Sunday, September 13, 2026

🦋 Meditation verse - ரோமர் 8 : 24, 25 / Romans 8:24–25

꧁༺  ஆதவன் தியானம்  ༻꧂                                   எண் :- 2046 நாள் :- 15.09.2026 

 


"அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 )

நாம் உலகத்தில் பார்ப்பனவற்றை பார்க்கின்றபடியே ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், நாம் பார்த்திராத ஒன்றினைப்பற்றி ஒருவர் கூறுவதை நமது மனது எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே இடதுசாரி சிந்தனையாளர்கள் கடவுள் பற்றிய கோட்பாடுகளை கருந்துமுதல்வாதம் என்கின்றனர். அதாவது, கடவுள் நம்பிக்கை என்பது ஒரு கருத்து மட்டுமே. அதனை முன்னிலைப்படுத்தி மதவாதிகள் பேசுகின்றனர் என்கின்றனர். 

இப்படி மூளை அறிவால் சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வாழ்வோமானால் கடவுளை எவரும் உணர்ந்துகொள்ள முடியாது. அவர் உள்ளத்தால் உணரக்கூடியவர். பரிசுத்த உள்ளத்தில் குடிகொள்ள விரும்புபவர்.  எனவே,  அவரை விசுவாசத்தினாலும் அவருக்கேற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வதாலும் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும். அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது அவர் நமக்குத் தம்மை வெளிப்படுத்தி நடத்துகின்றார். இதனை நாம் உறுதியாக விசுவாசிக்கவேண்டியது அவசியம்.   ஆம்,  "விசுவாசமானது      நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) 

நாம் கண்ணால் காண்பவற்றை நம்பவேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  இப்படித் தான் காணாததை நம்பி விசுவாசத்துடன் காத்திருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட தேவ மனிதன்தான் ஆபிரகாம். 

"விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." ( எபிரெயர் 11 : 8 ) அதாவது, ஆபிரகாம் தனது சுய ஆசை விருப்பங்களை நிறைவேற்றிட தேவனை விசுவாசிக்கவில்லை. மாறாக,  தேவன் விரும்புவதை அவர் தனக்குச் செய்யட்டும் என்று தன்னை ஒப்புக்கொடுத்தார்.  இதனால் தேவனால் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினர் சுதந்திரமாகப் பெற்றுக்கொண்டனர். 

இதுபோன்ற ஒரு விசுவாச உண்மைதான் வேதம் கூறும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் மீட்பு அனுபவம். கிறிஸ்துவின் இரத்தத்துக்கு நமது பாவங்களைக் கழுவும் வல்லமை உண்டு. இதனை நாம் விசுவாசிக்கவேண்டியது அவசியம். எப்படி ஆபிரகாம் தேவனது வார்த்தையினை முற்றிலுமாக விசுவாசித்தாரோ, அப்படியே நாம் இதனை விசுவாசிக்கவேண்டியது அவசியம். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" என்கின்றார். 

ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் இன்று தேவனுடைய வார்த்தைகள்  அருளப்படுகின்றன. ஆபிரகாமைப்போல வாக்களிக்கப்பட்ட இவற்றை  இதுவரை வாழ்வில் நாம்  காணாதவர்களாக இருந்தாலும் ஆபிரகாமைப்போல இந்த வார்த்தைகளை விசுவாசிப்போமானால் ஆண்டவர் இயேசு அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.  "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9,10 )

இப்படி நமக்கு நீதி உண்டாக இருதயத்தில் விசுவாசம் கொள்வோமானால் நாம் ஒளியின் மக்களாக மாறுவோம்; அவரோடு ஐக்கியப்பட்டவர்களாக இருப்போம். ஆம், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

எனவே, இதுவரை நமது வாழ்வில் காணாத வேதாகமம் கூறும் மீப்பு அனுபவத்தை முதலில் விசுவாசிக்கவேண்டும். மட்டுமல்ல,  விசுவாசித்து அவை நிறைவேறுவதற்குப் பொறுமையோடே காத்திருக்கவேண்டும்.   அப்போது  நிச்சயமாக ஆண்டவாகிய இயேசு கிறிஸ்துவால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் மேலான அனுபவத்தை வாழ்வில் நாம் கண்டுணரமுடியும். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

𝐀𝐀𝐓𝐇𝐀𝐕𝐀𝐍 𝐌𝐄𝐃𝐈𝐓𝐀𝐓𝐈𝐎𝐍 ◂                                  

No: - 2046  Date: - 15.09.2026                                                                                                                        

"For in hope we have been saved, but hope that is seen is not hope; for who hopes for what he already sees? But if we hope for what we do not see, through perseverance we wait eagerly for it." — Romans 8:24–25

We readily accept things in this world as we see them. However, our minds do not easily accept what someone tells us about something we have not seen. Because of this, leftist thinkers call concepts about God "idealism" or "mere concepts." That is, they claim belief in God is merely an idea that religious people emphasize and promote.

If we live solely by thinking and speaking through intellectual knowledge, no one can experience God. He is felt and experienced in the heart. He desires to dwell in a pure heart. Therefore, He can be experienced only through faith and by living a holy life pleasing to Him. When we obey His words, He reveals Himself to us and guides us. It is essential that we firmly believe this. Yes,

"Now faith is the certainty of things hoped for, the conviction of things not seen." — Hebrews 11:1 (NASB)

We do not need to hope for what we can see with our eyes. But today's meditation verse tells us that if we hope for what we do not see, we wait for it with perseverance. Abraham was a man of God who believed what he had not seen, waited in faith, and received blessings.

"By faith Abraham, when he was called, obeyed by going out to a place which he was to receive for an inheritance; and he left, not knowing where he was going." — Hebrews 11:8 (NASB)

That is to say, Abraham did not exercise faith in God merely to fulfil his own personal desires. Rather, he surrendered himself so that God might fulfil His will in his life. As a result, Abraham’s descendants inherited the promised land of Canaan.

A similar truth of faith is the experience of redemption through the blood of the Lord Jesus Christ, as taught in Scripture. The blood of Christ has the power to wash away our sins. It is essential that we believe this. Just as Abraham completely believed God’s word, we too must believe this truth. It is concerning this that the Apostle Paul declares in today's verse, "For in hope we have been saved."

Just as God’s word was declared to Abraham, His word is given to us today. Even if we have not yet seen these promises fulfilled in our lives, if we believe His words as Abraham did, we can receive the salvation offered by the Lord Jesus Christ.

"...that if you confess with your mouth Jesus as Lord, and believe in your heart that God raised Him from the dead, you will be saved; for with the heart a person believes, resulting in righteousness, and with the mouth he confesses, resulting in salvation." — Romans 10:9–10 (NASB)

If we believe in our hearts unto righteousness in this way, we will become children of light and live in fellowship with Him. Yes,

"...but if we walk in the Light as He Himself is in the Light, we have fellowship with one another, and the blood of Jesus His Son cleanses us from all sin." — 1 John 1:7 (NASB)

Therefore, we must first believe in the experience of salvation spoken of in the Bible—an experience we have not yet visually seen in our lives. Not only that, but having believed, we must wait patiently for its fulfilment. Then, we will certainly experience in our lives the glorious reality that our sins have been forgiven by the Lord Jesus Christ.

𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱


Saturday, September 12, 2026

🦋 Meditation verse - யாக்கோபு 1 : 8 / James 1:8

 தியானம் - 2045

"ஆதவன்" செப்டம்பர் 14 திங்கள் 2026


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இந்த உலக வாழ்க்கையில்கூட நாம் ஏதாவது ஒன்றினைச் சாதிக்கவேண்டுமானால்  மனம் தடுமாற்றமின்றி எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். ஒரு முடிவெடுக்குமுன் பலமுறை சிந்திக்கவேண்டும் அனால் முடிவெடுத்தபின்னர் எடுத்த முடிவில் தடுமாற்றமின்றி துணிந்து நிற்கவேண்டும். இப்படித் துணிந்து  முடிவெடுக்கமுடியாதவர்கள் எதனையும் சாதிக்கமுடியாது. இத்தகையவர்களே இருமனமுள்ளவர்கள். இருமனமுள்ளவர்களாக நாம் இருப்போமானால் நிலையற்றவர்களாகவே இருப்போம். 

ஆவிக்குரிய வாழ்விலும் நாம் இப்படியே இருக்கவேண்டியது அவசியம். கர்த்தருக்காக வாழ நாம் முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து நாம் பின்வாங்கிடக்கூடாது. உழக்கூடிய உழவன் முன்னோக்கிப்பார்த்து வயலை உழவேண்டியது அவசியம். பாதி வயலை உழுதுவிட்டு பின்னோக்கிப் பார்த்துத் தனது வேலையை நிறுத்திவிட்டால் அவனால் வயலை உழுது பயிர்ச்செய்து அறுவடையைக் காண முடியாது.  

நாம் தேவனுக்கென்று எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். இல்லையானால் நாம் அவருக்குமுன் தகுதியற்றவர்களாக ஆகிவிடுவோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்" ( லுூக்கா 9 : 62 )

ஆம் அன்பானவர்களே, இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இருமனமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாங்கள் நினைத்தது கிடைக்கவேண்டும், ஜெபித்தது நிறைவேறவேண்டும் என எண்ணுகின்றனர். அப்படி நடக்கவில்லையானால் கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்து மாற்றுவழியைத் தேடுகின்றனர்.  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இப்படியே எலியா காலத்திலும் மக்கள் இருந்தனர். "அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை." ( 1 இராஜாக்கள் 18 : 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், இரண்டு நினைவுகள் நம்மைக் குந்திக்குந்திதான் நடக்கச்செய்யும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியாது. 

கிறிஸ்துவிடம்  வந்த ஒருவன் பின்னிட்டுப் பார்க்கின்றான் என்றால் அதற்கு இன்னொரு காரணம் பழைய பாவ சந்தோஷங்களாகும். பழைய பாவ நண்பர்களும் அவர்களோடு செலவழித்த பழைய நாட்களும்  நினைவுக்கு வருவதால் பலர் இருமனமுள்ளவர்களாக மாறி, கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்குகின்றனர்.  பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை முற்றிலும் மறந்துவிட வேண்டியது அவசியம். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 )

ஒரு மனிதனுக்கு இருமனம் ஏற்படக் காரங்கள் விசுவாசக் குறைவும் தேவையில்லாத மாற்று சிந்தனைகளும்தான். எனவே நாம் கிறிஸ்துவைத்தவிர வேறு எதனையும் அறியாமலும், அறிய ஆசைப்படாமலும் இருக்கவேண்டியது அவசியம். இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்கின்றார். 

இருமனம் வேண்டாம்; கிறிஸ்துவைத்தவிர வேறு சிந்தனை வேண்டாம்; கலப்பையின்மேல் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கவேண்டாம். நமது இலக்கான கிறிஸ்துவை மட்டுமே நோக்கிப்பார்த்து நமது விசுவாசப் பயணத்தைக் தொடருவோம். காரணம், இன்றைய தியான வசனம் கூறுவதுபோல  இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். 

MEDITATION – 2045

AATHAVAN – September 14, Monday, 2026

“Being a double-minded man, unstable in all his ways.” James 1:8 (NASB)

Even in our earthly life, if we want to accomplish something, it is essential that we remain firm in the decisions we make, without wavering. We should think carefully and consider matters many times before making a decision. But once a decision has been made, we must stand firmly and courageously by it without hesitation. Those who are unable to make firm decisions will not be able to accomplish anything. Such people are double-minded. If we are double-minded, we will always remain unstable.

The same principle applies to our spiritual life. Once we have decided to live for the Lord, we must never turn back from that decision. A farmer who ploughs a field must look forward and continue his work. If he ploughs only half of the field and then looks back and stops, he will never be able to complete the ploughing, cultivate the field, or see the harvest.

Likewise, we must remain steadfast in the decision we have made to live for God. Otherwise, we will become unworthy before Him. This is exactly what our Lord Jesus Christ said:

“No one, after putting his hand to the plow and looking back, is fit for the kingdom of God.” — Luke 9:62 (NASB)

Yes, beloved, sadly, many Christians today are double-minded. They expect everything to happen according to their wishes and want their prayers to be answered exactly as they desire. When this does not happen, they grumble against the Lord and begin looking for alternative ways. Even those who call themselves spiritual Christians are not always an exception to this.

People were like this even during the days of Elijah. We read:

“How long will you hesitate between two opinions? If the LORD is God, follow Him; but if Baal, follow him.” — 1 Kings 18:21 (NASB)

Yes, having two conflicting thoughts will only make us hesitate and stumble along our way. We will not be able to make progress in our lives.

When a person comes to Christ and then begins looking back, another reason may be the pleasures of his former sinful life. Old sinful friends and the days spent with them may come to mind. As a result, many become double-minded and turn away from Christ. Once we have run away from sinful ways, it is essential that we completely leave them behind and forget them. If we turn back and look at them again, sin may pull us back and cast us once more into the pit from which we escaped.

“For if, after they have escaped the defilements of the world through the knowledge of the Lord and Savior Jesus Christ, they are again entangled in them and are overcome, the last state has become worse for them than the first.” — 2 Peter 2:20 (NASB)

The reasons for double-mindedness in a person are a lack of faith and unnecessary alternative thoughts. Therefore, we must be determined to know nothing except Christ and must not desire to pursue anything that takes our attention away from Him. That is why the Apostle Paul said:

“For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified.” — 1 Corinthians 2:2 (NASB)

Let there be no double-mindedness. Let there be no thoughts that draw us away from Christ. Let us not put our hand to the plow and then look back. Instead, let us keep our eyes fixed upon Christ, our goal, and continue our journey of faith with steadfastness.

For, as today’s meditation verse reminds us:

“Being a double-minded man, unstable in all his ways.” — James 1:8 (NASB)

✍️ Bro. M. Geo Prakash  

🦋 Meditation verse - சங்கீதம் 57 : 2 / Psalm 57:2

 தியானம் - 2044

"ஆதவன்" செப்டம்பர் 13 ஞாயிறு 2026



"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

இன்று நல்ல மதிப்பெண்ணுடன் படித்துமுடித்தும் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களும் இளம்பெண்களும் அதிகம் உண்டு.  ஆனால் இப்படி வேலைவாய்ப்பில்லாத பலரும் பொதுவாக தேவனை நோக்கிப்பார்ப்பதில்லை. நாம் தேவன்மேல் பற்றுக்கொள்ளவும் ஜெபிக்கவும் நமக்கு இன்னும் வயதாகவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். மேலும் தங்களது இளம் வயதை இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் கைப்பேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் செலவிடுகின்றனர். 

ஆனால், "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" ( பிரசங்கி 12 : 1 ) என்று வேதம் அறிவுறுத்துகின்றது.  ஆம் அன்பானவர்களே, நாம் நமது இளம் வயதிலேயே தேவனை அன்புசெய்து அவரையேச் சார்ந்து வாழப் பழகவேண்டும். 

தாவீது சவுல் இராஜாவுக்குப் பயந்து  தப்பி ஓடியபோது மலையிலுள்ள ஒரு குகையிலிருந்து இன்றைய தியான வசனம் குறிப்பிடப்பட்டுள்ள சங்கீதத்தை எழுதினார். ஆனால், தாவீது இராஜாவானபோது அவருக்கு வயது முப்பது. அதாவது, அவர் இராஜாவாகுமுன்,  முப்பது வயதுக்கும் குறைவாக இருக்கும்போது இன்றைய தியான வசனத்தை எழுதியுள்ளார் என்பது தெளிவாகின்றது. ஒரு துடிப்பான இளைஞனாக அவர் இருந்தபோது தனது பலத்தை நம்பாமல்,  "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறுகின்றார். 

இது தாவீதின் விசுவாச அறிக்கையாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். "தேவன் எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகின்றார், எனவே அவரை நோக்கிக் கூப்பிடுவேன்"  என்று அவர் முழு நம்பிக்கையுடன் கூறுவதை நாம் பார்க்கின்றோம். மட்டுமல்ல, தொடர்ந்து அவர் கூறுகின்றார், "என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்:  தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." ( சங்கீதம் 57 : 3 ) என்கின்றார் முழு விசுவாசத்துடன். 

இதனை வாசிக்கும் இளம் சகோதரனே, சகோதரியே, முப்பது வயதுக்குமுன் தேவன்மேல் இத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்த தாவீதைப்போல உங்கள் அன்பும் விசுவாசமும் இருக்கின்றதா? தேவன் எனக்காக இதனைச் செய்து முடிப்பார் என்று தாவீதைப்போல உறுதியான விசுவாச அறிக்கையை  உங்களால் கூறமுடியுமா? தாவீது சுகமாக வாழ்ந்து இருக்கும்போது இப்படிக்கூறவில்லை. மாறாக,  நொறுங்குண்ட இதயத்துடன், உயிர் பயத்துடன் இருந்தபோது இந்த விசுவாச அறிக்கையினைச் செய்தார். 

இதே தாவீது, "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" ( சங்கீதம் 34 : 18 ) என்று ஏற்கெனவே கூறியுள்ளார். அதாவது,  நொறுங்குண்ட இதயத்துடன், மனவேதனையுடன் தேவனை நோக்கிப்பார்த்தால் தேவன் நிச்சயமாக நமக்கு இரங்குவார் என்கின்றார். தாவீதின் வார்த்தைகள் அனைத்துமே அவர் தேவனோடு அனுபவித்த அனுபவத்தின் வெளிப்பாடுகள்.  ஆம், மனவேதனைக்குத் தீர்வு முகநூலும், இன்ஸ்டாகிராமும் இதர சமூக ஊடகங்களுமல்ல. மாறாக, தேவனாகிய கர்த்தரின் சமூகம் மட்டுமே. 

இன்றைய ஒடுக்கபட்ட, வேலையற்ற, புறக்கணிக்கப்பட்ட நிலையினை எண்ணி வருந்தாமல், கர்த்தரை உறுதியான விசுவாசத்துடன் பற்றிக்கொள்ள இன்றைய தியான வசனம் மூலம் கர்த்தர் உணர்த்துகின்றார். கர்த்தரையே பற்றிக்கொள்ளுங்கள்; "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறியுள்ளபடி அவரை நோக்கி விசுவாசத்துடன் உங்கள் மனதின் வேதனையையும் எதிர்பார்ப்பையும் வெற்றி அறிக்கையிடுங்கள். ஆம், உங்கள் விசுவாச அறிக்கையின்படியே கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். 

✍️சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2044

"AATHAVAN" Sunday, September 13, 2026


"I will cry to God Most High, To God who accomplishes all things for me." (Psalm 57:2)

Today, there are many young men and women who have graduated with good marks but lack employment opportunities that match their education. However, many of those who are unemployed in this way generally do not look to God. Many think they are not yet old enough to cling to God or to pray. Furthermore, most of today's youth spend their younger years on mobile phones and social media.

But the Scripture advises, "Remember also your Creator in the days of your youth" (Ecclesiastes 12:1). Yes, beloved, we must learn to love God and depend solely on Him even in our youth.

David wrote the Psalm containing today's meditation verse from a cave in the mountains while fleeing in fear of King Saul. However, David was thirty years old when he became king. This means it is clear he wrote today's meditation verse before he became king, when he was less than thirty years old. As a vibrant youth, without relying on his own strength, he declared, "I will cry to God Most High, To God who accomplishes all things for me."

We see this as David's declaration of faith. We see him stating with full confidence, "God will accomplish all things for me, therefore I will cry out to Him." Not only that, he continues to say with full faith, "He will send from heaven and save me; He reproaches him who tramples upon me... God will send forth His lovingkindness and His truth" (Psalm 57:3).

Young brother or sister reading this, do you have such love and faith in God as David had before the age of thirty? Can you make a firm declaration of faith like David, saying that God will accomplish this for me? David did not say this while living comfortably. Rather, he made this declaration of faith when he was with a broken heart and in fear for his life.

This same David had already said, "The LORD is near to the broken-hearted And saves those who are crushed in spirit" (Psalm 34:18). That is, he says that if we look to God with a broken heart and mental agony, God will certainly have mercy on us. All of David's words are expressions of the experiences he had with God. Yes, the solution to mental agony is not Facebook, Instagram, or other social media. Rather, it is only the presence of the Lord God.

Through today's meditation verse, the Lord makes us realize that we should not despair over our current oppressed, jobless, or rejected state, but rather hold firmly onto the Lord with unwavering faith. Cling to the Lord alone; just as it is said, "I will cry to God Most High, To God who accomplishes all things for me," look to Him with faith and declare your heart's pain and expectations as a declaration of victory. Yes, according to your declaration of faith, the Lord will accomplish all things for you.

✍️ Bro. M. Geo Prakash  

Friday, September 11, 2026

🦋 Meditation verse - சகரியா 2 : 7, 8 / Zechariah 2:7, 8

 தியானம் - 2043

"ஆதவன்" செப்டம்பர் 12 சனி 2026


"பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 7, 8 )

நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் மகிமை உண்டாகும் என்று இன்றைய தியான வசனம் மூலம் தேவன் நமக்கு அறிவுறுத்துகின்றார். 

பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்ததுபோல கர்த்தருக்கு என நியமிக்கப்பட்ட சீயோன் மக்களாகிய பலர் இன்று அறிந்தோ அறியாமலோ பாவத்துக்கு அடிமைகளாக இருக்கின்றோம். ஆம், பாவ சந்ததிகளாகிய பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் அவர்களைப்போல வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

இப்படி வாழும் மக்களைப்பார்த்து, "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." அதாவது, பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்களைவிட்டு; அவர்களது பாவ பழக்கங்களை விட்டு, உன்னை விடுவித்துக்கொள். அப்போது உனது வாழ்க்கையில் புது மகிமையைக் காண்பாய் என்கின்றார். 

இப்படி நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு ஆசீர்வாதம் உண்டு. இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதியில்  இதனைக் குறித்து கூறப்பட்டுள்ளது. நாம் பாபிலோன் வாழ்க்கையினை விட்டுவிடும்போது, இதுவரை உங்களை அடிமைப்படுத்தி கொள்ளையிட்ட பாபிலோனிடத்துக்கு நான் செல்வேன் என்று ஆவியானவர் கூறுகின்றார்; எனவே, அவர்கள் இனி உன்னை நெருங்க முடியாது.   மட்டுமல்ல, இனி நீங்கள் எனது கண்மணிபோல இருப்பீர்கள். உங்களை எவரும் இனித் தொடமுடியாது. இதனையே,  "உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்ட சீயோன் மக்கள் நாம். இதனை உணர்ந்து நமது பாவ வாழ்க்கையினை விட்டு மனம்திரும்பி அவரிடம் வரவேண்டியது அவசியம். இன்று பலரும் தங்களது தொடர்ந்த துன்பங்கள், ஆசீர்வாதக் குறைவுகளுக்கான காரணம் புரியாமல் தொடர்ந்து பாபிலோன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இன்று தேவன் சகரியா மூலம்  "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்" என அறைகூவல் விடுகின்றார். 

அப்படி விடுவித்துக்கொண்டபின் மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மட்டுமல்ல, அதன்பின் எந்தத் துன்பங்களும் உங்களை மேற்கொள்ளாதவாறு கர்த்தர்  நான் காத்துக்கொள்வேன் என்கின்றார். காரணம், பாபிலோன் வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொண்ட  உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அப்படித் தொடுகிறவனை அவர் விட்டுவிடமாட்டார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2043

"AATHAVAN" | Saturday, September 12, 2026

"Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon. For thus says the LORD of hosts, ‘After glory He has sent Me against the nations which plunder you, for he who touches you, touches the apple of His eye.’" (Zechariah 2:7, 8 - NASB)

Through today’s meditation verse, God instructs us that when we free ourselves from our sinful life, there will be glory in our lives.

Babylon signifies bondage. Just as the people of Israel were slaves to the Babylonians, many of us—the people of Zion appointed for the Lord—are today slaves to sin, whether knowingly or unknowingly. Yes, we are living like them, dwelling among a generation that lives a sinful "Babylonian" life.

Looking at people living this way, the Lord says, "Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon. For thus says the LORD of hosts, ‘After glory...’" That is, free yourself from the people living a Babylonian life and from their sinful habits. When you do, He says you will see new glory in your life.

When we free ourselves in this manner, there is a blessing waiting for us. The latter part of today’s meditation verse speaks to this. The Spirit says that when we forsake the Babylonian life, He will go against the Babylon that has enslaved and plundered you thus far; therefore, they will no longer be able to come near you. Not only that, but from now on, you will be like the apple of His eye. No one will be able to touch you anymore. This is exactly what the Lord God means when He says, "He has sent Me against the nations which plunder you, for hewho touches you, touches the apple of His eye."

Yes, dear ones, we are the people of Zion, appointed for the Lord. Realizing this, it is essential for us to leave our sinful lives, repent, and return to Him. Today, many continue to live a Babylonian life without understanding the reason for their ongoing struggles and lack of blessings. To them, God gives a clarion call today through Zechariah: "Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon."

The Lord of hosts promises that after you free yourself in this way, there will be glory. Moreover, the Lord says He will protect you so that no afflictions will overcome you thereafter. The reason is that anyone who touches you—you who have freed yourself from the Babylonian life—touches the apple of His eye. And He will never spare the one who touches you in such a way.

✍️ Bro. M. Geo Prakash  

Wednesday, September 09, 2026

🦋 Meditation verse - மத்தேயு 6 : 4 & 6:18 / Matthew 6:4 & 6:18

 தியானம் - 2042

"ஆதவன்" செப்டம்பர் 11 வெள்ளி 2026


"அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 4 & 6:18)

மனிதர்களைப்போல தேவன் நம்மைப் பார்ப்பது கிடையாது. மனிதர்கள் பொதுவாக நமது அந்தஸ்து, திறமை, பதவி, பகட்டு இவைகளைக்கொண்டு நம்மை எடைபோடுகிறார்கள். இவற்றின் அடிப்படையிலேயே நம்மை மதிக்கின்றனர். ஆனால் தேவன் நமது அந்தரங்க வாழ்கையினைப் பார்க்கின்றார். குறிப்பாக நமது இருதயத்துச் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பார்க்கின்றார். 

தாவீதைத் தெரிந்துகொள்ளுமுன் கர்த்தர் சாமுவேலுக்கு இதனைத் தெளிவாகக் கூறினார். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" ( 1 சாமுவேல் 16 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி நல்லச்  செயல்களைச் செய்யவேண்டும். நாம் ஜெபிப்பது, தர்மம் செய்வது, உபவாசம் மேற்கொள்வது இவைபோன்ற காரியங்களை அந்தரங்கமான முறையில் தேவனுக்கும் நமக்கும் மட்டும் தெரியும்படிச் செய்யவேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறும்போது இன்றைய தியான வசனத்தைக் கூறினார். ஆம், இவைகளை நாம் அந்தரங்கமாகச் செய்யவேண்டும், "அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" என்று கூறினார். 

ஆனால் மனிதர்கள் இதற்கு மாறாக, நல்லச் செயல்களை எல்லோரும் அறியும்படி பறைசாற்றுகின்றனர். பாவ காரியங்களையோ அந்தரங்கத்தில் இரகசியமாகச் செய்கின்றனர். அனால் அன்பானவர்களே, நல்ல செயலோ, கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவற்றுக்கு அவர் வெளியரங்கமான பலனளிப்பார்.  

"தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்." ( ரோமர் 2 : 6,7 )

ஆம் அன்பானவர்களே, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தேவனுக்குமுன் வெளியரங்கமாக இருக்கின்றன. நமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பலன் உண்டு. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். நல்ல செயலோ கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றார். "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்" ( எபிரெயர் 4 : 13 )

இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமது செயல்களுக்குத் தேவன் வெளியரங்கமான பதிலைத் தருவார். இறுதிநாளில் மட்டுமல்ல, அவர் விரும்பினால் நமது உலக வாழ்வில்கூட நாம் நமது செயல்களுக்கு ஏற்ற பலனை அவர் தருவதற்கு உண்மையும் கிருபையும் உள்ளவராகவே இருக்கின்றார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2042

"AATHAVAN" | Friday, September 11, 2026

"and your Father who sees what is done in secret will reward you." (Matthew 6:4 & 6:18, NASB)

God does not look at us the way humans do. People generally judge us by our status, talent, position, and outward show; they value us based on these things. But God looks at our secret, inner life. Specifically, He looks at the deepest thoughts and intentions of our hearts.

Before choosing David, the Lord stated this clearly to Samuel. We read: "But the Lord said to Samuel, 'Do not look at his appearance or at the height of his stature, because I have rejected him; for God sees not as man sees, for man looks at the outward appearance, but the Lord looks at the heart.'" (1 Samuel 16:7, NASB).

We must do our good deeds in a way that is hidden from others, known only to ourselves and to God. Jesus Christ spoke today’s meditation verse when He instructed that things like our praying, charitable giving, and fasting should be done secretly. Yes, we must do these things in private, and He promised that "your Father who sees what is done in secret will reward you."

In contrast, human beings often trumpet their good deeds so that everyone will know about them, while committing sinful acts in secret. But beloved, whether it is a good deed or a bad deed, God is watching everything in secret. He will certainly give an open reward or consequence for them.

"who will render to each person according to his deeds: to those who by perseverance in doing good seek for glory and honour and immortality, eternal life;" (Romans 2:6-7, NASB)

Yes, beloved, all the deeds we do are out in the open before God. There is a corresponding consequence for every single one of our actions. Therefore, it is imperative that we remain careful. Whether a deed is good or bad, God is watching it all in secret. "And there is no creature hidden from His sight, but all things are open and laid bare to the eyes of Him with whom we have to do." (Hebrews 4:13, NASB).

On the day of final judgment, God will give a public response for our deeds. And not only on the final day—if He so wills, He is faithful and gracious enough to grant us the appropriate fruit of our actions even during our earthly life.

✍️ Bro. M. Geo Prakash  


Monday, September 07, 2026

🦋 Meditation verse - ஏசாயா 60 : 2 / Isaiah 60:2

 தியானம் - 2041

"ஆதவன்" செப்டம்பர் 10 வியாழன் 2026



"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

நேற்றைய தியானத்தில் நாம் இருளின் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த கர்த்தரைக்குறித்தும் அவர் நம்மை தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளார் என்றும்  பார்த்தோம். 

இன்றைய தியான வசனம், அப்படி நம்மைத் தனது ஒளியால் நிரம்பிய கர்த்தர் நம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி மகிமைப்படுத்துவார் என்று கூறுகின்றது. அதாவது, கிறிஸ்துவின் ஒளி நம்மில் வரும்போது நாம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு விளங்குவோம். மட்டுமல்ல, நாம் உலகத்துக்கு மறைவாக இருக்கமாட்டோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மீது காணப்படும். அந்த மகிமையை மற்றவர்கள் பார்க்கும்படி அவர் நம்மை உயர்த்துவார். 

கிறிஸ்து தெரிந்துகொள்ளுமுன்  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் உலகிற்கு அறிமுகமானவர்களல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். ஆனால் கிறிஸ்து அவர்கள்மேல் உதித்தபோது அவர்கள் மகிமையடைந்தனர். 

இன்று நாமும் இதற்காகவே கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொண்ட நாம் அந்த ஒளியை மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி மலைமேல் உள்ள வெளிச்சமான பட்டணமாக விளங்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் விளங்கும்போது என்ன நடக்கும் என்பதனை இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக நாம், "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்."  ( ஏசாயா 60 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

இருளான இடத்தில் ஒரு ஒளி இருக்குமானால் அதனைத்தேடி அந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள பூச்சிகளெல்லாம் ஓடிவரும். அதுபோல நாம் ஒளிகொடுப்பவர்களாக வாழும்போது ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.

கிறிஸ்துவுக்குள் ஒளிகொடுப்பவர்களாக நாம் வாழும்போது இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும். அதாவது, உலகமெல்லாம் இருளுக்குள்ளும் அந்தகாரத்துக்குள்ளும் கிடந்தாலும் கர்த்தரது மகிமை நம்மேல் காணப்படும். 

இந்த ஒளியான இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள நாம் முயற்சியெடுக்கின்றோமா? இந்த மெய்யான ஒளி நமக்கு வேண்டும் எனும் ஆர்வம் நமக்கு இருக்கின்றதா? இந்த ஆர்வம் நமக்கு இருந்து உண்மையாக அவரைத் தேடுவோமானால், "உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

✍️சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2041

"AATHAVAN" – September 10, Thursday, 2026

"For behold, darkness will cover the earth and deep darkness the peoples; but the Lord will rise upon you and His glory will appear upon you." (Isaiah 60:2, NASB)

In yesterday's meditation, we saw how the Lord called us out of darkness into His marvellous light, making us a chosen race, a royal priesthood, a holy nation, and a people for His own possession.

Today’s verse tells us that the Lord, who filled us with His light, will distinguish and glorify us above others. When the light of Christ enters us, we stand apart. Furthermore, we will not remain hidden from the world. As the Lord Jesus Christ said:

"You are the light of the world. A city set on a hill cannot be hidden." (Matthew 5:14, NASB)

Yes, beloved, darkness will cover the earth and deep darkness the peoples; but the Lord will rise upon us, and His glory will appear upon us. He will lift us up so that others may see that glory.

Before Christ chose them, none of the disciples of our Lord Jesus were known to the world. They lived as ordinary men among ordinary people. But when Christ rose upon them, they were glorified.

Today, we too are called for this very purpose. Having received the light of Christ, He expects us to shine as a city on a hill, giving that light to others. When we shine like this, what happens next? We read in the very next verse:

"Nations will come to your light, and kings to the brightness of your rising." (Isaiah 60:3, NASB)

When a light burns in a dark place, insects from all around swarm toward it. In the same way, when we live as light-bearers, nations and kings will walk toward the brightness of our rising.

When we live reflecting Christ's light, even if darkness covers the earth and deep darkness covers the people, the Lord will rise upon us and His glory will be seen upon us. Though the whole world lies in darkness and gloom, God's glory will be evident on us.

Are we striving to receive Jesus Christ—the true Light—in our lives? Do we harbour a genuine longing for this light? If we seek Him earnestly with this desire, the Lord God promises: "The Lord will rise upon you and His glory will appear upon you."

✍️ Bro. M. Geo Prakash  

Sunday, September 06, 2026

🦋 Meditation verse - 1 பேதுரு 2 : 9 / 1 Peter 2:9

 தியானம் - 2040

"ஆதவன்" செப்டம்பர் 09 புதன் 2026


"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

வெளிப்பார்வைக்கு எதுவும் தெரியாமல் இருந்தாலும் இந்த உலகம் அந்தகார இருளில் மூழ்கி இருக்கின்றது. எனவேதான் இன்று இருளின் செயல்பாடுகள் உலகினில் அதிகரித்துள்ளன. நாமும் ஒருகாலத்தில் இந்த இருளின் மக்களாகவே இருந்தோம். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிருபையால் நமது வாழ்க்கையில் வந்தபோது நமது அந்தகாரம் மாறியது. 

இப்போது நாம் அவருடைய ஆச்சரியமான ஒளிக்குள் வந்துள்ளோம். மட்டுமல்ல, அவர் நம்மைக் கடவுளால்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளார். 

நாம் யாராக இருந்தாலும், இன்று எவ்வளவு பெரிய அந்தகாரத்தினுள் இருந்தாலும் உலகின் ஒளியாகிய அவரால் நம்மை முற்றிலும் ஒளிமிக்கவர்களாக மாற்றிடமுடியும். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" ( யோவான் 1 : 9 ) என்று கூறுகின்றார். எனவே, எந்த மனிதனும் அவரது ஒளியைத் தேடினால் நிச்சயமாக அதனைக் கண்டடைவான்.

இப்படி அந்தகாரத்திலிருந்த நாம் இன்று மெய்யான ஒளியினிடம் வந்துள்ளதால் நாம் அந்த ஒளியை நமக்குள் மட்டும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஏற்கெனவே நம்மைப்போல இருளில் இருக்கும் மற்றவர்களையும் அந்த ஒளியைநோக்கி வரச்செய்யவேண்டும். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு என்று கூறுகின்றார். தேவன் நம்மைக் கடவுளால்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளது நாம் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவே. 

அவரை அறிவித்தல் என்றவுடன் எல்லோரும் வேதாகமத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போதிக்கவேண்டும் என்று பொருளல்ல. மாறாக, நமது பழைய அந்தகார வாழ்க்கையிலிருந்து நாம் மாறி ஒளியிடம் வந்துள்ளோம் என்பதனை நமது வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு அறிவிப்பதைக் குறிக்கின்றது. அதாவது, ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையினை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். அப்படி சாட்சியாக வாழ்வதே அவரை அறிவித்தல். 

ஆம் அன்பானவர்களே, நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,  ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனம். இந்த எண்ணம் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  


Meditation - 2040

"AATHAVAN" | September 09, Wednesday, 2026

"But you are a chosen race, a royal priesthood, a holy nation, a people for God’s own possession, so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvellous light." (1 Peter 2:9)

Even though it may not be readily apparent to the outward eye, this world is steeped in deep darkness. That is why the works of darkness are increasing in the world today. We too were once people of this darkness. But when the Lord Jesus entered our lives through His grace, our darkness was turned away.

Now, we have come into His marvellous light. Not only that, but God has transformed us into a chosen race, a royal priesthood, a holy nation, and a people for His own possession.

No matter who we are or how deep the darkness we find ourselves in today, the One who is the Light of the World can completely transform us into beings filled with light. The Apostle John speaks of this very truth:

"There was the true Light which, coming into the world, enlightens every man." (John 1:9)

Therefore, if any person seeks His light, they will surely find it.

Having come out of darkness and into the true Light, we must not keep this light solely to ourselves. We must lead others—who are currently in the darkness just as we once were—toward this light.

This is precisely what the Apostle Peter means in today's meditation verse when he says, "so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvellous light." The reason God has transformed us into a chosen race, a royal priesthood, a holy nation, and a people for His own possession is so that we may proclaim Him to others.

Proclaiming Him does not mean everyone must pick up a Bible and preach. Rather, it means demonstrating through our lives that we have turned away from our old life of darkness and entered into the light. In other words, God expects a faithful testimony from our lives. Living as such a witness is what it truly means to proclaim Him.

Yes, beloved ones, we are a chosen race, a royal priesthood, a holy nation, and a people for His own possession. It is vital that we keep this truth continually in our minds.

✍️ Bro. M. Geo Prakash  

Saturday, September 05, 2026

🦋 Meditation verse - யோவான் 1 : 23 / John 1:23

 தியானம் - 2039

"ஆதவன்" செப்டம்பர் 08 செவ்வாய் 2026


"அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்."
( யோவான் 1 : 23 )

உலகின் மிகப்பெரிய வனாந்தரமாக அமேசான் காடுகள் உள்ளன. இந்தக் காட்டுப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்றுவரை மனிதர்கள் யாரும் சென்றது கிடையாது. காரணம், மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இங்குள்ள கடினமான சூழ்நிலை. ஆம், வனாந்தரம் பல்வேறு இடர்கள் சூழ்ந்த இடம். பொதுவாக, இருளும் அந்தகாரமும்தான் வனாந்தர பகுதிகளில் நிலைத்திருக்கும். மட்டுமல்ல, பல்வேறு கொடிய விலங்குகளின் வாழ்விடமாக வானாந்தரம் இருக்கின்றது. பொதுவாக, மனிதர்கள் பாதுகாப்பாக நல்லமுறையில் வாழமுடியாத இடங்களே இவை.  

அன்பானவர்களே, இன்று மனிதர்கள் பலரது குடும்ப வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் இதுபோல வனாந்தரமாகவே இருப்பதை நாம் உலகத்தில் பார்க்கலாம். வெளிப்பார்வைக்கு பகட்டாக நல்ல நிலையில் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவையே பலரது வாழ்க்கையாக இருக்கின்றது. இத்தகைய சூழல் மாறிட, "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள்" என்று அறைகூவல் விடுக்கின்றார் யோவான்.  

நமது இருளான வனாந்தர வாழ்க்கை மாறவேண்டுமானால் நமது வாழ்வில் ஒளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரவேண்டியது அவசியம். அவர் நமக்குள் வருவதற்கு நமது வழிகளை நாம் மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

இந்த உலகத்தில் மனிதர்கள் நாம்கூட அசுத்தமான இடங்களில் தங்கிட விரும்புவதில்லை. நம்மைச் சிலர்  எவ்வளவுதான் அன்புடன் உபசரித்தாலும், தங்களது வீட்டில் சில நாட்கள் தங்குமாறு  நம்மை வற்புறுத்தினாலும்  அவர்களது வீடுகளுக்குள் நாம் சென்று பார்த்தால் அங்குள்ள அசுத்தமான சூழ்நிலை நம்மை அங்குத் தங்கிட அனுமதிக்காது. ஆம் அன்பானவர்களே, இதுபோலவே தேவன் அசுத்தமான உள்ளங்களில் குடிவருவதில்லை. அவர் நமக்குள் வரவேண்டுமானால் முதலில் நமது உள்ளங்கள் தூய்மையடையவேண்டியது அவசியம். 

மேலும், நாம் தூய்மையான பாலை அசுத்தமான பாத்திரங்களில் சேமிப்பதில்லை. அப்படிச் சேமித்தால் சுத்தமான பால் கெட்டுப்போகும். எனவே, முதலில் பாத்திரத்தைத் தூய்மைப்படுத்தவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம் யோவான் தன்னைக்குறித்து கூறும் சாட்சி வார்த்தைகளாகும். தன்னைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளபடி,  "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று  நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்கிறார் அவர். ஆம், உங்கள் வழிகளை செம்மைபண்ணுங்கள் அப்போது நான் உங்களுக்குள் வருவேன் என்று யோவான் மூலம் இன்று கூறுகின்றார்  தேவனாகிய கர்த்தர். 

கிறிஸ்து இயேசுவுக்கு மனப்பூர்வமாக நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தூய்மையாகின்றோம். ஆம், அப்போது யோவான் கூறியதுபோல, கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுகிறவர்கள்  ஆவோம்.  அப்போது அவர் நமக்குள் வருவார்.  அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நமது குடும்ப வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் மாற்றத்தைக் காணமுடியும். அப்போது வனாந்தர இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவை மாறி நமது வாழ்வில் வசந்தம் வருவதைக் காணலாம்.  

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2039

"AATHAVAN" | Tuesday, September 08, 2026

"He said, 'I am a voice of one crying in the wilderness, "Make straight the way of the Lord," as Isaiah the prophet said.'" (John 1:23, NASB)

The Amazon rainforest stands as the largest wilderness in the world. Even today, humans have never set foot in certain parts of these dense jungle regions. The reason for this is the harsh and inhospitable environment. Indeed, the wilderness is a place surrounded by various dangers. Darkness and gloom generally dominate these wilderness areas, and they serve as habitats for many ferocious wild animals. In short, these are places where human beings cannot live safely or comfortably.

Dearly beloved, today we observe that the family and personal lives of many people in this world resemble such a wilderness. Even if everything appears prosperous and fine on the outside, darkness, spiritual blindness, and insecurity define their actual lives. To transform such a situation, John issues the clarion call: "Make straight the way of the Lord."

If our dark, wilderness-like lives are to change, the Lord Jesus Christ—the Light—must enter our lives. For Him to enter into us, it is essential that we reform and straighten our ways.

Even as human beings in this world, we do not wish to stay in filthy places. No matter how warmly someone welcomes us or insists that we stay in their home for a few days, if we see an unclean environment inside, we will not feel comfortable staying there. Yes, dearly beloved, in the same way, God does not dwell in unclean hearts. If He is to take up residence within us, our hearts must first be cleansed.

Furthermore, we do not pour clean milk into an unclean vessel. If we do, the pure milk will be spoiled. Therefore, it is necessary to clean the vessel first.

Today's meditation verse is the testimony John gave concerning himself. Fulfilling what the prophet Isaiah had foretold about him, he says, "I am a voice of one crying in the wilderness, 'Make straight the way of the Lord.'" Yes, through John, the Lord God says to us today: "Make your ways straight, and I will come into you."

When we sincerely surrender ourselves to Christ Jesus, confess our sins, and seek His forgiveness, we are cleansed and made pure. Then, as John declared, we become those who make straight the way for the Lord, and He comes to dwell within us. Only when He enters our lives can we experience true transformation in our family and personal lives. Then, the wilderness of darkness, obscurity, and insecurity will pass away, and a vibrant new spring will blossom in our lives.

"but if we walk in the Light as He Himself is in the Light, we have fellowship with one another, and the blood of Jesus His Son cleanses us from all sin." (1 John 1:7, NASB)

✍️ Bro. M. Geo Prakash  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 8 : 24, 25 / Romans 8:24–25

꧁༺  ஆதவன் தியானம்  ༻꧂                                    எண் :- 2046 நாள் :- 15.09.2026    "அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிர...