Friday, August 07, 2026

🦋 Meditation verse - எசேக்கியேல் 20 : 44 / Ezekiel 20:44

 தியானம் - 2009

"ஆதவன்"ஆகஸ்ட் 09 ஞாயிறு 2026


"இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்". ( எசேக்கியேல் 20 : 44 )
 
இன்றைய தியான வசனம் தேவனது வித்தியாசமான இரக்கத்தைத் தெளிவுபடுத்தும்  வார்த்தைகளைக் கூறுகின்றது.  உங்களது கெட்டச் செயல்களுக்கும் பொல்லாத வழிகளுக்கும் ஏற்றபடி நான் உங்களைத் தண்டிப்பேன் என்று கூறாமல், உங்களுக்கு நான் கிருபை செய்வேன்; அப்போது நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள் என்கின்றார் தேவன்.  

ஒரு வகுப்பின் ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து, "நான் உங்களை நீங்கள் படிக்காமல் இருந்தாலும், நீங்கள் வீட்டுப்படங்களை ஒழுங்காக முடிக்காமல் வந்தாலும், பாடங்களுக்கு மதிப்பெண் குறைவாக எடுத்தாலும், நீங்கள் ஒழுங்கீனமாக நடந்தாலும் உங்களைத் தண்டிக்கமாட்டேன்; அதனால் நீங்கள் என்னை நல்ல ஆசிரியர் என்று உணர்ந்துகொள்வீர்கள்" என்று கூறுவதுபோல இருக்கின்றது தேவனது வார்த்தைகள். 

ஆம் அன்பானவர்களே, நமது தேவனது இரக்கத்தை இந்த வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தேவன் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசிக்கின்றார். எனவேதான் எப்படியாவது அவர்கள் மனம் திரும்பவேண்டுமென்று அவர் விரும்புவதால் இப்படி கிருபையுடன் இரங்குகின்றார். எனவே "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 ) இப்படி அவர் இரங்கியதால்தான் தாவீது அவரைப் புகழ்ந்து சங்கீதம் பாடினார்; பவுல் அப்போஸ்தலர் மீட்கப்பட்டார். 

பவுல் கிறிஸ்துவின் பெயரால் பிரசங்கிக்கும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொலைசெய்யவும், சபைகளை பாழாக்கவும் செய்தார். ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது அதற்குப் பவுல் எனும் சவுல் உடன்பட்டிருந்தார். ஆனால் இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, தேவன் அவரது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும்,  கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் பதில் செய்யாமல், அவருக்குக்  கிருபைசெய்தார். 

நம்மில் யாரும் தேவனுக்குமுன் தூய்மையானவர்களோ பரிசுத்தர்களோ அல்ல. ஆனால் நாம் அனைவரும் அவரது கிருபையால் நிலைநிற்கின்றோம். எனவேதான் சங்கீத ஆசிரியர், "கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான்,  ஆண்டவரே" ( சங்கீதம் 130 : 3 ) என்கின்றார். 

இதனையே அப்போஸ்தலரான பவுலும், "அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2 : 3-5 ) என்று கூறுகின்றார். 

நாம் முதலில் பார்த்த ஆசிரியர் கூறுவது வேடிக்கைப்போல தெரிந்தாலும் இத்தகைய ஆசிரியர்களால் பல மாணவர்கள் நல்லவர்களாக வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆசிரியர்களின் கண்டிப்புக்குப் பயந்து பல மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் செய்வதுண்டு. ஆனால் இத்தகைய குணமுள்ள ஆசிரியர்களை மாணவர்கள் தங்களது பிற்காலத்தில் பாராட்டுவதுண்டு. ஆம், தண்டனைகளால் திருத்த முடியாதவர்களை அன்பினால் திருத்த முடியும். இதனையே நமது தேவனும் செய்கின்றார். 

அவர் நமது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் செய்யாமல், நமக்குக் கிருபை செய்ததால்தான் நாம் நிலைத்திருக்கின்றோம்.  "கர்த்தாவே, நீர் எனது அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், நான் எப்படி நிலைநிற்பேன் ஆண்டவரே" என்று நமது பழைய பாவங்களை உணர்ந்து அவருக்கு நன்றிசொல்லி நன்றியுணர்வுடன் வாழ்வோம்.  
 
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2009

"AATHAVAN" – August 09, Sunday, 2026

"And ye shall know that I am the LORD, when I have wrought with you for my name's sake, not according to your wicked ways, nor according to your corrupt doings, O ye house of Israel, saith the Lord GOD." (Ezekiel 20:44)

Today's meditation scripture presents words that clearly illustrate God's unique mercy. Instead of saying, "I will punish you according to your corrupt doings and wicked ways," God says, "I will extend grace to you; then you will know Me."

