Sunday, August 16, 2026

🦋 Meditation verse - யோவான் 14 : 1 / John 14:1

 தியானம் - 2019

"ஆதவன்"ஆகஸ்ட் 19புதன் 2026


"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." ( யோவான் 14 : 1 )

இந்த உலகத்தில் நாம் ஏதாவது காரியத்தில் கலக்கமடைகின்றோம் என்றால் அதற்கு நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக்குறித்த பயமே முக்கிய காரணம். தீராத நோய்கள் நம்மைத் தாக்கும்போது, கடன் பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது, அல்லது தப்பிடவே முடியாத இக்கட்டான பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் கலக்கமடைகின்றோம். ஆனால் இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக" என்று. 

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து மோசேயால் கானானைநோக்கி வழிநடத்தப்பட்டனர். அப்போது, அவர்களை விடுவித்த பார்வோன் மனம்மாறி அவர்களைக் கொல்வதற்கு வந்தான். இஸ்ரவேலர் கலக்கமடைந்தனர். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." ( யாத்திராகமம் 14 : 13, 14 ) இந்த தேவ வார்த்தைகள் அவர்களது கலகத்தைப் போக்கியது. அதுபோல அவர்கள் விடுதலை பெற்றனர்.

மேலும், பல்வேறு பெரிய பெரிய இராஜாக்கள் அவர்களுக்கு எதிர்பட்டபோது அவர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அப்போதெல்லாம் தேவனை நோக்கி முறையிட்டனர். தேவன் அவர்களை அந்த இராஜாக்களுக்குத் தப்புவித்து நடத்தினார். இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தேவனே அவர்களை அதிசயமாக நடத்தினார். 

ஆம் அன்பானவர்களே, ஒரு பிரச்சனை ஏற்படும்போது நமது பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள ஒருவர் இருக்கின்றாரென்றால் நமக்கு அது மிகப்பெரிய ஆறுதலாக இருக்குமல்லவா? 

கடன் பிரச்சனையால் நமது வீடு ஜப்திசெய்யப்படும் நிலை ஏற்படுமானால் நமது உள்ளம் எவ்வளவு கலக்கமடையும்!! ஐயோ, இனி என்ன செய்வோம்? எங்கு சென்று தங்குவோம்? எப்படி வீட்டு வாடகையினைக் கொடுப்போம்? நமது வீடு ஜப்தி செய்யப்படும்போது அது நமக்குச் சமூகத்தில் எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்!! ஆனால் அத்தகைய சூழ்நிலையில், "பயப்படாதேயுங்கள் உங்கள் கடனை நான் செலுத்தித் தீர்க்கிறேன்" என்று ஒரு பெரிய செல்வந்தர் ஒருவர் நமக்குத் துணைவந்தால் நமது கலக்கம் உடனேயே தீர்ந்துவிடுமல்லவா? 

இதுபோல, நமது ஆண்டவராகிய இயேசு தம்மிடம் உதவிகேட்டு வந்தவர்கள் அனைவரிடமும், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாய் இரு" என்றுதான் முதலில் கூறி அவர்களைத் தைரியப்படுத்தினார்..    

சர்வலோகத்தையும் படைத்து  ஆளும் மிகப்பெரிய செல்வந்தர் நமக்குத் தந்தையாக இருக்கின்றார். அவர் தன்னிடம் நாம் விசுவாசமாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்கின்றார் அவர். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் பிதாவாகிய தேவனிடமும் அவரது குமாரனாகிய கிறிஸ்துவிடமும் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சகல ஐஸ்வர்யமும் அவருக்குள் அடங்கியிருக்கின்றது. 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபிரெயர் 11:1) இத்தகைய விசுவாசத்துடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்போம். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2019

"AATHAVAN" | August 19 Wednesday, 2026

"Let not your heart be troubled: ye believe in God, believe also in me." (John 14:1)

If we are troubled by anything in this world, the primary reason is the fear concerning the problems we face. When incurable diseases strike us, when debt troubles press us down, or when inescapable, critical situations arise, we become troubled. But in today’s meditation verse, the Lord Jesus Christ says, "Let not your heart be troubled."

The people of Israel were led by Moses from Egypt toward Canaan. At that time, Pharaoh, who had let them go, changed his mind and pursued them to slay them. The Israelites were sore afraid and troubled. Then Moses said unto the people: "Fear ye not, standstill, and see the salvation of the Lord, which he will shew to you today: for the Egyptians whom ye have seen today, ye shall see them again no more for ever. The Lord shall fight for you, and ye shall hold your peace." (Exodus 14:13, 14). These divine words dispelled their trouble, and even so, they received deliverance.

Furthermore, whenever great and powerful kings arrayed themselves against them, they were greatly troubled. At all such times, they cried unto the Lord. God delivered them from those kings and led them forth. Thus, in every matter, God led them wondrously.

Yes, beloved, when a trial arises, if there is someone to bear our burdens, what a great comfort that brings us!

If our home faces the threat of foreclosure due to debt, how troubled our hearts become! "Alas, what shall we do now? Where shall we go and dwell? How shall we pay the rent? What a great humiliation this foreclosure will be in society!" But in such a predicament, if a wealthy benefactor steps forward and says, "Fear not, I will pay off your debt," would not our trouble vanish immediately?

In like manner, our Lord Jesus first said unto all who came seeking His help, "Be not afraid, only believe," comforting and strengthening them.

The Creator and Ruler of the entire universe—the possessor of all riches—is our Father. He exhorts us to place our faith in Him. He says, "Let not your heart be troubled: ye believe in God, believe also in me." Yes, beloved, it is imperative that we remain faithful to God the Father and His Son, Jesus Christ, for in Him dwell all the riches of glory.

"Now faith is the substance of things hoped for, the evidence of things not seen." (Hebrews 11:1)

With such faith, let us believe the words of Christ. Let not your heart be troubled.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Saturday, August 15, 2026

🦋 Meditation verse - யோவான் 12 : 48 / John 12:48

 தியானம் - 2018

"ஆதவன்"ஆகஸ்ட் 18 செவ்வாய் 2026


"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு முக்கியமான கட்டளையைத் தனது சீடர்களுக்குக் கூறினார். இதனை நாம், "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்று உனக்கின்றோம். கிறிஸ்துவை பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை; அது கிறிஸ்து கூறிய ஒரு முக்கியமான  கட்டளை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரேத்   தவிர மதம் மாற்றுவதில்லை. 

ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை மக்களிடம் திணிக்க முயல்கின்றார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக அதனை எவர் உள்ளத்திலும் விதைத்து எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுதி நியாயத் தீர்ப்பில் தேவனுக்குத் தப்பிட  முடியாது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம். கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான நீதிப் பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2018

"AATHAVAN" | August 18 | Tuesday, 2026

"He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day." — John 12:48

Before His ascension to heaven, Jesus Christ gave an important commandment to His disciples. We read this in the Scriptures:

"And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature. He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned." — Mark 16:15–16

Accepting or rejecting Christ is an individual's personal choice. However, we understand that proclaimed truth to everyone is the duty of Christians. Preaching Christ is our sole responsibility; it is a vital command given by Christ. Christians fulfil this mandate—it is not about forced religious conversion.

Errors occur when certain foolish or immature ministers—who lack true scriptural knowledge and spiritual experience—claim to do ministry. They try to impose Christ upon people. We are called only to sow the words of the Lord Jesus; we cannot forcibly plant it in anyone's heart, nor can we compel anyone to come into Christ.

In today's meditation verse, Jesus Christ conveys this truth: sow My words. As for the one who rejects them, the word that I have spoken will judge him. Indeed, the Word of God is quick and powerful. It pierces the human heart, penetrating the soul, thoughts, actions, and even the physical body. We read of this in the Epistle to the Hebrews:

"For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and spirit, and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart." — Hebrews 4:12

Regardless of a person's religious background, conscience remains uniform across all humanity—it stands as proof that one God created everyone. Therefore, no human being can escape God's final judgment. As the Apostle Paul writes:

"Which shew the work of the law written in their hearts, their conscience also bearing witness, and their thoughts the mean while accusing or else excusing one another;"— Romans 2:15  

Yes, the laws of the Lord are written on the hearts of all people.

The Word of the Lord is righteous and transcends religions. That is why Jesus Christ said, "He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day." This is why we preach the Gospel to all. When we reject Christ and disbelieve His words, we cannot live righteously. His Word alone has the power to lead us in the true path of righteousness.

Furthermore, this warning—"He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day"—applies equally to those who claim to accept Christ and call themselves Christians, yet live in disobedience to His Word. We are duty-bound to examine ourselves and ask: Is our life truly aligned with the Word of Christ?

