ஆதவன் தியானம்
இன்றைய தியான வசனம் தேவனுடைய வாக்குத்தத்தமோ, தீர்க்கத்தரிசனமோ அல்ல. மாறாக, சாதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சரித்திர சம்பவம். ஆனால், வேதாகமத்திலுள்ள எந்த ஒரு வார்த்தையும் வீணாக எழுதப்படவில்லை என்பதற்கும் வேத வசனங்களை நாம் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வதற்கும் இந்த வசனம் எப்படி ஒரு சகோதரனுடைய வாழ்வில் செயல்பட்டது என்பதனை விளக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
எனக்குத் தெரிந்த ஆவிக்குரிய அனுபவங்களுள்ள ஒரு சகோதரன் இருக்கின்றார். இந்தச் சகோதரன் நல்ல படிப்பு படித்திருந்தும் இவருக்கு ஏற்ற எந்த வேலையும் கிடைக்கவில்லை. திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இவரது தாயார் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்தத் தாய் இவருடன் கூட வசித்துவந்தார். இந்தத் தாய்க்கு மாதம்தோறும் கிடைக்கும் ஓய்வூதியத்தில் இந்தச் சகோதரன் குடும்பம் நடத்திவந்தார்.
தனக்கு ஏற்ற வேலை வேண்டுமென்று இந்தச் சகோதரன் பல ஆண்டுகள் ஜெபித்தபோதிலும் இவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒருமுறை குடும்பத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது உறவினர் ஒருவர் இந்தச் சகோதரனைப் பார்த்து, "எத்தனை நாட்கள் உன் அம்மாவின் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துவாய்? உன் அம்மா இறந்தபின் உனக்கு வருமானத்துக்கு என்ன செய்வாய்?" என்று கேட்டார். அது இந்தச் சகோதரனுக்கு மிக வேதனையைக் கொடுத்தது.
அன்று இரவு இவரால் உறங்கமுடியவில்லை. உறவினர் கூறியது உண்மைதானே? அம்மா இறந்தபின் நாம் என்ன செய்வோம் எனக் கலங்கி, இப்படி ஜெபித்தார்: "ஆண்டவரே, நீர் ஏன் என்னை இப்படி மற்றவர்கள் அற்பமாக எண்ணுமளவுக்கு வைத்திருக்கின்றீர்? எனக்கு வாழ்க்கைக்கு ஒரு வழியைக் காட்டும்" என்று அழுதார். அப்போது ஆண்டவர் இவருக்கு இன்றைய தியான வசனத்தைக் காண்பித்தார். இந்தச் சகோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அது சம்பந்தமில்லாத தேவ பதிலாகத் தெரிந்தது.
ஒருசில ஆண்டுகள் கடந்தன. தேவன் இந்தச் சகோதரனைக் கண்ணோக்கினார். இந்தச் சகோதரனுக்கு அவரது படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவர் பணியில் சேர்ந்து பத்து நாட்களில் அவரது அம்மா மரித்துப்போனார்கள். அவர்கள் மூலம் கிடைத்துவந்த ஓய்வூதியமும் அரசாங்கத்தால் உடனேயே நிறுத்தப்பட்டது. அப்போதுதான் ஆண்டவர் காட்டிய இன்றைய வேத வசனம் அவரது வாழ்வில் நிறைவேறியது அவருக்குப் புரிந்தது.
ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேல் மக்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்து மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனைப் புசித்ததுபோல தேவன் இந்தச் சகோதரனுக்கு அவரது தாய்மூலம் அதுவரை கொடுத்துவந்த மன்னாவை நிறுத்தி அவரது சொந்த உழைப்பின் பயனை அனுபவிக்கச் செய்தார். தாயாரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட உடனேயே இவரது உழைப்பின் பலனை இந்தச் சகோதரன் அனுபவிக்கத் துவங்கினார். இப்போது இவர் நல்ல நிலையில் இருக்கின்றார்.
ஆம், நம்மைக்குறித்து தேவனுக்கு ஒரு திட்டமுண்டு. மற்றவர்கள் கூறும் அவதூறுக்கும், பரிகாசத்துக்கும் கவலைப்படாமல் தேவனையே சார்ந்து வாழப்பழகுவோம். மட்டுமல்ல, எந்த ஒரு சிறிய வேத வசனமும் இந்த உலகத்தில் யாராவது ஒருவருக்கு வாழ்வில் பலன்தருவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. தேவ வசனங்களை விசுவாசத்துடன் ஏற்று வாழ்வாக்குவோம். வாழ்வில் அற்புதங்களை தேவன் செய்வதை அனுபவிப்போம்.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️AATHAVAN MEDITATION
No. 2054 – September 23, 2026
“The day after they had eaten some of the produce of the land, the manna ceased. The sons of Israel no longer had manna, but they ate some of the yield of the land of Canaan during that year.” (Joshua 5:12, NASB)
Today’s meditation verse is neither a promise from God nor a prophecy. Rather, it is simply a historical event recorded in the Bible. Yet, I believe this verse can teach us that not a single word in the Bible has been written in vain, and that the Word of God can work powerfully in a person’s life when it is received with faith.
I know a brother who has had a genuine spiritual experience with God. Although he was well educated, he could not find a suitable job. He was married and had two children. His mother, who had worked as a teacher, had retired and was living with him. The family was managing their day-to-day life with the monthly pension that his mother received.
For several years, this brother prayed earnestly for a job that would be suitable for his education and abilities. Yet, no employment opportunity came his way.
Once, when he attended a family wedding, one of his relatives saw him and asked, “How long are you going to live on your mother’s pension? What will you do for an income after your mother dies?” Those words deeply hurt him.
That night, he could not sleep. What his relative had said was, after all, true. He became anxious, wondering what would happen to his family after his mother’s death. In tears, he prayed:
“Lord, why have You allowed me to be in such a situation that others look down upon me? Please show me a way to live.” At that moment, the Lord showed him today’s meditation verse.
The brother could not understand what it meant. It appeared to him to be an answer from God that had nothing to do with his situation.
A few years passed.
Then God looked upon this brother with grace, and he was given a good job that was appropriate for his education. However, just ten days after he joined the job, his mother passed away. The pension that had been supporting the family through her was immediately discontinued by the government.
It was only then that he understood how the Scripture the Lord had shown him earlier had been fulfilled in his own life.
Yes, dear friends, just as the manna ceased the day after the Israelites ate the produce of the land, and they began to eat the fruit of the land of Canaan, God stopped the “manna” that had been provided to this brother through his mother and enabled him to experience the fruit of his own labour.
As soon as his mother’s pension came to an end, he began to enjoy the fruit of his own work. Today, he is doing well and living in a good situation.
Yes, beloved, God has a plan for each one of us.
Let us learn to depend upon God and not be discouraged by the criticism, ridicule, or hurtful words of others. More than that, let us remember that even the smallest verse in the Bible has been written with a purpose and can become a source of blessing in someone’s life.
Let us receive the Word of God with faith and allow it to become reality in our lives. Then we will experience the wonderful ways in which God works miracles in our lives.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦







