Saturday, September 05, 2026

🦋 Meditation verse - யோவான் 1 : 23 / John 1:23

 தியானம் - 2039

"ஆதவன்" செப்டம்பர் 08 செவ்வாய் 2026


"அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்."
( யோவான் 1 : 23 )

உலகின் மிகப்பெரிய வனாந்தரமாக அமேசான் காடுகள் உள்ளன. இந்தக் காட்டுப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்றுவரை மனிதர்கள் யாரும் சென்றது கிடையாது. காரணம், மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இங்குள்ள கடினமான சூழ்நிலை. ஆம், வனாந்தரம் பல்வேறு இடர்கள் சூழ்ந்த இடம். பொதுவாக, இருளும் அந்தகாரமும்தான் வனாந்தர பகுதிகளில் நிலைத்திருக்கும். மட்டுமல்ல, பல்வேறு கொடிய விலங்குகளின் வாழ்விடமாக வானாந்தரம் இருக்கின்றது. பொதுவாக, மனிதர்கள் பாதுகாப்பாக நல்லமுறையில் வாழமுடியாத இடங்களே இவை.  

அன்பானவர்களே, இன்று மனிதர்கள் பலரது குடும்ப வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் இதுபோல வனாந்தரமாகவே இருப்பதை நாம் உலகத்தில் பார்க்கலாம். வெளிப்பார்வைக்கு பகட்டாக நல்ல நிலையில் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவையே பலரது வாழ்க்கையாக இருக்கின்றது. இத்தகைய சூழல் மாறிட, "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள்" என்று அறைகூவல் விடுக்கின்றார் யோவான்.  

நமது இருளான வனாந்தர வாழ்க்கை மாறவேண்டுமானால் நமது வாழ்வில் ஒளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரவேண்டியது அவசியம். அவர் நமக்குள் வருவதற்கு நமது வழிகளை நாம் மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

இந்த உலகத்தில் மனிதர்கள் நாம்கூட அசுத்தமான இடங்களில் தங்கிட விரும்புவதில்லை. நம்மைச் சிலர்  எவ்வளவுதான் அன்புடன் உபசரித்தாலும், தங்களது வீட்டில் சில நாட்கள் தங்குமாறு  நம்மை வற்புறுத்தினாலும்  அவர்களது வீடுகளுக்குள் நாம் சென்று பார்த்தால் அங்குள்ள அசுத்தமான சூழ்நிலை நம்மை அங்குத் தங்கிட அனுமதிக்காது. ஆம் அன்பானவர்களே, இதுபோலவே தேவன் அசுத்தமான உள்ளங்களில் குடிவருவதில்லை. அவர் நமக்குள் வரவேண்டுமானால் முதலில் நமது உள்ளங்கள் தூய்மையடையவேண்டியது அவசியம். 

மேலும், நாம் தூய்மையான பாலை அசுத்தமான பாத்திரங்களில் சேமிப்பதில்லை. அப்படிச் சேமித்தால் சுத்தமான பால் கெட்டுப்போகும். எனவே, முதலில் பாத்திரத்தைத் தூய்மைப்படுத்தவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம் யோவான் தன்னைக்குறித்து கூறும் சாட்சி வார்த்தைகளாகும். தன்னைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளபடி,  "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று  நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்கிறார் அவர். ஆம், உங்கள் வழிகளை செம்மைபண்ணுங்கள் அப்போது நான் உங்களுக்குள் வருவேன் என்று யோவான் மூலம் இன்று கூறுகின்றார்  தேவனாகிய கர்த்தர். 

கிறிஸ்து இயேசுவுக்கு மனப்பூர்வமாக நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தூய்மையாகின்றோம். ஆம், அப்போது யோவான் கூறியதுபோல, கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுகிறவர்கள்  ஆவோம்.  அப்போது அவர் நமக்குள் வருவார்.  அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நமது குடும்ப வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் மாற்றத்தைக் காணமுடியும். அப்போது வனாந்தர இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவை மாறி நமது வாழ்வில் வசந்தம் வருவதைக் காணலாம்.  

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2039

"AATHAVAN" | Tuesday, September 08, 2026

"He said, 'I am a voice of one crying in the wilderness, "Make straight the way of the Lord," as Isaiah the prophet said.'" (John 1:23, NASB)

The Amazon rainforest stands as the largest wilderness in the world. Even today, humans have never set foot in certain parts of these dense jungle regions. The reason for this is the harsh and inhospitable environment. Indeed, the wilderness is a place surrounded by various dangers. Darkness and gloom generally dominate these wilderness areas, and they serve as habitats for many ferocious wild animals. In short, these are places where human beings cannot live safely or comfortably.

Dearly beloved, today we observe that the family and personal lives of many people in this world resemble such a wilderness. Even if everything appears prosperous and fine on the outside, darkness, spiritual blindness, and insecurity define their actual lives. To transform such a situation, John issues the clarion call: "Make straight the way of the Lord."

If our dark, wilderness-like lives are to change, the Lord Jesus Christ—the Light—must enter our lives. For Him to enter into us, it is essential that we reform and straighten our ways.

Even as human beings in this world, we do not wish to stay in filthy places. No matter how warmly someone welcomes us or insists that we stay in their home for a few days, if we see an unclean environment inside, we will not feel comfortable staying there. Yes, dearly beloved, in the same way, God does not dwell in unclean hearts. If He is to take up residence within us, our hearts must first be cleansed.