✍️ Bro. M. Geo Prakash                                                                                          




🦋 Meditation verse - 1 தெசலோனிக்கேயர் 5 : 20 / 1 Thessalonians 5:20

 தியானம் - 2017

"ஆதவன்"ஆகஸ்ட் 17,  திங்கள் 2026


"தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 20 )

மெய்யானத்  தீர்க்கத்தரிசனங்கள் தேவனால் அருளப்படுகின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி உண்மையான தீர்க்கத்தரசிகளைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மக்களும் தீர்க்கதரிசனங்களையும் அவர்கள் கூறுவதையும் இன்று பெரிதாக மதிப்பதில்லை. காரணம், உண்மையான தீர்க்கத்தரிசனத்தைவிட  கள்ளத் தீர்க்கத்தரிசனங்கள்  அதிகரித்துவிட்டதே. 

ஆனால் உண்மையான தீர்க்கத்தரிசனம் கூறப்படும்போது அதற்குச் செவிகொடுக்காமல் இருப்போமானால் அது நமக்கு சாபத்தைக் கொண்டுவரலாம். இதற்குச் சமாரியாவில் பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது எலிசா கூறிய தீர்க்கத்தரிசனத்தை நம்பாத ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் உதாரணமாக  இருக்கின்றான். 
 
அந்தப் பஞ்சகாலத்தில் ராஜாவிடம் எலிசா "கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்." ( 2 இராஜாக்கள் 7 : 1, 2 )

எலிசா கூறியபடியே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே மக்கள்  அவனை நெருங்கி மிதித்ததினாலே, எலிசா சொல்லியிருந்தபடியே. அவன் செத்துப்போனான். 

அன்பானவர்களே, எப்போதும் ஆசீர்வாதத்தையே கூறி மக்களை ஏமாற்றும் ஊழியர்களின் தீர்க்கத்தரிசனங்களை நாம் அற்பமாக எண்ணினால் அது தவறல்ல, ஆனால்,  நமது பாவங்களைக் குறித்தும் மனம்திரும்புதலைக் குறித்தும் உணர்த்தி நம்மை ஆவிக்குரிய வழியில் நடத்த விரும்பும் உண்மையான தீர்க்கத்தரிசிகளுக்கு நாம் கண்டிப்பாகச்    செவிகொடுக்கவேண்டியது  அவசியம். இல்லையானால் நாம் தேவனுடைய மீட்பு அனுபவத்தைப் பெறாமலேயே போய்விடுவோம்.       

ஏனெனில், "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." ( 2 பேதுரு 1 : 21 ) அன்பானவர்களே, உண்மையான தேவ மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வோம். தேவனுடைய மனிதர்களின் வார்த்தைகளை மதித்து ஏற்றுக்கொள்வோம். அந்த வார்த்தைகள் கூறும் உண்மையினை உணர்ந்து நம்மைத் திருத்திக்கொள்வோம்.  தீர்க்கத்தரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation 2017

"AATHAVAN" | Monday, August 17, 2026

"Despise not prophesyings." (1 Thessalonians 5:20)

True prophecies are given by God. However, in this present day, finding genuine prophets has become rare. People also do not place much value on prophecies or the words spoken through them today. The reason for this is that false prophecies have increased far more than true ones.

Yet, if we fail to give ear when a true prophecy is spoken, it may bring a curse upon us. An example of this is the lord on whose hand the king leaned, who refused to believe the prophecy spoken by Elisha during the great famine in Samaria.

During that famine, Elisha said to the king:

"Hear ye the word of the LORD; Thus, saith the LORD, Tomorrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria. Then a lord on whose hand the king leaned answered the man of God, and said, Behold, if the LORD would make windows in heaven, might this thing be? And he said, Behold, thou shalt see it with thine eyes, but shalt not eat thereof." (2 Kings 7:1–2)

Just as Elisha had spoken, a measure of fine flour was sold for a shekel, and two measures of barley for a shekel. And the king appointed the lord on whose hand he leaned to have the charge of the gate; and the people trod upon him in the gate, and he died, as the man of God had said.

Beloved, if we despise the prophecies of ministers who constantly deceive people by speaking only of blessings, that is not wrong. However, we must certainly listen to true prophets who convict us of our sins, call us to repentance, and seek to lead us in the spiritual way. Otherwise, we will miss out on receiving God's experience of salvation.

For the Scriptures declare:

"For the prophecy came not in old time by the will of man: but holy men of God spake as they were moved by the Holy Ghost." (2 Peter 1:21)

Beloved, let us discern and recognize true men of God. Let us honour and receive the words of God's servants. Recognizing the truth spoken through those words, let us correct and amend our lives. Prophecy never came by the will of man.

