முற்றிலும் தேவனையே சார்ந்து வாழவேண்டும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,173    💚 ஏப்ரல் 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பிஇஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது."(1 நாளாகமம் 21 : 1)

தேவன் தனது மக்கள் தங்கள் சுய பெலத்தையோ தங்களது  செல்வத் திரட்சியையோ நம்பி வாழாமல் தன்னையே முற்றிலும் நம்பி தன்னையே சார்ந்து வாழவேண்டும் என விரும்புகின்றார்அப்படி வாழ்ந்தவர்தான் தாவீதுஅதுதான் அவரது வளர்ச்சிக்குக்காரணம்ஆனால் இப்போது தாவீதுக்கு ஒரு விபரீதமான  ஆசை சாத்தானால் ஏற்படுகின்றதுராஜாவாகிய தனது கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஒரு ஆசை.  இதற்கு  இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்ஒன்று தனக்குக்கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதில் ஒரு  அற்பப்பெருமை எண்ணம்இரண்டாவது எதிரிகள் போரிட்டு   வருவார்களென்றால் போருக்குப் போகத்தக்க மக்கள் தன்னிடம் எவ்வளவுபேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவது.

தனது வாழ்வின் துவக்கமுதல் தேவனையே சார்ந்து  வாழ்ந்தவர்தான் தாவீதுஆடுகளுக்குப் பின்னாகத்திரிந்த ஒரு ஆட்டு இடையன்ஆனால் அவரைத் தேவன் ராஜாவாக உயர்த்தி இஸ்ரவேல்மீதும் யூதாவின் மீதும் ஆட்சிசெய்யவைத்தார். ஆனால், தாவீது இங்கு தனது பழைய விசுவாச நிலையிலிருந்து சற்று பின்வாங்கிவிட்டார்எந்த ஒரு ஆயுதமும் கையில்  இல்லாமல் ஒரு கூழாங்கல்லால் மட்டுமே   கோலியாத்தை  வெற்றிகொள்ள தேவன் தனக்குத் துணைநின்றதை அவர்  இப்போது மறந்துவிட்டார்ஆனால் இன்று தனது பலத்தை அறிய தனது  மக்களை எண்ணிக் கணக்கிடத் துணிந்துவிட்டார்அதாவது  தேவன்மேல் இருந்த பழைய விசுவாசம் அவருக்குக்  குறைந்துவிட்டதுஇது தேவனது பார்வைக்கு ஆகாத ஒரு  செயலாகி விட்டது.

முன்புஅவர் தனது சுய பலத்தை நம்பாமல் தேவனையே நம்பி கோலியாத்தைஎதிர்த்தார்."நீ பட்டயத்தோடும்ஈட்டியோடும்கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்நானோ நீ நிந்தித்த  இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய  சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில்  வருகிறேன்." ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு கோலியாத்தைக் கொன்றார்

எனவே மக்களைக் கணக்கிடும்படி தாவீது செய்த "இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்." ( 1 நாளாகமம் 21 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர்கள் செய்யும் தேவனுக்கு விரோதமானச்  செயல்களை மக்களையும் பாதிக்கும் என்பது இங்கு உணர்த்தப் படுகின்றதுஎனவே தகுந்த ஆட்சியாளர்களைத் தேர்வு  செய்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

அன்பானவர்களேதேவன் நமது வாழ்வில் பல அற்புதங்கள்  செய்திருக்கலாம்அதிசயமாக நம்மை வழிநடத்தியிருக்கலாம் ஆனால் அப்போது நாம் நமது விசுவாசத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று நம்மை நாமே சோதித்து அறியவேண்டியது அவசியம்தேவன்நாம் அவரையே சார்ந்து வாழவேண்டுமென விரும்புகின்றார்நம்மைச் சுற்றியுள்ள  சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நாம் விசுவாசத்தைவிட்டு  நழுவி விடுவோம்

எனவே சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்க்கவேண்டும்ஒருவேளை  சூழ்நிலையை மாற்றாவிட்டால் சூழ்நிலைக்கேற்ப நம்மை  மாற்றுவார்இது நம்மைப்பார்க்கும் மற்றவர்களுக்கு அதிசயம்போலத் தெரியும்.

எனவே நூறு சதம் தேவனையே நம்பிவாழும் விசுவாச  வரம்வேண்டி தேவனிடம் மன்றாடவேண்டியது நமது கடமைஅதுவே மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனித்துவம்  மிக்கவர்களாக அடையாளம் காட்டும்தேவன்மீது மற்றவர்களும் விசுவாசம்கொள்ள இதுவே வழியாக இருக்கும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்