Furthermore, we do not pour clean milk into an unclean vessel. If we do, the pure milk will be spoiled. Therefore, it is necessary to clean the vessel first.

Today's meditation verse is the testimony John gave concerning himself. Fulfilling what the prophet Isaiah had foretold about him, he says, "I am a voice of one crying in the wilderness, 'Make straight the way of the Lord.'" Yes, through John, the Lord God says to us today: "Make your ways straight, and I will come into you."

When we sincerely surrender ourselves to Christ Jesus, confess our sins, and seek His forgiveness, we are cleansed and made pure. Then, as John declared, we become those who make straight the way for the Lord, and He comes to dwell within us. Only when He enters our lives can we experience true transformation in our family and personal lives. Then, the wilderness of darkness, obscurity, and insecurity will pass away, and a vibrant new spring will blossom in our lives.

"but if we walk in the Light as He Himself is in the Light, we have fellowship with one another, and the blood of Jesus His Son cleanses us from all sin." (1 John 1:7, NASB)

✍️ Bro. M. Geo Prakash  

Friday, September 04, 2026

🦋 Meditation verse - கலாத்தியர் 6 : 15 / Galatians 6:15

 தியானம் - 2038

"ஆதவன்" செப்டம்பர் 07 திங்கள் 2026

"கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்." ( கலாத்தியர் 6 : 15 )

ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே இருந்த மிக முக்கிய பிரச்சனை விருத்தசேதனம் செய்துகொள்வது சம்பந்தப்பட்ட போதனைகளே. பழைய ஏற்பாட்டு முறைமையின்படி, உண்மையான யூதன் என்பவன் விருத்தசேதனம் செய்தவனாக இருக்கவேண்டும். ஆதி கிறிஸ்தவர்களிடையே இதுகுறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்ததுண்டு. ஆனால் அப்போஸ்தலராகிய பவுல் இவைபோன்ற எண்ணங்கள் தவறு என்று கூறுகின்றார். வெறுமனே கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் எவரும் கடவுளுக்குமுன் நீதிமான்கள் ஆகிவிடுவதில்லை. கிறிஸ்து இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் நீதிமான்களாகமுடியும். 

"நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

ஒரு மனிதன் கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டுப்  புதுப்பிறப்பாக மாறுவது முக்கியமேத்தவிர வெளியரங்கமான சில சடங்குகள் தேவையில்லை. காரணம், விருத்தசேதனம் செய்யாதவனும் தேவ நீதியைக் கைக்கொள்ளலாம். ஆம், "மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?" ( ரோமர் 2 : 26 )

சில சடங்குமுறைகள் மட்டும் ஒருவரை கடவுளுக்கு ஏற்புடையவராக மாற்றாது. உள்ளத்தில் ஒருவர் மாற்றம் பெறுவதே முக்கியம். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது." ( ரோமர் 2 : 28, 29 )

ஆதிகால கிறிஸ்தவ சபைகளைப்போல இன்றும் பல கிறிஸ்தவ சபைகளும் ஊழியர்களும் இதுபோல பல்வேறு சடங்குகளைக் கைக்கொள்ள மக்களை வலியுறுத்துகின்றனர். ஒரு மனிதன் புதுப்படைப்பாக மாறுவது குறித்து போதித்து வழிநடத்துவதை விட்டு தாங்களாக சில உபதேசங்களைப் போதித்துக்கொண்டிருக்கின்றனர். 

இதற்கு ஒரு உதாரணம் இன்று சில சபைகள் வலியுறுத்தும் தசமபாக காணிக்கை குறித்த போதனைகள். குறிப்பாக இன்று சில கிறிஸ்தவ சபைகளில் தசமபாக காணிக்கை கொடுப்பது சம்பந்தமான போதனைகள் விருத்தசேதன போதனைப்போல ஆகிவிட்டதை மறுக்கமுடியாது. ஒருவர் தேவ ஆசீர்வாதம் பெறுவதற்கு அவர் தசம்பாக காணிக்கை கொடுக்காமல் இருப்பதே காரணம் என்று சிலர் போதிக்கின்றனர். தேவன் ஒருவர் தசமபாக காணிக்கைக் கொடுக்கின்றாரா இல்லையா என்று தேவன் பார்ப்பதில்லை. உண்மையான மனமாற்றம் பெற்று புதுப்படைப்பாக மாறியுள்ளாரா  என்றே பார்க்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் காணிக்கை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் பிரச்சனையில்லை  புது சிருஷ்டியே காரியம்.  தலையை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதைப்போல இன்று கிறிஸ்தவ ஊழியர்களில் பலரும் தலையான கிறிஸ்தவ  போதனைகளை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். 

நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறுவோம். இதுவே நாம் புதுப்படைப்பாக மாறிட முதல் தேவை; இதுவே மறுபடி பிறக்கும் அனுபவம். இதனையே இயேசு கிறிஸ்து வலியுறுத்தினார். ஆம், "இயேசு அவனுக்குப் (நிக்கொதேமுவுக்கு)  பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 3 )

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2038

"AATHAVAN" | Monday, September 07, 2026

"For neither is circumcision anything, nor uncircumcision, but a new creation." — Galatians 6:15

One of the most significant issues among the early Christians was the teaching concerning circumcision. According to Old Testament tradition, a true Jew had to be circumcised. This sparked intense debates among the early believers. However, the Apostle Paul declares such thinking to be wrong. No one becomes righteous before God merely by keeping legalistic commandments. We can only be justified when we believe in and accept Jesus Christ.

"Now that no one is justified by the Law before God is evident; for, 'THE RIGHTEOUS MAN SHALL LIVE BY FAITH.'" — Galatians 3:11

What truly matters is for a person to be forgiven of their sins by Christ and transformed through a new birth—external rituals are not required. A person who is uncircumcised can still keep the righteousness of God.

"So, if the uncircumcised man keeps the requirements of the Law, will not his uncircumcision be regarded as circumcision?" — Romans 2:26

Ritualistic observances alone cannot render anyone acceptable to God; inner transformation is what matters.

"For he is not a Jew who is one outwardly, nor is circumcision that which is outward in the flesh. But he is a Jew who is one inwardly; and circumcision is that which is of the heart, by the Spirit, not by the letter; and his praise is not from men, but from God." — Romans 2:28-29

Much like the early Christian churches, many churches and ministers today urge people to adhere to various rituals. Instead of teaching and guiding people on how to become a new creation, they propagate humanly devised doctrines.

A clear example of this is the teaching regarding tithing enforced by certain churches today. It cannot be denied that in some Christian congregations, teachings on tithing have become akin to the ancient doctrine of circumcision. Some teach that a person’s lack of divine blessing is due to not giving a tithe. However, God does not look at whether someone gives a tithe or not; He looks to see if they have experienced true repentance and become a new creation.

Yes, beloved, in Christ Jesus, whether one gives an offering or does not give an offering is not the issue—a new creation is what matters. Just like grabbing the tail instead of the head, many Christian ministers today have abandoned the core, head teachings of Christianity to chase after the tail.

Let us confess our sins to Jesus Christ and experience being cleansed by His blood. This is the primary requirement for us to be transformed into a new creation—this is the born-again experience. Jesus Christ Himself emphasized this:

"Jesus answered and said to him, 'Truly, truly, I say to you, unless one is born again, he cannot see the kingdom of God.'" — John 3:3

✍️ Bro. M. Geo Prakash  

Thursday, September 03, 2026

🦋 Meditation verse - கொலோசெயர் 3 : 1 / Colossians 3:1

 தியானம் - 2037

"ஆதவன்" செப்டம்பர் 06 ஞாயிறு 2026



"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பிரபலமான ஊழியர் ஒருவரது தலைமை அலுவலகத்துக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு பணியிலிருந்த அலுவலர் என்னிடம் ஒரு விண்ணப்பத்தைக்கொடுத்து எதற்காக ஜெபிக்கும்படி சகோதரரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதனை இந்தப் படிவத்தில் பூர்த்திசெய்து தாருங்கள் என்று கூறினார். அதில் சுமார் 15 பல்வேறு கோரிக்கைகள் அச்சிடப்பட்டிருந்தன. எல்லாமே உலகத் தேவைகளும், பிரச்சனைகளும்தான். இறுதியாக ஒரு கோரிக்கைமட்டும், "ஆன்மீக காரியங்களில் வளர்ச்சிபெற" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதாவது பிரபல ஊழியர் உலக காரியங்களையே மக்களிடம் பிரசங்கித்து அதற்காகவே ஜெபிக்கிறவராக இருக்கின்றார். இன்றைய தியான வசனம் இதற்கு முற்றிலும் வேறான ஆவிக்குரிய உண்மையினை நமக்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது. 

முதலில் நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டியது அவசியம். இப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவுக்குள்ளான மனிதர்களாக மாறிவிடும்போது பாவத்துக்கு மரித்தவர்களாகின்றோம்.  மட்டுமல்ல, கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் புது மனிதர்களாக உயிர்பெறுகின்றோம். இப்படி நாம் அவரது மரணத்திலும் உயிர்ப்பிலும் அவரோடுகூட இணைக்கப்பட்டவர்களாகின்றோம். இதுதான் ஆவிக்குரிய சத்தியம்.

ஞானஸ்நானம் இதற்கு ஒரு அடையாளமாக இருக்கின்றது. "ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்." ( கொலோசெயர் 2 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

இப்படி நாம் மெய்யான மனம்திரும்புதல்பெற்று ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்துவுடன் மரித்து நாமும் உயிர்தெழுந்துள்ளோம் என்று அறிக்கையிடுகின்றோம். உண்மையான ஆவிக்குரிய ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த அனுபவத்துடன்  கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுகின்றவர்களாக இருப்பார்கள். 

நமக்கான நிலையான வீட்டினை ஏற்பாடுசெய்ய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துச் சென்றுள்ளார். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு,  "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" ( யோவான் 14 : 2, 3 ) என்று முன்னறிவித்தார். 

அப்போஸ்தலரான பவுலும், "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 1 ) என்கின்றார். நாம் கிறிஸ்துவுடன்கூட பாவத்துக்கு மரித்து ஜீவனுக்கென்று எழுந்தது உண்மையானால் இந்த நிதியவீட்டின்மேல் ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

அதாவது, முதலில் நாம் கிறிஸ்துவுடன் மரிக்கவேண்டும்; புதிய மனிதர்களாக அவருக்குள் உயிர்ந்தெழவேண்டும். ஞானஸ்நானம் பெறுவதன்மூலம் அதனை வெளியரங்கமாக அறிக்கையிடுகின்றோம். "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 )

ஆம் அன்பானவர்களே, வெறும் உலக காரியங்களுக்காக ஜெபிக்கின்றவர்களாகவும் அவற்றையே வாழ்வில் தேடுகின்றவர்களாகவும் இல்லாமல், ஆவிக்குரிய மேலான காரியங்களையே நமது வாழ்வில் வாஞ்சிக்கிறவர்களாக இருப்போம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2037

"AATHAVAN" | September 06, Sunday 2026

"Therefore, if you have been raised with Christ, keep seeking the things that are above, where Christ is, seated at the right hand of God." (Colossians 3:1, NASB)

I once visited the headquarters of a well-known minister. The staff member on duty handed me an application form and requested, "Please fill out this form stating why you would like to meet the brother for prayer." The sheet listed about 15 different prayer requests, almost all of which were centred around worldly needs and personal struggles. Only the very last option read: "To grow in spiritual matters."

This clearly reflected how that prominent minister primarily preached about earthly matters and focused his prayers on them. Today's meditation verse presents a spiritual reality that stands in stark contrast to such a mindset.

First, it is essential that our sins are forgiven and that we experience the redemption found in Christ. When our sins are forgiven and we are transformed into people in Christ, we become dead to sin. Not only that, but just as Christ died and rose again, we too come alive as new creations. In this way, we are united with Him in both His death and His resurrection. This is the core spiritual truth.

Water baptism serves as a visible sign of this reality. Scripture tells us:

"having been buried with Him in baptism, in which you were also raised with Him through faith in the working of God, who raised Him from the dead." (Colossians 2:12, NASB)

When we experience genuine repentance and undergo baptism, we publicly testify that we have died with Christ and have been raised with Him. Those who have experienced true spiritual baptism will live out this resurrection life by actively seeking the higher, heavenly things where Christ sits at the right hand of God.

Our Lord Jesus Christ has gone ahead to prepare an eternal home for us. He foretold this to His disciples:

"In My Father’s house are many dwelling places; if it were not so, I would have told you; for I go to prepare a place for you. If I go and prepare a place for you, I will come again and receive you to Myself, that where I am, there you may be also." (John 14:2–3, NASB)

The Apostle Paul affirms this same hope:

"For we know that if the earthly tent which is our house is torn down, we have a building from God, a house not made with hands, eternal in the heavens." (2 Corinthians 5:1, NASB)

If it is truly case that we have died to sin and been raised to new life with Christ, our deepest desires will be anchored in this eternal home. This is precisely what today’s meditation verse urges us to pursue.

Simply put, we must first die with Christ and then rise as new creations in Him—an inner transformation we publicly declare through baptism:

"Now if we have died with Christ, we believe that we shall also live with Him." (Romans 6:8, NASB)

Dear beloved, let us not be people who pray merely for temporal, earthly desires or spend our lives chasing worldly things. Instead, let us earnestly long for and pursue the higher, spiritual things of God.

✍️ Bro. M. Geo Prakash  

Wednesday, September 02, 2026

🦋 Meditation verse - பிலிப்பியர் 1 : 21 / Philippians 1:21

 தியானம் - 2036

"ஆதவன்" செப்டம்பர் 05 சனி 2026


"கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" ( பிலிப்பியர் 1 : 21 )

ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களது பிரபலமான ஒரு மேற்கோள், "ஒருவரை நீங்கள் நேசிக்கும்போது, ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கிறீர்கள்; மாறாக, அவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அல்ல" என்பதாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை இப்படித்தான் நேசித்தார். நாம் பரிசுத்தவான்கள் என்று அவர் நம்மை நேசிக்கவில்லை. நாம் பாவிகளாக இருக்கும்போதே நம்மை அவர் நேசித்தார். 

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" ( ரோமர் 5 : 8 ) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், இந்த உலகத்தில் நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது  ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கின்றோம். அப்படியே கிறிஸ்து நம்மை நேசித்தார். 

இதுபோல நாமும் அவரை எந்த நிபந்தையுமின்றி நேசிக்கவே அழைக்கப்படுகின்றோம். அந்த அன்பினால்தான் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து எனக்கு உயிர்" என்கின்றார். இந்த உலகத்தில் காதலர்கள் பலர் தாங்கள் காதலிப்பவர்களைப் பார்த்து , "நீதான் என் உயிர்" என்று கூறும் வார்த்தைகள்தான் இவை. இப்படி நமது உயிராக நாம் கிறிஸ்துவை எண்ணி அன்புசெய்யவேண்டியது அவசியம். 

தொடர்ந்து பவுல் அப்போஸ்தலர், "சாவு எனக்கு ஆதாயம்" என்று கூறுகின்றார். இதற்கு நாம் இரண்டு பொருள் கூறலாம். ஆவிக்குரிய விதத்தில் கூறுவதென்றால், கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிப்பது நமக்கு லாபமாகும். காரணம் நாம் அவரோடுகூட மறுமையில் நித்தியமாக வாழ்வதற்கு நாம் தகுதிபெறுகின்றோம். இன்னொருபொருள், கிறிஸ்துவுக்காக என்று உண்மையாகப் பணிச்செய்து மரிப்பது நமக்கு ஆதாயம். 

இப்படி நாம் கிறிஸ்துவை அன்புசெய்வோமானால் நமது வேறு எந்த உலக ஆசைக்கும் அவரைத் தேடமாட்டோம். கிறிஸ்துவின் பிரசன்னம் நம்மோடு இருக்கவேண்டும், அவர் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தும் அனுபவம் நமக்கு நிரந்தரமாக வேண்டும் எனும் ஆசைகளே நமக்குள் எழும். 

சமீபத்தில் படித்தப்  பத்திரிகைச் செய்தி என்னைச் சிந்திக்கவைத்தது. தனது காதல் கைக்கூடாததால் ஒரு பெண் தற்கொலை செய்து மடிந்துபோனாள். அதனை அறிந்த அவளது காதலனும் தற்கொலை செய்துகொண்டான். சாகுமுன் அவன் எழுதிவைத்திருந்த கடிதத்தில், "அவளே எனது உயிராக இருந்தாள்;  அவளோடு சாவதே  எனக்கு நல்லது" என்று குறிப்பிட்டிருந்தான்.  ஆம், கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளவேண்டிய அன்பு இதுபோல தூய்மையான காதல் உணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். 

வேதாகமத்தின் உன்னத சங்கீதம் தேவனுடன் பக்தன் இந்த அனுபவத்துடன் பாடிய பாடல்களே. "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்று நம்மால் கூறி வாழமுடியுமானால் நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றோம் என்று பொருள்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2036

"AATHAVAN" | Saturday, September 05, 2026

"For to me, to live is Christ and to die is gain." — Philippians 1:21

A famous quote by the Russian author Leo Tolstoy states, "When you love someone, you love the person as they are, and not as you'd like them to be." This is precisely how the Lord Jesus Christ loved us. He did not love us because we were holy; He loved us while we were still sinners.

We read, "But God demonstrates His own love toward us, in that while we were yet sinners, Christ died for us" (Romans 5:8). Indeed, when we truly love someone in this world, we accept and love them just as they are. Christ loved us in the exact same way.

Likewise, we are called to love Him unconditionally. It is out of such devotion that the Apostle Paul declares, "Christ is my life." These mirror the words lovers in this world often say to one another: "You are my very life." We must cherish and love Christ as our very life.

The Apostle Paul goes on to say, "To die is gain." We can understand this in two ways:

Spiritually: Dying to sin for the sake of Christ is our gain, as it makes us worthy to live with Him eternally in the life to come.

Ministerially: Faithfully serving Christ to the point of giving up our physical life for Him is ultimate gain.

If we love Christ with this depth, we will not seek Him for worldly desires. Instead, our hearts will burn with the longing to abide in His presence continuously and to experience His guidance from within.

A recent news article gave me pause for thought. A young woman committed suicide because her love went unfulfilled. Upon hearing the news, her lover also ended his life. In his suicide note, he wrote, "She was my very life; dying alongside her is better for me." Our love for Christ ought to carry that same pure, consuming passion.

The Song of Solomon in Holy Scripture reflects this exact devotion between the believer and God. If we can truly declare and live out, "For to me, to live is Christ and to die is gain," we are living a genuine spiritual life.

✍️ Bro. M. Geo Prakash  


Tuesday, September 01, 2026

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 2 : 2 / 1 Corinthians 2:2

 தியானம் - 2035

"ஆதவன்" செப்டம்பர் 04 வெள்ளி 2026


"இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்."
( 1 கொரிந்தியர் 2 : 2 )

இன்று பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகளும் போதகர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அதிசயம் செய்பவராகவும், நோய்களைக் குணமாக்குபவராகவும், தங்களுக்கான உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவுமே அறிந்துள்ளனர்; அப்படியே கிறிஸ்துவைப் பார்க்கின்றனர்.  ஆனால், கிறிஸ்தவம் என்பது செழிப்பின் மார்க்கமல்ல, அது சிலுவை சுமக்கும் அனுபவத்தையே நமக்கு அடையாளம் காட்டுகின்றதாக இருக்கின்றது. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் மீட்பராக, நமது பாவங்களை மன்னிப்பவராக அறியவேண்டியது அவசியம். இதுவே ஆவிக்குரிய பார்வையாகும். மற்றபடி அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என அவரைத் தேடுவது கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிவதாகும். கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்தவன் ஆவிக்குரியவனல்ல. "ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 )

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" என்கின்றார். கிறிஸ்து செய்த அற்புத அதிசயங்களை மேன்மைப்படுத்தி அதனையே சொல்லிக்கொண்டிருப்பதைவிட  சிலுவையில் அறையப்பட்டவராக நாம் கிறிஸ்துவை பார்க்கவேண்டும். காரணம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) இதனையே நாம் அறியவேண்டும். 

எனவேதான் சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்கின்றார் பவுல். அதாவது, நமக்காக இரத்தம் சிந்தி, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட  கிறிஸ்துவின் இந்தத் தியாக அன்பைத்தவிர இதற்குமேல் கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் எதனையும் அறிவதை நான் விரும்பவில்லை என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம்.  ஆசீர்வாதங்களைத் தருபவராக, நோய்களைக் குணமாக்குபவராக, அதிசயங்களை செய்பவராக மட்டுமே நாம் அவரைப் பார்ப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். காரணம், அப்படிப்பார்க்கும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது; நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடமுடியாது. 

கிறிஸ்துவை நமக்காக, நமது பாவங்களுக்காக,  சிலுவையில் அறையப்பட்டவராக பார்க்கப் பழகுவோம். அப்போது மட்டுமே நாம் நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மீட்பு அனுபவத்தைப் பெறமுடியும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2035

"AATHAVAN" | September 04, Friday 2026

"For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified." (1 Corinthians 2:2)

Today, most Christian believers and pastors know the Lord Jesus Christ only as a miracle worker, a healer, and a giver of worldly blessings; that is how they view Him. However, Christianity is not a gospel of prosperity; rather, it reveals to us the experience of bearing the cross.

It is essential that we know the Lord Jesus Christ as our Redeemer who forgives our sins. This is the spiritual perspective. Seeking Him merely to receive something from Him is knowing Christ according to the flesh. Anyone who knows Christ according to the flesh is not spiritual.

"Therefore, from now on we recognize no one according to the flesh; even though we have known Christ according to the flesh, yet now we know Him in this way no longer." (2 Corinthians 5:16)

That is why the Apostle Paul states in today's meditation verse, "For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified." Rather than exalting and constantly speaking about the miracles and wonders Christ performed, we must look at Him as the One who was crucified. For,

"But He was pierced through for our transgressions, He was crushed for our iniquities; the chastisement for our well-being fell upon Him, and by His scourging we are healed." (Isaiah 53:5)

This is what we ought to know.

Therefore, Paul says that he determined to know nothing except Him crucified. In other words, the Apostle Paul is saying: beyond this sacrificial love of Christ—who shed His blood and accepted death on a cross for us—I do not wish for you to know anything else about Him.

Beloved, let us examine how we view Christ. If we view Him only as the giver of blessings, the healer of sicknesses, and the worker of miracles, we are to be pitied. Viewing Him only in that way means our sins cannot be forgiven, and we cannot be set free from our sinful life.

Let us learn to see Christ as the One who was crucified for us and for our sins. Only then can we be set free from a life of sin and receive the experience of salvation.

✍️ Bro. M. Geo Prakash  


🦋 Meditation verse - பிலிப்பியர் 2: 5 / Philippians 2:5

 தியானம் - 2034

"ஆதவன்" செப்டம்பர் 03 வியாழன் 2026


"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;" ( பிலிப்பியர் 2: 5)

இன்று மனிதர்கள் சிலருக்குப்  பதவிகள் கிடைக்கும்போது அவர்களது செயல்கள் அற்பத்தனமாக மாறிவிடுவதை நாம் பார்க்கின்றோம். அரசாங்க அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பதவி கிடைத்துவிட்டால்கூட தங்களது பெருமையை நிலைநிறுத்த சிலர் பல்வேறு  காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் பலரது வாழ்வில் அவர்கள் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறமுடியாததற்குக் காரணம் அவர்களது இந்தப் பெருமையே. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிராகவே இருக்கின்றார்.  

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1 பேதுரு 5: 5) என்று கூறுகின்றார். ஆம், தாழ்மையே தேவன்  விரும்பும் மேலான குணம்; அதுவே தேவ கிருபையினை நாம்பெற்றுக்கொள்ள வழி. இந்த கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஒருமுறை ஒரு ஆலயத்துக்குச் சென்றபோது மின்விசிறி ஒன்றினைக் காணிக்கையாகக் கொடுத்த ஒருவர் அந்த மின்விசிறியின் மூன்று இறக்கைகளிலும் தங்களது குடும்பத்து உறுப்பினர்களது பெயரை பொறித்திருந்ததை  பார்த்தபோது இப்படியும் இழிகுணம் கொண்டவர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியப்பட்டேன். மனிதர்களாகிய நமக்கே இது இப்படி அற்பத்தனமாகத் தெரியுமானால் தேவனது பார்வையில் இத்தகைய குணங்கள் எப்படி இருக்கும்!!!

கிறிஸ்துவைக்குறித்து, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2: 6, 7) என்று வாசிக்கின்றோம். உலகத்தையே படைத்து ஆளும் தேவகுமாரனாகிய கிறிஸ்து ஒரு அடிமைபோல மாறினாரென்றால் அவரது தாழ்மை எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள். இந்த கிறிஸ்துவின்  சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, காணக்கூடாத தேவனாகிய அவர் மனிதனாக தோன்றியது மட்டுமல்ல, அடிமைபோல அனைத்திலும் தன்னைக் கீழ்ப்படிந்து தாழ்த்தினார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2: 8)

எனக்குத் தெரிந்த ஒருவர் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். திருமண வீடுகளிலும், இதர பொது நிகழ்ச்சிகளிலும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, "நான் தினசரி எத்தனை கோப்புகள் (files)  பார்க்கின்றேன் தெரியுமா? எத்தனை கையொப்பம் இடுகிறேன் தெரியுமா? நமது ஊரில் எவன் இப்படி இத்தனைக் கோப்புகளை பார்த்திருப்பான்; எவன் இத்தனைக் கையொப்பம் போட்டிருப்பான்?" என்று கூறிக்கொள்வார். அவரது நண்பர்கள் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் அவர் சற்று அப்புறம் சென்றபின் அவரைக்குறித்துக் கேலிபேசிச் சிரிப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, அற்பமான பெருமை நமக்கு இருக்குமானால் நாம் மற்றவர்களால் அற்பமாகவே எண்ணப்படுவோம். தன்னைத் தாழ்த்திய இயேசு கிறிஸ்து மிகவே உயர்த்தப்பட்டார். "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிச் செய்தார்." ( பிலிப்பியர் 2: 9, 10)

இத்தகைய மாம்சீக பெருமை நமக்கு இருக்குமானால் அதனை நம்மைவிட்டு நீக்குவோம். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9)  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கும்படி நம்மைக் காத்துக்கொள்வோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2034                                                                                                                                                                                                 "AATHAVAN" | September 03, Thursday 2026

"Have this attitude in yourselves which was also in Christ Jesus," (Philippians 2:5)

Today, we observe that when some people obtain certain positions, their actions become petty. We see that even if someone gets an entry-level position in a government office, they engage in various display tactics to assert their status. For many, the very reason they are unable to receive higher blessings in life is this pride. For God is opposed to the proud.

That is why the Apostle Peter says:

"You younger men, likewise, be subject to your elders; and all of you, clothe yourselves with humility toward one another, for God is opposed to the proud, but gives grace to the humble." (1 Peter 5:5)

Yes, humility is the higher virtue that God desires; it is the pathway for us to receive God’s grace. Today’s meditation verse tells us, "Have this attitude in yourselves which was also in Christ Jesus."

Once, while visiting a church, I saw that a person who donated a ceiling fan had inscribed the names of their family members across its three blades. I was astonished that people could possess such petty tendencies. If this appears so trivial to us as human beings, how must such attitudes look in the sight of God?

Regarding Christ, we read:

"...who, although He existed in the form of God, did not regard equality with God a thing to be grasped, but emptied Himself, taking the form of a bond-servant, and being made in the likeness of men." (Philippians 2:6-7)

Consider the extent of His humility: if the Son of God, who created and rules the world, humbled Himself to become like a bond-servant, what a profound humility that is! It is this mind of Christ that today's scripture exhorts us to carry.

Furthermore, He who is the invisible God not only appeared as a man, but He also submitted and humbled Himself in all things like a servant.

"Being found in appearance as a man, He humbled Himself by becoming obedient to the point of death, even death on a cross." (Philippians 2:8)

An acquaintance of mine served as an education officer. During conversations with friends at weddings or public gatherings, he would often boast, "Do you know how many files I process every day? Do you know how many signatures I put? Has anyone in our town processed this many files or signed these many documents?" While his friends listened to him present, the moment he walked away, they would mock and laugh at him.

Yes, dear ones, if we harbour petty pride, we will only be regarded as petty by others. But Jesus Christ, who humbled Himself, was exalted to the highest place.

"For this reason also, God highly exalted Him, and bestowed on Him the name which is above every name, so that at the name of Jesus every knee will bow, of those who are in heaven and on earth and under the earth," (Philippians 2:9-10)

If we have such worldly, fleshly pride within us, let us cast it away.

"However, you are not in the flesh but in the Spirit, if indeed the Spirit of God dwells in you. But if anyone does not have the Spirit of Christ, he does not belong to Him." (Romans 8:9)

Let us guard ourselves so that the mind which was in Christ Jesus may also abide in us.

✍️ Bro. M. Geo Prakash  

Sunday, August 30, 2026

🦋 Meditation verse - ரோமர் 5: 17 / Romans 5:17

 தியானம் - 2033

"ஆதவன்" செப்டம்பர் 02 புதன் 2026


"அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5: 17)

ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஒரு முக்கிய வேறுபாட்டினைக்குறித்து நேற்றைய தியானத்தில் நாம் தியானித்தோம். அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் இன்னொரு வேறுபாட்டினைக்குறித்து விளக்குகின்றார். 

ஆதாமின் மூலம் மரணம் மக்களைக் கவ்விக்கொண்டது.  ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பூரண கிருபையினை நாம்  பெறுவோமானால் மரணத்துக்கு மாற்றாக நித்தியஜீவன் நமக்குக் கிடைக்கும் என்கின்றார் அவர். ஆதாமினால் நாம் இழந்துபோன நித்திய ஜீவனை நமக்கு அளிக்கவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  ஆம், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" ( யோவான் 3: 16) என்று வாசிக்கின்றோம். 

இந்த நித்திய ஜீவனை நாம் சோர்ந்துபோகாமல் நற்செயல்கள் செய்து வாழும்போது தேவன் நமக்குத் தருவார். "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்." ( ரோமர் 2: 6, 7)

மேலும், இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல், "நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே" என்று உறுதியாகக் கூறுகின்றார். நாம் நித்திய ஜீவனை அடைவது மட்டுமல்ல, அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். காரணம், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் நாம் நீதிமான்களாக்கப்படுகின்றோம். நீதிமான்கள் நீதிபரானாகிய கிறிஸ்துவோடு ஆளுகையும் செய்வார்கள். 

இப்படி நாம் ஆளுகை செய்வதற்கு, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக ஆக்கியுள்ளார். ஆம், "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1: 6)

கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணத்தை நாம் காத்துக்கொண்டு வாழ்வோமானால் நமது மேலான பலன் இதுதான். பழைய ஆதாம் எனும் ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது கீழ்ப்படிதல்மூலம் அதனைத் தகர்த்து நமக்கு நித்திய ஜீவனையும் நித்திய ஆளுகையையும் தந்துள்ளார். எனவே இதனை உணர்ந்து நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2033 

"AATHAVAN" | September 02, Wednesday, 2026 

"For if by one man's offence death reigned by one; much more they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ." (Romans 5:17)

In yesterday's meditation, we reflected on a major difference between Adam and Christ. In today’s scripture portion, the Apostle Paul explains yet another key difference.

Through Adam, death took hold of mankind. But Paul explains that if we receive the abundance of our Lord Jesus Christ’s grace, we receive eternal life instead of death. Christ came into the world precisely to give us the eternal life we lost through Adam. Indeed, we read: "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life." (John 3:16)

God gives us this eternal life as we live doing good works without growing weary. "Who will render to every man according to his deeds: To them who by patient continuance in well doing seek for glory and honour and immortality, eternal life:" (Romans 2:6, 7)

Furthermore, in today's meditation verse, the Apostle Paul declares with assurance that "they which receive abundance of grace and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ." We will not only attain eternal life, but we will also reign with Him. This is because we are made righteous through the obedience of Christ, and the righteous will reign alongside Christ, the Righteous One.

To enable us to reign in this way, our Lord Jesus Christ has made us kings and priests before God His Father. Indeed, "And hath made us kings and priests unto God and his Father; to him be glory and dominion for ever and ever. Amen." (Revelation 1:6)

If we guard and live by the law of Christ's grace, this is our supreme reward. While death reigned through the offense of one man—the old Adam—our Lord Jesus Christ broke that power through His obedience, granting us eternal life and an everlasting reign. Therefore, realizing this truth, let us live with hearts full of gratitude to Him.

✍️ Bro. M. Geo Prakash  

🦋 Meditation verse - ரோமர் 5: 16 / Romans 5:16

தியானம் - 2032

"ஆதவன்" செப்டம்பர் 01 செவ்வாய் 2026


"மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது." ( ரோமர் 5: 16)

ஆதாமின் கீழ்ப்படியாமை எனும் ஒரே பாவம் முழு மனுக்குலத்துக்கும் சாபமாக அமைந்தது. ஆதாமின் ஒரே குற்றம் நமக்கு ஆக்கினையைக் கொண்டுவந்தது. ஆனால் அதனை நிவிர்த்திசெய்ய உலகினில் வந்த இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவினால் பல குற்றங்கள் மன்னிக்கப்படும் சூழ்நிலை உருவானது. 

மட்டுமல்ல, ஆதாமைப்போல பாவம் செய்யாதவர்களையும் ஆதாமின் பாவத்தின் தண்டனை பற்றிக்கொண்டது. இதனை அப்போஸ்தலரான பவுல், "அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்" ( ரோமர் 5: 14) என்று கூறுகின்றார். ஆம், பழைய ஆதாம் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருக்கின்றான். 

ஆதாமின் பாவம் அவனைப்போல பாவம் செய்யாதவர்களையும் தண்டனைக்குள்ளாக்கியது. ஆனால் கிறிஸ்துவின் கிருபை பல பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றது. இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல், கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது என்று கூறுகின்றார். ஒரேபாவத்தினால் உலகம் தண்டனை பெற்றது; ஆனால், ஒரே மனிதனின் கீழ்ப்படிதலினால் பல பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபை. 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு பெறுகின்றோம். அவரால் நமது பல பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அன்று பாவம் செய்த ஆதாம் ஏதேன் தோட்டத்தில் உலாவிய தேவனுக்குப் பயந்து ஒளிந்துகொண்டதுபோல நாம் பயந்து ஒளித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், நமது பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளவே கிறிஸ்து உலகினில் அவதரித்தார்; அவர் பாவிகள் மனம்திரும்பி தன்னிடம் வருவதையே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

கிறிஸ்துவின் கிருபை பல பாவங்களையும் மன்னிக்கின்றது. எனவே நாம் தயங்காமல் நமது எந்தப் பாவத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு மனம்திரும்ப அழைக்கப்படுகின்றோம். எனவே, நமது எந்தப் பாவமாக இருந்தாலும் அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல" என்று. ஆம், ஆதாமின் தண்டனைத்தீர்ப்பை நாம் கிறிஸ்துவின் கிருபைக்கு ஒப்பிடமுடியாது. எனவே துணிவுடன் அவரை நெருங்கி நமது பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டுவோம். 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."(1 யோவான்  1 : 9) ஆம், கிறிஸ்துவின் கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நமக்கு நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation – 2032    

"AATHAVAN" | Tuesday, September 01, 2026

"And not as it was by one that sinned, so is the gift: for the judgment was by one to condemnation, but the free gift is of many offences unto justification." (Romans 5:16)

The single sin of Adam’s disobedience became a curse for all humanity. Adam's one offense brought condemnation upon us. However, through Christ—the Second Adam who came into the world to remedy this—a way was opened for many offenses to be forgiven.

Furthermore, even those who had not sinned in the same manner as Adam were overtaken by the penalty of his sin. The Apostle Paul explains this: "Nevertheless death reigned from Adam to Moses, even over them that had not sinned after the similitude of Adam's transgression, who is the figure of him that was to come." (Romans 5:14) Yes, the old Adam is a pattern of the One who was to come.

Adam’s sin subjected even those who did not sin like him to punishment. But the grace of Christ releases us from many sins. This is precisely what the Apostle Paul emphasizes in today’s meditation verse: the free gift brings justification from many offenses. The world faced judgment due to one sin, yet through the obedience of one Man, many sins are forgiven. This is the grace that comes through our Lord Jesus Christ.

Dearly beloved, today we receive redemption through the blood of Christ, and through Him, our many sins are forgiven. Unlike Adam, who sinned and hid in fear from God walking in the Garden of Eden, we have no need to hide in fear. For Christ came into the world to forgive and accept us; He eagerly longs for sinners to repent and return to Him.

The grace of Christ forgives numerous sins. Therefore, we are called to confess any sin to Him without hesitation and repent. Let us come to Him with whatever sin we carry and seek His forgiveness. Today’s meditation verse reminds us that the judgment resulting from one man’s sin is not like the free gift of God. Indeed, the sentence of condemnation through Adam cannot be compared to the abundance of Christ's grace. Let us approach Him boldly and ask for forgiveness.

"If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness." (1 John 1:9) Yes, the free gift of Christ cleanses us from many offenses and leads us to justification.

✍️ Bro. M. Geo Prakash 


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யோவான் 1 : 23 / John 1:23

  தியானம் - 2039 " ஆதவன் " செப்டம்பர் 08 செவ்வாய் 2026 "அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர...