ஒத்தாசை வரும் பர்வதம்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,149      💚 ஏப்ரல் 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்." ( சங்கீதம் 121 : 1&2 )

உலகில் நமக்குச் சில காரியங்கள் நடைபெற மற்றவர்களது உதவி பல வேளைகளில் தேவைப்படுவதுண்டுபொருளாதார உதவியாக இருக்கலாம்பள்ளி அல்லது கல்லூரிகளில் நமது குழந்தைகளைச் சேர்ப்பதற்காக இருக்கலாம் அல்லது வேலைவாய்ப்புகளில் நமக்கு உதவிட இருக்கலாம்அப்படி ஒருவர் நமக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டால் நாம் என்ன சொல்வோம்? "சார்நீங்கள் சொன்னதைநம்பி உங்களையே மலையாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்என்போமல்லவாஅதுபோலத்தான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.

'எனக்கு உதவி சாதாரண மனிதரிடமிருந்து அல்லவானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்துஎன அவர் துணிவுடன் கூறிகின்றார்மனிதர்கள் வாக்குத் தவறலாம்ஆனால் கர்த்தர் தன்னை நம்பியவர்களை கைவிடுபவரல்லமட்டுமல்ல அந்த நம்பிக்கையை சங்கீத ஆசிரியர் கூறிவிட்டு, "என் கண்களை அவரை நோக்கி ஏறெடுக்கின்றேன் என்கின்றார்".

மலைகளைப் பற்றி பார்ப்போமானால் மலைகளால் பல நன்மைகள் உள்ளனமுதலில் அவை இயற்கையான பாதுகாப்பு அரண் போன்றவைஇந்தியாவின் வட எல்கையிலுள்ள இமயமலை நமது நாட்டிற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரண்மட்டுமல்ல மலைகள் ஆறுகளின் பிறப்பிடம்மூலிகைகளின் உறைவிடம்ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மலையைநம்பி உயிர் வாழ்கின்றன. சூழலியலின் முக்கிய காரணி. நமது தேவனும் இது போன்றவரே 

அன்பானவர்களேஇன்று நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் இதுதான்நமக்கு மனிதர்களது ஒத்தாசை எப்போதும் கிடைக்காது. சிலவேளைகளில்  காலம், மற்றும் சமூக பொருளாதார காரணங்கள் மனிதர்களது உதவி நமக்குக் கிடைத்திடாமல் தடுக்கச்செய்திடும்.  எனவேதான் நாம் மனிதர்களை நம்புவதைவிட கர்த்தர்மேல் பற்றுதலாய் இருப்பதே நல்லது என்று வேதத்தின் மத்திய வசனம் கூறுகின்றது: "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும்கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்". ( சங்கீதம் 118 : 8 ). 

எந்தப் பிரச்சனைகள் வாழ்வினில் வந்தாலும் நமது விசுவாசக்கண்களால் நாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும்அவரை நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று வேதம் கூறுகின்றது.

புதிய ஏற்பாட்டில் ஒத்தாசை வரும் பர்வதமான இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து சுகம் பெற்றவர்கள் பலர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்அதில் குறிப்பாக நாம் ஒருவரைப் பார்க்கின்றோம்அவர்தான் சகேயுஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு. அவர் குள்ளனானபடியால்ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியாமல் இயேசு வரக்கூடிய பாதை ஓரத்திலிருந்த காட்டு அத்தி மரத்தில் ஏறி அவரை நோக்கிப் பார்த்தான்மிக உயர்ந்த ஆசீர்வாதமான ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான்.  அவரை நோக்கிப் பார்க்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது.   

நாமும் நமது கன்மலையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம்மலைகளைப்போல அவர் நமக்கு பாதுகாப்பு அரண்மலையிலிருந்து ஆறுகள் புறப்படுவதுபோல கிறிஸ்துவிடம் என்றும் வற்றாத ஜீவ நீரூற்றுகள் சுரந்து நம்மை வாழவைக்கும்மலைகள் மூலிகைகளின் பிறப்பிடம் அதுபோல எந்த நோய்களையும்  குணமாக்கும் மாமருந்து கிறிஸ்து,   ஆம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்தால் நமக்கு ஒத்தாசை வரும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்