✍️ Bro. M. Geo Prakash                                    

Friday, August 14, 2026

🦋 Meditation verse - 2 சாமுவேல் 6: 16 / 2 Samuel 6:16

 தியானம் - 2016

"ஆதவன்"ஆகஸ்ட் 16 ஞாயிறு 2026


"கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." (2 சாமுவேல் 6: 16)

மனிதர்களது பார்வை வேறு, தேவன் ஒரு காரியத்தைப் பார்க்கின்ற பார்வை வேறு. தேவன் மேன்மையாக எண்ணுவதை நாம் பலவேளைகளில் அற்பமாக எண்ணுகின்றோம். ஆவிக்குரிய காரியங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஆனால் இதன்மூலம் சிலவேளைகளில் நாம் நம்மை அறியாமல் தேவனது கோபத்தையும் சாபத்தையும் பெறவேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒவ்வொருவரும் தங்களது மனதில் தேவன் கொடுக்கும் எண்ணத்திற்கேற்ப, அவர்களுக்குத் தேவன் செய்த தனிப்பட்ட நன்மைகளை எண்ணி அவர்களது மனதின் ஆழத்திலிருந்து பல்வேறுவிதங்களில் தேவனை ஆராதிக்கின்றனர். இதில், நாங்கள் வழிபடும் முறைதான் மேலானது என்றோ மற்றவர்கள் வழிபடும் முறை தவறு என்றோ நாம் கூறிட முடியாது. அப்படிக் கூறி மற்றவர்களையும் அவர்களது வழிபாட்டு முறைகளையும் கேலியாக, அற்பமாக எண்ணுவோமானால் நாம் தேவனது சாபத்தைப் பெறுவோம்.

தாவீது ராஜாவுக்குத் தேவன் செய்த காரியங்கள் மிக மேலானவை. வனாந்தரத்தில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த அவரைத் தேவன் தெரிந்துகொண்டு தனது இருதயத்துக்கு ஏற்றவன் என்றும் கூறினார். மட்டுமல்ல, அவர்மேல் கொண்ட அன்பினால் மீட்பரை அவரது சந்ததியில் பிறக்கச்செய்வேன் என்றும் வாக்களித்து அதனை நிறைவேற்றவும் செய்தார். இதனால் தாவீதுக்கு தேவன்மேல் அளவிடமுடியாத அன்பும் பற்றும் இருந்தது. அவரது சங்கீதங்களை சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மக்கள் பாடிக்கொண்டிருக்கிறார்களென்றால் காரணம், அந்தப் பாடல்களிலுள்ள அபிஷேகம். 

தேவன் தனக்குச் செய்த இத்தனை மேன்மைகளை எண்ணி தேவன்மேலுள்ள அன்பினால் அவர் உடன்படிக்கைப்பெட்டி எடுத்துவரும்போது அதன்முன் குதித்து ஆடிப்பாடினார். ஆனால் சவுலின் மகள் மீகாளுக்கு தாவீதின் நடனம் கேலிக்கூத்தாகத் தெரிந்தது. அதனை அவள் அற்பமாக மனதினில் எண்ணினாள். "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." (2 சாமுவேல் 6: 23) ஆம் அன்பானவர்களே, மீகாள் வேறு யாரிடமும் தாவீது நடனமாடியதைக் குறையாகக் கூறவில்லை. தனது மனதினில்தான் அவள் தாவீதை அவமதித்தாள். ஆனால் தேவன் அதனைப் பெரிய பாவமாகக் கருதி  அவளது கர்ப்பத்தை அவள் மரணமடையும்வரை அடைத்துப் போட்டார்.

இந்தச் சம்பவம் நமக்கும் ஒரு படிப்பினையாக இருக்கின்றது. யாராக இருந்தாலும் மற்றவர்களது வழிபாட்டு முறைகளைக் கிண்டலாக, கேலியாக எண்ணாதிருப்போம்; பேசாதிருப்போம்.  தேவனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள உறவு குறித்து  நமக்குத் தெரியாது. மட்டுமல்ல, இதுவரை அப்படி மற்றவர்களைக் கேலியாக அற்பமாக எண்ணியிருந்தாலோ, பேசியிருந்தாலோ தேவனிடம் மன்னிப்பைக் கேட்போம். ஒருவேளை நமது ஆசீர்வாதக் குறைவுக்கு இதுபோன்ற  நமது செயல்கள்  காரணமாக இருந்திருக்கலாம்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2016

"AATHAVAN" | August 16 | Sunday 2026

"And as the ark of the LORD came into the city of David, Michal Saul's daughter looked through a window, and saw king David leaping and dancing before the LORD; and she despised him in her heart." (2 Samuel 6:16)

The way human beings see things is different from the way God sees them. Many times, we treat lightly what God considers noble and exalted. Such instances occur frequently in spiritual matters. However, as a result, we may unknowingly bring God's anger and curse upon ourselves.

Every person worships God in various ways from the depths of their heart, according to the thoughts God gives them and remembering the personal blessings He has bestowed upon them. In this, we cannot claim that our way of worship is superior or that another’s way of worship is wrong. If we make such claims and mock or despise others and their ways of worship, we will invite God's curse.

The things God did for King David were extraordinary. God chose him while he was shepherding sheep in the wilderness and declared him to be a man after His own heart. Furthermore, out of His love for David, God promised that the Savior would be born from his lineage and fulfilled that promise. Because of this, David possessed immeasurable love and devotion toward God. If people have been singing his Psalms for nearly 4,500 years, the reason is the anointing present within those songs.

Reflecting on all the great things God had done for him, and driven by his deep love for the Lord, David leaped and danced in front of the Ark of the Covenant as it was being brought in.

However, to Saul's daughter Michal, David's dance appeared as a laughingstock. She despised it in her heart.

"Therefore, Michal the daughter of Saul had no child unto the day of her death." (2 Samuel 6:23)

Yes, beloved, Michal did not voice her criticism of David's dance to anyone else; she despised him only within her heart. Yet, God considered it a grave sin and shut her womb until the day of her death.

This event serves as a vital lesson for us as well. Whoever it may be, let us not mock, ridicule, or hold in contempt the worship methods of others, nor speak lightly of them. We do not know the depth of the personal relationship between God and another individual.

Furthermore, if we have ever despised or mocked others' worship in our thoughts or speech until now, let us ask God for forgiveness. Perhaps such actions of ours have been the hidden reason behind a lack of blessing in our lives.

✍️ Bro. M. Geo Prakash

Wednesday, August 12, 2026

🦋 Meditation verse - யோவான் 8 : 36 / John 8:36

 தியானம் - 2015

"ஆதவன்"ஆகஸ்ட் 15 சனி 2026


"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இன்று நமது நாடு சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் என்றாலே மகிழ்ச்சிதான். ஆனால் சுதந்திரம் என்று சொல்லும்போது இதுவரை நாம் யாருக்கோ அடிமையாக இருந்துள்ளோம் என்பதும் நினைவுக்கு வரும். ஆம் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருந்தோம். இந்தநாளில் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

இதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நடக்கின்றது. ஆவிக்குரிய வாழ்வில் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது நமது பாவ பழக்கங்களும் பாவ எண்ணங்களும்தான். இந்தப் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதே ஆவிக்குரிய விடுதலை. இந்த விடுதலையை நமக்குத் தரவே மீட்பராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். 

ஒருவனுக்கு விடுதலை பெறவேண்டும் எனும் எண்ணம் வரவேண்டுமானால் முதலில் தான் அடிமையாக இருப்பதை அவன் உணரவேண்டியது அவசியம்.  எனவேதான்  யூதர்களுக்கு அவர்களது பாவ அடிமைத்தனத்தைக் குறித்து இயேசு உணர்த்தினார். ஆனால்,  "அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்." ( யோவான் 8 : 33 ) அவர்கள் தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் பெருமைகொண்டிருந்தனர்.

இன்று பல கிறிஸ்தவர்களும் இந்த யூதர்களைப்போலவே எண்ணிக்கொள்கின்றனர். தாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால்  பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர்.  அன்பானவர்களே, கிறிஸ்தவர்களாக இருப்பது மட்டும் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்காது. நாம் தனிப்பட்ட விதத்தில் சத்தியமான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அறியவேண்டும்; அவரை விசுவாசிக்கவேண்டும். இதனால்தான் இயேசு கிறிஸ்து, "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் " ( யோவான் 8 : 32 ) என்று  கூறினார். 

ஆம் அன்பானவர்களே, "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) குமாரன் தரும் இந்த விடுதலையினைப் பெறும்போது நாம் பாவம் செய்ய முடியாது. காரணம், அந்த அடிமைத்தனம் கிறிஸ்துவால் முறிக்கப்படுகின்றது. 

மட்டுமல்ல, பாவத்துக்கு அடிமையாகி சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற நமக்குள் கிறித்து வந்து தங்குகின்றார். இதனால் நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) ஆம் அன்பானவர்களே சாவுக்கேதுவான நமது உடலானது கிறிஸ்துவால் உயிப்பிக்கப்படுவதே விடுதலை வாழ்வின் சிறப்பு. இந்த விடுதலையினை பெற்றுக்கொள்ள முயல்வோம்.