God’s words sound like a classroom teacher telling students: "Even if you do not study, even if you come without completing your homework, even if you score low marks, and even if you act disorderly, I will not punish you; thereby you will realize that I am a good teacher."

Yes, beloved, this verse brings home the magnitude of our God's mercy. Though God hates sin, He loves the sinner. That is why He longs for them to repent in whatever way possible and shows such gracious mercy. Therefore:

"He hath not dealt with us after our sins; nor rewarded us according to our iniquities." (Psalm 103:10)

It was because He showed such mercy that David sang praises to Him in the Psalms, and the Apostle Paul was redeemed.

Paul arrested those who preached in the name of Christ, executed them, and laid waste to churches. When Stephen was stoned to death, Saul (who became Paul) consented to it. Yet, as today's meditation scripture says, God did not deal with him according to his wicked ways or corrupt doings; instead, He showed him grace.

None of us are pure or holy before God. We all stand only by His grace. That is why the Psalmist says:

"If thou, LORD, shouldest mark iniquities, O Lord, who shall stand?" (Psalm 130:3)

The Apostle Paul affirms this very truth:

"Among whom also we all had our conversation in times past in the lusts of our flesh, fulfilling the desires of the flesh and of the mind; and were by nature the children of wrath, even as others. But God, who is rich in mercy, for his great love wherewith he loved us, even when we were dead in sins, hath quickened us together with Christ, (by grace ye are saved;)" (Ephesians 2:3-5)

Though what the teacher said earlier might sound strange, there is a strong possibility that many students could become good individuals through such a teacher. Generally, many students drop out of school out of fear of strict discipline. However, students often express deep appreciation for teachers with this kind of heart later in life. Yes, those who cannot be reformed by punishment can be transformed by love. This is precisely what our God does.

We endure and stand today because He has not dealt with us according to our wicked ways and corrupt doings, but has bestowed His grace upon us. Let us acknowledge our past sins, saying, "Lord, if You should mark my iniquities, how could I stand, O Lord?" and live a life filled with heartfelt gratitude to Him.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Thursday, August 06, 2026

🦋 Meditation verse - வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 / Revelation 15:3

 தியானம் - 2008

"ஆதவன்"ஆகஸ்ட் 08 சனி 2026


"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )

நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.  அவருடைய அனைத்துச் செயல்களும் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக அவரையே சார்ந்து வாழ்வோமானால் எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். அன்றாடம் தேவன் நமது வாழ்வில் செய்யும் அதிசயமான காரியங்கள் அவர்மேல் நமக்கு உறுதியான விசுவாசத்தை ஏற்படுத்தும். நாம் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டல்ல, மாறாக தேவனது அதிசய செயல்களை நாமே அனுபவித்து அவரை விசுவாசிக்கமுடியும். 

நாம் தேவனை விசுவாசித்து அவரிடம் ஜெபிக்கும்போது பலவேளைகளில் தேவன் நமது ஜெபத்துக்குப் பதில்தந்து  செயல்பட நாம் அவருக்கு நேரம் கொடுப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும். அப்போது  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

ஆவிக்குரிய வாழ்வு வாழும் அனைவருக்குமே இத்தகைய அனுபவம் இருக்கும். இதுபோல, இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார் என்று அவர் நம்புவார். மட்டுமல்ல, இன்று எந்த   அதிசய முறையில் தேவன் பதிலளிக்கப்போகின்றார்  என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் அவர் பெற்றிருந்தார். 

ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர். அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தார். ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் விசாரித்தபோது அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  இந்த வழியாகப் பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து வாசலின் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். என்ன செய்வது என்று தடுமாறியபோது உங்களது ஆசிரமத்தின்  பெயர் பலகையினைப்  பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

ஆம் அன்பானவர்களே, அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை இதுபோன்ற அதிசயங்கள் அவரது வாழ்வில் நடந்தன.  

ஆம், கர்த்தரது செயல்கள் ஆச்சரியமுமானவைகள்; அவருடைய  வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். நீதி வாழ்க்கை வாழ்ந்து அவர்மேல் விசுவாசத்தோடு வாழ்வோமானால் இதுபோன்ற அதிசயங்கள் நமது வாழ்விலும் நடக்கும்.   

