Monday, July 27, 2026

🦋 Meditation verse - யோவான் 1 : 12 / John 1:12

"ஆதவன்" தியானம் - 1999

ஜூலை 29 புதன் 2026  


"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )

அப்போஸ்தலரான யோவான் கூறும் இன்றைய தியான வசனத்தினை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். ஆனால் இந்த வசனம் வெறும் வார்தைகளாகவே நம்மில் பலருக்குள்ளும் இருக்கின்றது. இதனைச் செயல்படுத்தும்போது மட்டுமே நாம் இந்த வசனத்தின் உண்மையினை வாழ்வில் உணர்ந்துகொள்ள முடியும். 

கிறிஸ்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்தான். ஆனால் எல்லோரும் இந்த வசனம் கூறுவதன்படி தேவனுடைய பிள்ளைகளா என்பதுதான் கேள்வி. ஆலயங்களில் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்கள்தான். ஆனால் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளா? 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 )  என்று வேதாகமம் கூறுகின்றது. அதாவது ஒன்றை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம். தேவனிடம் ஏதாவது ஒன்றினை எதிர்பார்த்து வேண்டுதல் செய்வதும், அதற்காகவே ஆலயங்களுக்குச் செல்வதும் முழுமையான தேவன்மேல் கொள்ளும் விசுவாசம் என்று கூறிட முடியாது. இன்றைய வசனத்தின்படி, தேவன் அப்படிச் செல்பவர்கள்  அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. 

தேவன்மேல் விசுவாசமுள்ள ஆவிக்குரிய மனிதன் அவரையே வாழ்வில் அடைந்துகொள்ள நாடுவான். மட்டுமல்ல, அத்தகைய மனிதன் தனது சுய சித்தத்தை மறந்து தேவனையுடைய சித்தத்துக்கும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பான். இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8 : 14 ) என்று கூறுகின்றார். 

நூறு சதவிகிதம் உலக ஆசையினையும் உலகத் தேவைகளையும் உள்ளத்தில் சுமந்துகொண்டு ஆலயங்களில் வந்து கைகளைத்தட்டிப் பாடுவது தேவனைத் தேடுவது ஆகாது. வாழ்வின் முழு நேரத்தையும் உலகத்தோடு ஒத்து வாழ்ந்துவிட்டு ஒரு சில மணிநேரம் ஆராதனை எனும் பெயரில் பாடல்பாடி, ஆர்ப்பரிப்பது தேவனைத் தேடுவது ஆகாது. இத்தகைய செயல்பாடுகள் இன்றைய வசனம் கூறும் அவருடைய நாமத்தின்மேல் உள்ள  விசுவாசமல்ல; இப்படிச் செய்வது அவரை நாம் ஏற்றுக்கொண்டோம் என்பதாகாது.  

இஸ்ரவேலில் நிக்கொதேமு எனும் போதகன் இப்படித்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ மக்களைப்போல இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் இருந்தது. அவன் யூதர்களுக்குப் பயப்பட்டதால் இரவுவேளையில் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தான். "அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 2, 3 )

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது, அவரைத்தேடி வருவது மட்டும் போதாது. இயேசு கிறிஸ்து குறிப்பிடுவதுபோல நாம் மறுபடி பிறக்கவேண்டும். பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவமன்னிப்பைப் பெறவேண்டும். அப்போது மட்டுமே நாம் அவரது பிள்ளைகளாக முடியும். இப்படி  பாவமன்னிப்பைப்பெற்று அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு தேவன் அதிகாரங்கொடுத்துள்ளார்.  இந்த அதிகாரத்தை பெறுவதற்கு இன்றே முயற்சியெடுப்போம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1999

July 29, Wednesday, 2026

"But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:" — John 1:12

We have read today’s meditation verse, spoken by the Apostle John, many times. However, for many of us, this verse remains merely words. Only when we put it into practice can we experience the truth of this verse in our lives.

All Christians are believers in Christ. But the question is whether everyone is a child of God according to what this verse says. Those who participate in church services and those who attend prayer meetings are all people who believe in the name of Christ. But is everyone a child of God?

The Bible says:

"Now faith is the substance of things hoped for, the evidence of things not seen." — Hebrews 11:1

That is to say, if we believe in something, it is necessary to stand firm in that faith. Expecting something from God, making supplications for it, and going to church solely for that purpose cannot be called complete faith in God. According to today’s verse, God has not given power to all who go in such a manner to become the children of God.

A spiritual person who has faith in God will seek to possess Him alone in life. Furthermore, such a person will forget their self-will and yield themselves to the will of God and the guidance of His Spirit. It is regarding this that the Apostle Paul says:

"For as many as are led by the Spirit of God, they are the sons of God." — Romans 8:14

Carrying a hundred percent worldly desires and worldly needs in one's heart, coming to church, clapping hands, and singing is not truly seeking God. Living in conformity with the world all through life and then singing songs and shouting under the name of worship for a few hours is not seeking God. Such actions are not faith in His name as spoken of in today’s verse; doing this does not mean we have received Him.

In Israel, a teacher named Nicodemus was just like this. However, like most Christian people today, he had faith in Jesus Christ. Because he feared the Jews, he came seeking Jesus Christ at night.

"The same came to Jesus by night, and said unto him, Rabbi, we know that thou art a teacher come from God: for no man can do these miracles that thou doest, except God be with him. Jesus answered and said unto him, Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God." — John 3:2–3

Yes, dearly beloved, having faith in Jesus Christ and seeking Him out is not enough. As Jesus Christ points out, we must be born again. We must die to sin and live unto righteousness. We must yield ourselves completely to Christ and receive the forgiveness of sins. Only then can we become His children. To all who have received forgiveness of sins, believed on His name, and received Him, God has given power to become the children of God. Let us make every effort today to receive this power.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🦋 Meditation verse - மத்தேயு 6 : 22, 23 / Matthew 6:22, 23

"ஆதவன்" தியானம் - 1998

ஜூலை 28 செவ்வாய் 2026   


"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" ( மத்தேயு 6 : 22, 23 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துக் கூறுகின்றார். நமது உடலில் கண்ணானது ஒரு முக்கியமான உறுப்பு. நமது பார்வைத்  தெளிவாக இருந்தால்தான் நம்மால் உலகினை பார்க்கமுடியும்; அதன் அழகினை ரசிக்கமுடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக இடறிடாமல் நம்மால் நடக்கமுடியும். 

இப்படி நமது ஆவிக்குரிய கண்ணனது பார்க்கமுடியாமல் கெட்டதாயிருந்தால், நமது உடல் முழுவதும் பாவ இருளாயிருக்கும்; இப்படி நம்மிலுள்ள ஆவிக்குரிய வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து பல ஆவிக்குரிய சத்தியங்களை எளிமையான உவமைகளாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களைத் தெளிவுபடுத்த விரும்பினார். ஆனால் அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே,  தன்னையும்  தான் கூறியதையும்  உணர்ந்துகொள்ளாத யூதர்களைப்பார்த்து, "இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 ) என்று கூறினார். 

அதாவது கிறிஸ்துவையும் அவர் கூறிய உண்மைகளையும்  அறிய முடியாமல் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வை குறைவாக இருக்கக் காரணம் அவர்களது இருதயம் கொழுத்திருப்பதுதான் என்று கூறினார்.  இதனை நாம்  அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 : 27 பகுதிகளிலும் வாசிக்கலாம். 

ஆம் அன்பானவர்களே, உலக ஆசை இச்சை இவைகளால் நமது இருதயம் கொழுத்திருக்குமானால் நம்மால் தெளிவாக எதனையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது.  இப்படி மனிதர்களது இருதயம் கொழுத்திருப்பதனால் ஆவிக்குரிய சத்தியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.  எனவேதான் கிறிஸ்து மட்டுமே நமக்கு எல்லாமாக இருக்கின்றார் என்பதனையோ அவரை மட்டுமே நாம் அண்டிக்கொள்ளவேண்டும் என்பதனையோ பலரும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றனர். 

நாம் நமது பார்வையில் குறைவு ஏற்படுமானால் உடனேயே மருத்துவமனைக்குச் சென்று கண் பரிசோதனை செய்து பார்வைத் தெளிவடையவேண்டி அதற்கான மருத்துவ சிகிர்சையை மேற்கொள்ளுகின்றோம். இதுபோல, நமது ஆவிக்குரிய பார்வைக்குறைபாட்டையும் நாம் சரிசெய்ய முயற்சி எடுக்கவேண்டியது அவசியம். 

ஆனால் இன்று பிரச்னை என்னவென்றால் பலரும் தங்களது பார்வைக்குறைவை உணர்வதுமில்லை அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. இப்படியே அன்றைய யூதர்களும் இருந்தனர். எனவேதான் "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்." ( யோவான் 9 : 41 )

ஆம் அன்பானவர்களே, நாம் குருடர்கள் என்பதனை ஒத்துக்கொள்வோமானால் நாம் நியாயம்தீர்க்கப்படமாட்டோம்;  கிறிஸ்துவும் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். ஆனால் நாம் "நாங்கள் குருடர்களல்ல, நன்றாக பார்வை பெற்றவர்கள்" என்று கூறிக்கொண்டு அவரை வாழ்வில் அறியாமல் இருப்போமானால் நமது பாவம் நிலைநிற்கும். 

நமது ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துத் தெளிவுள்ளவர்களாக இருப்போம்.  அவரை நாம் எப்படி அறிந்திருக்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம். கிறிஸ்துவைகுறித்த நமது ஆவிக்குரிய பார்வை தெளிவாக இருக்குமானால் நமது சரீரம் முழுவதும் பாவக்கறை இல்லாமல் வெளிச்சமாயிருக்கும். நமக்குக் கிறிஸ்துவைகுறித்த பார்வைக் குறைந்து நமது ஆவிக்குரிய கண் கெட்டதாயிருந்தால், நமது  சரீரம் முழுவதும் பாவ இருளாயிருக்கும்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1998

July 28, Tuesday 2026

"The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light. But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If therefore the light that is in thee be darkness, how great is that darkness!" (Matthew 6:22, 23)

In today's meditation verse, the Lord Jesus Christ speaks about the spiritual vision of human beings. The eye is an essential organ in our body. Only if our vision is clear can we see the world, enjoy its beauty, and above all, walk without stumbling.

In the same way, if our spiritual eye is unable to see and becomes evil, our entire body will be filled with the darkness of sin. If the spiritual light within us is darkness, how great is that darkness! says Jesus Christ.