முதலில் நாம் பாவத்துக்கு அடிமைகள் என்பதனை உணர்வோம்; அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற ஆசைகொள்வோம்; விடுதலை அளிக்கும் குமாரனாகிய கிறிஸ்து நமக்குள்வர நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

✍️ Bro. M. Geo Prakash 

Meditation – 2015

"AATHAVAN" | August 15 | Saturday, 2026

"If the Son therefore shall make you free, ye shall be free indeed." — John 8:36 (KJV)

Today we are celebrating the joy of our nation's Independence Day. The very word "freedom" brings joy. However, speaking of freedom also reminds us that we were once enslaved to someone. Yes, we were slaves to the British, and on this day, we obtained freedom from that bondage.

A similar thing happens in our spiritual life. In the spiritual realm, what keeps us in bondage is our sinful habits and sinful thoughts. Obtaining deliverance from this sin is true spiritual freedom. It is to grant us this freedom that Jesus Christ, our Redeemer, came into the world.

For a person to desire freedom, they must first realize that they are in bondage. That is why Jesus confronted the Jews concerning their bondage to sin.

"They answered him, We be Abraham's seed, and were never in bondage to any man: how sayest thou, Ye shall be made free?" — John 8:33 (KJV)

They took great pride in calling themselves Abraham's descendants.

Today, many Christians think just like these Jews. They believe that simply because they are Christians, they have been set free from sin. Dearly beloved, merely being a Christian does not liberate us from sin. We must personally know Jesus Christ, the Truth and the Son, and believe in Him. That is why Jesus Christ said:

"And ye shall know the truth, and the truth shall make you free." — John 8:32 (KJV)

Yes, dear ones:

"If the Son therefore shall make you free, ye shall be free indeed." — John 8:36 (KJV)

When we receive this freedom given by the Son, we cannot remain in sin, because that bondage is broken by Christ.

Not only that, but Christ comes to abide within us after we are delivered from the grip of Satan and the slavery of sin. Consequently, our body is dead because of sin, but the Spirit is life because of righteousness.

"But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you." — Romans 8:11 (KJV)

Yes, beloved, the glory of a liberated life is that our mortal bodies are quickened by Christ. Let us strive to receive this freedom.

First, let us acknowledge that we are slaves to sin; let us desire freedom from that bondage; and to invite Christ, the Son who liberates us, into our lives, let us confess our sins to Him and seek His forgiveness. If the Son shall make you free, ye shall be free indeed.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - ரோமர் 8 : 36, 37 / Romans 8:35, 37

 தியானம் - 2014

"ஆதவன்"ஆகஸ்ட் 14 வெள்ளி 2026


"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வியத்தகு அன்பைக் குறித்தும் அந்த அன்பு நம்மில் செயல்படுத்தும் ஆவிக்குரிய மாற்றங்களைக்குறித்தும் இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுகின்றது. 

கிறிஸ்துவின்  அன்பு நம்மில் செயல்படுவதால் நாம் இந்த உலகத்தின் துன்பங்கள், பிரச்சனைகள், வேதனைகளைத் தாங்கக்கூடிய பெலனுள்ளவர்களாக மாறுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது. உபத்திரவங்கள்,  வியாகுலங்கள்,  துன்பங்கள், பசி, நிர்வாணம் எனும் வறுமைநிலை,  நாசமோசம், பட்டயம் எனும் நமக்கு எதிரான எதிரியின் செயல்பாடுகள் இவை எதுவும் கிறிஸ்துவின்  அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது. 

இந்த உலகத்தில் சில காதலர்களின் வாழ்கையினைக்குறித்து நாம் பார்க்கின்றோம். பெற்றோர்கள் தங்களது காதலைப் பிரிக்க முயலுவதால் தாங்கள் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் காதலர்கள் சேர்ந்து தற்கொலை செய்து மடிவதை சிலவேளைகளில்  பத்திரிகைச்  செய்திகளில் நாம் வாசிக்கின்றோம். காரணம், அவர்களுக்கிடையிலான அன்பு அவர்களைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை. 

ஆனால் நமது ஆண்டவராகிய கிறிஸ்து சர்வ வல்லவர். உலகக் காதலர்களைப்  பிரிக்க பெற்றோர்களும் உறவினர்களும் இருப்பதுபோல நமக்கும் கிறிஸ்துவுக்குமிடையிலான ஆவிக்குரிய அன்பினைப் பிரிக்க, உபத்திரவங்கள்,  வியாகுலங்கள்,  துன்பங்கள், பசி, நிர்வாணம் எனும் வறுமைநிலை,  நாசமோசம், பட்டயம் இவைகள் செயல்படுகின்றன.  ஆனால், நாம் நம்மில் அன்புகூருகிற கிறிஸ்துவினாலே இவைகளிலிருந்து முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்.  

