தியானம் - 2012
உலகினில் சில காரியங்கள் கடைபிடிக்க எளியவை. சில கடினமானவை. ஆனால் மக்கள் பலரும் எளிதான காரியங்களையே செய்ய விரும்புகின்றனர். ஆவிக்குரிய காரியங்களிலும் இப்படியே பெரும்பாலான மக்கள் செய்ய விரும்புகின்றனர்.
ஜெபம் செய்வது எளிது, வேதாகமத்தை வாசிப்பது எளிது, காணிக்கைக்கொடுப்பது எளிது, ஜெபக்கூட்டங்களிலும் ஆலய ஆராதனைகளிலும் கலந்துகொள்வது எளிது. எனவே இவைகளைப் பலரும் செய்து தங்களை ஆவிக்குரிய வாழ்வு வாழ்வதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவையும் குமானையும் அன்புசெய்வதே மேலானது என்றும் அப்படி அன்புசெய்யும்போது தாங்கள் அத்தகைய மனிதர்களிடம் வந்து குடிகொள்வதாகக் கூறுகின்றார்.
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான் என்று இயேசு கிறிஸ்து கூறுவது, சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்வதே அவரிடம் அன்பாயிருப்பதாகும். "இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்" என்று வாயினால் கூறுவதல்ல அன்பு, முதலில் நமது வாழ்க்கையால் அதனைக் கூற நாம் முயலவேண்டும்.
நாம் இயேசு கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்ளும்போது நம் உண்மையிலேயே அவரது சீடர்களாக இருப்போம். எனவேதான் "இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்' ( யோவான் 8 : 31 ) என்றார். இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள் இருந்தனர். நாம் அவரது வசனத்தைக் கைக்கொள்ளும்போது அவரது பதின்மூன்றாவது சீடராக மாறுகின்றோம். இது எவ்வளவு மேன்மையான காரியம் என்று எண்ணிப்பாருங்கள்!!
மட்டுமல்ல, "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படி அவரது வசனத்தை நாம் கைக்கொள்ளும்போது நாம் கனிகொடுப்பவர்களாக மறுக்கின்றோம். அப்படி நாம் கனிகொடுப்பதனால் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார்; எனவே அவர் நம்மேல் அன்பாயிருப்பார்.
ஆனால், கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்வது சற்றுக் கடினமான காரியம். அது சிலுவை சுமக்கும் அனுபவம்; அது தன்னையே வெறுக்கும் அனுபவம். "பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" ( மாற்கு 8 : 34 ) என்று கூறவில்லையா?
ஆம் அன்பானவர்களே, நல்லது செய்யுமுன் நாம் நல்லவர்களாக இருக்கவேண்டியது அவசியம். காணிக்கைக் கொடுப்பது, உபவாசிப்பது, வேதாகமத்தை வாசிப்பது, ஜெபிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது போன்றவை நல்ல செயல்கள்தான். ஆனால் வாழ்க்கை மாற்றமில்லாமல் இவைகளைச் செய்வது வீண். எனவேதான் இயேசு கிறிஸ்து இவைகளை மேன்மையாகக் கூறாமல், "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல" ( மத்தேயு 10 : 38 ) என்று சாட்சி வாழ்கையினையே மேலானதாகக் கூறினார்.
ஆம், வாழ்க்கையில் சாட்சியுடன் விளங்குவதே தேவன் விரும்புவது. நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருந்தால் அவரது வசனத்தைக் கைக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது நம்மிடம் பிதாவாகிய தேவன் அன்பாயிருப்பார்; பிதாவும் குமாரனாகிய கிறிஸ்துவும் நம்மிடம் வந்து தங்கி நம்மை மகிமைப்படுத்துவார்கள்.
"நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல."( 1 யோவான் 5 : 3 )
Meditation – 2012
"AATHAVAN" –
August 12 Wednesday, 2026
"Jesus answered and
said unto him, If a man love me, he will keep my words: and my Father will love
him, and we will come unto him, and make our abode with him." (John 14:23)
In this world, some things
are easy to follow, while others are difficult. Most people prefer to do the
easy things. Even in spiritual matters, the majority desire to do the same.
It is easy to pray, easy to
read the Bible, easy to give offerings, and easy to attend prayer meetings and
church services. Therefore, many do these things and consider themselves to be
living a spiritual life. However, our Lord Jesus Christ states that loving the
Father and the Son is what is superior, and when we love Him in this way, They
will come and abide with such a person.
When Jesus Christ says,
"If a man love me, he will keep my words," He refers to living a life
of testimony. Yes, beloved, keeping Christ's word is what it truly means to
love Him. Love is not merely saying with our mouth, "Jesus, I love You";
we must first strive to demonstrate it through our lives.
When we keep the words of
Jesus Christ, we are truly His disciples. That is why "Then said Jesus to
those Jews which believed on him, If ye continue in my word, then are ye my
disciples indeed" (John 8:31). Jesus Christ had twelve disciples. When we
keep His word, we become His thirteenth disciple. Consider how glorious a
privilege this is!
Furthermore, Jesus Christ
said, "Herein is my Father glorified, that ye bear much fruit; so shall ye
be my disciples" (John 15:8). When we keep His word, we are transformed
into fruit-bearers. By bearing fruit, God the Father is glorified, and therefore
He will love us.
However, keeping the word of
Christ is a somewhat difficult thing. It is an experience of bearing the cross;
it is an experience of denying oneself. Did He not say, "And when he had
called the people unto him with his disciples also, he said unto them,
Whosoever will come after me, let him deny himself, and take up his cross, and
follow me" (Mark 8:34)?
Yes, beloved, before doing
good, it is essential that we first be good. Giving offerings, fasting, reading
the Bible, praying, and attending prayer meetings are indeed good deeds. But
doing these without a transformed life is in vain. That is why Jesus Christ did
not exalt these above all else, but emphasized a life of testimony as superior,
saying, "And he that taketh not his cross, and followeth after me, is not
worthy of me" (Matthew 10:38).
Yes, living with a clear
witness in life is what God desires. If we love Christ, it is necessary to keep
His word. Then God the Father will love us; the Father and the Son, Christ,
will come to abide with us and glorify us.
“For this is the love of
God, that we keep his commandments: and his commandments are not grievous.” (1 John
5: 3)

No comments:
Post a Comment