நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்

ஆதவன் 🔥 864🌻 ஜூன் 10, 2023  சனிக்கிழமை

"என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 :  23 )


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு கட்டளைகளையும் பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி பலிசெலுத்துவது ஒன்றுதான்   தேவனுக்கு   ஏற்புடைய  செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர்தேவனுக்குப் பலி செலுத்துவதற்குக் காட்டிய முக்கியதுவத்தை   தேவனுடைய வாக்குக்குக் கீழ்படிவதற்குச் செலுத்தவில்லை. 

அதாவது அவர்கள் பல கட்டளைகளையும் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். குறிப்பாக,   பலியிடுவது   சம்பந்தமான   கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்லபாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக்குறித்தும் நான்அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும் என்  வாக்குக்குச் செவிகொடுங்கள்." எரேமியா 7 :  22 )

சில வீடுகளில் மகன் தாய் தகப்பனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது வேண்டிய உறவினர்களை வைத்துப் பேசிப்பார்ப்பார்கள். அதற்கும் மகன் கீழ்ப்படியாமல் தாய் தகப்பனுக்கு விரோதமாகச் செயல்பட்டால் அந்தத் தாயும் தகப்பனும் மனம் வெதும்பி, "நீ என் மகனுமில்லை; நான் உனக்குத் தாயுமில்லை" எனக் கூறுவதுண்டு. அதுபோலவே தேவனும் கூறுகின்றார்,  "என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" என்று. செவிகொடுக்கவில்லையானால் நீங்கள் எனது மக்களல்ல என்று பொருள். 

அன்பானவர்களே,இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றதுபலகிறிஸ்தவ சபைகளில்   வருமானத்தில்  பத்தில் ஒன்று  காணிக்கைக் கொடுப்பது வலியுறுத்தப்படுவதன் அளவுக்கு  இயேசு கிறிஸ்து கூறிய தேவனுக்குக் கீழ்படிவதைக்குறித்துப் போதிப்பதில்லை.   இரக்கம்நீதி   இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது  கிடையாது. 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது

கிறிஸ்துவின் இந்த கட்டளைகளுக்கு   முரணான   வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத்  தடையானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். . ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித நேயத்துக்குக் கொடுப்போம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே  கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்