நமது பேச்சுக்கள் பதிவுசெய்யப்படுகின்றன

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,161      💚 ஏப்ரல் 14, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருஇவைகளில் நிலைகொண்டிருஇப்படிச் செய்வாயானால்,  உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும்  இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 )

சுமார் இருபத்தியெட்டு ஆண்டுகளுக்குமுன் நான் ஞாயிறு தோறும் கன்னியாகுமரி  அருகிலுள்ள கொட்டாரம் எனும் ஊரிலிருக்கும் .பி.சிசர்ச்  ஆராதனையில் கலந்துகொள்வேன்அங்கு பாஸ்டராக ஜான்சன்டேவிட் ஐயா இருந்தார்கள் (இப்போது இறந்துவிட்டார்). மிகப்  பெரிய தேவ மனிதனாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தார்  அவர்ஒரு மறைவானஆரவாரமில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர். என்னை முதல் முதல் பார்த்தபோதே, அவருக்கு நான் அறிமுகமில்லாதவனாக இருந்தபோதே என்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி என்னைப் பிரமிக்கவைத்தார்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் அவரது பல ஆவிக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். ஒருமுறை அப்படி  அவர் என்னிடம் பேசும்போது அவருக்கு ஆண்டவர்  அளித்தத்  தரிசனத்தைக் குறித்து விளக்கினார்அவர் ஆலயத்தில்போதிக்கும் போதனைகள் அனைத்தும் ஒரு பெரிய  டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாராம். இதனை அவர் பிரசங்கம் செய்யும் அதே நேரத்தில்ஆண்டவர் அவருக்குக் காண்பித்தாராம்அப்போது ஆண்டவர் அவருக்கு மேற்படி வசனத்தை உணர்த்தி, "நீ போதிப்பதில்  கவனமாக இருஎன்றாராம்நாம் பேசும் ஒவ்வொரு பேச்சும்  நியாயத் தீர்ப்பு நாளில் ஆண்டவரால் நினைவுகூரப்படும்  என்பதற்கு இது ஒரு அடையாளம்.

அப்போது நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில்  இருந்தேன். எந்த ஆவிக்குரிய அனுபவங்களும் அப்போது எனக்கு இல்லை. அப்போது பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா என்னிடம், "தம்பி பிற்காலத்தில் நீ ஊழியம் செய்யும்போது இதை  மறந்திடாதே " என்று அறிவுரை கூறினார்அப்போது அப்படி  நான் போதிக்கும் நிலை வரும் என்று நினைத்துப்  பார்த்ததில்லைஆனால் இன்று ஒவ்வொருநாள் வேதாகமச்  செய்தி எழுதும்போதும் இந்த வார்த்தைகள் என்னை  அச்சுறுத்துவனவாகவே உள்ளன. ஆம், நமது செயல்கள், பேச்சுக்கள் அனைத்தையும் தேவன் கவனித்துக்கொண்டிருக்கின்றார். 

அன்பானவர்களேஇது எனக்கு மட்டுமல்லநாம்  அனைவருக்குமே பொருந்தும்கிறிஸ்தவர்கள் நாம்  அனைவருமே கிறிஸ்துவை போதிக்கக் கடமைப்பட்டவர்கள்ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கிறிஸ்துவை  அறிவிக்கின்றோம்அதனால் நமது செயல்பாடுகள் பிறருக்குச் சாட்சியளிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

அந்தியோகியாவில் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த அவரது  சீடர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அவர்களைக்  கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் பணி 11:26). ஆனால் இன்று பலரும் இயேசு கிறிஸ்து அரசியல் கட்சி  துவங்குவதுபோல கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தார் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம்மேற்படி  வசனத்தின்படி சீடர்கள் வாழ்ந்ததால் இந்த வசனத்தின்படி  அவர்களது உபதேசத்தைக் கேட்டவர்களையும் அவர்கள்  இரட்சிப்பு அனுபவத்தினுள் நடத்தினார்கள்அப்படி அந்த மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்களே கிறிஸ்தவர்கள்.

நாமும் இன்று நமது பேச்சு செயல் இவற்றில் எச்சரிக்கையாய் இருப்போம்நமது ஒவ்வொரு பேச்சும் செயலும் தேவனால்  கவனிக்கப்படுகின்றன எனும் அச்ச உணர்வு இருந்தால்  மட்டுமே நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ  முடியும். அவரது நியாயத் தீர்ப்புகள் எதார்த்தமானவை. நியாயத் தீர்ப்புநாளில் நமது வாழ்க்கைச் செயல்பாடுகளை அவர் உணர்த்தும்போது நாம் மறுக்கமுடியாது; அவரை எதிர்த்து நமது தவறுகளை நியாயப்படுத்தி பேசமுடியாது முடியாது. எனவே, அச்ச உணர்வோடு தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ முயலுவோம்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்