ஜோதிடம், ஜாதகம், ராசி பார்த்தல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,152      💚 ஏப்ரல் 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களேஎன்று சொல்லிநீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்." ( எரேமியா 10 : 2 ) 

இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்  கூறிக்கொள்ளும் பலரும்கூட பிற மதத்தவர்களைப்போல  பல்வேறு நியமங்களைப் பார்க்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஊருக்கு நான் சென்றிருந்தபோது அங்கு இருந்த பிரபல ஜோதிட நிலையத்திலிருந்து எனக்குத் தெரிந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவர் வெளிவந்தார். அவரிடம், "என்ன, நீங்க இங்கிருந்து வருகிறீர்கள்?"  என்றேன் ஆச்சரியத்துடன். அவர், "இதுல தப்பு என்னங்க இருக்கு?.....இங்கு வரும் மக்களில் பாதிபேர் கிறிஸ்தவர்கள்தான்" என்றார்.   

தங்களை ஆவிக்குரிய சபை மக்கள் என்று கூறிக்கொள்ளும் பலர்கூட தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் போன்ற  காரியங்களை நடத்தும்போது ராகுகாலம்நல்லநாள்அமாவாசைவளர்பிறை போன்ற காரியங்களைக்  கணக்குப்பார்த்து செயல்களை செய்கின்றனர். "பிள்ளைகளுடைய வாழ்க்கை பார்த்தீர்களா, அதனாலதான்" என்கின்றனர். அதாவது பிற மதத்தினர் செய்யும் இத்தகைய  செயல்கள் மனதளவில் தங்களைப் பாதித்துள்ளது என்பதனை  இவர்கள் இதன்மூலம் அறிக்கையிடுகின்றனர்.

வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களேஎன்று சொல்லிநீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள் என்று சொல்லப்படக் காரணம்நமது தேவன் வல்லமையில் பெரியவர்அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர அவர்  உண்டாக்கின இந்த கிரகங்கள் தனது பிள்ளைகளின்மேல்  ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கமாட்டார். "அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கிபூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்துவானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்." ( எரேமியா 10 : 12 )

எனக்கும் ஜாதகம் கணித்து எழுதி வைத்திருந்தனர். ஆனால் நான் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கைக் கொண்டவனாக இருந்ததால் அதனை பெரிதுபடுத்தவில்லை; அதனைப் படித்துப் பார்த்ததுமில்லை. 1993 ஆம் ஆண்டு நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டபின்னர் வீட்டிலிருந்த அந்த ஜாதக புத்தகத்தை எடுத்து வெளியில் எறிந்துவிட கையில் எடுத்தேன். அப்போது ஒரு சின்ன ஆசை, 'நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம், நமது ராசி என்ன என்பதை ஒருமுறைப் பார்த்துவிட்டு இதனை வெளியில் எறியலாம்' என்று எனினேன். ஆனால், தேவனை எனக்குள் உணர்த்தினார், "எதனையும் பார்க்காதே, அதனை வெளியில் எறிந்துவிடு" என்று.

ஒருவேளை அன்று நான் அதனைப் பார்த்திருப்பேனானால் பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களைப்  பார்க்கும்போது என்னை அறியாமல் எனது ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கின்றது என்று பார்க்க முயலுவேன். இப்போது அந்தத் தொல்லை இல்லை. 

ஆம் அன்பானவர்களே, தேவன்   தனது  பிள்ளைகள்  தன்னை  நோக்கிப் பார்க்கவேண்டுமென  விரும்புவாரேத்   தவிர தான்  உண்டாக்கின பொருட்களை நோக்கிப்பார்க்கவேண்டுமென           விரும்புவதில்லைவானங்களும் அவற்றிலுள்ள அனைத்துமே  தேவனால் படைக்கப்பட்டவைநாம் அவைகளை நோக்கிப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

இந்தியாவின்மிகப்பெரிய ஜோசியர்களை நம்பிஜாதகம் கணித்து, அவர்கள்  கணித்துக் கூறியதைக் கேட்டுப்  பயந்து பல்வேறு  பரிகாரங்களைச் செய்து இறுதியில் அவலமாய் மரித்துப்போன பிரபல தமிழக அரசியல் தலைவரது வாழ்க்கை  நமக்குத் தெரியும்அதே நேரம் இத்தகைய எந்தச் செயல்பாட்டையும் செய்யாமல் தேவனையே நம்பி வாழ்ந்து அமைதியாக மரித்து உலகைவிட்டுக் கடந்து சென்ற பரிசுத்தவான்களையும் நாம் கண்டுள்ளோம்.

"கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லைநீரே பெரியவர்உமது நாமமே வல்லமையில் பெரியது." ( எரேமியா 10 : 6 ) ஆம்நமது தேவனுக்கு ஒப்பானவர் எவருமில்லைஅவரது நாமமே வல்லமையில் பெரியதுஅவரையே நம்புவோம்கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை எந்த  இக்கட்டிலிருந்தும் விடுவிப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்