Thursday, July 30, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 43 : 3 / Psalm 43:3

 தியானம் - 2001

"ஆதவன்"  ஜூலை 31 வெள்ளி 2026  


"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." ( சங்கீதம் 43 : 3 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்குமுன் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னரே உண்மையான பக்தர்கள் இதனைக் கண்டுகொண்டனர்.  ஆம், அன்று பழைய ஏற்பாட்டுக்கால  யூதர்கள் கிறிஸ்துவை அறியாமலேயே வேண்டுதல்செய்த ஒளி, வழி, சத்தியம் எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். இதனை அவர் உலகத்தில் இருக்கையில் அவர்களுக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறினார்

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான் 8 : 12 )

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. என்று பழைய ஏற்பாட்டுக்கால பக்தன் வேண்டியதற்கு பதிலளிப்பதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அனுப்பியுள்ளார். அவரே நம்மை பரிசுத்த விண்ணக சீயோன் பர்வதத்துக்கு நேராக நம்மை வழிநடத்திட முடியும். 

பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் கர்த்தரை வேண்டினாலும், புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நம்மைப்போல அவர்களுக்கு கர்த்தரைப் பற்றி ஒரு தெளிவு இல்லை. கர்த்தர் என்பவர் நன்மை  செய்பவர்களை அரவணைக்கவும் தீமை செய்பவர்களைத்  தண்டிக்கவும்கூடிய ஒரு வல்லமையான சக்தி என்று எண்ணிக்கொண்டனர். ஒருவித அச்சத்துடனேயே கர்த்தரைப் பார்த்தனர். அதாவது தேவனைப்பற்றிய தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் தேவனை அன்பு செய்தனர், வேண்டுதல் செய்தனர். 

இயேசு கிறிஸ்துதான் கர்த்தரை அப்பா என்று அழைக்கக் கற்றுக்கொடுத்தார். அதாவது,  கர்த்தர் என்பவர் எங்கோ  இருக்கும் அந்நியர் அல்ல; அவர் நமது தகப்பன் எனும் புரிதலைக் கொடுத்தவர் இயேசு கிறிஸ்துதான். 

அதனால்தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம்"நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்."  ( யோவான் 4 : 22 ) என்று கூறினார். இன்றும் இதுபோல அறியாமல்  ஒளியை வணங்கக்கூடிய மக்கள் இருக்கின்றனர். விளக்குகளையும், சூரியனையும் பலர் வணங்குகின்றனர். காரணம் கடவுள் ஒளியாக இருப்பதாக எண்ணுவதால்தான் அவர்கள்  ஒளியை வணங்குகின்றனர். ஆனால், தேவன் ஒளியாய் இருந்தாலும் எல்லா ஒளியும் தேவனல்ல என்பதே உண்மை.  

நமது தேவன் வெறும் ஒளியல்ல. அவரைக்குறித்து நாம், "ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்" ( 1 தீமோத்தேயு 6 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியானம் கூறுவதன்படி தேவன் அனுப்பிய இந்த வழியும் சத்தியமும் ஜீவனுமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நம்மை  நடத்தி, அவரது பரிசுத்த சீயோன்  பர்வதத்திற்கும் அவரது விண்ணக வாசஸ்தலங்களுக்கும் நம்மைக் கொண்டுபோகமுடியும்.   எனவே, இன்று நாம், "உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக" என்று ஜெபிப்பதற்குப் பதில் ஏற்கெனவே நமக்கு அனுப்பப்பட்டுள்ள மெய்யான ஒளியும், வழியும்,  சத்தியமுமான இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் போதும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   


Meditation – 2001

"AATHAVAN"

July 31, Friday 2026

"O send out thy light and thy truth: let them lead me; let them bring me unto thy holy hill, and to thy tabernacles." (Psalm 43:3)

Our Lord Jesus Christ said, "I am the way, the truth, and the life." Yet, around 750 years before the birth of Christ, true believers had already caught a glimpse of this. Yes, the light, the way, and the truth that the Old Testament Jews prayed for—without fully knowing Him—was none other than the Lord Jesus Christ. While He was in the world, He stated this to them clearly and plainly:

"I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life." (John 8:12)

"I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me." (John 14:6)

Yes, beloved, God the Father sent the Lord Jesus Christ as an answer to the prayer of the Old Testament saint who cried out, "O send out thy light and thy truth: let them lead me; let them bring me unto thy holy hill, and to thy tabernacles." He alone can lead us directly to the holy heavenly Mount Zion.

