இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள்.

ஆதவன் 🌞 799🌻 ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை









"நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்." ( யோவான் 8 : 24 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இயேசு கிறிஸ்துவின் கோபத்தின் வார்த்தைகளாக இருக்கின்றதுஅதாவது பாவங்களை மன்னிக்க பலி பொருளாக பிதாவினால் அனுப்பப்பட்டு உலகினில் வந்துள்ள தன்னை விசுவாசிக்காவிட்டால் பாவங்களிலே சாவீர்கள் என்று யூதர்களைப் பார்த்து இயேசு கடுமையாகக் கூறுகின்றார்.

தானே உலகத்தில் வரவிருப்பதாக தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களுக்கு அவர் தனது வல்லமையான பல செய்கைகளினால் மெய்ப்பித்திருந்தார்ஆனால் யூதர்கள் அவரை விசுவாசிக்கவில்லைவிசுவாசியாத யூதர்களை பார்த்துதான் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறினார்.

இயேசு எனும் பெயருக்கு இரட்சகர் என்றுதான் பொருள்மக்களது பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்கவே அவர் மனிதனாக உலகினில் வந்தார்புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தமே இதுதான். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ( மத்தேயு 1 : 21 )

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது உடல் மரணத்தையல்லஆத்தும மரணத்தைப் பற்றியேஉலகினில் பிறந்த அனைவருமே ஒருநாளில் இறந்துதான் ஆகவேண்டும்எனவே இயேசு இங்கு உடல் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவுபாவத்தை மன்னிக்க அதிகாரம் படைத்தத் தன்னை யூதர்கள் விசுவாசிக்காததால் இயேசு கோபத்தில், "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்என்று கூறினார்.

அன்பானவர்களேநாம் இன்று இயேசு கிறிஸ்துவை எதற்காக விசுவாசிக்கின்றோம் என்று நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளதுவெறும் உலக ஆசீர்வாதங்களுக்காநமது பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண்பதற்காநமது நோய்களை குணமாக்குவதற்கா?

பாவத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனும் ஆவலில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தை பெறுவோம்யூதர்களைப்போல வெறும் அதிசயம் அற்புதங்களை மட்டும் அவரிடம் எதிர்பார்த்து வருவோமானால் அவரது இரக்கத்தால் ஒருவேளை அதிசயங்களை பெற்றாலும் நமது ஆத்துமா மன்னிப்பின்றி அழிவையே சந்திக்கும்.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்போது தான் நாம் தேவனை அறிய முடியும்ஆம் நமது பாவங்கள் தேவனை நாம்  அறிய  முடியாதபடி  நமக்கும்  தேவனுக்கும்  நடுவாக  தடுப்புச்  சுவராக உள்ளதுஇயேசு கிறிஸ்துதான் அந்தப் பாவஅடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும்நமது சுய பலத்தால் அது முடியாதுஅவருக்கு  நம்மை  ஒப்புக்கொடுப்போம்.  ஆண்டவரேஇந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து உமது இரத்தத்தால் என்னைக் கழுவி இரட்சிப்பை எனக்குத் தந்தருளும் என வேண்டுவோம்.

 "குமாரன் (இயேசுஉங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 


Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்