நாம் கிறிஸ்துவின்  பிள்ளைகளாக இருக்கின்றோம். அவர் நமது அன்பான பெற்றோர்களைப்போல இருப்பதால் நாம் இந்தத் துன்பங்களைச் சகிக்கமுடிகின்றது. ஆம், "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்த உலகத்தில் நாம் படும் பாடுகளும் துன்பங்களும் எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகும் மகிமைக்குமுன் ஒன்றுமில்லாதவை. இந்த எண்ணமே நம்மைப் பாடுகளைச் சகிக்க உதவுகின்றது. இதனையே அப்போஸ்தலமான பவுல், "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" ( ரோமர் 8 : 18 ) என்கின்றார். இப்படி இருப்பதால்தான் இன்றைய தியான வசனம் துணிவுடன் கேள்வியெழுப்புகின்றது:- "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" என்று. பவுல் அப்போஸ்தலர் எழுப்பும் இக்கேள்வியை நாமும் துணித்துக்கூறி நமது விசுவாசத்தை அறிக்கையிடுவோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2014

"AATHAVAN" — August 14

Friday, 2026

"Who shall separate us from the love of Christ? shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword?... Nay, in all these things we are more than conquerors through him that loved us." — Romans 8:35, 37

Today’s meditation verse speaks about the marvellous love of our Lord Jesus Christ and the spiritual transformations that this love works within us.

It tells us that because the love of Christ is active within us, we are made strong to endure the tribulations, problems, and sorrows of this world. Tribulations, distress, persecution, famine, the poverty of nakedness, peril, and the sword—the enemy's actions against us—none of these can separate us from the love of Christ.

We observe the lives of some lovers in this world. Sometimes we read in newspaper reports that when parents try to separate their love, the lovers commit suicide together in despair because they cannot live together. The reason is that the love between them cannot stand against the forces trying to tear them apart.

But our Lord Christ is Almighty. Just as parents and relatives exist to separate worldly lovers, forces like tribulations, distress, persecution, famine, poverty, peril, and the sword act to separate the spiritual love between us and Christ. However, through Christ who loved us, we are more than conquerors over all these things.

We are the children of Christ. Because He is like a loving parent to us, we are able to endure these afflictions. Yes, "The Spirit itself beareth witness with our spirit, that we are the children of God." — Romans 8:16

The sufferings and afflictions we undergo in this world are nothing compared to the glory we are going to experience in the future. This very thought helps us to endure our sufferings. The Apostle Paul states this exact truth: "For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us." — Romans 8:18

It is because of this that today’s meditation verse boldly poses the question: "Who shall separate us from the love of Christ?" Let us also boldly declare this question raised by Apostle Paul and confess our faith!

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - ஏசாயா 34 : 16 / Isaiah 34:16

 தியானம் - 2013

"ஆதவன்"ஆகஸ்ட் 13 வியாழன் 2026



"கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்." ( ஏசாயா 34 : 16)

இந்த உலகம்கூட எந்த ஒரு காரியத்துக்கும் இரண்டு சாட்சிகள் தேவை என்பதனை நிலைப்படுத்தியுள்ளது. எந்த ஒரு பத்திரப்பதிவு செய்யும்போதும் இன்றும் இரண்டுபேருடைய சாட்சி தேவைப்படுகின்றது. ஏனெனில் இரண்டுபேர் ஒரு காரியத்தை உறுதிப்படுத்தினால் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும். 

மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளையிலும் இதுவே கூறப்பட்டுள்ளது. இரண்டுபேருடைய சாட்சியால் ஒருவன் தீர்ப்பிடப்படவேண்டும். இதனை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்  "இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே." ( யோவான் 8 : 17 ) என்று  கூறினார். மேலும் அவர் உன் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால் அவனுடன் பேசி ஒப்புரவாகு, "அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ." ( மத்தேயு 18 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோல தேவனுடைய வார்த்தைகள் உண்மை என்பதற்கு அவை வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முறையே சாட்சி. வேத வசனங்களில் ஒன்றும் அதற்கு இணையான ஜோடி இல்லாமல் இராது. இரண்டுபேருடைய சாட்சி உண்மை என்பதுபோல இந்த வசனங்களும் உண்மையானவை என்பதனை இப்படி ஜோடியாக இவை இருப்பது உறுதிப்படுத்துகின்றது. 

வேத வசனங்கள் பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆடுமேய்ப்பவர்கள், அத்திப்பழம் பொறுக்குபவர், மீன்பிடிப்பவர், அரசர்கள் போல  பல்வேறு தொழில் செய்வோர் பல்வேறு இடங்களிலிருந்து தேவ வார்த்தைகளைப் பதிவுசெய்தனர். இக்காலத்தில் இருப்பதுபோல விஞ்ஞான வளர்ச்சிகள்  அப்போது இல்லை. ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துப் பேசக்கூடிய வாய்ப்பும் பெரும்பாலும் அவர்களுக்கு அக்காலத்தில் இல்லாமலிருந்தது. ஆனாலும் அவர்கள் மூல தேவன் பேசிய வார்த்தைகள் பதிவிடப்பட்டபோது அவைகளுக்குள் ஒற்றுமை இருந்தது. இதுவே அவர்களோடு பேசியவர் ஒரேதேவன் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. 

இதனையே இன்றைய தியான வசனம், கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று என்று கூறுகின்றது.  தேவனது சில வசனங்கள் ஒரே வார்த்தையால் கூறப்பட்டாலும், பலவேளைகளில் அவை பொருள் மாறாமல்,  அதன்  உட்பொருள் மாறுபடாமல் வேறுமுறையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு.   

உதாரணமாக, "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (1 கொரிந்தியர் 12:9) எனும் வசனமும், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்" (சக்கரியா 4;6) எனும் வசனமும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. மனித பலவீனத்தில் தேவனது வல்லமை விளங்கும் என்பதனை இவை உணர்த்துகின்றன. 

ஆம்  அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை கவனமுடன் வாசிக்கும்போது தேவ வார்த்தைகள் இப்படிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளலாம். இது அந்த வார்த்தைகள் உண்மை என்பதனை உறுதிப்படுத்துகின்றது. எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்" என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவ வார்த்தைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகளை கவனிப்போம்; அவைகளைத் தியானிப்போம். காரணம், அந்த வார்த்தைகள் உறுதியானவை, நமக்கு நித்திய ஜீவனை அளிக்கக்கூடியவை. 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2013

"AATHAVAN” August 13 Thursday, 2026

"Seek ye out of the book of the LORD, and read: no one of these shall fail, none shall want her mate: for my mouth it hath commanded, and his spirit it hath gathered them." — Isaiah 34:16

Even this world has established that two witnesses are required for any matter. Even today, when registering any legal document, the witness of two people is necessary—because when two people confirm a matter, it is accepted as truth.

This very principle was stated in the Commandments given through Moses: a person should be judged by the testimony of two witnesses. Our Lord Jesus Christ also affirmed this, saying:

"It is also written in your law, that the testimony of two men is true." — John 8:17

Furthermore, He instructs that if your brother sins against you, go and be reconciled with him; but:

"If he will not hear thee, then take with thee one or two more, that in the mouth of two or three witnesses every word may be established." — Matthew 18:16

Yes, beloved, in the exact same manner, the very way God’s words are framed throughout Scripture stands as testimony that they are true. Not one word in the Scriptures lacks its corresponding pair. Just as the testimony of two witnesses is true, the existence of these scriptural pairings confirms that these words are dependable and true.

The Scriptures were written by various individuals across different eras. People from diverse professions—shepherds, gatherers of sycamore fruit, fishermen, and kings—recorded the words of God from different places.

There was no scientific advancement in those days like we have today. For the most part, they lacked the opportunity to meet or speak face-to-face. Yet, when the words God spoke through them were recorded, there was flawless unity among them. This proves that the God who spoke to all of them is one and the same.

This is precisely what today’s meditation verse declares: "Seek ye out of the book of the LORD, and read: no one of these shall fail, none shall want her mate: for my mouth it hath commanded." Though certain verses of God express a truth in identical words, many times the same truth is presented in a different manner without changing its core meaning or inner intent.

For example, the verse:

"My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness." — 2 Corinthians 12:9

and the verse:

"Not by might, nor by power, but by my spirit, saith the LORD of hosts." — Zechariah 4:6

convey the very same truth: that God’s power is made manifest in human weakness.

Yes, beloved, when we read the Bible attentively, we can discover how God's words are set together in this way. This confirms that those words are true. That is why today’s meditation verse admonishes us: "Seek ye out of the book of the LORD, and read."

Let us pay attention to how God's words are woven throughout the Bible and meditate upon them—for those words are sure, and they are able to give us eternal life.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யோவான் 14 : 1 / John 14:1

  தியானம் - 2019 " ஆதவன் " ஆகஸ்ட் 19 புதன் 2026 "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்தி...