Even though the people of the Old Testament prayed to the Lord, they did not have a clear understanding of Him as we do in the New Testament era. They viewed the Lord as a powerful force who embraces those who do good and punishes those who do evil. They looked upon Him with a measure of fear; that is, they lacked a clear understanding of God. Yet, they loved Him and prayed to Him.

It was Jesus Christ who taught us to call God "Abba, Father." Jesus is the One who gave us the revelation that God is not a distant stranger somewhere far off, but our own Father.

That is why Jesus said to the Samaritan woman:

"Ye worship ye know not what: we know what we worship..." (John 4:22)

Even today, there are people who worship light without knowing Him. Many worship lamps and the sun, assuming that since God is light, all light must be worshipped. But while God is light, the truth is that not all light is God.

Our God is not merely physical light. Concerning Him, we read:

"Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see..." (1 Timothy 6:16)

As today’s meditation reminds us, only the Lord Jesus Christ—the Way, the Truth, and the Life sent by God—can guide us and bring us to His holy Mount Zion and His heavenly dwelling places. Therefore, today, instead of praying, "O send out thy light and thy truth: let them lead me...", it is enough for us to follow Jesus Christ, the true Light, Way, and Truth who has already been sent to us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                        

Wednesday, July 29, 2026

🦋 Meditation verse - 1 தீமோத்தேயு 4 : 8 / 1 Timothy 4:8

"ஆதவன்" தியானம் - 2000 

ஜூலை 30 வியாழன் 2026  


"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )

உடல் முயற்சியால் பலர் இந்த உலகத்தில் அரிய பல காரியங்களைச் செய்கின்றனர். விளையாட்டுகளிலும் உடல் வலிமையை மெய்ப்பிக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பதக்கங்களையும் பெறுகின்றனர். இந்த உலகம் அவர்களைப் பாராட்டி பெருமைப்படுத்துகின்றது. ஆனால் இத்தகைய சரீரமுயற்சிகள் அற்பமான பலனையேக் கொடுக்கவல்லவை. 

இதுபோல இந்த உலகத்தில் பலரும் பல்வேறு கடினமான உடல் முயற்சிகளால் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள முயல்வதையும்  நாம் பார்க்கின்றோம். ஆனால் இத்தகைய சரீர முயற்சிகள் அற்பமான பலனைத்தான் கொடுக்குமென்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் நமது உடலை வருத்தும் செயல்களைச் செய்வதால் உலகத்துக்கு ஏற்புடையவர்கள் ஆனாலும் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிவிடுவதில்லை.  

நாம் உடல் முயற்சிகளை விட்டு நமது உள்ளத்தை தேவனை நோக்கித் திருப்பவேண்டியது அவசியம். இத்தகைய தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் ஏற்புடையதாக இருப்பதால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. முதலில் கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது முக்கியமேத்தவிர நமது உடல் முயற்சிகளல்ல. காரணம், அப்படிக்  கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்தவர்களாகின்றோம். ஆம்,  "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) இதுவே மேலான வெற்றி.

சரீர முயற்சிகள் மூலம் நாம் ஒருவேளை மனிதர்களது பார்வைக்கு மேலானவர்களாக, பக்தியுள்ளவர்களாகத் தெரியலாம். ஆனால் வெறுமனே உடல் சார்ந்த முயற்சிகளான உபவாசம், உடலை வருத்தும் இதரச் செயல்பாடுகள் தேவனை நம்மை நோக்கித் திருப்ப தேவையாயிருப்பதில்லை. சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி அது உடலைப் பேணுவதற்கேப்  பயன்படும். 

சிலர் கடுமையான உபவாசம் மூலம் தேவனது அன்பைப் பெறுவதற்கு முயல்கின்றனர். நமது இருதயத்தைத் தேவனை நோக்கித் திருப்பாமல் இப்படி உபவாசிப்பதும் தேவையற்றதே. காரணம்,  "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. எனவே நாம் உடல் சார்ந்த முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தேவபக்திக்கேதுவான காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். அதாவது தேவனது ஆவி நம்மில் குடிகொள்ள ஆர்வமுள்ளவர்களாக அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியது அவசியம். 

காரணம், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்காகச் செய்யும் சரீர முயற்சிகளைத்  தேவனுக்கேற்ற முயற்சிகள் என்று தவறாக எண்ணாமல் தேவ பக்திக்குரிய ஆவிக்குரிய முயற்சிகளில் ஈடுபடுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக மாறமுடியும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல்  ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) 

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும்போது அது மட்டுமே இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்  எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். எனவே உடல் சார்ந்த முயற்சிகளைவிட்டு ஆவியானவரை அடைந்துகொள்ள வாஞ்சிப்போம். அதற்கான தேவ பக்திக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுவோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"AATHAVAN" Meditation – 2000

July 30, Thursday, 2026

"For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come." — 1 Timothy 4:8

Through physical effort, many people accomplish various remarkable things in this world. They participate in sports and physical competitions, winning prizes and medals. The world praises and honours them. However, such bodily exercises are capable of yielding only a small benefit.

Similarly, we see many in this world attempting to receive God’s blessings through various strenuous physical efforts. But today’s meditation verse tells us that such bodily exercise profits very little. Even if we make ourselves acceptable to the world through self-afflicting physical acts, we do not thereby become acceptable to God.

It is essential that we move away from mere bodily effort and turn our hearts toward God. Such godliness is profitable for all things, as it holds value both for this life and the life to come. First and foremost, Christ coming into us is what matters, not our physical exertions. This is because when Christ enters into us, we die to sin and live unto righteousness.

"And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness." — Romans 8:10

This is the ultimate victory.

Through physical effort, we may perhaps appear superior and devout in the eyes of men. However, purely body-centric efforts—such as fasting and other acts of self-mortification—are not what draw God toward us. As today’s scripture reminds us, bodily exercise profiteth little; it is useful mainly for the care of the physical body.

Some attempt to gain God’s love through extreme fasting. Fasting without turning our hearts toward God is unnecessary.

"But meat commendeth us not to God: for neither, if we eat, are we the better; neither, if we eat not, are we the worse." — 1 Corinthians 8:8

Godliness is profitable unto all things because it holds promise for both this present life and the life to come. Therefore, instead of prioritizing physical exertions, we must engage in things pertaining to godliness. That is, we must earnestly desire God's Spirit to dwell within us and engage in pursuits that foster His presence.

For the Apostle Paul says:

"But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you." — Romans 8:11

Yes, beloved, let us not mistake physical efforts done for God as divine righteousness. Instead, let us devote ourselves to spiritual efforts rooted in godliness. Only then can we truly belong to Christ.

"But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his." — Romans 8:9

When the Spirit of Christ comes into us, that alone will be profitable unto all things—both for this present life and the life to come. Therefore, let us move beyond mere physical exertions and yearn to receive the Holy Spirit, engaging ourselves in acts of true godliness.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          
  

Monday, July 27, 2026

🦋 Meditation verse - யோவான் 1 : 12 / John 1:12

"ஆதவன்" தியானம் - 1999

ஜூலை 29 புதன் 2026  


"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )

அப்போஸ்தலரான யோவான் கூறும் இன்றைய தியான வசனத்தினை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். ஆனால் இந்த வசனம் வெறும் வார்தைகளாகவே நம்மில் பலருக்குள்ளும் இருக்கின்றது. இதனைச் செயல்படுத்தும்போது மட்டுமே நாம் இந்த வசனத்தின் உண்மையினை வாழ்வில் உணர்ந்துகொள்ள முடியும். 

கிறிஸ்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்தான். ஆனால் எல்லோரும் இந்த வசனம் கூறுவதன்படி தேவனுடைய பிள்ளைகளா என்பதுதான் கேள்வி. ஆலயங்களில் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்கள்தான். ஆனால் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளா? 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 )  என்று வேதாகமம் கூறுகின்றது. அதாவது ஒன்றை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம். தேவனிடம் ஏதாவது ஒன்றினை எதிர்பார்த்து வேண்டுதல் செய்வதும், அதற்காகவே ஆலயங்களுக்குச் செல்வதும் முழுமையான தேவன்மேல் கொள்ளும் விசுவாசம் என்று கூறிட முடியாது. இன்றைய வசனத்தின்படி, தேவன் அப்படிச் செல்பவர்கள்  அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. 

தேவன்மேல் விசுவாசமுள்ள ஆவிக்குரிய மனிதன் அவரையே வாழ்வில் அடைந்துகொள்ள நாடுவான். மட்டுமல்ல, அத்தகைய மனிதன் தனது சுய சித்தத்தை மறந்து தேவனையுடைய சித்தத்துக்கும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பான். இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8 : 14 ) என்று கூறுகின்றார். 

நூறு சதவிகிதம் உலக ஆசையினையும் உலகத் தேவைகளையும் உள்ளத்தில் சுமந்துகொண்டு ஆலயங்களில் வந்து கைகளைத்தட்டிப் பாடுவது தேவனைத் தேடுவது ஆகாது. வாழ்வின் முழு நேரத்தையும் உலகத்தோடு ஒத்து வாழ்ந்துவிட்டு ஒரு சில மணிநேரம் ஆராதனை எனும் பெயரில் பாடல்பாடி, ஆர்ப்பரிப்பது தேவனைத் தேடுவது ஆகாது. இத்தகைய செயல்பாடுகள் இன்றைய வசனம் கூறும் அவருடைய நாமத்தின்மேல் உள்ள  விசுவாசமல்ல; இப்படிச் செய்வது அவரை நாம் ஏற்றுக்கொண்டோம் என்பதாகாது.  

இஸ்ரவேலில் நிக்கொதேமு எனும் போதகன் இப்படித்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ மக்களைப்போல இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் இருந்தது. அவன் யூதர்களுக்குப் பயப்பட்டதால் இரவுவேளையில் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தான். "அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 2, 3 )

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது, அவரைத்தேடி வருவது மட்டும் போதாது. இயேசு கிறிஸ்து குறிப்பிடுவதுபோல நாம் மறுபடி பிறக்கவேண்டும். பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவமன்னிப்பைப் பெறவேண்டும். அப்போது மட்டுமே நாம் அவரது பிள்ளைகளாக முடியும். இப்படி  பாவமன்னிப்பைப்பெற்று அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு தேவன் அதிகாரங்கொடுத்துள்ளார்.  இந்த அதிகாரத்தை பெறுவதற்கு இன்றே முயற்சியெடுப்போம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1999

July 29, Wednesday, 2026

"But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:" — John 1:12

We have read today’s meditation verse, spoken by the Apostle John, many times. However, for many of us, this verse remains merely words. Only when we put it into practice can we experience the truth of this verse in our lives.

All Christians are believers in Christ. But the question is whether everyone is a child of God according to what this verse says. Those who participate in church services and those who attend prayer meetings are all people who believe in the name of Christ. But is everyone a child of God?

The Bible says:

"Now faith is the substance of things hoped for, the evidence of things not seen." — Hebrews 11:1

That is to say, if we believe in something, it is necessary to stand firm in that faith. Expecting something from God, making supplications for it, and going to church solely for that purpose cannot be called complete faith in God. According to today’s verse, God has not given power to all who go in such a manner to become the children of God.

A spiritual person who has faith in God will seek to possess Him alone in life. Furthermore, such a person will forget their self-will and yield themselves to the will of God and the guidance of His Spirit. It is regarding this that the Apostle Paul says:

"For as many as are led by the Spirit of God, they are the sons of God." — Romans 8:14

Carrying a hundred percent worldly desires and worldly needs in one's heart, coming to church, clapping hands, and singing is not truly seeking God. Living in conformity with the world all through life and then singing songs and shouting under the name of worship for a few hours is not seeking God. Such actions are not faith in His name as spoken of in today’s verse; doing this does not mean we have received Him.

In Israel, a teacher named Nicodemus was just like this. However, like most Christian people today, he had faith in Jesus Christ. Because he feared the Jews, he came seeking Jesus Christ at night.

"The same came to Jesus by night, and said unto him, Rabbi, we know that thou art a teacher come from God: for no man can do these miracles that thou doest, except God be with him. Jesus answered and said unto him, Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God." — John 3:2–3

Yes, dearly beloved, having faith in Jesus Christ and seeking Him out is not enough. As Jesus Christ points out, we must be born again. We must die to sin and live unto righteousness. We must yield ourselves completely to Christ and receive the forgiveness of sins. Only then can we become His children. To all who have received forgiveness of sins, believed on His name, and received Him, God has given power to become the children of God. Let us make every effort today to receive this power.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - மத்தேயு 6 : 22, 23 / Matthew 6:22, 23

"ஆதவன்" தியானம் - 1998

ஜூலை 28 செவ்வாய் 2026   


"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" ( மத்தேயு 6 : 22, 23 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துக் கூறுகின்றார். நமது உடலில் கண்ணானது ஒரு முக்கியமான உறுப்பு. நமது பார்வைத்  தெளிவாக இருந்தால்தான் நம்மால் உலகினை பார்க்கமுடியும்; அதன் அழகினை ரசிக்கமுடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக இடறிடாமல் நம்மால் நடக்கமுடியும். 

இப்படி நமது ஆவிக்குரிய கண்ணனது பார்க்கமுடியாமல் கெட்டதாயிருந்தால், நமது உடல் முழுவதும் பாவ இருளாயிருக்கும்; இப்படி நம்மிலுள்ள ஆவிக்குரிய வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து பல ஆவிக்குரிய சத்தியங்களை எளிமையான உவமைகளாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களைத் தெளிவுபடுத்த விரும்பினார். ஆனால் அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே,  தன்னையும்  தான் கூறியதையும்  உணர்ந்துகொள்ளாத யூதர்களைப்பார்த்து, "இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 ) என்று கூறினார். 

அதாவது கிறிஸ்துவையும் அவர் கூறிய உண்மைகளையும்  அறிய முடியாமல் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வை குறைவாக இருக்கக் காரணம் அவர்களது இருதயம் கொழுத்திருப்பதுதான் என்று கூறினார்.  இதனை நாம்  அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 : 27 பகுதிகளிலும் வாசிக்கலாம். 

ஆம் அன்பானவர்களே, உலக ஆசை இச்சை இவைகளால் நமது இருதயம் கொழுத்திருக்குமானால் நம்மால் தெளிவாக எதனையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது.  இப்படி மனிதர்களது இருதயம் கொழுத்திருப்பதனால் ஆவிக்குரிய சத்தியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.  எனவேதான் கிறிஸ்து மட்டுமே நமக்கு எல்லாமாக இருக்கின்றார் என்பதனையோ அவரை மட்டுமே நாம் அண்டிக்கொள்ளவேண்டும் என்பதனையோ பலரும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றனர். 

நாம் நமது பார்வையில் குறைவு ஏற்படுமானால் உடனேயே மருத்துவமனைக்குச் சென்று கண் பரிசோதனை செய்து பார்வைத் தெளிவடையவேண்டி அதற்கான மருத்துவ சிகிர்சையை மேற்கொள்ளுகின்றோம். இதுபோல, நமது ஆவிக்குரிய பார்வைக்குறைபாட்டையும் நாம் சரிசெய்ய முயற்சி எடுக்கவேண்டியது அவசியம். 

ஆனால் இன்று பிரச்னை என்னவென்றால் பலரும் தங்களது பார்வைக்குறைவை உணர்வதுமில்லை அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. இப்படியே அன்றைய யூதர்களும் இருந்தனர். எனவேதான் "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்." ( யோவான் 9 : 41 )

ஆம் அன்பானவர்களே, நாம் குருடர்கள் என்பதனை ஒத்துக்கொள்வோமானால் நாம் நியாயம்தீர்க்கப்படமாட்டோம்;  கிறிஸ்துவும் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். ஆனால் நாம் "நாங்கள் குருடர்களல்ல, நன்றாக பார்வை பெற்றவர்கள்" என்று கூறிக்கொண்டு அவரை வாழ்வில் அறியாமல் இருப்போமானால் நமது பாவம் நிலைநிற்கும். 

நமது ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துத் தெளிவுள்ளவர்களாக இருப்போம்.  அவரை நாம் எப்படி அறிந்திருக்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம். கிறிஸ்துவைகுறித்த நமது ஆவிக்குரிய பார்வை தெளிவாக இருக்குமானால் நமது சரீரம் முழுவதும் பாவக்கறை இல்லாமல் வெளிச்சமாயிருக்கும். நமக்குக் கிறிஸ்துவைகுறித்த பார்வைக் குறைந்து நமது ஆவிக்குரிய கண் கெட்டதாயிருந்தால், நமது  சரீரம் முழுவதும் பாவ இருளாயிருக்கும்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1998

July 28, Tuesday 2026

"The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light. But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If therefore the light that is in thee be darkness, how great is that darkness!" (Matthew 6:22, 23)

In today's meditation verse, the Lord Jesus Christ speaks about the spiritual vision of human beings. The eye is an essential organ in our body. Only if our vision is clear can we see the world, enjoy its beauty, and above all, walk without stumbling.

In the same way, if our spiritual eye is unable to see and becomes evil, our entire body will be filled with the darkness of sin. If the spiritual light within us is darkness, how great is that darkness! says Jesus Christ.

Jesus Christ desired to bring clarity to the people by explaining many spiritual truths through simple parables. But the people did not accept them. Therefore, looking at the Jews who failed to perceive Him and His teachings, He said:

"For this people's heart is waxed gross, and their ears are dull of hearing, and their eyes they have closed; lest at any time they should see with their eyes and hear with their ears, and should understand with their heart, and should be converted, and I should heal them." (Matthew 13:15)

That is, He explained that the reason human spiritual vision is deficient—leaving them unable to know Christ and the truths He spoke—is because their hearts have waxed gross (grown dull/callous). We can also read this passage in Acts 28:27.

Yes, beloved ones, if our heart becomes gross through worldly desires and lusts, we will not be able to see or hear anything clearly. Because human hearts have grown dull like this, many are unable to clearly understand spiritual truths. This is why many fail to realize that Christ alone is our everything, and that we must rely solely on Him.

If we experience a decline in our physical vision, we immediately go to an eye hospital, get a vision test, and undergo medical treatment to restore clear sight. In the same way, it is necessary for us to make an effort to correct our spiritual vision defects as well.

However, the problem today is that many do not even realize their defect in vision, nor do they accept it. The Jews of that day were just like this. Therefore,

"Jesus said unto them, If ye were blind, ye should have no sin: but now ye say, we see; therefore, your sin remaineth." (John 9:41)

Yes, beloved ones, if we acknowledge that we are blind, we will not be judged, and Christ will reveal Himself to us. But if we say, "We are not blind, we have good sight," while living without truly knowing Him, our sin remains.

Let us be clear concerning our spiritual vision. Let us examine how we have known Him. If our spiritual vision concerning Christ is clear, our whole body will be filled with light, free from the stain of sin. But if our vision of Christ diminishes and our spiritual eye becomes evil, our entire body will be in the darkness of sin.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Sunday, July 26, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 18 : 17, 18 / Psalm 18:17, 18

"ஆதவன்" தியானம் - 1997

ஜூலை 27 திங்கள் 2026   


"என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்." ( சங்கீதம் 18 : 17, 18 )

இன்றைய தியான வசனம் தாவீது இராஜாவின் சங்கீத புத்தகத்தின் வார்த்தைகளாகும். கர்த்தர் தாவீதை எல்லா சத்துருக்களின் கைகளுக்கும் சவுலின் கைகளுக்கும் தப்புவித்தபோது தாவீது பாடியது  என்று இந்தச் சங்கீதம் குறிப்பிடப்படுகின்றது.   

தாவீதுக்கு எதிராக எழும்பியவர்கள்  பலர். எப்படியாவது அவனை அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் முயன்றார்கள். சவுல் முற்றிலும் பொறாமையால் நிறைந்தவனாகத் தாவீதைக் கொன்று ஒழிக்க முயன்றான். பல்வேறு சூழ்நிலைகளில் தாவீதுக்கும் மரணத்துக்கும் ஒருசில அடி தூரம் மட்டுமே இருந்தது. ஆனால் தாவீதுக்குக் கர்த்தர் ஆதரவாக இருந்தார்; அவரைக் காப்பாற்றினார். அந்த நன்றி உணர்வில் அவர் கூறுகின்றார்,  "என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்"  என்று. 

அன்பானவர்களே, வேதாகமம் முழுவதும் நாம் இப்படிக் கர்த்தர் தனது அடியார்களை விடுவித்தச் சம்பவங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். தேவனை உறுதியான விசுவாசத்துடன் நம்பிச் செயல்படுபவர்களை அவர் கைவிடுவதில்லை. அன்று கானானைச் சுதந்தரிக்கும்முன் அதனைச் சுற்றிப்பார்த்துத்  தகவல் கொண்டுவர மோசே குலத்துக்கு ஒருவராகத் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் புத்திரரை அனுப்பினார். அவர்கள் சென்று நாற்பதுநாள் கழித்துத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த அவர்கள் கூறிய வார்த்தைகளோ அவிசுவாச வார்த்தைகள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 )

ஆனால் அவர்களோடு சென்றுவந்த காலேபும் யோசுவாவும் இஸ்ரவேல் மக்களைத் திடப்படுத்தினார்கள். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் எனவே நாம் அவர்களுக்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை என்றனர். ஆம், "கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 )

அவர்கள் விசுவாசித்ததுபோல கர்த்தர் பல்வேறு ராஜாக்களை மடங்கடித்து இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் கொண்டுசென்று சேர்த்தார்.  

அன்று அந்த இஸ்ரவேலர்கள், "நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்"  "இராட்சதப் பிறவிகள்"  என்று கூறியதைப்போல நாமும் பலவேளைகளில் நமக்கு எதிராக நிற்கும் பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்து நடுங்குகின்றோம். அதற்கு மாறாக நாம் தாவீதைப்போல  "என்னிலும் பலவான்களாயிருக்கும் என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் அவர் விடுவிப்பார். எனக்கு எதிரிட்டு வருகிறார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிப்பார்" என்று விசுவாச அறிக்கையிடப்  பழகுவோம்.  எல்லோரிலும் பெரியவரும் வல்லவருமான தேவனையே  நோக்கிப்பார்த்து அவரை விசுவாச உறுதியுடன் பற்றிக்கொள்வோம்.  நெருக்கும் பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும்  பயப்படவேண்டியதில்லை. கர்த்தர் நமக்கு ஆதரவாகவே இருப்பார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1997

July 27, Monday, 2026

"He delivered me from my strong enemy, and from them which hated me: for they were too strong for me. They prevented me in the day of my calamity: but the LORD was my stay." (Psalm 18:17, 18)

Today’s verse for meditation comes from the book of Psalms written by King David. This psalm is noted as the song David sang when the Lord delivered him from the hand of all his enemies and from the hand of Saul.

Many rose up against David. They attempted in every way to destroy him. Saul, filled completely with jealousy, tried to do away with David. In various situations, David was just a few steps away from death. But the Lord was David’s support and stay; He saved him. In deep gratitude, David proclaims: "He delivered me from my strong enemy, and from them which hated me: for they were too strong for me. They prevented me in the day of my calamity: but the LORD was my stay."

Dearly beloved, throughout the Bible, we can see that it is filled with accounts of the Lord delivering His servants. He never forsakes those who trust and act upon Him with steadfast faith. Back then, before inheriting Canaan, Moses sent chosen men—one from each tribe of the children of Israel—to spy out the land and bring back a report. They went and returned after forty days. However, the words they spoke upon their return were words of unbelief:

"And they brought up an evil report of the land which they had searched unto the children of Israel, saying, The land, through which we have gone to search it, is a land that eateth up the inhabitants thereof; and all the people that we saw in it are men of a great stature. And there we saw the giants, the sons of Anak, which come of the giants: and we were in our own sight as grasshoppers, and so we were in their sight." (Numbers 13:32, 33)

However, Caleb and Joshua, who had gone with them, encouraged the people of Israel. They declared that the Lord was with them, so there was no need to fear those people. Yes:

"Only rebel not ye against the LORD, neither fear ye the people of the land; for they are bread for us: their defence is departed from them, and the LORD is with us: fear them not." (Numbers 14:9)

Just as they believed, the Lord subdued many kings and brought the people of Israel into Canaan.

Just as those Israelites said, "all the people that we saw in it are men of a great stature" and spoke of "giants," we too often tremble in fear when looking at the problems standing against us. Instead, let us learn to declare our faith like David: “He will deliver me from my strong enemies and from those who hate me, though they are stronger than I. They confront me in the day of my calamity, but the Lord will be my stay.”

Let us look unto God, who is greater and more powerful than all, and hold fast to Him with firm faith. There is no need to fear pressing problems or afflictions. The Lord will surely be our stay and support.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - சங்கீதம் 43 : 3 / Psalm 43:3

  தியானம் - 2001 " ஆதவன் "    ஜூலை 31 வெள்ளி 2026    " உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும் ; அவைகள் ...