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2008

"AATHAVAN" | August 08 | Saturday 2026

"Great and marvellous are thy works, Lord God Almighty; just and true are thy ways, thou King of saints." (Revelation 15:3, KJV)

Our God is the Lord God Almighty. All His works are great and marvellous. If we believe in Him and live depending firmly upon Him, we can experience His presence and miraculous guidance every single day. The wonderful things God does daily in our lives build a firm faith in Him. We do not have to believe in Him based merely on what others say; rather, we can believe by personally experiencing His miraculous works ourselves.

When we believe in God and pray to Him, many times we do not give Him enough time to answer and work. Yes, dear friends, when a problem or a need arises, we look to God and pray. But after asking, we must wait on Him to answer that prayer. When we wait, the way He answers our prayer will be truly marvellous. We need that personal experience of tasting His goodness.

Everyone living a spiritual life will have such experiences. Similarly, we can learn many things about a man of God named George Müller (1805–1898), who lived in England, and about his great faith. He did not merely pray in faith; after praying, he wholeheartedly believed that God would answer the prayer no matter what. Not only that, he possessed the grace and the eager anticipation to wait and see in what miraculous way God was going to answer him that day.

He supported thousands of orphan children through pure prayers of faith, receiving help directly from God. Here is just one of the many incidents that took place in his life:

Once, he had no money to buy milk for the morning breakfast of the children in his orphanage. In England, milk and bread are generally the staple food. Müller woke up early in the morning and laid his need before God. Tears streamed from his eyes as he prayed: "Lord, according to Thy Word, I am supporting these children. Today, I do not even have money to buy milk for them. Loving Lord, take charge of this need Yourself. I surrender these children at Thy feet; protect them from hunger."

At that moment, there was a knock at his prayer room door. Müller got up and opened it. A man was standing there. Upon inquiring, the man said, "Sir, I drive a milk van. Every day I carry milk along this route to the neighbouring town. Today, the axle of my van broke right in front of your orphanage gate. To repair the vehicle, I must reduce its weight by unloading all the milk. As I wondered what to do, I saw the signboards of your orphanage. Since it was nearby, I came to you. Please bring large vessels and take all the milk." Müller immediately knelt down and gave thanks to God.

Yes, dear friends, on that day, the children at his orphanage received far more milk than usual. In this manner, God miraculously provided for many of the orphanage’s needs time and again. We cannot brush this off as a mere coincidence or a stroke of luck—because these miracles happened in his life not just once, but repeatedly.

Yes, the works of the Lord are marvellous, and His ways are just and true. If we live righteous lives and walk in faith toward Him, such miracles will happen in our lives as well.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Wednesday, August 05, 2026

🦋 Meditation verse - எரேமியா 18 : 6 / Jeremiah 18:6

தியானம் - 2007

"ஆதவன்"ஆகஸ்ட் 07 வெள்ளி 2026


"இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்." ( எரேமியா 18 : 6 )

இஸ்ரவேல் மக்களைத் தேவன் தனது சொந்த மக்களாகத் தெரிந்துகொண்டதால் அவர்களைத் தானே நடத்தினார். எனவே, அவர்கள் தேவனது கட்டளைகளுக்குக் கீழ்படியாதபோதெல்லாம் தேவன் அவர்களைத் தண்டித்துத் திருத்திட  பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இப்படிப் பல்வேறு தருணங்களில் பல்வேறு அரசர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டு அவதியுற்றனர். அப்போது தேவன் எரேமியா தீர்க்கதரிசிமூலம் அவர்களுக்கு அவர்களது துன்பத்துக்கான காரணத்தை விளக்கிக்கூறினார்.

இதனை எரேமியாவுக்குப் புரியவைத்திட அவரை குயவன் வீட்டிற்குப் போகுமாறு கூறினார் தேவன். அப்படி எரேமியா குயவன் வீட்டிற்குச் சென்றபோது குயவன் களிமண்ணினால் பானை வனைந்துகொண்டிருந்தான்.  "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்." ( எரேமியா 18 : 4 )

ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேல் மக்களைப்போலவே இன்று நாமும் களிமண்போல தேவனது கரத்தில் இருக்கின்றோம். நாம் அவர் விரும்பும் வடிவத்தில் சரியாக வரும்வரை தேவன் நம்மையும் தொடர்ந்து களிமண்ணை குயவன் மிதிப்பதுபோல மிதித்துச் சரிசெய்துகொண்டுதானிருப்பார். ஆம், "இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்கள் இன்று பல்வேறு விதங்களில் துன்பப்பட மற்றவர்களைப்போலத் தாங்களும் இருக்கவேண்டும் என்று எண்ணுவதும் ஒரு காரணமாகும். நம்மைத் தேவன் எந்த நோக்கத்துக்காக உருவாக்க நினைக்கின்றாரோ அதனை மறந்தவர்களாக நாம் பலவேளைகளில் மற்றவர்களை நோக்கிப்பார்த்து அவர்களைப்போல மாறிட எண்ணுகின்றோம். இப்படித் தேவ நோக்கத்தைச் செய்யாமல் நமது சுய நோக்கத்தை நாம் விரும்புவதால் தேவன் நம்மை உருமாற்றி உருமாற்றி தனது நோக்கம் செய்பவர்களாக மாற்ற முயல்கின்றார். இது நமக்குத் துன்பமாகத் தெரிகின்றது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 ) என்று கேட்கின்றார். நம்மைத்   திருத்தித் தனக்கு   உகந்தவர்களாக மாற்றிவனைந்திட பரம குயவனான தேவனுக்கு நம்மேல் எல்லா அதிகாரமும் உண்டு. 

தேவன் பலவேளைகளில் நமது ஆவிக்குரிய வாழ்வை மேம்படுத்தி நம்மை ஆவிக்குரிய வாழ்வில் உயர்த்திட விரும்புகின்றார். ஆனால் நாமோ மற்ற உலக மனிதர்களைப்பார்த்து அவர்களைப்போல மாறிட முயலுகின்றோம். எனவே நம்மைச் சீர்திருத்த குயவன் களிமண்ணை மிதித்துத் திருத்தி புதிய பாண்டமாக வனைவதுபோல தேவன் நம்மைத் திருத்தி  வனைகின்றார்.   

இதனையே இன்றைய தியான வசனத்தில் எரேமியா மூலம் தேவன் நமக்கு உணர்த்துகின்றார். ஆம்,  குயவன் களிமண்ணுக்குச்  செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் ஆண்டவர். 

நாம் நாமாக உலகத்தில் இல்லை. குயவனான அவரது கரத்தில் இருக்கின்றோம். எனவே நமது  சுய சித்தம் நிறைவேற்றிட முயலாமல் பரம   குயவன் சித்தத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது நமது வாழ்க்கை மாறும். மற்ற உலக மனிதர்களைப் பார்க்காமல் தேவனையே நோக்கிப்பார்த்து வாழ்வோம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2007                                                     "AATHAVAN" | August 07 Friday 2026

"O house of Israel, cannot I do with you as this potter? saith the LORD. Behold, as the clay is in the potter's hand, so are ye in mine hand, O house of Israel." (Jeremiah 18:6, KJV)

Because God chose the people of Israel as His own, He led them Himself. Whenever they disobeyed His commandments, God disciplined and corrected them by surrendering them into captivity under various kings. Thus, on multiple occasions, they suffered in bondage under different rulers. During these times, God explained the underlying reason for their suffering through the prophet Jeremiah.

To illustrate this truth to Jeremiah, God instructed him to go down to the potter’s house. When Jeremiah arrived, he observed the potter fashioning a vessel from clay.

"And the vessel that he made of clay was marred in the hand of the potter: so he made it again another vessel, as seemed good to the potter to make it." (Jeremiah 18:4, KJV)

Yes, beloved, just like the people of Israel, we too are like clay in God's hand today. Until we take the exact shape He desires, God will continue to correct and refine us—just as a potter tread and works the clay into shape.

"But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand." (Isaiah 64:8, KJV)

One reason people endure various hardships today is their desire to conform to the world and be like others. We often forget the divine purpose for which God created us, looking to the people around us and striving to become like them. When we prioritize our self-will over His divine will, God reshapes us repeatedly until we yield to His purpose. To us, this painful refining process feels like suffering.

Addressing this, the Apostle Paul asks:

"Hath not the potter power over the clay, of the same lump to make one vessel unto honour, and another unto dishonour?" (Romans 9:21, KJV)

As the Heavenly Potter, God possesses full authority over us to correct, shape, and remould us into vessels pleasing to Him.

God often longs to elevate our spiritual lives and deepen our walk with Him. Yet, we tend to gaze at worldly people and attempt to emulate them. Therefore, to discipline us, God works in our lives much like a potter who treads the clay to knead out impurities and remould it into a brand-new vessel.

This is the message God conveys to us through Jeremiah in today's meditation verse. The Lord asks whether He cannot deal with us as the potter does with the clay, reminding us that we are held firmly in His hands.

We do not belong to ourselves in this world; we are in the hands of the Potter. Let us stop striving to fulfil our own desires and instead surrender fully to the Heavenly Potter's will. Only then will our lives be transformed. Let us fix our eyes on God rather than conforming to the world around us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Tuesday, August 04, 2026

🦋 Meditation verse - 1 தீமோத்தேயு 2 : 4 / 1 Timothy 2:4

 தியானம் - 2006

"ஆதவன்"ஆகஸ்ட் 06 வியாழன் 2026   


"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 )

எந்த ஒரு ஆசிரியரும் தனது வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெறவேண்டுமென்றே விரும்புவார். அதற்காக முயற்சியெடுத்து பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார். ஆனால் மாணவர்கள் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் அந்தந்த மாணவனைப்பொறுத்தே அமைகின்றது. ஆசிரியர் எப்படித்தான் நல்லமுறையில் பாடங்களைச்  சொல்லிக்கொடுத்தாலும் பல மாணவர்கள் தாங்களாக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. 

இதுபோலவேத் தேவனும் இரட்சிப்பின் வழியை மனிதர்களுக்குக் காண்பித்துள்ளார். தனது வார்த்தைகளை வேதாகம புத்தகமாக மனிதர்களுக்குக் கொடுத்துள்ளார். 

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் அறிவையும் மனச்சாட்சியையும் கொடுத்திருக்கின்றார். அதனைக் முறைப்படி பயன்படுத்தும்போது  சத்தியத்தை அறியலாம்; மீட்புப்பெறலாம். தேவன் வலுக்கட்டாயமாகத் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. காரணம், ஒருவரைக் கட்டாயப்படுத்தி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லும்போது அதனால் அவர் மனநிறைவு பெறுவதில்லை.  உதாரணமாக ஒரு கடையில் நமக்கு வேண்டிய ஆடைகளைத் தேர்வுசெய்யும்போது நாம் நமது மனதுக்குப் பிடித்த ஆடையையே தேர்வு செய்வோம். மற்றவர்கள் கட்டாயப்படுத்தி ஒன்றினை நாம் தேர்வுசெய்தால் அது நமக்கு மனநிறைவைத் தராது. 

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருந்தாலும் இன்று எல்லோரும் தேவனை அறியவில்லை. காரணம், தேவனை அறியும் ஆவல் இருந்தால் மட்டுமே அவரை அறியமுடியும்.  ஆனால் நமது ஆண்டவர் இரக்கமுள்ளவராக இருப்பதால்  தன்னைவிட்டு விலகிப்போனவர்களும், தன்னை அறியாதவர்களும் சத்தியத்தை அறியவேண்டுமென்று  விரும்புகின்றார். 

ஆம் அன்பானவர்களே, "இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல." ( மத்தேயு 18 : 14 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டுமென்றே அவர் விரும்புகின்றார். அவர் பூமியில் மனிதனாகப் பிறந்த நோக்கமே அதுதான். இதனையே அவர், "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்" ( மத்தேயு 18 : 11 ) என்று கூறினார். 

"உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?" ( மத்தேயு 18 : 12 ) என்று கூறியுள்ளபடி இயேசு கிறிஸ்து விலகிப்போன ஆடுகளாகிய மக்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார். எனவே, பல்வேறு விதங்களில்  தன்னை அறியக்கூடிய வாய்ப்புக்களை ஒவ்வொரு மனிதருக்கும் அவர் அளித்துக்கொண்டிருக்கின்றார்.  

மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து உலகில் இருந்தபோது, தான் மீண்டும் வருவேன் என்று வாக்களித்துச் சென்றார். அதாவது தன்னை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழும் விசுவாசிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள அவர் வருவார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வருகை இன்று 2026 ஆண்டுகள் கடத்தபின்னரும் ஏற்படவில்லை. இதனைக்குறித்து அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று கூறுகின்றார். 

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருப்பதால்  அவர் தாமதித்துக்கொண்டிருக்கின்றார். இந்தத் தாமதத்தைக் கேலி செய்யாமல், அவரது வருகையினைக்குறித்து அவிசுவாசம் கொள்ளாமல் இன்றே நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைவேண்டுவோம்; அவரது சித்தத்தை நிறைவேற்றுவோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation – 2006

"AATHAVAN" (The Sun) | August 06

Thursday, 2026

"Who will have all men to be saved, and to come unto the knowledge of the truth." — 1 Timothy 2:4

Just as any teacher desires that every student in their class study well and succeed with high marks, they dedicate effort to teaching the lessons. However, whether a student succeeds or fails ultimately rests upon the student himself. No matter how well the teacher instructs, many students make no effort on their own.

Similarly, God has shown humanity the way of salvation. He has given His words to mankind in the form of the Holy Scriptures.

God has endowed every human being with intellect and a conscience. When used properly, one can come to know the truth and receive redemption. God does not force Himself upon anyone, because when a person is compelled to do something, it brings no true contentment.

For instance, when choosing clothes at a shop, we select what pleases our own hearts. If others force a choice upon us, it yields no satisfaction.

Although it is His divine will that all people be saved and come to the knowledge of the truth, not everyone knows God today. This is because one can only know God if there is a sincere desire to seek Him. Yet, because our Lord is merciful, He desires that even those who have strayed and do not know Him come to understand the truth.

Yes, dear friends, as Jesus Christ declared:

"Even so it is not the will of your Father which is in heaven, that one of these little ones should perish." — Matthew 18:14

He desires that every person be saved and reach the knowledge of the truth. That was the very purpose of His coming into this world as a man. As He Himself said:

"For the Son of man is come to save that which was lost." — Matthew 18:11

He further illustrated this heart for the lost:

"How think ye? if a man have an hundred sheep, and one of them be gone astray, doth he not leave the ninety and nine, and goeth into the mountains, and seeketh that which is gone astray?" — Matthew 18:12

Jesus Christ continues to seek people who are like lost sheep. Therefore, He provides every human being with diverse opportunities to come to know Him.

Moreover, when Jesus Christ was on earth, He promised that He would come again—to gather unto Himself the believers who put their faith in Him and live a holy life. The Second Coming of Jesus Christ is referenced in many places throughout the Bible. Yet, even after more than 2,000 years, His return has not yet occurred.

Addressing this very thought, the Apostle Peter writes:

"The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance." — 2 Peter 3:9

Because He wills that all men be saved and come to the knowledge of the truth, He is exercising patient endurance and delaying His return.

Let us not mock this delay or fall into unbelief regarding His coming. Instead, let us confess our sins to Him today, plead for His forgiveness, and fulfil His holy will.

✍️ Bro. M. Geo Prakash                                                                                   

Monday, August 03, 2026

🦋 Meditation verse - பிலிப்பியர் 4 : 19 / Philippians 4:19

 தியானம் - 2005

"ஆதவன்"ஆகஸ்ட் 05  புதன் 2026   


"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )

இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் வசனமாகும். அப்போஸ்தலரான பவுல் இந்த வசனத்தில் பிதாவாகிய தேவனை வெறுமனே தேவன் என்று சொல்லாமல், "என் தேவன்" என்று கூறுகின்றார். சிறு பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் பேசும்போது சிலவேளைகளில், "என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று கூறுவார்களே அதுபோல என்று இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆம், பவுல் தேவனைத் தனக்குத் தனிப்பட்ட உரிமையுள்ளவராக என்தேவன் என்று கூறுகின்றார்.

மட்டுமல்ல, தேவனிடம் எல்லா செல்வங்களும் நிறைந்துள்ளன. நமது எந்தத் தேவையையும் பூர்த்திசெய்ய அவரால் முடியும். இதனையே அவர், தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் என்று கூறுகின்றார். அதாவது, எனது தேவன் அளப்பரிய செல்வத்துக்குச் சொந்தக்காரர். அவர் எனது தேவைகளை மட்டுமல்ல, உங்கள் அனைவரது அனைத்துக் குறைகளையும் நிறைவாக்குவார் என்று கூறுகின்றார். 

ஆனால், பிதாவாகிய தேவன் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தானாகக் கொடுக்காமல் தனது குமாரன் மூலமே கொடுக்கின்றார். இது பிதாவாகிய தேவன் தனது குமாரனிடம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடு.  இந்த உண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனையே,  கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று கூறுகின்றார் பவுல். அதாவது பிதாவாகிய தேவனிடமுள்ள அளப்பரிய செல்வத்தை நாம் கிறிஸ்து இயேசு மூலமே பெறமுடியும். 

இன்று யெகோவா சாட்சிகள் போன்றவர்களும் இதர சில சபைகளும் பிதாவாகிய தேவனுக்கு முன்னுரிமைகொடுத்து அவரிடமே நாம் வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், நாம் பிதாவிடம்  நேரடியாக அல்லாமல் அவரது குமாரன் மூலம் வேண்டுதல் செய்யவேண்டும். குமாரனாகிய அவரையே பிதாவானவர் தனது பரலோக செல்வத்துக்கு உரிமையாளராகத்  தகுதிப்படுத்தியிருக்கிறார். 

இதனையே, "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9 -11 ) என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்துக்கு வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். பூமியின் கீழுள்ள ஆவிகள்கூட முடங்கும். எனவே அவர் கொடுக்க முயல்வதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கிறவன் பிதாவுக்கும் அன்பாயிருக்கிறான் என்று வேதம் கூறுகின்றது.  கிறிஸ்து இயேசுவின் கட்டளைகளை நாம் கைக்கொள்ளும்போது நாம் அவருக்கு அன்பாயிருக்கிறோம் என்று பொருள். "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்." ( யோவான் 14 : 21 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

நமது தேவன் தனக்குள் அடங்கியிருக்கும் ஒப்பற்ற மகிமைச் செல்வத்தை கிறிஸ்துமூலமே உலகிற்கு அளிக்கின்றார் எனும் உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  எனவே நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கும்போது நமது குறைகளை அவர் நிறைவாக்குகின்றார். அந்நிய உபதேசங்களால் அலைக்கழிக்கப்படாமல் கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வோம். அப்போது பிதாவாகிய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2005

"AATHAVAN" | August 05 | Wednesday 2026

"But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus." — Philippians 4:19

Today’s meditation verse brings us hope and joy. In this verse, the Apostle Paul does not simply refer to God the Father as "God," but calls Him "my God." We can compare this to how young children sometimes talk to their friends, saying, "My dad told me he’s going to buy me a bicycle." Yes, Paul speaks of God as someone who belongs to him personally when he says, "my God."

Furthermore, God possesses all riches. He is capable of fulfilling any need we have. This is what Paul means when he says, "according to his riches... shall supply all your need." In other words, "My God is the owner of immeasurable riches. He will supply not only my needs but all the lacks and needs of every one of you."

However, God the Father does not bestow His riches directly by Himself, but through His Son. This is an expression of the special love that God the Father has for His Son. We must understand this truth. That is why Paul says, "in glory by Christ Jesus." This means we can receive the boundless riches of God the Father only through Jesus Christ.

Today, groups like Jehovah's Witnesses and certain other churches claim that we should prioritize God the Father and pray only to Him. But the truth is that we must not approach the Father directly, but through His Son. The Father has designated the Son as the rightful possessor of His heavenly treasures.

This is clearly written:

"Wherefore God also hath highly exalted him, and given him a name which is above every name: That at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth; And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father."— Philippians 2:9–11

At the name of Christ, every knee shall bow—of those in heaven, on earth, and under the earth. Even the spirits beneath the earth must bow. Therefore, no one can stop what He intends to give.

Furthermore, the Scriptures declare that whoever loves Christ is also loved by the Father. When we keep the commandments of Jesus Christ, it means we love Him. Jesus Christ said:

"He that hath my commandments, and keepeth them, he it is that loveth me: and he that loveth me shall be loved of my Father, and I will love him, and will manifest myself to him." — John 14:21

We must realize the truth that our God bestows His incomparable, glorious riches upon the world only through Christ. Therefore, when we love Christ, He fulfils all our lacks and needs. Let us live by keeping the commandments of Christ without being tossed about by foreign doctrines.

Then, God shall supply all your need according to his riches in glory by Christ Jesus.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Sunday, August 02, 2026

🦋 Meditation verse - உபாகமம் 23 : 14 / Deuteronomy 23:14

 தியானம் - 2004

"ஆதவன்"ஆகஸ்ட் 04  - செவ்வாய்  2026   


"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இன்றைய தியான வசனம் கர்த்தர் மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்குத் தூய்மையினைக் கடைபிடிக்கக் கூறிய ஒரு அறிவுரை. இஸ்ரவேல் மக்கள் மலம்கழிக்கச் செல்லும்போது ஒரு கோலையும் கையில் கொண்டு செல்லவேண்டுமென்றும் அதனால் மணலில் குழியெடுத்து அதில் மலம் கழித்தபின்னர் அதனை மணலினால் மூடிவிடவேண்டும் என்றும் அறிவுரைகூறித் தொடர்ந்து, இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இதன்மூலம் தேவன் கூறும் முக்கிய காரியம் என்னவென்றால்  நீங்களும் உங்கள் வசிப்பிடமும்  தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே. 

அன்பானவர்களே, நாம் ஏற்கெனவே பலமுறை தியானங்களில் விளக்கிக் கூறியுள்ளபடி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாக இருக்கின்றது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, அனைத்துப்  பழைய ஏற்பாட்டுக் காரியங்களையும் நாம் புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. அதாவது, நமது ஆவிக்குரிய வாழ்வில் தேவன் நம்மோடு கூடவே இருக்கின்றார். அவர் நம்மோடு உலவி நமது தேவனாக இருக்கின்றார். எனவே, அவரது இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பைப்  பெற்றுள்ள நாம் நம்மைத் தூய்மையுள்ளவர்களாக காத்துகொண்டு வாழவேண்டியது அவசியம். நம்மிடம் அவருக்கு ஏற்பில்லாத செயல்களைக்கண்டு நம்மைவிட்டு அவர் விலகிச் சென்றுவிட நாம் அனுமதிக்கக்கூடாது. 

தேவன் நம்மைவிட்டு விலகும்போது, இஸ்ரவேலர்களை விட்டு தேவன் விலகியபோதெல்லாம் அவர்கள் பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைகளானதுபோல நாமும் அடிமைகளாவோம். அப்போஸ்தலரான பேதுரு இதனால்தான், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று நம்மை எச்சரிக்கின்றார்.

அதாவது, தேவனை நீங்கள் அறிந்துள்ளபடியினால் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, அவர் பாளயத்திற்குள்ளே (உனக்குள்ளே) உலாவிக்கொண்டிருக்கிறார், உன்னிலுள்ள அசுத்த காரியங்களை உன்னைவிட்டு விலக்கி உன்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார்.  எனவே நீ மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவைகளால் ஜெயிக்கப்பட்டால், உன் பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும் என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, அப்படிச் செய்வது நாய் தான் கக்கினத்தைத் தின்பதுபோன்றதாகும். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது" ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனம், "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும்" என்று கூறுகின்றது. நமக்குச் சத்துருக்கள் யார்? அது நமது பாவங்களும் நம்மை நெருக்கி நசுக்குகின்ற பல்வேறு உலகப் பிரச்சனைகளும்தான். இவைகளிலிருந்து நாம் தப்புவிக்கப்பட, தேவன் நமக்குள் உலாவிடவேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

ஆகையால், அவர் நம்மிடம் அசுத்தமான காரியங்களைக்கண்டு நம்மைவிட்டு விலகிப் போய்விடாதபடிக்கு நம்மைச் சுத்தமாகக் காத்துக்கொள்வோம். பேதுரு கூறுகின்றபடி உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2004

"AATHAVAN" | August 04 | Tuesday, 2026

"For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore, shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee." — Deuteronomy 23:14 (KJV)

Today's meditation verse is an instruction given by the Lord through Moses to the people of Israel regarding cleanliness. The Lord advised that whenever the Israelites went out to relieve themselves, they should carry a paddle with them, dig a hole in the sand, and cover their excrement with dirt. Right after giving this instruction, He speaks today’s verse. The key message God emphasizes through this is that both you and your dwelling place must be clean and holy.

Dearly beloved, as we have often explained in previous meditations, we must never forget that the Old Testament serves as a shadow of the New Testament. Therefore, it is essential for us to compare all Old Testament matters with the New Testament.

In today's verse, we read: "that he see no unclean thing in thee, and turn away from thee." This means that in our spiritual life, God is right there with us. He walks in our midst and is our God. Therefore, having been washed by His blood and having received the forgiveness of sins, it is vital that we keep ourselves pure and holy. We must not allow Him to see unpleasing actions in us and turn away from us.

When God departs from us, just as the Israelites became slaves to various kings whenever God turned away from them, we too will fall into bondage. This is why the Apostle Peter warns us:

"For if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Saviour Jesus Christ, they are again entangled therein, and overcome, the latter end is worse with them than the beginning." — 2 Peter 2:20 (KJV)

In other words, because you know God, as today’s meditation verse says, He walks in the midst of your camp (within you), and He has cleansed you by removing unclean things from you. Therefore, if you become entangled in them again and are overcome by them, your latter end will be worse than the beginning.

Not only that, doing so is like a dog returning to its own vomit. As we read:

"But it is happened unto them according to the true proverb, The dog is turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire." — 2 Peter 2:22 (KJV)

Today's meditation verse states: "For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee." Who are our enemies? They are our sins and the various worldly troubles that press down upon us and crush us. To be delivered from these, it is essential that God walks within us.

Therefore, let us keep ourselves clean so that He does not see unclean things in us and turn away from us. As Peter says, if those who have escaped the pollutions of the world become entangled in them again and are overcome, their latter end will be worse than the beginning.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எசேக்கியேல் 20 : 44 / Ezekiel 20:44

  தியானம் - 2009 " ஆதவன் " ஆகஸ்ட் 09  ஞாயிறு 2026 "இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட ...