கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சி

ஆதவன் 🔥 876🌻 ஜூன் 22, 2023 வியாழக்கிழமை

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருஅவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்உன்  வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் - 37:4 & 5) 

பலரும் கர்த்தரிடம் விசுவாசமும் நம்பிக்கையுமாய் இருப்பது பெரும்பாலும் வாழ்வில் நல்லதே தொடர்ந்து நடக்கும்போதுதான்எதிர்மறையான வாழ்க்கை சூழல் ஏற்படும்போது பெரும்பாலும் பலரும் நிலை குலைந்து விடுகின்றனர்நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன்,    தேவனுக்கு ஏற்றபடிதான் வாழ்கின்றேன்எனக்கு ஏன் இந்தத் துன்பம்ஏன்    எனக்கு   மட்டும் பிரச்சனைமேல்   பிரச்னை வருகின்றது?   என தேவனையே கேள்விகேட்கத் துணிந்துவிடுகின்றனர்.

ஆனால்வேதாகம பக்தர்கள் பலரும் உயர்வோ தாழ்வோ வறுமையோ இல்லாமையே எதுவாக இருந்தாலும் கர்த்தரே போதும் என்று வாழ்ந்தனர்.  

ஆபகூக் தீர்க்கதரிசி "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும்ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும்வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும்கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும்தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." (  ஆபகூக் 3 : 17, 18) என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.

கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருத்தல் என்பது என்ன வந்தாலும் அவர்மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல் அவரையே நம்பி வாழ்வதுபக்தனான யோபு கூறுவதுபோல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய்   இருப்பேன்என்று துணிந்து நிற்பது.

அடுத்து இங்குக் கூறப்பட்டுள்ள இன்னொரு விஷயம்வெறும்  விசுவாசம் மட்டுமல்ல, 'உன்   வழியைக்   கர்த்தருக்கு   ஒப்புவித்துஎன்று கூறப்பட்டுள்ளபடி நமது வழிகள் கர்த்தரது  வழியாக இருக்கவேண்டியது அவசியம்.  நமது வாழ்வை அவரது வழியில் நடத்த ஒப்புவித்துவிடவேண்டும். மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது,  அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று  கூறப்பட்டுள்ளதுநமது இருதயத்தின் வேண்டுதல்கள் தேவனுக்கேற்றவேண்டுதல்களாக இருக்கவேண்டும்அப்போது அவர் அவற்றை      நிறைவேற்றுவார்அதற்குமேலும் நிறைவேற்றுவார்.

அன்பானவர்களேநான் இப்படிக் கூறுவது பலருக்கும் வெற்று  உபதேசம்போல இருக்கலாம்ஆனால் எனது அனுபவத்திலிருந்து கூறப்பட்டுள்ள  வார்த்தைகளே இவைஎனது ஆவிக்குரிய 30 வருட வாழ்வின்  அனுபவத்தில் கண்டு உணர்ந்தவை.  துன்பங்கள் வரும்போது மனது சோர்ந்துபோவது தவிர்க்கமுடியாததுநானும் மனம் சோர்ந்து  போயிருக்கிறேன். ஆனால் அவிசுவாசம் ஏற்பட்டதில்லை. ஒரு துன்பம் அல்லது பிரச்சனை ஏற்படும்போது விசுவாசமாய் இருக்கும்போது ஏதாவது ஒரு அற்புதமான காரியம் செய்து நாம் நமது விசுவாசத்தை விட்டுவிடாமலிருக்க அவர் உதவுவார். 

ஆம்,"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருஅவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". தேவ வசனம் பொய்யாய் இராது. அவரது வார்த்தைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) எனவே எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்