Jesus Christ desired to bring clarity to the people by explaining many spiritual truths through simple parables. But the people did not accept them. Therefore, looking at the Jews who failed to perceive Him and His teachings, He said:

"For this people's heart is waxed gross, and their ears are dull of hearing, and their eyes they have closed; lest at any time they should see with their eyes and hear with their ears, and should understand with their heart, and should be converted, and I should heal them." (Matthew 13:15)

That is, He explained that the reason human spiritual vision is deficient—leaving them unable to know Christ and the truths He spoke—is because their hearts have waxed gross (grown dull/callous). We can also read this passage in Acts 28:27.

Yes, beloved ones, if our heart becomes gross through worldly desires and lusts, we will not be able to see or hear anything clearly. Because human hearts have grown dull like this, many are unable to clearly understand spiritual truths. This is why many fail to realize that Christ alone is our everything, and that we must rely solely on Him.

If we experience a decline in our physical vision, we immediately go to an eye hospital, get a vision test, and undergo medical treatment to restore clear sight. In the same way, it is necessary for us to make an effort to correct our spiritual vision defects as well.

However, the problem today is that many do not even realize their defect in vision, nor do they accept it. The Jews of that day were just like this. Therefore,

"Jesus said unto them, If ye were blind, ye should have no sin: but now ye say, we see; therefore, your sin remaineth." (John 9:41)

Yes, beloved ones, if we acknowledge that we are blind, we will not be judged, and Christ will reveal Himself to us. But if we say, "We are not blind, we have good sight," while living without truly knowing Him, our sin remains.

Let us be clear concerning our spiritual vision. Let us examine how we have known Him. If our spiritual vision concerning Christ is clear, our whole body will be filled with light, free from the stain of sin. But if our vision of Christ diminishes and our spiritual eye becomes evil, our entire body will be in the darkness of sin.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Sunday, July 26, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 18 : 17, 18 / Psalm 18:17, 18

"ஆதவன்" தியானம் - 1997

ஜூலை 27 திங்கள் 2026   


"என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்." ( சங்கீதம் 18 : 17, 18 )

இன்றைய தியான வசனம் தாவீது இராஜாவின் சங்கீத புத்தகத்தின் வார்த்தைகளாகும். கர்த்தர் தாவீதை எல்லா சத்துருக்களின் கைகளுக்கும் சவுலின் கைகளுக்கும் தப்புவித்தபோது தாவீது பாடியது  என்று இந்தச் சங்கீதம் குறிப்பிடப்படுகின்றது.   

தாவீதுக்கு எதிராக எழும்பியவர்கள்  பலர். எப்படியாவது அவனை அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் முயன்றார்கள். சவுல் முற்றிலும் பொறாமையால் நிறைந்தவனாகத் தாவீதைக் கொன்று ஒழிக்க முயன்றான். பல்வேறு சூழ்நிலைகளில் தாவீதுக்கும் மரணத்துக்கும் ஒருசில அடி தூரம் மட்டுமே இருந்தது. ஆனால் தாவீதுக்குக் கர்த்தர் ஆதரவாக இருந்தார்; அவரைக் காப்பாற்றினார். அந்த நன்றி உணர்வில் அவர் கூறுகின்றார்,  "என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்"  என்று. 

அன்பானவர்களே, வேதாகமம் முழுவதும் நாம் இப்படிக் கர்த்தர் தனது அடியார்களை விடுவித்தச் சம்பவங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். தேவனை உறுதியான விசுவாசத்துடன் நம்பிச் செயல்படுபவர்களை அவர் கைவிடுவதில்லை. அன்று கானானைச் சுதந்தரிக்கும்முன் அதனைச் சுற்றிப்பார்த்துத்  தகவல் கொண்டுவர மோசே குலத்துக்கு ஒருவராகத் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் புத்திரரை அனுப்பினார். அவர்கள் சென்று நாற்பதுநாள் கழித்துத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த அவர்கள் கூறிய வார்த்தைகளோ அவிசுவாச வார்த்தைகள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 )

ஆனால் அவர்களோடு சென்றுவந்த காலேபும் யோசுவாவும் இஸ்ரவேல் மக்களைத் திடப்படுத்தினார்கள். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் எனவே நாம் அவர்களுக்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை என்றனர். ஆம், "கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 )

அவர்கள் விசுவாசித்ததுபோல கர்த்தர் பல்வேறு ராஜாக்களை மடங்கடித்து இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் கொண்டுசென்று சேர்த்தார்.  

அன்று அந்த இஸ்ரவேலர்கள், "நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்"  "இராட்சதப் பிறவிகள்"  என்று கூறியதைப்போல நாமும் பலவேளைகளில் நமக்கு எதிராக நிற்கும் பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்து நடுங்குகின்றோம். அதற்கு மாறாக நாம் தாவீதைப்போல  "என்னிலும் பலவான்களாயிருக்கும் என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் அவர் விடுவிப்பார். எனக்கு எதிரிட்டு வருகிறார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிப்பார்" என்று விசுவாச அறிக்கையிடப்  பழகுவோம்.  எல்லோரிலும் பெரியவரும் வல்லவருமான தேவனையே  நோக்கிப்பார்த்து அவரை விசுவாச உறுதியுடன் பற்றிக்கொள்வோம்.  நெருக்கும் பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும்  பயப்படவேண்டியதில்லை. கர்த்தர் நமக்கு ஆதரவாகவே இருப்பார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1997

July 27, Monday, 2026

"He delivered me from my strong enemy, and from them which hated me: for they were too strong for me. They prevented me in the day of my calamity: but the LORD was my stay." (Psalm 18:17, 18)

Today’s verse for meditation comes from the book of Psalms written by King David. This psalm is noted as the song David sang when the Lord delivered him from the hand of all his enemies and from the hand of Saul.

Many rose up against David. They attempted in every way to destroy him. Saul, filled completely with jealousy, tried to do away with David. In various situations, David was just a few steps away from death. But the Lord was David’s support and stay; He saved him. In deep gratitude, David proclaims: "He delivered me from my strong enemy, and from them which hated me: for they were too strong for me. They prevented me in the day of my calamity: but the LORD was my stay."

Dearly beloved, throughout the Bible, we can see that it is filled with accounts of the Lord delivering His servants. He never forsakes those who trust and act upon Him with steadfast faith. Back then, before inheriting Canaan, Moses sent chosen men—one from each tribe of the children of Israel—to spy out the land and bring back a report. They went and returned after forty days. However, the words they spoke upon their return were words of unbelief:

"And they brought up an evil report of the land which they had searched unto the children of Israel, saying, The land, through which we have gone to search it, is a land that eateth up the inhabitants thereof; and all the people that we saw in it are men of a great stature. And there we saw the giants, the sons of Anak, which come of the giants: and we were in our own sight as grasshoppers, and so we were in their sight." (Numbers 13:32, 33)

However, Caleb and Joshua, who had gone with them, encouraged the people of Israel. They declared that the Lord was with them, so there was no need to fear those people. Yes:

"Only rebel not ye against the LORD, neither fear ye the people of the land; for they are bread for us: their defence is departed from them, and the LORD is with us: fear them not." (Numbers 14:9)

Just as they believed, the Lord subdued many kings and brought the people of Israel into Canaan.

Just as those Israelites said, "all the people that we saw in it are men of a great stature" and spoke of "giants," we too often tremble in fear when looking at the problems standing against us. Instead, let us learn to declare our faith like David: “He will deliver me from my strong enemies and from those who hate me, though they are stronger than I. They confront me in the day of my calamity, but the Lord will be my stay.”

Let us look unto God, who is greater and more powerful than all, and hold fast to Him with firm faith. There is no need to fear pressing problems or afflictions. The Lord will surely be our stay and support.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Friday, July 24, 2026

🦋 Meditation verse - தீத்து 3 : 9 / Titus 3:9

"ஆதவன்" தியானம் - 1996 

ஜூலை 26 ஞாயிறு 2026   


"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களிடையே பல்வேறு பிரிவினைகள் இருக்கின்றன. உலகெங்கிலும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைப் பிரிவுகள் இருக்கின்றன. இவை தவிர சிறு சிறு தனிநபர் சபைகள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் தங்களுக்குள் ஏதாவது ஒரு சிறு கருத்து வித்தியாசத்தால் பிரிந்திருக்கின்றனர். 

இந்தப்பிரிவினையினை நியாயப்படுத்த வேதாகமத்திலுள்ள உண்மைகளைக் குறித்து தங்களுக்குள் தர்க்கமிடுகின்றார், கிறிஸ்துவின் பிறப்பு குறித்தும் அவரது வம்சம், தாய், தகப்பன் குறித்தும், நியாயப்பிரமாணங்களைக் குறித்தும் தாங்கள் புரிந்துகொண்டதுதான் உண்மை என வாதிட்டு மற்றப்பிரிவினரை  தங்களைவிட குறைந்தவர்களாக மதிப்பிட்டு அற்பமாகவும்  எண்ணுகின்றனர். 

இவைகளை புத்தியீனமான தர்க்கங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இத்தகைய  சண்டைகளையும்,  வாக்குவாதங்களையும் விட்டு நாம் விலகவேண்டும். காரணம் இவைகள் பிரயோஜனமற்றவையும்  வீணுமாயிருக்கும். இப்படி நாம் தர்க்கம் பண்ணுவதால் நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிவிடுவதில்லை. 

நாம் பேசவேண்டியவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள்பட்டு, நம்மை மீட்டுக்கொண்டு தனக்கு உரியவர்களாக மாற்றிக்கொண்டதை மட்டுமே. அதாவது கிறிஸ்துவின் மீட்பளிக்கும் வல்லமைக்குறித்து மட்டுமே நாம் பேசவேண்டும். இதனையே அவர் தனது சீடனாகிய தீத்துவுக்குப் பின்வருமாறு கூறுகின்றார்:-

"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக." ( தீத்து 2 : 14, 15 )

தர்க்கம் செய்யாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அதிகாரத்தோடும் கடிந்துகொள்ளுதலோடும் நாம் கூறவேண்டும். மேற்குறிப்பிட்ட காரியங்களில்  யாராவது நம்மிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பதிலுக்கு அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல்,  "முதலில் உனது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள், தேவையில்லாமல் பேசி வாக்குவாதம் செய்யாதே" என்று நாம் துணிவுடனும் அதிகாரத்துடனும் கூறவேண்டும். இதனையே பவுல் அப்போஸ்தலர், "சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக" என்கின்றார்.

ஆம் அன்பானவர்களே, தேவையற்ற காரியங்களில் தர்க்கங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடாமல் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் வல்லமையினை  மட்டும் அவர்களுக்குப் பதிலாகக் கூறுவோம். தர்க்கமிடும் பலரும் பாவம், இரட்சிப்பு எனும் வார்த்தைகளைக் கேட்டால் ஒதுங்கிவிடுவார்கள். காரணம், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடும் பெயர் கிறிஸ்தவர்கள் பலருக்கும் இவை ஒவ்வாமையாகவே (அலர்ஜியாகவே) இருக்கும். 

வேதாகம சத்தியங்களைக்குறித்துத் தர்க்கம் செய்பவர்களைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் தெளிவாகக் கூறி நம்மையும் எச்சரிக்கின்றார்:- "அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 4, 5 )

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1996

July 26, Sunday, 2026

"But avoid foolish controversies and genealogies and strife and disputes about the Law, for they are unprofitable and worthless." — Titus 3:9

Today, among Christians who believe in Christ and have accepted Him as their Savior, there are numerous divisions. Throughout the world, there are over 2,000 Christian denominations. Besides these, there are many small independent churches. However, they remain divided over minor differences in opinion among themselves.

To justify these divisions, they argue over truths found in the Bible. They debate about the birth of Christ, His lineage, His mother, His father, and the Law—claiming that only their understanding is the truth. Consequently, they look down upon other denominations, viewing them as inferior and despising them.

The Apostle Paul calls these "foolish controversies." We must avoid such strife and disputes because they are unprofitable and worthless. Arguing in this manner does not make us acceptable to God.

What we should speak about is solely how the Lord Jesus Christ suffered for us, redeemed us, and made us His own. That is, we should speak only about the redeeming power of Christ. Paul highlights this very point to his disciple Titus:

"who gave Himself for us to redeem us from every lawless deed, and to purify for Himself a people for His own possession, zealous for good deeds. These things speak and exhort and reprove with all authority. Let no one disregard you." — Titus 2:14–15

Instead of engaging in arguments, we must speak the Gospel of Christ with authority and reproof. If anyone engages in unnecessary disputes with us regarding the aforementioned matters, we should not argue back. Instead, we must boldly and authoritatively tell them: "First, confess your sins to Christ and receive forgiveness; do not talk needlessly and argue." This is why the Apostle Paul instructs, "reprove with all authority. Let no one disregard you."

Yes, beloved friends, let us not get involved in disputes and fights over unnecessary matters. Instead, let us point them to the redeeming power of Christ as our response. Many who love to argue will back away when they hear the words "sin" and "salvation," because for many nominal Christians who engage in unnecessary debates, these topics are like an allergy.

Regarding those who argue about biblical truths, the Apostle Paul speaks clearly and warns us as well: "He is proud, knowing nothing, but doting about questions and strifes of words, whereof cometh envy, strife, railings, evil surmisings, Perverse disputings of men of corrupt minds, and destitute of the truth, supposing that gain is godliness: from such withdraw thyself." — 1 Timothy 6:4–5 (KJV)

 ✍️ Bro. M. Geo Prakash                                                                                        

Wednesday, July 22, 2026

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 4 : 3 / 2 Corinthians 4:3

"ஆதவன்" தியானம் - 1995 

ஜூலை 25 சனி 2026   


"எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்." ( 2 கொரிந்தியர் 4 : 3 )

வேதாகமத்தை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் வேதாகமம் கூறும் செய்தியின் ஆவிக்குரிய உண்மைப் பொருளினை எல்லோரும் எளிதில் அறிந்துகொள்ளமுடியாது. அது குழந்தையைப்போன்ற மனமுள்ளவர்களாய் சத்தியத்தை அறியத் தேடுபவர்களுக்கே முற்றிலும் புரியும். 

இறையியல் கல்லூரிகளில் படிப்பவர்களும், பல்வேறு ஆராய்சியாளர்களும் சுவிசேஷத்தை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.  பல்வேறு கிறிஸ்த சபைப்பிரிவினரும் தங்களது சபைப்பிரிவின் போதனைகளின் அடிப்படையில் வேத வசனங்களுக்கு விளக்கமளிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், தேவனை யாரும் படித்து அறிந்துகொள்ள முடியாது என்பதுதான். மனத்தாழ்மையுடன் நடந்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு  குழந்தை உள்ளத்துடன் வாழ்பவர்களுக்குத் தேவன் பல்வேறு சத்தியங்களை வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். 

இதனையே நாம் "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." (லூக்கா 10:21) என்று இயேசு கூறுவதாக வாசிக்கின்றோம்.

வேதாகமத்தை நூறு சதவிகிதம் விசுவாசக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கவேண்டியது அவசியம். நமக்குப் புரியாத பகுதிகளுக்கு நாமாகப் பொருள்கொள்வது, நமக்குமுன் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்து மற்றவர்கள் எழுதிவைத்துள்ள  விளக்கத்தை நம்புவது இவை முற்றிலும் சரியானதாக இருக்காது. வேதாகமத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவற்றை  புரியவைக்கும்படி நாம் மன ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்த அடிப்படை இல்லாமல் வசனங்களை புரிந்துகொள்ள முயல்வோமானால் நாம் அவிசுவாசிகள் போன்றவர்களே. 

இப்படித் தேவ ஆவியானவரைப் பற்றிக்கொள்ளாமல் இருப்போமானால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தான்  நமது மனக்கண்களைக் குருடாக்கிவிடுவான். ஆம், "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 ) என்று கூறப்பட்டுள்ளபடி நாம் சத்தியத்தை அறியமுடியாத குருடர்களாக மாறிவிடுவோம். 

ஆம் அன்பானவர்களே, நம்மில் யாரும் முற்றிலும் எல்லாம் அறிந்தவர்களல்ல. எனவே நாம் மறைபொருளாக இருக்கும் சுவிசேஷத்தை முற்றிலும் அறிந்துகொள்ள ஒருவேளை தேவ ஊழியர்களை நாடினாலும் அவர்கள் கூறுபவையே முற்றிலும் சரியானது என முடிவெடுக்காமல், "ஆண்டவரே, எனக்குச் சத்தியத்தைப் புரிய வையும்" என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம்.  ஏனெனில், இந்தக்காலத்தில் சுவிசேஷ வசனங்கள் பலரது சொந்த லாபத்துக்காக புரட்டப்படுகின்றன; கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு சபைப்பிரிவும் ஒரே வசனத்துக்கு வெல்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன. 

எந்த தேவ வசனமும் மறைபொருளல்ல. தேவன் தனது பிள்ளைகள் புரிந்துகொள்ளாதபடி எதனையும் எழுதிவைக்கவில்லை. பவுல் கூறுவதுபோல, தேவனுடைய  சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். வாழ்வடைய விரும்பும் தேவ பிள்ளைகளுக்கு எதுவும் மறைவாக இருக்காது. எனவே, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். அவரே நிறைவான உண்மையினை நோக்கி நம்மை வழிநடத்துவார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1995

July 25, Saturday 2026

"And even if our gospel is veiled, it is veiled to those who are perishing,"— 2 Corinthians 4:3

Anyone can read the Bible. However, not everyone can easily understand the spiritual, true meaning of the message it holds. It is fully understood only by those who seek the truth with a child-like heart.

Those studying in theological seminaries and various researchers look at the Gospel through an analytical lens. Different Christian denominations interpret Scripture based on their own denominational doctrines. But the truth is this: no one can come to know God merely through intellect or study. God reveals various truths to those who walk in humility, whose sins are forgiven, and who live with the heart of a child.

It is regarding this that we read Jesus saying:

"At that very time He rejoiced greatly in the Holy Spirit, and said, 'I praise You, O Father, Lord of heaven and earth, that You have hidden these things from the wise and intelligent and have revealed them to infants. Yes, Father, for this way was well-pleasing in Your sight.'" — Luke 10:21

It is essential that we approach the Bible with a one-hundred-percent perspective of faith. Inserting our own interpretations into passages we do not understand, or blindly relying on the explanations written by researchers who studied the Bible before us, may not always be entirely right. We must be eager and earnest for the Author of the Bible—the Holy Spirit—to make these truths clear to us. If we try to understand the verses without this foundation, we are no different from unbelievers.

If we fail to cling to the Spirit of God in this way, Satan, the ruler of this world, will blind the eyes of our minds. Yes, as it is written:

"in whose case the god of this world has blinded the minds of the unbelieving so that they might not see the light of the gospel of the glory of Christ, who is the image of God." — 2 Corinthians 4:4

We will become blind and unable to perceive the truth.

Yes, beloved, none of us knows everything completely. Therefore, even if we seek out God's ministers to fully understand the Gospel that seems veiled to us, we should not conclude that everything they say is absolute truth. Instead, we must pray, "Lord, grant me understanding of Your truth." For in these times, the words of the Gospel are often twisted for personal gain, and different Christian denominations offer conflicting interpretations for the very same verse.

No word of God is intended to remain a hidden mystery. God has not written anything in a way that His children cannot understand. As Paul says, if our Gospel is veiled, it is veiled to those who are perishing. Nothing will remain hidden from God's children who desire to live. Therefore, let us read the Bible with the help of the Holy Spirit. He Himself will guide us into all truth.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Tuesday, July 21, 2026

🦋 Meditation verse - உன்னதப்பாட்டு 1 : 3 / Song of Solomon 1:3

"ஆதவன்" தியானம் - 1994 

ஜூலை 24 வெள்ளி 2026   


"உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரானது பரிமளத் தைலத்தைவிட அதிக வாசனையுள்ளதாக இருக்கின்றது. ஆம், அதன் மணம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து மக்களிடமும் வீசிக்கொண்டிருக்கின்றது.  

இன்றைய தியான வசனம், "ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" என்று கூறுகின்றது. அதாவது, கர்த்தரால் மீட்கப்பட்ட  பாவக்கறை இல்லாத கன்னியர்கள்போன்ற  கபடற்ற மக்கள் அவரை நேசிக்கிறார்கள். மட்டுமல்ல, பாவத்தை மேற்கொள்ளும் மெய்யான மன ஆசை உள்ளவர்களும் அவரது நறுமணத்தை உணர்கின்றார்கள். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 14, 15 ) என்று கூறுகின்றார். 

இந்தக் கிறிஸ்துவின் நறுமணம் முதலில் நம்மை வெற்றிச்சிறக்கப்பண்ணுகின்றது. மட்டுமல்ல, நம்மைக்கொண்டு அவரை மற்றவர்களும் அறியும்படியான வாசனையை வெளிப்படுத்துகின்றது. நாம் கூடியிருக்குமிடத்தில் யாராவது ஒருவர் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு வரும்போது அது மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றது அல்லவா?  அதுபோலவே கிறிஸ்துவின் வாசனை நம்மில் இருக்குமானால் அது மற்றவர்களுக்கு நம்மை அடையாளப்படுத்துகின்றது. 

அன்று மரியாள் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நளதம் எனும் நறுமணத்தைலத்தைப் பூசியபோது அந்த வீடு முழுவதும் வாசனை நிரம்பி அனைவரையும் மகிழ்வித்தது. இதனை நாம், "அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது." ( யோவான் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். இப்படி மரியாளைப்போல  நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை உலகிற்கு அறிவிக்கின்றோம்.

ஆனால் யூதாசைப்போன்ற மனமுள்ளவர்களுக்கு இந்த நறுமணம் பிடிப்பதில்லை. அவன் திருட்டுக் குணமுள்ளவனாக இருந்ததால், "இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." ( யோவான் 12 : 5, 6 ) என்றுகூ றப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, யூதாசைப்போன்ற துன்மார்க்கர்களுக்கும், கெட்டுப்போகிறவர்களுக்கும் கிறிஸ்துவின் வாசனை மரணவாசனையாகவே தெரியும்; அதனை அவர்களால் சகிக்கமுடியாது.  எனவே கிறிஸ்துவை அறிவிக்கும் நாமும் "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 16 )

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, கிறிஸ்துவின் பெயர் ஊற்றுண்ட  பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்களான கபடற்றவர்கள் அவரை நேசிக்கிறார்கள். நாமும் உண்மையாக அவரை நேசிப்போமானால் நாமும் கபடற்ற பரிசுத்தமான கன்னியர்களாக இருக்கிறோம் என்று பொருள்; இல்லையானால் அதனை மரணவாசனையாக உணர்ந்த யூதாசைப்போன்றவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1994

July 24, Friday2026

“Your oils have a pleasing fragrance, Your name is like purified oil; Therefore, the maidens love you.” — Song of Solomon 1:3

The name of our Lord Jesus Christ carries a fragrance far sweeter than any perfumed oil. Indeed, its scent continues to spread across the entire world to all people today, even after two thousand years.

Today’s meditation verse says, “Therefore the maidens love you.” That is to say, guiltless people, like pure maidens redeemed by the Lord, love Him. Moreover, those who possess a true, heartfelt desire to overcome sin also perceive His divine fragrance.

The Apostle Paul expresses this very truth:

“But thanks be to God, who always leads us in triumph in Christ, and through us reveals the fragrance of the knowledge of Him in every place. For we are a fragrance of Christ to God among those who are being saved and among those who are perishing;” — 2 Corinthians 2:14–15

This fragrance of Christ first leads us to triumph. Furthermore, through us, it diffuses a scent so that others may come to know Him. When someone enters a room wearing an expensive perfume, doesn't it cause everyone to turn and look? In the same way, if the fragrance of Christ rests upon us, it identifies us to those around us.

Back then, when Mary anointed the feet of Jesus Christ with precious nard, the entire house was filled with its fragrance, bringing joy to all. We read of this event:

“Mary then took a pound of very expensive perfume of pure nard, and anointed the feet of Jesus and wiped His feet with her hair; and the house was filled with the fragrance of the perfume.” — John 12:3

Like Mary, we too proclaim the fragrance of Christ to the world.

However, those with a mindset like Judas do not appreciate this fragrance. Because he had the heart of a thief, it is written:

“Why was this perfume not sold for three hundred denarii and the proceeds given to poor people?” Now he said this, not because he was concerned about the poor, but because he was a thief, and as he had the money box, he used to pilfer what was put into it. — John 12:5–6

Yes, dear beloved, to the wicked and those who are perishing—like Judas—the fragrance of Christ feels like an aroma of death; they simply cannot tolerate it. Therefore, as we proclaim Christ, we are:

“to the one an aroma from death to death, to the other an aroma from life to life.” — 2 Corinthians 2:16a

As today’s meditation verse states, the name of Christ is like purified oil poured forth; therefore, the pure and guileless love Him. If we truly love Him, it signifies that we too are pure, holy maidens. If not, it means we are like Judas, who perceived His scent as the aroma of death.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Monday, July 20, 2026

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

 "ஆதவன்" தியானம் - 1993 

ஜூலை 23 வியாழன் 2026   


"எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 4, 5 )

இஸ்ரவேல் மக்களை தேவன் மோசேமூலம் கானானை நோக்கி வழிநடத்தினார். அவர்களுக்கு வனாந்தரத்தில் உணவும் தண்ணீரும் கொடுத்து ஆதரித்தார். தண்ணீர் தாகத்தால் அந்த மக்கள் மோசேயை நோக்கி முறையிட்டபோது மோசே அதனைத் தேவனுக்குத் தெரியப்படுத்தினார். அப்போது தேவன் மோசேமூலம் கன்மலையிலிருந்து அவர்கள் குடிக்கும்படித் தண்ணீரைக் கொடுத்தார். அன்று இஸ்ரவேல் மக்களோடு கூடச் சென்றவரும் கன்மலையிலிருந்து தண்ணீரைக் கொடுத்தவரும், அந்தக் கன்மலையும் கிறிஸ்துவே என்று கூறுகின்றார் பவுல். 

ஆனால், "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, இது இன்று நமக்கு ஒரு எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. அதாவது, நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், அவரோடு ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தலாம். ஆனால், இச்சை எனும் பாவம் நமக்குள் இருக்குமானால் நாம் அந்த இஸ்ரவேல் மக்களைப்போல அழிந்துபோவோம் என்கிறார் பவுல். 

பத்துக்கட்டளைகளின் இறுதிக் கட்டளைதான் "இச்சியாதிருப்பாயாக" என்பது.   ஆனால் நம்மில் பலரும் இதனைப் பெரிய பாவமாகக் கருதுவதில்லை. இச்சை என்பது பொருளாசையினைக் குறிக்கின்றது. மேலும், அடுத்தவர்களுக்கு இருக்கும் பொருட்கள் மேலும், உடைமைகளின்மேலும் ஆசைப்படுவது இச்சை.  "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக" ( யாத்திராகமம் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இஸ்ரவேல் மக்களோடு கிறிஸ்து சென்றிருந்தபோதும், அவர்கள் குடிக்கும்படி தண்ணீர், உண்ணும்படி மன்னா இவைகளைக் கொடுத்தபோதும் அவர்கள் இறைச்சி உணவின்மேல் இச்சைகொண்டு அதனையேத் தேடினார்கள். அவர்களுக்கு தேவன் அவர்கள் ஆசைப்பட்டதுபோல இறைச்சியைக் கொடுத்தாலும்  அவர்களை வனாந்தரத்தில் அழித்தார்.  "தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்." ( எண்ணாகமம் 11 : 33, 34 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, "அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 6 ) என்கின்றார் பவுல். நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இச்சை எனும் பொருளாசையினை விடமுடியாதவர்களாக இருப்போமானால் நம்மை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ள நமக்குத் தகுதியில்லை. 

இச்சையை மேற்கொள்வதே ஆவிக்குரிய வாழ்வின் வெற்றி. எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு நம்மை எச்சரித்துக் கூறுகின்றார், "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்" ( யாக்கோபு 1 : 14, 15 ) என்று.

எப்படி இஸ்ரவேல் மக்கள் அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையாகிய கிறிஸ்து அளித்த தண்ணீரைக் குடித்தும் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லையோ அதுபோல கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் இச்சை நம்மிடம் இருக்குமானால் அவர் நம்மிடமும் பிரியமாய் இருக்கமாட்டார். எனவே முதலில் இந்தப் பாவத்தை மேற்கொள்ள பெலன்வேண்டி தேவனிடம் மன்றாடுவோம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation - 1993

July 23, Thursday 2026

"...and all drank the same spiritual drink, for they were drinking from a spiritual rock which followed them; and the rock was Christ. Nevertheless, with most of them God was not well-pleased; for they were laid low in the wilderness." (1 Corinthians 10:4, 5)

God led the people of Israel toward Canaan through Moses. He sustained them in the wilderness by providing food and water. When the people cried out to Moses due to thirst, Moses brought their grievance before God. God then provided water through Moses from a rock for them to drink. Paul states that the One who accompanied the people of Israel, the One who gave them water from the rock, and the rock itself, was Christ.

However, today's meditation verse says, "Nevertheless, with most of them God was not well-pleased; for they were laid low in the wilderness." Yes, dearly beloved, this has been written as a warning for us today. It means that we may be people who know Christ today and lead a spiritual life with Him. Yet, Paul warns that if the sin of covetousness/evil desire resides within us, we will perish just like those people of Israel.

The final commandment of the Ten Commandments is "You shall not covet." However, many of us do not consider this a major sin. Covetousness refers to the greed for material things. Furthermore, longing for the objects and possessions that belong to others is covetousness. It is written:

"You shall not covet your neighbour’s house; you shall not covet your neighbour’s wife or his male servant or his female servant or his ox or his donkey or anything that belongs to your neighbour." (Exodus 20:17)

Even though Christ accompanied the people of Israel and gave them water to drink and manna to eat, they coveted meat and sought after it. Although God gave them the meat they craved, He destroyed them in the wilderness. We read:

"While the meat was still between their teeth, before it was chewed, the anger of the Lord was kindled against the people, and the Lord struck the people with a very severe plague. So, the name of that place was called Kibroth-hattaavah, because there they buried the people who had been greedy." (Numbers 11:33, 34)

Yes, dearly beloved, Paul says, "Now these things happened as examples for us, so that we would not crave evil things as they also craved." (1 Corinthians 10:6). We may know Christ today, but if we are unable to give up the greed of covetousness, we have no right to call ourselves spiritual people.

Overcoming covetousness is the victory of a spiritual life. That is why the Apostle James warns us, saying:

"But each one is tempted when he is carried away and enticed by his own lust. Then when lust has conceived, it gives birth to sin; and when sin is accomplished, it brings forth death." (James 1:14, 15)

Just as the people of Israel drank the water provided by Christ—the spiritual rock that followed them—and yet God was not well-pleased with most of them, God will not be well-pleased with us either if covetousness remains in us, despite our claims of believing in Christ. Therefore, let us first plead with God for the strength to overcome this sin.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யோவான் 1 : 12 / John 1:12

" ஆதவன் " தியானம் - 1999 ஜூலை 29 புதன் 2026    "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை ப...