Wednesday, July 22, 2026

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 4 : 3 / 2 Corinthians 4:3

"ஆதவன்" தியானம் - 1995 

ஜூலை 25 சனி 2026   


"எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்." ( 2 கொரிந்தியர் 4 : 3 )

வேதாகமத்தை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் வேதாகமம் கூறும் செய்தியின் ஆவிக்குரிய உண்மைப் பொருளினை எல்லோரும் எளிதில் அறிந்துகொள்ளமுடியாது. அது குழந்தையைப்போன்ற மனமுள்ளவர்களாய் சத்தியத்தை அறியத் தேடுபவர்களுக்கே முற்றிலும் புரியும். 

இறையியல் கல்லூரிகளில் படிப்பவர்களும், பல்வேறு ஆராய்சியாளர்களும் சுவிசேஷத்தை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.  பல்வேறு கிறிஸ்த சபைப்பிரிவினரும் தங்களது சபைப்பிரிவின் போதனைகளின் அடிப்படையில் வேத வசனங்களுக்கு விளக்கமளிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், தேவனை யாரும் படித்து அறிந்துகொள்ள முடியாது என்பதுதான். மனத்தாழ்மையுடன் நடந்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு  குழந்தை உள்ளத்துடன் வாழ்பவர்களுக்குத் தேவன் பல்வேறு சத்தியங்களை வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். 

இதனையே நாம் "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." (லூக்கா 10:21) என்று இயேசு கூறுவதாக வாசிக்கின்றோம்.

வேதாகமத்தை நூறு சதவிகிதம் விசுவாசக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கவேண்டியது அவசியம். நமக்குப் புரியாத பகுதிகளுக்கு நாமாகப் பொருள்கொள்வது, நமக்குமுன் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்து மற்றவர்கள் எழுதிவைத்துள்ள  விளக்கத்தை நம்புவது இவை முற்றிலும் சரியானதாக இருக்காது. வேதாகமத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவற்றை  புரியவைக்கும்படி நாம் மன ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்த அடிப்படை இல்லாமல் வசனங்களை புரிந்துகொள்ள முயல்வோமானால் நாம் அவிசுவாசிகள் போன்றவர்களே. 

இப்படித் தேவ ஆவியானவரைப் பற்றிக்கொள்ளாமல் இருப்போமானால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தான்  நமது மனக்கண்களைக் குருடாக்கிவிடுவான். ஆம், "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 ) என்று கூறப்பட்டுள்ளபடி நாம் சத்தியத்தை அறியமுடியாத குருடர்களாக மாறிவிடுவோம். 

ஆம் அன்பானவர்களே, நம்மில் யாரும் முற்றிலும் எல்லாம் அறிந்தவர்களல்ல. எனவே நாம் மறைபொருளாக இருக்கும் சுவிசேஷத்தை முற்றிலும் அறிந்துகொள்ள ஒருவேளை தேவ ஊழியர்களை நாடினாலும் அவர்கள் கூறுபவையே முற்றிலும் சரியானது என முடிவெடுக்காமல், "ஆண்டவரே, எனக்குச் சத்தியத்தைப் புரிய வையும்" என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம்.  ஏனெனில், இந்தக்காலத்தில் சுவிசேஷ வசனங்கள் பலரது சொந்த லாபத்துக்காக புரட்டப்படுகின்றன; கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு சபைப்பிரிவும் ஒரே வசனத்துக்கு வெல்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன. 

எந்த தேவ வசனமும் மறைபொருளல்ல. தேவன் தனது பிள்ளைகள் புரிந்துகொள்ளாதபடி எதனையும் எழுதிவைக்கவில்லை. பவுல் கூறுவதுபோல, தேவனுடைய  சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். வாழ்வடைய விரும்பும் தேவ பிள்ளைகளுக்கு எதுவும் மறைவாக இருக்காது. எனவே, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். அவரே நிறைவான உண்மையினை நோக்கி நம்மை வழிநடத்துவார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1995

July 25, Saturday 2026

"And even if our gospel is veiled, it is veiled to those who are perishing,"— 2 Corinthians 4:3

Anyone can read the Bible. However, not everyone can easily understand the spiritual, true meaning of the message it holds. It is fully understood only by those who seek the truth with a child-like heart.

Those studying in theological seminaries and various researchers look at the Gospel through an analytical lens. Different Christian denominations interpret Scripture based on their own denominational doctrines. But the truth is this: no one can come to know God merely through intellect or study. God reveals various truths to those who walk in humility, whose sins are forgiven, and who live with the heart of a child.

It is regarding this that we read Jesus saying:

"At that very time He rejoiced greatly in the Holy Spirit, and said, 'I praise You, O Father, Lord of heaven and earth, that You have hidden these things from the wise and intelligent and have revealed them to infants. Yes, Father, for this way was well-pleasing in Your sight.'" — Luke 10:21

It is essential that we approach the Bible with a one-hundred-percent perspective of faith. Inserting our own interpretations into passages we do not understand, or blindly relying on the explanations written by researchers who studied the Bible before us, may not always be entirely right. We must be eager and earnest for the Author of the Bible—the Holy Spirit—to make these truths clear to us. If we try to understand the verses without this foundation, we are no different from unbelievers.

If we fail to cling to the Spirit of God in this way, Satan, the ruler of this world, will blind the eyes of our minds. Yes, as it is written:

"in whose case the god of this world has blinded the minds of the unbelieving so that they might not see the light of the gospel of the glory of Christ, who is the image of God." — 2 Corinthians 4:4

We will become blind and unable to perceive the truth.

Yes, beloved, none of us knows everything completely. Therefore, even if we seek out God's ministers to fully understand the Gospel that seems veiled to us, we should not conclude that everything they say is absolute truth. Instead, we must pray, "Lord, grant me understanding of Your truth." For in these times, the words of the Gospel are often twisted for personal gain, and different Christian denominations offer conflicting interpretations for the very same verse.

No word of God is intended to remain a hidden mystery. God has not written anything in a way that His children cannot understand. As Paul says, if our Gospel is veiled, it is veiled to those who are perishing. Nothing will remain hidden from God's children who desire to live. Therefore, let us read the Bible with the help of the Holy Spirit. He Himself will guide us into all truth.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Tuesday, July 21, 2026

🦋 Meditation verse - உன்னதப்பாட்டு 1 : 3 / Song of Solomon 1:3

"ஆதவன்" தியானம் - 1994 

ஜூலை 24 வெள்ளி 2026   


"உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரானது பரிமளத் தைலத்தைவிட அதிக வாசனையுள்ளதாக இருக்கின்றது. ஆம், அதன் மணம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து மக்களிடமும் வீசிக்கொண்டிருக்கின்றது.  

இன்றைய தியான வசனம், "ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" என்று கூறுகின்றது. அதாவது, கர்த்தரால் மீட்கப்பட்ட  பாவக்கறை இல்லாத கன்னியர்கள்போல கபடற்ற மக்கள் அவரை நேசிக்கிறார்கள். மட்டுமல்ல, பாவத்தை மேற்கொள்ளும் மெய்யான மன ஆசை உள்ளவர்களும் அவரது நறுமணத்தை உணர்கின்றார்கள். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 14, 15 ) என்று கூறுகின்றார். 

இந்தக் கிறிஸ்துவின் நறுமணம் முதலில் நம்மை வெற்றிச்சிறக்கப்பண்ணுகின்றது. மட்டுமல்ல, நம்மைக்கொண்டு அவரை மற்றவர்களும் அறியும்படியான வாசனையை வெளிப்படுத்துகின்றது. நாம் கூடியிருக்குமிடத்தில் யாராவது ஒருவர் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு வரும்போது அது மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றது அல்லவா?  அதுபோலவே கிறிஸ்துவின் வாசனை நம்மில் இருக்குமானால் அது மற்றவர்களுக்கு நம்மை அடையாளப்படுத்துகின்றது. 

அன்று மரியாள் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நளதம் எனும் நறுமணத்தைலத்தைப் பூசியபோது அந்த வீடு முழுவதும் வாசனை நிரம்பி அனைவரையும் மகிழ்வித்தது. இதனை நாம், "அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது." ( யோவான் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். இப்படி மரியாளைப்போல  நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை உலகிற்கு அறிவிக்கின்றோம்.

ஆனால் யூதாசைப்போன்ற மனமுள்ளவர்களுக்கு இந்த நறுமணம் பிடிப்பதில்லை. அவன் திருட்டுக் குணமுள்ளவனாக இருந்ததால், "இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." ( யோவான் 12 : 5, 6 ) என்றுகூ றப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, யூதாசைப்போன்ற துன்மார்க்கர்களுக்கும், கெட்டுப்போகிறவர்களுக்கும் கிறிஸ்துவின் வாசனை மரணவாசனையாகவே தெரியும்; அதனை அவர்களால் சகிக்கமுடியாது.  எனவே கிறிஸ்துவை அறிவிக்கும் நாமும் "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 16 )

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, கிறிஸ்துவின் பெயர் ஊற்றுண்ட  பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்களான கபடற்றவர்கள் அவரை நேசிக்கிறார்கள். நாமும் உண்மையாக அவரை நேசிப்போமானால் நாமும் கபடற்ற பரிசுத்தமான கன்னியர்களாக இருக்கிறோம் என்று பொருள்; இல்லையானால் அதனை மரணவாசனையாக உணர்ந்த யூதாசைபோன்றவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1994

July 24, Friday2026

“Your oils have a pleasing fragrance, Your name is like purified oil; Therefore, the maidens love you.” — Song of Solomon 1:3

The name of our Lord Jesus Christ carries a fragrance far sweeter than any perfumed oil. Indeed, its scent continues to spread across the entire world to all people today, even after two thousand years.

Today’s meditation verse says, “Therefore the maidens love you.” That is to say, guiltless people, like pure maidens redeemed by the Lord, love Him. Moreover, those who possess a true, heartfelt desire to overcome sin also perceive His divine fragrance.

The Apostle Paul expresses this very truth:

“But thanks be to God, who always leads us in triumph in Christ, and through us reveals the fragrance of the knowledge of Him in every place. For we are a fragrance of Christ to God among those who are being saved and among those who are perishing;” — 2 Corinthians 2:14–15

This fragrance of Christ first leads us to triumph. Furthermore, through us, it diffuses a scent so that others may come to know Him. When someone enters a room wearing an expensive perfume, doesn't it cause everyone to turn and look? In the same way, if the fragrance of Christ rests upon us, it identifies us to those around us.

Back then, when Mary anointed the feet of Jesus Christ with precious nard, the entire house was filled with its fragrance, bringing joy to all. We read of this event:

“Mary then took a pound of very expensive perfume of pure nard, and anointed the feet of Jesus and wiped His feet with her hair; and the house was filled with the fragrance of the perfume.” — John 12:3

Like Mary, we too proclaim the fragrance of Christ to the world.

However, those with a mindset like Judas do not appreciate this fragrance. Because he had the heart of a thief, it is written:

“Why was this perfume not sold for three hundred denarii and the proceeds given to poor people?” Now he said this, not because he was concerned about the poor, but because he was a thief, and as he had the money box, he used to pilfer what was put into it. — John 12:5–6

Yes, dear beloved, to the wicked and those who are perishing—like Judas—the fragrance of Christ feels like an aroma of death; they simply cannot tolerate it. Therefore, as we proclaim Christ, we are:

“to the one an aroma from death to death, to the other an aroma from life to life.” — 2 Corinthians 2:16a

As today’s meditation verse states, the name of Christ is like purified oil poured forth; therefore, the pure and guileless love Him. If we truly love Him, it signifies that we too are pure, holy maidens. If not, it means we are like Judas, who perceived His scent as the aroma of death.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Monday, July 20, 2026

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

 "ஆதவன்" தியானம் - 1993 

ஜூலை 23 வியாழன் 2026   


"எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 4, 5 )

இஸ்ரவேல் மக்களை தேவன் மோசேமூலம் கானானை நோக்கி வழிநடத்தினார். அவர்களுக்கு வனாந்தரத்தில் உணவும் தண்ணீரும் கொடுத்து ஆதரித்தார். தண்ணீர் தாகத்தால் அந்த மக்கள் மோசேயை நோக்கி முறையிட்டபோது மோசே அதனைத் தேவனுக்குத் தெரியப்படுத்தினார். அப்போது தேவன் மோசேமூலம் கன்மலையிலிருந்து அவர்கள் குடிக்கும்படித் தண்ணீரைக் கொடுத்தார். அன்று இஸ்ரவேல் மக்களோடு கூடச் சென்றவரும் கன்மலையிலிருந்து தண்ணீரைக் கொடுத்தவரும், அந்தக் கன்மலையும் கிறிஸ்துவே என்று கூறுகின்றார் பவுல். 

ஆனால், "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, இது இன்று நமக்கு ஒரு எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. அதாவது, நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், அவரோடு ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தலாம். ஆனால், இச்சை எனும் பாவம் நமக்குள் இருக்குமானால் நாம் அந்த இஸ்ரவேல் மக்களைப்போல அழிந்துபோவோம் என்கிறார் பவுல். 

பத்துக்கட்டளைகளின் இறுதிக் கட்டளைதான் "இச்சியாதிருப்பாயாக" என்பது.   ஆனால் நம்மில் பலரும் இதனைப் பெரிய பாவமாகக் கருதுவதில்லை. இச்சை என்பது பொருளாசையினைக் குறிக்கின்றது. மேலும், அடுத்தவர்களுக்கு இருக்கும் பொருட்கள் மேலும், உடைமைகளின்மேலும் ஆசைப்படுவது இச்சை.  "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக" ( யாத்திராகமம் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இஸ்ரவேல் மக்களோடு கிறிஸ்து சென்றிருந்தபோதும், அவர்கள் குடிக்கும்படி தண்ணீர், உண்ணும்படி மன்னா இவைகளைக் கொடுத்தபோதும் அவர்கள் இறைச்சி உணவின்மேல் இச்சைகொண்டு அதனையேத் தேடினார்கள். அவர்களுக்கு தேவன் அவர்கள் ஆசைப்பட்டதுபோல இறைச்சியைக் கொடுத்தாலும்  அவர்களை வனாந்தரத்தில் அழித்தார்.  "தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்." ( எண்ணாகமம் 11 : 33, 34 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, "அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 6 ) என்கின்றார் பவுல். நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இச்சை எனும் பொருளாசையினை விடமுடியாதவர்களாக இருப்போமானால் நம்மை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ள நமக்குத் தகுதியில்லை. 

இச்சையை மேற்கொள்வதே ஆவிக்குரிய வாழ்வின் வெற்றி. எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு நம்மை எச்சரித்துக் கூறுகின்றார், "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்" ( யாக்கோபு 1 : 14, 15 ) என்று.

எப்படி இஸ்ரவேல் மக்கள் அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையாகிய கிறிஸ்து அளித்த தண்ணீரைக் குடித்தும் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லையோ அதுபோல கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் இச்சை நம்மிடம் இருக்குமானால் அவர் நம்மிடமும் பிரியமாய் இருக்கமாட்டார். எனவே முதலில் இந்தப் பாவத்தை மேற்கொள்ள பெலன்வேண்டி தேவனிடம் மன்றாடுவோம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1993

July 23, Thursday 2026

"...and all drank the same spiritual drink, for they were drinking from a spiritual rock which followed them; and the rock was Christ. Nevertheless, with most of them God was not well-pleased; for they were laid low in the wilderness." (1 Corinthians 10:4, 5)

God led the people of Israel toward Canaan through Moses. He sustained them in the wilderness by providing food and water. When the people cried out to Moses due to thirst, Moses brought their grievance before God. God then provided water through Moses from a rock for them to drink. Paul states that the One who accompanied the people of Israel, the One who gave them water from the rock, and the rock itself, was Christ.

However, today's meditation verse says, "Nevertheless, with most of them God was not well-pleased; for they were laid low in the wilderness." Yes, dearly beloved, this has been written as a warning for us today. It means that we may be people who know Christ today and lead a spiritual life with Him. Yet, Paul warns that if the sin of covetousness/evil desire resides within us, we will perish just like those people of Israel.

The final commandment of the Ten Commandments is "You shall not covet." However, many of us do not consider this a major sin. Covetousness refers to the greed for material things. Furthermore, longing for the objects and possessions that belong to others is covetousness. It is written:

"You shall not covet your neighbour’s house; you shall not covet your neighbour’s wife or his male servant or his female servant or his ox or his donkey or anything that belongs to your neighbour." (Exodus 20:17)

Even though Christ accompanied the people of Israel and gave them water to drink and manna to eat, they coveted meat and sought after it. Although God gave them the meat they craved, He destroyed them in the wilderness. We read:

"While the meat was still between their teeth, before it was chewed, the anger of the Lord was kindled against the people, and the Lord struck the people with a very severe plague. So, the name of that place was called Kibroth-hattaavah, because there they buried the people who had been greedy." (Numbers 11:33, 34)

Yes, dearly beloved, Paul says, "Now these things happened as examples for us, so that we would not crave evil things as they also craved." (1 Corinthians 10:6). We may know Christ today, but if we are unable to give up the greed of covetousness, we have no right to call ourselves spiritual people.

Overcoming covetousness is the victory of a spiritual life. That is why the Apostle James warns us, saying:

"But each one is tempted when he is carried away and enticed by his own lust. Then when lust has conceived, it gives birth to sin; and when sin is accomplished, it brings forth death." (James 1:14, 15)

Just as the people of Israel drank the water provided by Christ—the spiritual rock that followed them—and yet God was not well-pleased with most of them, God will not be well-pleased with us either if covetousness remains in us, despite our claims of believing in Christ. Therefore, let us first plead with God for the strength to overcome this sin.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Sunday, July 19, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 9 : 18 / Psalm 9:18

 "ஆதவன்" தியானம் - 1992 

ஜூலை 22 புதன் 2026   


"எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9 : 18 )

"அற்ற குளத்தின்  அறுநீர்ப்  பறவைபோல் ...." என்று தமிழ்ப் புலவர் அவ்வையாரின்  மூதுரைப் பாடல் ஒன்று உண்டு. குளத்தின் தண்ணீர் வற்றிவிடுமானால் பறவைகளுக்கு மீன் கிடைக்காது. எனவே அதுவரை குளத்தின் அருகிலேயே தங்கி வாழ்ந்த பறவைகள் குளத்தின் நீர் வற்றியவுடன் குளத்தை மறந்து அங்கிருந்து பறந்து சென்றுவிடும். 

இதுபோலச்  செல்வச் செழிப்போடு நாம் வாழும்போது மனிதர்களும் உறவுகளும் நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். ஆனால் காலச் சூழ்நிலையில் நமது வாழ்வில் வறுமை வருமானால் நம்மைப் புகழ்ந்து நம்மோடு இருந்தவர்கள் நம்மைவிட்டு விலகிவிடுவார்கள். இது உலக இயல்பு. யோபுவை இப்படித்தான் நண்பர்களும் சுற்றத்தார்களும் சொந்த மனைவியும் வெறுத்தார்கள். ஆனால் நமது தேவன் இப்படிப்பட்டவர் அல்ல. அவர் எளியவர்களை என்றைக்கும் மறப்பதுமில்லை, சிறுமைப்பட்டவர்களைக் கைவிடுவதுமில்லை.  

மாற்கு நற்செய்தியில் பர்திமேயு எனும் ஒரு மனிதனைக்குறித்து வாசிக்கின்றோம். இவன் தெருஓரமாய் அமர்ந்து பிச்சையெடுத்துத்  தனது வாழ்க்கையை நடத்தியவன். காரணம் இவனுக்கு இரண்டு கண்களும் பார்வையற்றவை. நமது வாழ்வில் நாம் இப்படிப்பட்ட பிச்சையெடுக்கும் மனிதர்கள் பலரைக் கண்டிருப்போம். மனிதர்கள் அவர்களுக்கு என்ன மதிப்பைக் கொடுப்பார்கள் என்றும் நமக்குத் தெரியும். ஆம், அவன் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஏழை மனிதன். 

ஒருநாள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த வழியே வந்தார். "அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்." ( மாற்கு 10 : 47, 48 ) ஒரு பிரபல மனிதன் வரும்போது தெருஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் இப்படி சப்தமிட்டால் நாம் என்ன செய்வோம், அதையேதான் அங்கிருந்த மக்கள் செய்தனர். அப்படித்தான் அவனை அதட்டி சத்தம்போடாமலிருக்கக்  கூறினர். 

ஆனால், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை" எனும் வசனத்துக்கேற்ப ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவனது கூக்குரல் கேட்டது. அவனைத் தன்னிடம் அழைத்துவருமாறு கூறினார்.  அவனிடம் அங்கிருந்தவர்கள் அதனைச் சொன்னபோது, "உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்." ( மாற்கு 10 : 50 )

ஆம் அன்பானவர்களே, அவனது விசுவாசத்தை நமக்கு இது உணர்த்துகின்றது. இயேசு என்னைக் கூப்பிட்டிருக்கிறார், எனவே எனக்கு அதிசயம் செய்வார். எனக்கு இனி இந்தப் பழைய ஆடையும் பிச்சைப்  பாத்திரமும் தேவையில்லை எனும் விசுவாசம் அவனுக்குள் இருந்தது. எனவே அவன் அவற்றை எறிந்துவிட்டு இயேசு கிறிஸ்துவிடம் வந்தான். அவனது விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவன் பார்வையடையும்படிச் செய்தார். 

ஒருவேளை இன்று இந்தக் குருடனான  பர்திமேயுவின் வாழ்க்கைபோல நமது வாழ்க்கையும் இருக்கலாம். வறுமை, எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையற்ற நிலை; எதிர்காலத்தைக்குறித்த பார்வையற்ற இருண்ட நிலை நம்மைத் தொடரலாம். புறக்கணிக்கப்பட்ட இந்த ஏழை மனிதனைப்போல நாமும் இருக்கலாம். ஆனால் அன்பானவர்களே, செழிப்போடு, பகட்டோடு, அன்று கிறிஸ்துவோடு நடந்தவர்கள் அதிசயத்தை வாழ்வில் ருசிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட இந்த எளியவன்தான் உலகையும் அவரையும் வாழ்வில் கண்டுகொண்டான். 

எனவே, உறுதியான விசுவாசத்துடன் தேவனைப் பற்றிக்கொள்ளுங்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை; தேவ வசனம் பொய்யானதுமில்லை. 

 ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1992

July 22, Wednesday, 2026

"For the needy will not always be forgotten, nor the hope of the afflicted perish forever." — Psalm 9:18

There is a famous verse in Moothurai, written by the ancient Tamil poetess Avvaiyar, that says: "Like the birds of a dried-up pond..." When the water in a pond dries up, fish are no longer available for the birds. Consequently, the birds that lived by the pond for so long forget it and fly away the moment the water vanishes.

Similarly, when we live in wealth and prosperity, people and relatives will surround us. But if the seasons of life change and poverty strikes, those who once praised us and stayed close will distance themselves. This is the way of the world. It was in this exact manner that Job was rejected by his friends, relatives, and even his own wife. However, our God is not like that. He never forgets the needy, nor does He ever forsake the afflicted.

In the Gospel of Mark, we read about a man named Bartimaeus. He was someone who lived his life sitting by the roadside and begging, because he was blind in both eyes. We have likely seen many such beggars in our own lives, and we know how little regard people have for them. Yes, he was a poor man, utterly neglected by society.

One day, the Lord Jesus Christ was passing that way.

"When he heard that it was Jesus the Nazarene, he began to cry out and say, 'Jesus, Son of David, have mercy on me!' Many were sternly telling him to be quiet, but he kept crying out all the more, 'Son of David, have mercy on me!'"Mark 10:47-48

What would we do if a beggar sitting by the street started shouting like this when a famous person was passing by? The people there did the exact same thing. They sternly warned him and told him to keep quiet.

However, true to the scripture, "For the needy will not always be forgotten, nor the hope of the afflicted perish forever," the Lord Jesus Christ heard his cry. He commanded that the man be brought to Him. When the people around told Bartimaeus this:

"Throwing aside his cloak, he jumped up and came to Jesus."Mark 10:50

Yes, beloved, this reveals his faith to us. He possessed an inner conviction: "Jesus has called me, so He will perform a miracle for me. I no longer need this old cloak or this begging bowl." Therefore, he threw them aside and came to Jesus Christ. According to his faith, the Lord Jesus Christ restored his sight.

Perhaps today, your life feels like that of the blind Bartimaeus. You might be followed by poverty, a sense of hopelessness regarding the future, or a dark blindness toward what lies ahead. You might feel like this neglected, poor man. But beloved, those who walked with Christ that day in prosperity and grandeur did not taste the miracle in their lives. It was this marginalized, needy man who truly beheld both the world and the Savior in his life.

Therefore, hold fast to God with unwavering faith. The needy will never be forgotten; the hope of the afflicted will never perish; and the Word of God never fails.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Saturday, July 18, 2026

🦋 Meditation verse - 2 இராஜாக்கள் 18 : 6, 7 / 2 Kings 18:6-7

"ஆதவன்" தியானம் - 1991 

ஜூலை 21 செவ்வாய் 2026   


"அவன் (எசேக்கியா) கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்." ( 2 இராஜாக்கள் 18 : 6, 7 )

கர்த்தர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அன்பும் நமக்கு இருக்குமானால் அவர் நமக்காக போராடுவார் என்பதை நாம் இன்றைய தியானத்தில் தியானிக்க இருக்கின்றோம். 

இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவைப்பற்றி கூறுகின்றது. இந்த எசேக்கியா, பிளவை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருக்கும்போது கர்த்தரை நோக்கிக் கண்ணீரோடு விண்ணப்பம் செய்து தனது வாழ்நாளில் 15 ஆண்டுகள் நீடித்துப் பெற்றுக்கொண்டவர் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் அவர் கர்த்தர்மேல் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆம், "அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை." ( 2 இராஜாக்கள் 18 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அவன் அசீரியா ராஜாவாகிய செனகரீபை சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டதால் அசீரிய ராஜா தனது தளபதி ரப்சாகேவை எசேக்கியாவிடம் அனுப்பினான். ஆனால் எசேக்கியா பணிந்துவிடவில்லை. இறுதியாக எசேக்கியாவிற்கு எச்சரிக்கை மடல் அனுப்பினான். அப்போது எசேக்கியா பயப்படாமல், அவனை எதிர்த்து போரிட முயலாமல் நேரே கர்த்தரது பாதத்தின் அந்த கடிதத்தைவைத்து விண்ணப்பம் செய்தார். இக்கட்டான அந்த வேளையிலும் எசேக்கியா பயப்படாமல், கர்த்தர் தனக்கு உதவி செய்வார் என்று நம்பினார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் எசேக்கியாவின் விண்ணப்பத்துக்கு அன்று உடனேயே பதிலளித்து தனது ஒரு தேவதூதனை அனுப்பினார்.  "அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்." ( 2 இராஜாக்கள் 19 : 35 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, எசேக்கியாவை எதிர்த்து வந்த அசீரியாவின் அரசன் செனகரீபையும் அவனது சொந்த புதல்வர்களாலேயே தேவன் அழித்தார். "அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரனாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்." ( 2 இராஜாக்கள் 19 : 37 ) என்று வாசிக்கின்றோம். 

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" ( யாத்திராகமம் 14 : 14 ) என்று கூறியுள்ளபடி, கர்த்தர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அன்பும் நமக்கு இருக்குமானால் நாம் நமது எதிரிகளை எதிர்த்து; பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவேண்டிய அவசியமில்லை. கர்த்தரே நமக்காகப்  போராடுவார்.  நாம் சும்மா இருப்போம். 

கர்த்தர்மேல் இத்தகைய அன்பும் விசுவாசமும் நமக்கு ஏற்படுமாறு ஜெபிப்போம். முற்றிலும் அவரையே நம்புவோம். "கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" என்று இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றபடி இன்றும் நமக்குச்  செய்யக்  கர்த்தர் வல்லமையுள்ளவராக இருக்கின்றார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"AATHAVAN" Meditation - 1991

Tuesday, July 21, 2026

"For he [Hezekiah] clung to the Lord; he did not depart from following Him, but kept His commandments, which the Lord had commanded Moses. And the Lord was with him; wherever he went he prospered. And he rebelled against the king of Assyria and did not serve him." (2 Kings 18:6-7)

In today's meditation, we are going to reflect on how the Lord will fight for us if we have unshakeable faith and love toward Him.

Today's meditation verse speaks about Hezekiah, the king of Judah. We know that when Hezekiah was afflicted with a fatal boil and was at the point of death, he prayed to the Lord with tears and received an extension of 15 years to his lifespan. The reason for this was the trust he had in the Lord. Indeed, it is written: "He trusted in the Lord, the God of Israel; so that after him there was none like him among all the kings of Judah, nor among those who were before him." (2 Kings 18:5).

Because he refused to serve Sennacherib, the king of Assyria, and rejected his authority, the king sent his commander, Rabshakeh, to Hezekiah. But Hezekiah did not bow down. Finally, the king sent a warning letter to Hezekiah. Even then, Hezekiah did not fear; instead of trying to fight back against him, he went straight to the feet of the Lord, spread the letter out, and prayed. Even in that tight, critical hour, Hezekiah did not panic, believing that the Lord would help him.

Yes, dearly beloved, God answered Hezekiah's prayer immediately that day and sent an angel. We read: "Then it happened that night that the angel of the Lord went out and struck 185,000 in the camp of the Assyrians; and when men rose early in the morning, behold, all of them were dead bodies." (2 Kings 19:35).

Not only that, God caused Sennacherib, the king of Assyria who had come against Hezekiah, to be destroyed by his very own sons. We read: "It came about as he was worshiping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer killed him with the sword; and they escaped into the land of Ararat. And Esarhaddon his son became king in his place." (2 Kings 19:37).

Just as it is said, "The Lord will fight for you while you keep silent" (Exodus 14:14), if we possess unshakeable faith and love toward the Lord, we do not need to fight against our enemies or struggle against our problems. The Lord Himself will fight for us. We shall keep silent.

Let us pray that we develop such love and faith toward the Lord. Let us trust Him completely. Just as we read in today's meditation verse—"And the Lord was with him; wherever he went he prospered"—the Lord is powerful enough to do the same for us today.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Friday, July 17, 2026

🦋 Meditation verse - கலாத்தியர் 6:9 / Galatians 6:9

"ஆதவன்" தியானம் - 1990 

ஜூலை 20 திங்கள் 2026   



"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." (கலாத்தியர் 6:9)

சிலர் எப்போதும் தங்களது நல்ல செயல்களை எடுத்துக்கூறி, தங்களைத் தாங்களே நியாயப்படுத்தி தேவனைக் குறைகூறுவதுண்டு. எனக்குத் தெரிந்த ஒரு வயதான சகோதரி, "நான் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறேன், ஏழைகளுக்கு உதவுகிறேன், ஒரு சில குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்கின்றேன்,  இப்படியிருந்தும் எனக்கு வாழ்வில் நல்லது எதுவும் நடக்கமாட்டேன் என்கிறது. ஆண்டவர் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை" என்று நான் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னிடம் புலம்பிக்கொண்டிருப்பார்கள்.  

இவர்களிடம் இரண்டு தவறுகளை நான் கண்டுகொண்டேன். முதலாவது, இப்படி பிறருக்கு உதவி செய்தால் தனக்கு நல்லது எப்போதும் நடக்கும் எனும் முன் எதிர்பார்ப்பு எண்ணம். பிறருக்கு நல்லது செய்யும்போது நாம் கைமாறு கருதாமல் செய்யவேண்டியது அவசியம். இந்தப் பெண்மணியிடம் இந்த குணம் இல்லை. இவர்கள் நன்மைசெய்வதை வங்கியில் பணத்தை முதலீடு செய்வதுபோல எண்ணி அதனால் வரும் பலனை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள். 

இரண்டாவது, இவர்கள் பிறருக்கு நன்மை செய்தால் நமக்கு உடனேயே நல்லது நடக்கும் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் வேதத்தில் நாம் அப்படி வாசிக்கவில்லை. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். ஆனால் சிலுவை மரணம்தான் அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. 

இன்றைய தியான வசனம் நன்மைசெய்கிறதில் நாம் சோர்ந்துபோகாமல் இருக்க அறிவுறுத்துகின்றது.  மட்டுமல்ல, அப்படிச் சோர்ந்துபோகாமல்  நன்மை செய்வோமானால் ஏற்றகாலத்தில் அறுப்போம் என்று கூறுகின்றது. "ஏற்ற காலம்" என்பது எந்த காலம் என்று நமக்குத் தெரியாது. "ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு" (பிரசங்கி 3:1) என்று நாம் வாசிக்கின்றோம். 

மேலும், "அவர் சகலத்தையும் அதனதன் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்." (பிரசங்கி 3:11) என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருக்கவேண்டியது அவசியம். 

நாம் நிலத்தில் ஏதாவது பயிர் செய்திருப்போமானால், அதற்கு தினசரி தண்ணீர் ஊற்றுவோம், உரமிடுவோம், களைகளை அகற்றி பராமரிப்போம், அவைகளின் அடிப்பகுதியில் கிளறி விடுவோம், பூச்சிகள் தாக்காதபடி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவோம். இப்படிச் செய்வது நன்மை செய்வதுபோலத்தான். ஆனால் இதன் பலன் உடனடியாக  நமக்குக் கிடைக்காது. ஏற்ற காலம் வரும் வரை நாம் காத்திருக்கவேண்டியது அவசியம்.  ஆனாலும் சிலவேளைகளில் விவசாயிகள் பயிரின் பலனை அடைவதற்குமுன் இயற்கைப் பேரிடர்களால் பயிர்கள் அழிந்துவிடுவதுண்டு. 

இப்படித் தாங்கள் பயிரிட்ட நெற்பயிரோ, வாழையோ அழிந்துபோனால் அந்த விவசாயிகள் சோர்ந்துபோய்விடுவதில்லை. மறுபடியும் பயிர்ச்செய்வார்கள். பின்னர் வெற்றிபெறுவார்கள். ஆம் அன்பானவர்களே, நாம் நன்மை செய்வது இந்திய விவசாயிகள் பருவகாலத்துடன் போராடுவது போன்றதே. இதனையே ஆங்கிலத்தில், "Indian agriculture is a gamble with the monsoon"   என்பார்கள்.  இந்த விவசாயிகளைப்போல ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாமும் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1990

Monday, July 20, 2026


"Let us not lose heart in doing good, for in due time we will reap if we do not grow weary." — Galatians 6:9

Some people always boast about their good deeds, justify themselves, and blame God. An elderly sister I know used to lament to me every time I saw her, saying: "I do so many good things—I help the poor, and I assist with the education of a few children. Yet, nothing good seems to happen in my life. The Lord doesn't even look up at me."

I noticed two mistakes in her attitude:

Expectation of Return: The mindset that doing good to others will automatically ensure good things happen to us. When we do good to others, it is essential that we do so without expecting anything in return. This sister lacked that quality. She viewed doing good like investing money in a bank, expecting returns, and ended up disappointed.

Expecting Immediate Results: She believed that doing good to others meant immediate blessings for herself. However, we do not read this in Scripture. Our Lord Jesus Christ went about doing good, yet the earthly reward He received was death on a cross.


Today’s meditation verse urges us not to lose heart in doing good. Furthermore, it promises that if we do not grow weary and continue doing good, we will reap at the proper time.

We do not know when this "proper time" is. As we read:

"There is an appointed time for everything. And there is a time for every event under heaven." — Ecclesiastes 3:1

Furthermore, it is written:

"He has made everything appropriate in its time. He has also set eternity in their heart, yet so that man will not find out the work which God has done from the beginning even to the end." — Ecclesiastes 3:11

Therefore, it is necessary that we do not grow weary in doing good.

If we cultivate a crop in a field, we water it daily, apply fertilizer, remove weeds, loosen the soil around the base, and use pesticides to protect it from pests. Doing all this is like doing good. However, we do not get the harvest immediately; we must wait until the proper time arrives. Even so, sometimes before farmers can reap the harvest, their crops are destroyed by natural disasters.

Yet, when their cultivated paddy or banana crops are destroyed, those farmers do not lose heart. They plant again and eventually succeed.

Yes, dear ones, our doing good is much like Indian farmers battling the seasons—as the phrase goes, "Indian agriculture is a gamble with the monsoon." Like these farmers, let us who live a spiritual life not lose heart in doing good; if we do not grow weary, we will reap in due time.


✍️ Bro. M. Geo Prakash      
                                                                       

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 4 : 3 / 2 Corinthians 4:3

" ஆதவன் " தியானம் - 1995  ஜூலை 25 சனி 2026     "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளா...