Friday, August 28, 2026

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 16 / 2 Corinthians 6:16

 தியானம் - 2030

"ஆதவன்" ஆகஸ்ட் 30 ஞாயிறு 2026


"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" ( 2 கொரிந்தியர் 6 : 16 )

நம்முடைய தேவன் தனது பிள்ளைகளை விட்டு ஒதுங்கி எங்கோ சிலைபோல அமர்ந்து இருபவரல்ல. அவர் நம்மோடு உறவுகொண்டு தாய் தகப்பனைபோல நம்மோடு வாழ விரும்புபவர். ஆனால் இன்று பொதுவாக மக்கள் கடவுளை அப்படி எண்ணுவதில்லை. அவரைச் சிலைபோல எங்கோ அமர்ந்திருப்பவர் என்றே எண்ணுகின்றனர். எனவே பல்வேறு கடவுள் உருவங்களுக்கு  வணக்கமும், ஆராதனைகளும் செய்கின்றனர். இப்படிச் செய்வதால் கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படிச் செய்வது, நமது தாய் தகப்பனுடன் பேசாமல் இருந்துகொண்டு; அவர்களோடு எந்த உறவும் இல்லாமல் வாழ்ந்துகொண்டு;  அவர்களது படங்களுக்கு மாலைகளும் மரியாதையும் செய்வதுபோலத்தான்.  

தேவன் நம்மோடு ஒரு சக மனிதனைப்போல வாழ்வதையே விரும்புகின்றார். "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" ( லேவியராகமம் 26 : 12 ) என்கின்றார் அவர்.

அப்படி நமக்குள் அவர் வந்து தங்கியிருக்க நம்மிடம் அசுத்தமான காரியங்கள் காணப்படாமல் முற்றிலும் நம்மைத் தூய்மையாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அவர் நமக்குள்ளே உலாவி நம்மை வழிநடத்த விரும்புகின்றார். "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" ( உபாகமம் 23 : 14 )

ஆம் அன்பானபவர்களே, நாமே  கடவுளின் ஆலயமாக இருக்கின்றோம். காரணம் கடவுள் வெளியில் உள்ள சிலைகளில் அல்ல, மாறாக நமக்குள் இருக்கின்றார். அவர் நமக்குள் இருப்பதால் நாமே அவரது ஆலயமாக இருக்கின்றோம். ஆம், இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்கின்றார். 

கடவுளைச் சிலைகளிலும் இதர இடங்களிலும் தேடித்திரிபவர்கள் கடவுளை காண்பதில்லை. நமக்குள் அவர் இருப்பதை உணரும்போது அவர் நம்மோடு பேசுவதை, நம்மை வழிநடத்துவதை நாம் உணரமுடியும். இந்த அனுபவம் உள்ளவர்கள் சிலைகளைத்தேடி ஓடமாட்டார்கள். 

நாம் தேவனுடைய ஆலயமாக இருப்பதால் நமக்கு விக்கிரகங்கள் தேவையில்லை. வெறும் சிலையாக அல்ல மாறாக, ஜீவனுள்ள பேசக்கூடிய தேவனாக அவர் நமக்குள் இருப்பதால் தேவனுடைய ஆலயமாகிய நமக்கும்  விக்கிரகங்களுக்கும் சம்பந்தமில்லை. 

அன்பானவர்கள், நமது உடலை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பபோம்:-  "அன்பான ஆண்டவரே, நான் உமது ஆலயமாக வாழ ஆசைப்படுகின்றேன். என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். எனது பாவங்கள், அனைத்தையும் உமது பரிசுத்த இரத்தத்தால் கழுவி என்னைத் தூய்மையாக்கும். பரிசுத்தரான நீரே எனக்குள் வந்து தங்கி என்னை உமது ஆலயமாக மாற்றும். இனிமேல்  தேவனுடைய ஆலயமாகிய எனக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமே இல்லாதபடி என்னைத் தூய்மைப்படுத்தும், ஆமென் "  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2030

"AATHAVAN" — August 30, Sunday 2026

"And what agreement hath the temple of God with idols? for ye are the temple of the living God; as God hath said, I will dwell in them, and walk in them; and I will be their God, and they shall be my people." (2 Corinthians 6:16)

Our God is not one who distance Himself from His children to sit somewhere like an idol. He is one who desires to have a relationship with us and live with us as a mother and a father. But today, people generally do not think of God in this way. They view Him as someone sitting somewhere like an idol. Consequently, they offer worship and veneration to various forms of gods, believing that doing so will please Him. Doing this is like remaining silent toward our own mother and father, living without any relationship with them, and merely placing garlands and offering respects to their pictures.

God desires to live with us just as a fellow human being would. He says, "And I will walk among you, and will be your God, and ye shall be my people." (Leviticus 26:12)

For Him to come and abide within us, He expects that no unclean things be found in us and that we yield ourselves completely pure unto Him. He desires to walk within us and guide us. "For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore, shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee." (Deuteronomy 23:14)

Yes, beloved, we ourselves are the temple of God. This is because God is not in idols outside, but rather within us. Because He abides within us, we ourselves are His temple. Indeed, the Apostle Paul speaks of this very truth: "as God hath said, I will dwell in them, and walk in them; and I will be their God, and they shall be my people."

Those who wander about searching for God in idols and other places do not find Him. When we realize that He is within us, we can sense Him speaking to us and guiding us. Those who have this experience will not run after idols.

Since we are the temple of God, we have no need for idols. Because He abides within us not as a mere idol, but as a living God who speaks, there is no agreement between us—the temple of God—and idols.

Beloved, let us yield our bodies to God and pray:

"Dear Lord, I desire to live as Your temple. I dedicate myself to You. Wash away all my sins with Your precious blood and make me clean. O Holy One, come and abide within me, transforming me into Your temple. From this day forward, purify me so that I, as the temple of God, may have no part with idols. Amen."

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - ஏசாயா 46 : 3 / Isaiah 46:3

 தியானம் - 2029

"ஆதவன்" ஆகஸ்ட் 29 சனி 2026


"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்." ( ஏசாயா 46 : 3 )

இன்றைய தியான வசனம் நமக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும் வசனமாக இருக்கின்றது. இஸ்ரவேல், யாக்கோபு எனும் வார்த்தைகள் நம்மைக் குழப்பமடையச் செய்யவேண்டாம். இந்த வார்த்தைகள் நம்மையேக்   குறிக்கின்றன. ஆம் அன்பானவர்களே, வேதாகம அடிப்படையில், தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் நாமே  இன்றைய இஸ்ரவேலரும்  யாக்கோபின் சந்ததியுமாக இருக்கின்றோம். 

தேவன் நாம் தாயின் வயிற்றினில் உருவானதுமுதலே நம்மைத் தாங்கி நடத்துகின்றார். இன்று நாம் மருத்துவ மனைகளில் பல்வேறு விதங்களில் தங்கள் கர்ப்பம் கலைந்து பல பெண்கள் கலங்கி நிற்பதைப்  பார்க்கலாம். ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாகி நல்ல முறையில் பிறக்கவேண்டுமானால் தேவனது கிருபை அதிகம் தேவையாக இருக்கின்றது. நம்மேல் தேவன் அப்படிக் கிருபை வைத்தால்தான் நாம் இன்று உலகினில் உயிரோடு இருக்கின்றோம். அந்தக் கிருபையில் நிலைத்து நிற்க அவருக்குச் செவிகொடுக்கவேண்டியது அவசியம். எனவேதான்,  நம்மைப்பார்த்துத்  தேவன் அன்புடன் கூறுகின்றார், "எனக்குச் செவிகொடுங்கள்" என்று. 

அப்படி நாம் அவருக்குச் செவிகொடுத்து அவரில் நிலைநிற்கும்போது, நாம் நமது முதிர்வயது அடையும்வரைத் தாங்குவேன் என்கின்றார் தேவன். ஆம், "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்." ( ஏசாயா 46 : 4 )

இன்று நாம் உலகத்தில் நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள், இவைகளைக்கண்டு மனம் கலங்குகின்றோம். ஆனால் நினைத்துப்பாருங்கள், தேவன் இன்றல்ல, நாம் உருவாகுமுன்பே நம்மை அறிந்துள்ளார். நமது தேவைகளை அறிந்துள்ளார். அதனால்தான் நாம் உயிருடன் உலகினில் இருக்கின்றோம். தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் நம்மை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் நம்மைத் தாங்கியவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றமாட்டாரா? 

ஆனால் இன்று நாம் நமக்கு ஏற்படும் ஒருசில துன்பங்களைக்கண்டு பல்வேறு அவிசுவாச எண்ணங்களால் கலங்குகின்றோம். அன்பானவர்களே, "என்னைத் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே அறிந்த தேவன் எனது பிரச்சனைகளையும் அறிவார்.  எனவே நிச்சயம் அவைகளிலிருந்து என்னைத் தப்புவிப்பார்" என்று நாம் விசுவாச அறிக்கையிடவேண்டியது அவசியம்.  

இன்று வாலிப வயதில் படிப்புக்கேற்ற வேலையின்றி,  மற்றவர்களைப்போல் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழவேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கலங்கி நிற்கும் மகனே, மகளே, உன்னைத் தாயின் கர்ப்பத்தில் தெரிந்துகொண்ட தேவன் கூறுகின்றார், "பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்." ( ஏசாயா 54 : 4 )

யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். அப்போது நமது வாழ்க்கையினை அவரே பொறுப்பெடுத்துக்கொள்வார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2029

"AATHAVAN" | August 29, Saturday 2026

"Hearken unto me, O house of Jacob, and all the remnant of the house of Israel, which are borne by me from the belly, which are carried from the womb:" — Isaiah 46:3

Today’s meditation verse brings us immense comfort. Let us not be confused by the words Israel and Jacob—these terms refer to us. Yes, beloved ones, according to the Scriptures, we who live pleasingly to God are the Israel and the offspring of Jacob of today.

God has been carrying and guiding us ever since we were formed in our mother's womb. Today, we often see many women in hospitals grieving over miscarriages. For a child to be conceived in the womb and born safely into this world, the grace of God is abundantly required. It is only because God bestowed such grace upon us that we are alive in the world today. To remain established in that grace, it is vital to listen to Him. That is why God lovingly tells us, "Hearken unto me."

When we listen to Him and abide in Him, God promises to sustain us even until our old age. Yes,

"And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will bear; even I will carry, and will deliver you." — Isaiah 46:4

Today, we are troubled in mind when we look at the various problems and afflictions we face in this world. But think about this: God did not just notice us today—He knew us even before we were formed. He knows all our needs. That is why we are alive in this world today. Will not He, who has borne us from the belly and carried us from the womb, continue to protect us?

Yet today, seeing a few trials that come our way, we are shaken by thoughts of unbelief. Beloved ones, we must make this confession of faith: "The God who knew me before I was formed in my mother's womb knows my problems too. Therefore, He will surely deliver me from them."

To the young men and women today who are distressed—lacking employment suited to your education and denied opportunities to live with self-respect in society like others—the God who chose you from your mother's womb says:

"Fear not; for thou shalt not be ashamed: neither be thou confounded; for thou shalt not be put to shame: for thou shalt not remember the reproach of thy widowhood anymore." — Isaiah 54:4 (ref. also Isaiah 54:4b)

The Lord God says, "Hearken unto me, O house of Jacob, and all the remnant of the house of Israel." When we do, He Himself will take complete charge of our lives.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Wednesday, August 26, 2026

Meditation verse - 2 கொரிந்தியர் 13 : 4 / 2 Corinthians 13:4

தியானம் - 2028

"ஆதவன்" ஆகஸ்ட் 28 வெள்ளி 2026


"ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்." ( 2 கொரிந்தியர் 13 : 4 )

இயேசு கிறிஸ்து தேவனையுடைய குமாரனும் மெய்யான தேவனுமாக இருந்தாலும் அவர் பலவீன மனிதனாகவே பூமியில் தோன்றினார். எல்லா விதத்திலும் அவர் நம்மைப்போல சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமில்லாதவராக இருந்தார். எனவேதான் அவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராகவும் இருக்கின்றார். "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" ( எபிரெயர் 4 : 15 ) என எழுதுகின்றார் எபிரேய ஆசிரியர். 

