DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, April 29, 2024

மனமேட்டிமை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,177     💚 ஏப்ரல் 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்." (நீதிமொழிகள் 16: 5 )

மனிதர்கள் வாழ்வில் தங்களைவிட்டு கண்டிப்பாக நீக்கவேண்டியகுணம் பெருமை அல்லது அகந்தைபெருமையுள்ளவன் வாழ்வில்செழிப்பதுபோலத் தெரிந்தாலும் அவன் முடிவு  பரிதாபகரமானதாக இருக்கும்எனவே வேதம் பெருமை  குணத்தை நம்மைவிட்டு அகற்றிட அறிவுறுத்துகின்றதுஉலகில் நல்லவர்களாக வெளிப்பார்வைக்குத் தெரியும் பலரும்  பொய்யையும் நீதியற்றச் செயல்களையும் பலவேளைகளில்  செய்கின்றனர்காரணம் பெருமைக்கு அடிமையாவதேபெருமை,அகந்தை இவை மனிதனை எந்த அவலட்சணமானச்  செயலையும் செய்யத்தூண்டும்பெருமைக்கு அடிமையானவன்  நல்லவனாக இருக்க முடியாதுஎனவேதான் வேதம், "பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்துநிற்கின்றார்,    தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என்று கூறுகின்றது.

உங்கள் ஊர்களில் கூட இத்தகைய பெருமையுள்ள மனிதர்களை நீங்கள்  சந்தித்திருக்கலாம்கல்லூரிப் பேராசிரியர்கள்வங்கி  அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பலர் ஏதோ  உலகமே இவர்கள் கைவசம்போல எண்ணிக்கொண்டு  செயல்படுவதை பார்த்திருக்கலாம்இது தவிர, பிரதமர்கள், அமைச்சர்கள்முதலமைச்சராக இருப்பவர்கள்இருந்தவர்கள் இவர்களது பெருமைஅகந்தை இறுமாப்பு  இவைகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

"தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்." ( லுூக்கா 1 : 51 ) என்ற வசனத்தின்படி தேவன் அவர்களைச் சிதறடித்ததனால்  அவர்களில் பலருக்கு ஏற்பட்ட அலங்கோல முடிவுகளையும் நாம் கண்டிருக்கின்றோம்ஆம் தேவன் அகந்தையுள்ளவர்களை எப்போதும்   விட்டுவைக்கமாட்டார்.

அற்பமான உலகப் பதவிகளுக்கே மனிதர்கள் இந்தப்பெருமை  பாராட்டுகிறார்கள்ஆனால் இந்த அண்டசராசரங்களைப்  படைத்த தேவன் எவ்வளவு தாழ்மையுள்ளவராக இருந்தார்  என்பதை நாம் வேதாகமத்தைப் படித்தால் புரியும்தனது  சீடர்களின் பாதங்களைக் கழுவியது ஒரு சிறிய சான்றுஅப்போஸ்தலரான பவுல் அவரதுத் தாழ்மையைக் குறித்துச்  சுருக்கமாகப் பின்வறுமாறு கூறுகின்றார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச்  சமமாயிருப்பதைக் கொள்ளையாடினப் பொருளாய் எண்ணாமல்தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து  மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2 : 6, 7)

அன்பானவர்களேஇப்படி அடிமை நிலைக்குத் தன்னைத்  தாழ்த்தி தாழ்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் தேவன் எப்படிபெருமையுள்ளவர்களை ஆதரிக்கமுடியும்?

வாழ்வில் எவ்வளவோ சம்பாதித்தும் நிம்மதியில்லைசெழிப்பு   இல்லைபிள்ளைகளுடைய வாழ்வு சரியில்லை என்பதுபோன்ற  மனக்கவலைகளுடன் இருக்கும் அன்பானவர்களேஉங்கள்  வாழ்வை எண்ணிப்பாருங்கள்உங்கள் அகந்தையானச்  செயல்களால் யாரையாவது அற்பமாய் எண்ணியிருந்தால்  அல்லது அவர்கள் மனம் நோக்கச் செய்திருந்தால் தேவனிடம்   மன்னிப்பு வேண்டுங்கள். ".....அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும்அவருடைய  வழிகள் நியாயமுமானவைகள்அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த அவராலே ஆகும்." ( தானியேல் 4 : 37 ) அதேபோலத் தாழ்மையுள்ளவர்களை உயர்த்தவும் அவராலே  கூடும்.

ஆம்மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு  அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் (அதாவது, கைகளைச் சேர்த்துக்  குவித்து ஜெபித்தாலும்) அவன் தண்டனைக்குத் தப்பான்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: