சிலவேளைகளில் துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது நம்மால் ஜெபிக்கமுடியாமலிருக்கலாம். ஆனால் தேவன் அவற்றைப் பார்ப்பதில்லை. அவர் நமது மனதினை அறிவார். நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாம் அவரைத் துதிப்பதையே அவர் பெரிய ஜெபவிண்ணப்பமாக ஏற்றுக்கொள்கின்றார்.  துதியோடு அவர் சமூகத்தில் நாம் சேர்கின்றோம்.

நமது தேவனாகிய கர்த்தரை நாம் எப்போதும் துதி செய்துகொண்டு இருக்கவேண்டியது அவசியம். துதித்தல் என்பது வெறுமனே அவரைப் புகழ்வது மட்டுமல்ல, மாறாக அவர் நமக்குச் செய்திருக்கும் அனைத்துக் காரியங்களுக்காகவும் அவருக்கு நன்றிசெலுத்துவதுமாகும். மட்டுமல்ல, நமது வாழ்க்கையில்  நாம் செய்யும் எல்லா பணிகளுக்கிடையிலும் நாம் அவரைத் துதிக்கமுடியும். இப்படி இருப்போமானால் நாம் தவறான வழிகளில் செல்லமாட்டோம்.  

இன்றைய தியான வசனம், "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்' என்று கூறுகின்றது. அதாவது, நாம் கர்த்தரைத் துதிக்காமல் வாழ்வோமென்றால் நாம் இறந்தவர்களுக்குச் சமானம். காரணம், இறந்தவர்கள்தான் துதிக்கமாட்டார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. எனவேதான் சங்கீத ஆசிரியர், "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறுகின்றார். மரித்தவர்கள்  என்பது ஆவியில் மரித்து வாழும் மக்களைக் குறிக்கின்றது. அவர்கள் கர்த்தரை நினைக்கவுமாட்டார்கள்; துதிக்கவுமாட்டார்கள். 

சங்கீதம் 136 ஒரு துதியின் சங்கீதமாகும். அந்தச் சங்கீதத்தில் தேவனது ஒவ்வொரு மகத்துவமான காரியத்தையும் பக்தன் நினைவுகூர்ந்து துதிப்பதை நாம் பார்க்கலாம். நமது வாழ்க்கையிலும்கூட நாம் இதனைச் செயல்படுத்திப் பார்க்கலாம். நமது நினைவுதெரிந்த நாள்முதல் நமக்கு நடந்த நல்ல மற்றும் கெட்டக்  காரியங்கள் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து தேவனுக்கு நாம் துதி செலுத்தவேண்டியது அவசியம். "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் மேலான ஒரு நிலையினை அடையும்போது கர்த்தரைத் துதிப்பது நாம் சுவாசிப்பதுபோல இயற்கையாகிவிடும். வலுக்கட்டாயமாக அல்ல, மாறாக நமது இருதயம் கர்த்தரது அன்பில் நிறைந்துவிடுவதால் நம்மை அறியாமலேயே அவரை நாம் துதிப்போம்.  தாவீது இராஜா இந்த அனுபவத்தில்தான், "எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்." ( சங்கீதம் 16 : 7 ) என்கின்றார். இராக்காலங்களில் படுக்கையில் விழிப்பு ஏற்படும்போது நமக்குக் கர்த்தரது நினைவு வரும். அப்போது அவரை நாம் துதிப்போம். 

சரி, இப்படித் துதிப்பதனால் என்ன பலன்? "துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்" ( சங்கீதம் 18 : 3 ) என்கின்றார் சங்கீதக்காரர். அதாவது, நமது உலகச்சத்துருக்கள் மற்றும் ஆவிக்குரிய சத்துருக்களாகிய அலகை இவை துதிக்கும்போது நம்மைவிட்டு அகலுகின்றன. நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகள் அகலுகின்றன. ஆம் அன்பானவர்களே, எரிகோவின் மதில்சுவர்கள் இஸ்ரவேலர் அர்ப்பரித்துக் கர்த்தரைத் துதித்தபோது இடிந்து தகர்ந்தது.  

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தொழுமரத்தில் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில்  "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 ) கர்த்தரைத் துதியாத, ஸ்தோத்தரிக்காத  ஆவிக்குரிய மரித்த வாழ்வு நமக்குத் தேவையில்லை.
 
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2022

"AATHAVAN" August 22

Saturday 2026

"The dead praise not the LORD, neither any that go down into silence. But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD." — Psalm 115:17-18

We may not know how to pray by lining up many scripture verses, or sometimes when afflictions and problems press upon us, we might find ourselves unable to pray. But God does not look at those things; He knows our hearts. When we praise Him from the depths of our soul, He accepts it as a great prayer request. It is with praise that we enter into His presence.

It is essential for us to praise the LORD our God at all times. Praising is not merely extolling Him, but also offering thanks for all the things He has done for us. Moreover, in the midst of all the work we do in our lives, we can praise Him. If we live in this manner, we will not go down wrong paths.

Today's meditation verse says, "The dead praise not the LORD, neither any that go down into silence." That is to say, if we live without praising the LORD, we are equivalent to the dead, because this verse tells us that it is the dead who do not praise Him. That is why the Psalmist says:

"Praise ye the LORD: for it is good to sing praises unto our God; for it is pleasant; and praise is comely." — Psalm 147:1

"The dead" refers to people who are spiritually dead. They neither think of the LORD nor praise Him.

Psalm 136 is a psalm of praise. In that psalm, we can see how the believer remembers and praises God for each of His glorious deeds. We too can practice this in our lives. From the day of our earliest memories, it is necessary that we recall every good and bad event that happened to us and offer praise to God.

"In everything give thanks: for this is the will of God in Christ Jesus concerning you." — 1 Thessalonians 5:18

When we reach a higher stage in our spiritual life, praising the LORD becomes as natural as breathing. It is not forced; rather, because our hearts are filled with the love of the LORD, we praise Him instinctively. King David, in this same experience, says:

"I will bless the LORD, who hath given me counsel: my reins also instruct me in the night seasons." — Psalm 16:7

When we wake up in bed during the night seasons, thoughts of the LORD come to us, and in those moments, we praise Him.

Now, what is the benefit of praising Him like this? The Psalmist says:

"I will call upon the LORD, who is worthy to be praised: so shall I be saved from mine enemies." — Psalm 18:3

That is, when we praise Him, our worldly enemies and our spiritual enemy, the devil, depart from us. The problems surrounding us vanish. Yes, beloved, the walls of Jericho collapsed when the Israelites shouted and praised the LORD.

When Paul and Silas were locked in prison with their feet fastened in the stocks:

"And at midnight Paul and Silas prayed, and sang praises unto God: and the prisoners heard them. And suddenly there was a great earthquake, so that the foundations of the prison were shaken: and immediately all the doors were opened, and every one's bands were loosed." — Acts 16:25-26

Yes, beloved:

"Pray without ceasing." (1 Thessalonians 5:17) "Continue in prayer, and watch in the same with thanksgiving;" (Colossians 4:2)

We do not need a spiritually dead life that does not praise or thank the LORD.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Wednesday, August 19, 2026

🦋 Meditation verse - லுூக்கா 17 : 26 / Luke 17:26

 தியானம் - 2021

"ஆதவன்" ஆகஸ்ட் 21  வெள்ளி 2026


"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். " ( லுூக்கா 17 : 26 )

இன்றைய தினசரி செய்தித்தாட்களை வாசிக்கும்போது நாம் பல்வேறு மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள் ஆங்காங்கே நடைபெறுவதை வாசிக்கின்றோம். பெற்றதாயையே கொலைசெய்யும் பிள்ளைகள், தான் பெற்ற பிள்ளையையே கொலைசெய்யும் தாய்மார்கள், வயது வித்தியாசம் பார்க்காமல் நடைபெறும் கற்பழிப்புக்கள், வன்முறைகள், இயற்கைக்கு மாறுபட்ட பாலுணர்வு வக்கிர செயல்கள் நம்மைத் திகைக்கவைக்கின்றன. பெருகிவிட்ட சமூக ஊடகங்களும் இதற்குப் பெரிய உறுதுணையாக இருக்கின்றன.  

இதுபோலவே நோவாவின் நாட்களிலும் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது. அதனால் பூமியில் தான் உருவாக்கிய மக்களை அழிக்கத்  தேவன் சித்தம் கொண்டார். ஆனால் நடக்கப்போவது எதுவும் தெரியாத மக்கள் இயல்பாக நடப்பதுபோல உண்டு குடித்து பெண்கொண்டு வாழ்ந்தார்கள்.  எல்லோருமே அழிந்துபோயினர். வெள்ளம் வந்தபோது அனைவருமே அழிந்துபோயினர். "நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 27 )

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். அதன்படி பேழையைச் செய்து நோவாவும் அவரது குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர். 

ஆம் அன்பானவர்களே, இந்தத் தியானத்தின் ஆரம்பப் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி, நோவாவின் நாட்களைப்போலவே இன்றும் மக்கள் வாழ்கின்றனர். அன்பில்லாத மனிதர்கள், கொலைவெறிகள், கற்பழிப்புகள், களவு, காமவெறி போன்ற அவலட்சண வாழ்க்கையில் மக்கள் மூழ்கி இருக்கின்றனர்.  

அன்று தேவ எச்சரிப்பும் அறிவுரையும் பெற்ற நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவரைக்  கேலி செய்திருக்கலாம். மட்டுமல்ல, அவர்கள் அவர் கூறியதை நம்பவுமில்லை மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் இறுதியில் மொத்தமாக அழிந்துபோனார்கள். 

இதுபோலவே லோத்தின் நாட்களிலும் மக்கள் இருந்தனர்.  எனவேதான் இயேசு கிறிஸ்து, "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 ) இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். ( ஆதியாகமம் 19 : 14 )

அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி என்று வேதாகமம் கூறுகின்றது. 

உலக ஆசீர்வாதங்களைப்பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோய்விடக்கூடாது.  கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை முன்குறித்துக் கூறப்பட்டப் பலத்  தீர்க்கதரிசனங்கள்  நிறைவேறிவிட்டன. எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து மனம்திரும்பவேண்டியது அவசியம். கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைப்பதே நாம் செய்யவேண்டடியது. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யவேண்டியது. 

"கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 ) என எச்சரிக்கிறார்  தேவன். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2021

"AATHAVAN" – August 21 Friday 2026

"And as it was in the days of Noe, so shall it be also in the days of the Son of man." (Luke 17:26)

When reading today's newspapers, we see various inhumane acts happening everywhere. Children murdering their own mothers, mothers murdering their own children, rapes happening regardless of age, violence, and unnatural sexual perversions leave us stunned. Proliferating social media plays a major role in assisting this.

Similarly, wickedness had multiplied on the earth in the days of Noah. Therefore, God purposed to destroy the people He had created on the earth. But the people, completely unaware of what was to come, lived as usual—eating, drinking, and marrying. Everyone perished. When the flood came, it destroyed them all.

"They did eat, they drank, they married wives, they were given in marriage, until the day that Noe entered into the ark, and the flood came, and destroyed them all." (Luke 17:27)

However, Noah, who walked uprightly before God, found grace in the eyes of the Lord. Therefore, God commanded him to build an ark of wood to save him and his family when He destroyed the world. According to God's instruction, Noah built the ark, and his family was saved.

Yes, beloved, just as mentioned in the beginning of this meditation, people today live just as they did in the days of Noah. People are immersed in a disgraceful lifestyle filled with lovelessness, murderous impulses, rapes, thefts, and lust.

Back then, when Noah received God's warning and instruction and was building the ark, those who saw him might have mocked him. Moreover, they neither believed what he said nor repented. They ate, drank, married, and continued their routine lives. But in the end, they were completely destroyed.

People lived in the same manner during the days of Lot as well. That is why Jesus Christ said:

"Likewise, also as it was in the days of Lot; they did eat, they drank, they bought, they sold, they planted, they builded;" (Luke 17:28)

Here too, Lot went to his sons-in-law and warned them of the impending destruction, but he seemed as one that mocked unto them. (Genesis 19:14)

Beloved, the exact same state continues today. When we speak about the coming of Jesus Christ, even those who call themselves Christians do not believe. Even if they believe, they do not change their character and genuinely repent before God. The Bible declares that a destruction greater than the ones in the times of Noah and Lot is certain to come before the return of Christ.

We must not lose our spiritual life by prioritizing worldly blessings. Many prophecies foretold regarding the second coming of Christ have already been fulfilled. Therefore, it is essential that we stay watchful and repent. Yielding ourselves completely to Christ is what we must do. Submitting ourselves to the guidance of the Holy Spirit is what we must do.

God warns:

"Neither their silver nor their gold shall be able to deliver them in the day of the LORD'S wrath; but the whole land shall be devoured by the fire of his jealousy: for he shall make even a speedy riddance of all them that dwell in the land." (Zephaniah 1:18)

✍️ Bro. M. Geo Prakash      

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 58 / 1 Corinthians 15:58

  தியானம் - 2027 " ஆதவன் " ஆகஸ்ட் 27  வியாழன் 2026 "கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள்...