இப்படி மனிதனைப்போல பலவீனமானவராக அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவர் அப்படியே அறையப்பட்டு மடிந்துபோய்விடவில்லை. மாறாக முற்றும் முடிய நம்மை இரட்சிக்கவல்லவராக பிழைத்திருக்கின்றார்; இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, இன்று நாமும் பூமியில் வாழ்ந்தபோது கிறிஸ்து இருந்ததுபோல பலவீன மனிதர்களாக இருக்கின்றோம். ஆனால் அப்படி பலவீனராயிருந்தும், தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம். இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. அதாவது இன்று இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள், பாவங்கள், நோய்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நம்மைப் பலவீனப்படுத்தலாம். ஆனால் கிறிஸ்துவை உயிர்தெழச்செய்தவர்  நம்மோடு இருக்கின்றார். அவர் நம்மை அழிந்துபோக விடமாட்டார். 

அன்று கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது யூதர்களும் ஏனைய மனிதர்களும் அவரைக் கேலி செய்தனர். "நீ கிறிஸ்துவானால் சிலுவையிலிருந்து இறங்கியவா, அப்போது உன்னை விசுவாசிப்போம்" என்றார்கள். ஆனால் ஏற்றகாலம் வரும்வரை கிறிஸ்து அமைதியாக இருந்தார். பின்னர் மகிமையோடு உயிர்த்தெழுந்தார். 

இதுபோல நமது இன்றைய நிலைமை உலக மக்களுக்கு ஒருவேளை அற்பமாகத் தெரியலாம். அவர்கள் நம்மைப்பார்த்து, "கடவுள் உன்னொடு  இருக்கிறாரென்றால்  ஏன் உனக்கு இந்தத் துன்பம்?,  கடவுளை நம்பாத பலர்  உன்னைவிட நல்ல நிலையில் இருக்கின்றார்களே?" எனக் கேள்வி எழுப்பலாம். ஆனால் நாம் அவர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.  கிறிஸ்து தமது உயிர்த்தெழுதல் மூலம் அவர்களுக்குப் பதிலளித்தார். 

கிறிஸ்து பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருந்ததுபோல நாமும் இப்போது பலவீனராயிருந்தாலும், நம்மிடம் விளங்கும் தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.  சிலுவையில் அறையப்பட ஒரு காலமுண்டு என்றால் உயிர்த்தெழவும் ஒரு காலம் உண்டு. நமக்காக தேவனே நமக்கு எதிராகப் பேசியவர்களுக்குப் பதிலளிப்பார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2028

“AATHAVAN” – August 28, 2026, Friday 

“For though he was crucified through weakness, yet he liveth by the power of God. For we also are weak in him, but we shall live with him by the power of God toward you.” 2 Corinthians 13:4 (KJV)

Although Jesus Christ was the Son of God and truly God, He appeared on earth in the form of a weak human being. He was tempted in every way just as we are, yet He remained without sin. That is why He is able to help us in all our weaknesses. The writer of Hebrews says:

“For we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities; but was in all points tempted like as we are, yet without sin.” — Hebrews 4:15 (KJV)

Thus, Jesus was crucified in weakness, as a man. But He did not remain on the cross and perish. Rather, He rose again, victorious and fully able to save us. He is alive even today.

Yes, dear friends, while we live on this earth, we too are weak human beings, just as Christ appeared to be in His earthly life. Yet, though we are weak, we shall live with Him through the power of God. This is the hope of Christianity.

Today, various sufferings, sins, illnesses, and problems may surround us. They may make us feel weak and helpless. But the One who raised Christ from the dead is with us. He will not allow us to perish.

When Christ was hanging on the cross, the Jews and others mocked Him, saying in effect, “If thou be Christ, come down from the cross; then we will believe thee.” But Christ remained silent until the appointed time. Then He rose again from the dead in glory.

In the same way, our present circumstances may appear insignificant or even hopeless in the eyes of the world. People may look at us and ask, “If God is with you, why are you suffering like this? There are many who do not believe in God, yet they seem to be living better lives than you.”

But we do not have to answer such questions. Christ Himself answered them through His resurrection.

Just as Christ was crucified through weakness, yet lived by the power of God, we too may be weak today, but through the power of God working in us, we shall live with Him.

If there is a time appointed for the cross, there is also a time appointed for resurrection. If there is a season of suffering, there will also be a season of victory. We need not defend ourselves before those who question our faith. God Himself will answer on our behalf.

Therefore, dear friends, do not be discouraged by your present weakness or circumstances. Your story does not end at the cross. The power of God that raised Christ from the dead is still at work. Wait upon Him in faith. In His appointed time, He will turn your weakness into strength, your suffering into victory, and your sorrow into joy.

“But they that wait upon the LORD shall renew their strength.”

— Isaiah 40:31 (KJV) Your present weakness is not the end. The power of God will bring forth your resurrection and victory in His appointed time.

✍️ Bro. M. Geo Prakash   

                                                                                      

Sunday, August 23, 2026

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 58 / 1 Corinthians 15:58

 தியானம் - 2027

"ஆதவன்" ஆகஸ்ட் 27 வியாழன் 2026


"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2027

"AATHAVAN" – August 27, Thursday 2026

"Therefore, my beloved brethren, be ye stedfast, unmoveable, always abounding in the work of the Lord, forasmuch as ye know that your labour is not in vain in the Lord." — 1 Corinthians 15:58

When we eagerly perform acts of charity, offer help, and engage in ministry for the Lord, these works must not be done for self-promotion or publicity. If they are done out of genuine love, the Lord will remember them and reward us. Furthermore, we should not even perform these good deeds merely expecting a reward in return; rather, serving the Lord ought to spring forth naturally from within us.

Generally, people in this world quickly forget the help others extend to them. No matter how great the assistance rendered, only a very few remember it with gratitude throughout their lives. However, our Lord is not like that; today’s verse reminds us that He never forgets. Because our labour for the Lord is never in vain, the Apostle Paul urges us to remain firm and abound continually in those works done for Him.

Consider this illustration: we cannot survive without breathing air, yet we do not sit around consciously reminding ourselves to breathe. Instead, breathing happens naturally without us even thinking about it. In the exact same way, doing good works for the Lord should become second nature to us. The Lord will never forget such actions.

Scripture assures us that God is not unrighteous to forget the loving deeds we perform in His name:

"For God is not unrighteous to forget your work and labour of love, which ye have shewed toward his name, in that ye have ministered to the saints, and do minister." — Hebrews 6:10

Our God is not unrighteous like some worldly people who live without justice or integrity.

Some people continually boast about and publicize the good deeds they have done. Others complain, saying, "I have done so much good, yet God has done nothing for me." Dearly beloved, God will never forget any work performed with truth and sincerity. He is not unrighteous to forget the labor of love shown toward His name. Moreover, the Lord remains indebted to no one. If this truth is firmly rooted within us, we will continue doing good works for the Lord without expecting anything in return.

Therefore, let us strive to live according to the words of the Apostle Paul, knowing that our labour in the Lord is not in vain, remaining steadfast, unmoveable, and always abounding in the work of the Lord.

May the Lord bless us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          


🦋 Meditation verse - ஏசாயா 58 : 11 / Isaiah 58:11

 தியானம் - 2026

"ஆதவன்" ஆகஸ்ட் 26 புதன் 2026


"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

ஒரு மகனோ மகளோ பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய குழந்தைகள் கேட்பதை மறுக்காமல் அந்தப்பெற்றோர் அவர்களுக்குச் செய்வார்கள். மட்டுமல்ல, அந்தப்பிள்ளைகள் எதிரிபார்ப்பதற்கும் மேலாக பெற்றோர்கள் அவர்களுக்கு நன்மையே செய்வார்கள். 

இதுபோல, நாம் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். எனவே நாம் எதனைப்பற்றியும் பெரிய எதிர்பார்ப்போ கவலையோ இன்றி வாழமுடியும். ஆம், நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். அதாவது, துன்பகாலங்களிலும் நம்மை நிலைகுலையாமல் காப்பாற்றுவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலைகள்  என்பார்கள். அன்பானவர்களே, இதுபோல நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச்  சோலைகள்போல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" என்று. நாம் பராமரிக்கும் தோட்டத்திற்கு நாம் தினசரி நீர்பாய்ச்சுவதுபோல தேவன் நீர்பாய்ச்சி நம்மைப் பராமரிப்பார்; வற்றாத நீரூற்று இருக்குமானால் அந்த இடத்திலுள்ள மரம், செடி, கொடிகள் கோடை வெப்பத்தையும் தங்கி செழித்து வளர்வதுபோல நாமும் இருப்போம். 

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். பணமிருந்தாலும் சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் மனநிம்மதிக்காக மதுவுக்கும், இதர பாவச் செயல்களுக்கும் அடிமையாகி பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2026                                                    "AATHAVAN" – August 26, Wednesday 2026

"And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not." — Isaiah 58:11 (KJV)

When a son or a daughter lives in total obedience to their parents, it brings great joy to the parents. Such parents will not withhold good things from obedient children; moreover, they will do far beyond what the children expect for their well-being.

In the same way, when we live a life acceptable to the Lord, the Lord Himself will guide us. Therefore, we can live without overwhelming anxieties or great worries. Yes, if our life is led by God, we will not be anxious or restless about anything. He Himself will satisfy our soul in times of drought and strengthen our bones—meaning He will keep us steadfast and preserve us even during seasons of affliction.

Even in the harshest deserts, certain spots remain lush and fruitful; these are called oases. Beloved, when we rely on the Lord in this manner, no matter what severe troubles or sorrows come upon us, our soul will find sweet rest in the midst of afflictions, just like an oasis in a desert.

Today, speaking to those who live a life pleasing to Him, the Lord says: "thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not." Just as we water a garden that we tend every day, God will water us and care for us. Where there is an unfailing spring of water, the trees, plants, and vines endure the summer heat and flourish—and so shall we.

We see wealthy people in the world who live without God. We see many individuals who possess immense fame and riches. Yet we observe that their lives are dark, restless, and devoid of true prosperity. Though they have money, many live without peace. Consequently, seeking peace of mind, many become addicted to alcohol and other sinful acts, ending up in despair and perishing through suicide.

The one who pleases the Lord will think upon things pleasing to Him and meditate on His words. If one lives meditating on the Lord's words day and night, the Scripture declares:

"And he shall be like a tree planted by the rivers of water, that bringeth forth his fruit in his season; his leaf also shall not wither; and whatsoever he doeth shall prosper." — Psalm 1:3 (KJV)

Beloved, the scriptures are given by God, and His words will not lie. We must believe them. When we believe, live a life acceptable to Him, and meditate on His words, the blessing spoken in today's verse belongs to us. The Lord shall guide us continually, satisfy our soul in times of great drought, and make our bones strong; we shall be like a watered garden and like an unfailing spring of water.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - ஆதியாகமம் 1 : 2 / Genesis 1:2

 தியானம் - 2025

"ஆதவன்" ஆகஸ்ட் 25 செவ்வாய் 2026


"பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." ( ஆதியாகமம் 1 : 2 )

இந்த பூமியின் ஆரம்பகால நிகழ்வுகள் நமது வாழ்க்கையுடன் ஒன்றித்தே இருக்கின்றது. தேவன் எதனையும் நேர்த்தியான முறையில்தான் உருவாக்குவார். ஆனால் இன்றைய வசனத்தில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது" என்று கூறுகின்றது. ஒழுங்கற்ற நிலையில் தேவன் எதனையும் உருவாக்க மாட்டார். எனவே, சில வேத அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறும்போது, தேவனுக்கு எதிராகச் சாத்தான் கலகம் செய்தது இந்தகாலகட்டத்தில் இருக்கலாம் என்கின்றனர். (ஏசாயா 14:10-17 மற்றும் எசேக்கியேல் 28) எனவே, கலகம் செய்து வீழ்ச்சியடைந்த சாத்தான் இதனைச் செய்திருக்கலாம். எனவேதான் தேவனால் உருவாக்கப்பட்ட பூமியானது ஒழுங்கற்றுப் போனது என்கின்றனர்.   

அன்பானவர்களே, இதுபோலவே மனிதர்களையும் தேவன் செம்மையானவர்களாகவே  உருவாக்கினார். தேவ சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் சாத்தானின் தந்திரத்தால் மனிதன் தேவ சாயலை இழந்தான். தான் இழந்த பரலோக இன்பத்தை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகச் சாத்தான் மனிதர்களை வஞ்சித்து வைத்துள்ளான். இதனால் பூமிக்கு நேர்ந்த கதியே மனிதர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்து இருள் சூழ்ந்து இருந்ததுபோல  மனிதர்களும் வெறுமையும் இருளும் சூழ்ந்தவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், ஆதியில் "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." அதனால் பூமி மாற்றமடைந்தது. தேவன் மனிதர்களும்  இப்படியே மாற்றமடைய விரும்புகின்றார். எனவேதான் தூய ஆவியானவரை அவர் மனிதர்களுக்குத் துணையாகத் தந்துள்ளார். மட்டுமல்ல, தனது வார்த்தையான வெளிச்சத்தையும் மனிதர்களுக்குள் அனுப்பியுள்ளார். இதனையே நாம் "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று."( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

மனிதர்கள் மாற்றமடைய கிறிஸ்துவாகிய மெய்யான ஒளியை பிதாவாகிய தேவன் நமக்குத் தந்துள்ளார். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) ஆம், ஒழுங்கற்றும் இருள்சூழ்ந்தும் இருந்த பூமியை மாற்றி உயிர்க்கோளமாக மாற்றியதுபோல தேவன் மனிதர்களைக் கிறிஸ்துவின் ஒளியின் மூலம் புதிதாக மாற்றுகின்றார். 

ஆம், அன்று "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்"; எனவே பூமி புத்துயிர் பெற்றது. இதுபோல தேவனின் ஆவியானவர் நம்மேல் அசைவாடிட நாம் இடம்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி ஆவியானவர் நமக்குள் அசைவாடிடும்போது நாம் தேவன் அருளும் ஞானத்தை பெற்றவர்களாக மாறமுடியும். "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருக்கின்றதும் ஆழத்தின்மேல் இருள் சூழ்ந்ததுமான நமது வாழ்க்கை ஒளிபெறவேண்டுமானால் ஒளியான கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது அவசியம்; அதுபோல ஆவியானவரின் அசைவாடுதல் நமக்குத் தேவை. நமது வாழ்க்கையினை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். ஒழுங்கற்று இருள் சூழ்ந்திருந்த பூமி புத்துயிர் பெற்றதுபோல நமது வாழ்கையினையும் அவர் மாற்றி மகிழ்விப்பார்.  
 
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2025                                                                                   "AATHAVAN" – August 25 Tuesday 2026

"And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters." — Genesis 1:2 (KJV)

The initial events of this earth closely mirror our own lives. God creates everything in an orderly and perfect manner. Yet today's verse states, "And the earth was without form, and void; and darkness was upon the face of the deep." God does not create anything in a state of chaos or disorder. Therefore, when explaining this passage, some scholars suggest that Satan's rebellion against God may have occurred during this period (Isaiah 14:10–17 and Ezekiel 28). Thus, Satan, who rebelled and fell, may have caused this destruction, resulting in the earth made by God becoming formless and void.

Beloved, in the same way, God created human beings upright and in His own image. But through Satan's subtlety, man lost the image of God. Satan has deceived humanity so that people might not attain the heavenly joy he himself lost. Consequently, the same fate that befell the earth has happened to human lives. Just as the earth was without form, void, and enveloped in darkness, human beings are also filled with emptiness and surrounded by darkness.

However, in the beginning, "the Spirit of God moved upon the face of the waters," and because of this, the earth was transformed. God desires that human beings undergo this very same transformation. That is why He has given the Holy Spirit as a helper to mankind. Furthermore, He has sent the light of His Word into humans. This is what we read:

"And God said, Let there be light: and there was light." — Genesis 1:3 (KJV)

Indeed,

"That was the true Light, which lighteth every man that cometh into the world." — John 1:9 (KJV)

On that day, the Spirit of God moved upon the face of the waters, and thus the earth was revived. Similarly, it is essential that we yield and make room for the Spirit of God to move upon us. When the Holy Spirit moves within us, we become recipients of the wisdom that God grants. As the Apostle Paul writes:

"Now we have received, not the spirit of the world, but the spirit which is of God; that we might know the things that are freely given to us of God." — 1 Corinthians 2:12 (KJV)

If our lives—which may be formless, void, and surrounded by darkness over the deep—are to receive light, Christ, who is the Light, must come into us. Likewise, we need the moving of the Holy Spirit. Let us surrender our lives to God in prayer. Just as the chaotic and dark earth was renewed, He will transform our lives and fill us with joy.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Saturday, August 22, 2026

🦋 Meditation verse - ஓசியா 14 : 9 / Hosea 14:9

 தியானம் - 2024

"ஆதவன்" ஆகஸ்ட் 24  திங்கள் 2026


"இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்." ( ஓசியா 14 : 9 )

தேவன் தனது பிள்ளைகளுக்கு வைத்துள்ள வழிகள் மேலானவைகள், ஆனால் இடுக்கமானவைகள். இந்த இடுக்கமான வழியிலேயேதான் நமது ஆவிக்குரிய பயணம் அமையவேண்டும். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்."  ( மத்தேயு 7 : 13-14 ) என்று கூறினார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? என்று கேள்வியெழுப்புகின்றது.  

நீதிவாழ்க்கை வாழ்பவர்களுக்கு கர்த்தரின் நீதிவழிகள் கடினமாகத் தெரியாது. ஆனால் துன்மார்க்கர்களுக்கு அப்படியல்ல, அந்த நீதியின் வழிகள் அவர்களுக்கு இடறுதலுக்குரிய வழியாகவே இருக்கும். அவர்களுக்கு நாம் நேர்வழியைப் போதித்தாலும் அதனை உணர்ந்துகொள்ளமாட்டார்கள். எனவேதான் அவர்களை இன்றைய தியான வசனம் பாதகர்கள் என்று கூறுகின்றது.  அவர்கள் எந்த நீதி வழியையும் அறியாமல் படுபாதக செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள். 

இத்தகைய துன்மார்க்க பாதகர்களைக் கட்டுப்படுத்தவே பலவித சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு எத்தனை பெரிய இரக்கம் காண்பித்தாலும் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஆம், "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

ஆனால், கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள் என்று இன்றைய தியான வசனம்கூறுகின்றபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ள நீதிமான்களாகிய நாம்  அவரது வழிகளில் நடக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆவியானவர் நம்மை அந்த வழியில் நடத்துகின்றார். எனவேதான் "ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்." (உபாகமம் 8:6) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 
 
ஆம் அன்பானவர்களே, இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவர்களாகவும் இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவர்களாகவும் நாம் வாழவேண்டியது அவசியம்.  கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் வேரூன்றி வளரவேண்டியது அவசியம். ஆவியானவர் நமக்கு அவற்றைத் தெளிவுபடுத்தி நம்மை அந்த வழியில் நடத்தவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் தேவ ஞானத்தில் வளர்ந்து பாதக செயல்களுக்கு விலகிடமுடியும். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2024

“AATHAVAN” – August 24, Monday, 2026

“Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them? for the ways of the LORD are right, and the just shall walk in them: but the transgressors shall fall therein.” Hosea 14:9 (KJV)

The ways that God has ordained for His children are higher and better, yet they are narrow and demanding. It is along this narrow way that our spiritual journey must be lived. Our Lord Jesus Christ Himself said:

“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” — Matthew 7:13–14 (KJV)

This is precisely what today’s meditation verse asks: “Who is wise, and he shall understand these things? prudent, and he shall know them?”

For those who live a righteous life, the righteous ways of the Lord will not appear difficult or burdensome. But it is not so with the wicked. The ways of righteousness become a stumbling block to them. Even when the right path is taught to them, they fail to understand or accept it. That is why today’s meditation verse refers to them as transgressors. Without knowing or following the ways of righteousness, they do not hesitate to commit even the most grievous acts of wickedness.

It is to restrain such wicked and transgressive people that various laws have been enacted. Yet, however much mercy and kindness are shown to them, they often refuse to change their ways. Indeed, the Scripture says:

“Let favour be shewed to the wicked, yet will he not learn righteousness: in the land of uprightness will he deal unjustly, and will not behold the majesty of the LORD.” — Isaiah 26:10 (KJV)

But, as today’s meditation verse declares, “the ways of the LORD are right, and the just shall walk in them.” We, who have been redeemed by the precious blood of Christ and made righteous through Him, are called to walk in His ways. The Holy Spirit leads us along this path. Therefore, the Word of God instructs us:

“Thou shalt keep therefore the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.” — Deuteronomy 8:6 (KJV)

Yes, dear beloved, it is essential that we live as people who are wise enough to understand these things and prudent enough to discern them. The Word of the Lord must take root in us and grow within our hearts. It is equally essential that the Holy Spirit enlighten our understanding and lead us in the right way.

Only then can we grow in the wisdom of God and turn away from sinful and transgressive ways. Let us surrender ourselves completely to the guidance of the Holy Spirit and pray that He may lead us continually in the ways of the Lord.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 16 / 2 Corinthians 6:16

  தியானம் - 2030 " ஆதவன் " ஆகஸ்ட் 30  ஞாயிறு 2026 "தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்...