Friday, August 07, 2026

🦋 Meditation verse - எசேக்கியேல் 20 : 44 / Ezekiel 20:44

 தியானம் - 2009

"ஆதவன்"ஆகஸ்ட் 09 ஞாயிறு 2026


"இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்". ( எசேக்கியேல் 20 : 44 )
 
இன்றைய தியான வசனம் தேவனது வித்தியாசமான இரக்கத்தைத் தெளிவுபடுத்தும்  வார்த்தைகளைக் கூறுகின்றது.  உங்களது கெட்டச் செயல்களுக்கும் பொல்லாத வழிகளுக்கும் ஏற்றபடி நான் உங்களைத் தண்டிப்பேன் என்று கூறாமல், உங்களுக்கு நான் கிருபை செய்வேன்; அப்போது நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள் என்கின்றார் தேவன்.  

ஒரு வகுப்பின் ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து, "நான் உங்களை நீங்கள் படிக்காமல் இருந்தாலும், நீங்கள் வீட்டுப்படங்களை ஒழுங்காக முடிக்காமல் வந்தாலும், பாடங்களுக்கு மதிப்பெண் குறைவாக எடுத்தாலும், நீங்கள் ஒழுங்கீனமாக நடந்தாலும் உங்களைத் தண்டிக்கமாட்டேன்; அதனால் நீங்கள் என்னை நல்ல ஆசிரியர் என்று உணர்ந்துகொள்வீர்கள்" என்று கூறுவதுபோல இருக்கின்றது தேவனது வார்த்தைகள். 

ஆம் அன்பானவர்களே, நமது தேவனது இரக்கத்தை இந்த வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தேவன் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசிக்கின்றார். எனவேதான் எப்படியாவது அவர்கள் மனம் திரும்பவேண்டுமென்று அவர் விரும்புவதால் இப்படி கிருபையுடன் இரங்குகின்றார். எனவே "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 ) இப்படி அவர் இரங்கியதால்தான் தாவீது அவரைப் புகழ்ந்து சங்கீதம் பாடினார்; பவுல் அப்போஸ்தலர் மீட்கப்பட்டார். 

பவுல் கிறிஸ்துவின் பெயரால் பிரசங்கிக்கும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொலைசெய்யவும், சபைகளை பாழாக்கவும் செய்தார். ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது அதற்குப் பவுல் எனும் சவுல் உடன்பட்டிருந்தார். ஆனால் இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, தேவன் அவரது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும்,  கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் பதில் செய்யாமல், அவருக்குக்  கிருபைசெய்தார். 

நம்மில் யாரும் தேவனுக்குமுன் தூய்மையானவர்களோ பரிசுத்தர்களோ அல்ல. ஆனால் நாம் அனைவரும் அவரது கிருபையால் நிலைநிற்கின்றோம். எனவேதான் சங்கீத ஆசிரியர், "கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான்,  ஆண்டவரே" ( சங்கீதம் 130 : 3 ) என்கின்றார். 

இதனையே அப்போஸ்தலரான பவுலும், "அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2 : 3-5 ) என்று கூறுகின்றார். 

நாம் முதலில் பார்த்த ஆசிரியர் கூறுவது வேடிக்கைப்போல தெரிந்தாலும் இத்தகைய ஆசிரியர்களால் பல மாணவர்கள் நல்லவர்களாக வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆசிரியர்களின் கண்டிப்புக்குப் பயந்து பல மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் செய்வதுண்டு. ஆனால் இத்தகைய குணமுள்ள ஆசிரியர்களை மாணவர்கள் தங்களது பிற்காலத்தில் பாராட்டுவதுண்டு. ஆம், தண்டனைகளால் திருத்த முடியாதவர்களை அன்பினால் திருத்த முடியும். இதனையே நமது தேவனும் செய்கின்றார். 

அவர் நமது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் செய்யாமல், நமக்குக் கிருபை செய்ததால்தான் நாம் நிலைத்திருக்கின்றோம்.  "கர்த்தாவே, நீர் எனது அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், நான் எப்படி நிலைநிற்பேன் ஆண்டவரே" என்று நமது பழைய பாவங்களை உணர்ந்து அவருக்கு நன்றிசொல்லி நன்றியுணர்வுடன் வாழ்வோம்.  
 
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2009

"AATHAVAN" – August 09, Sunday, 2026

"And ye shall know that I am the LORD, when I have wrought with you for my name's sake, not according to your wicked ways, nor according to your corrupt doings, O ye house of Israel, saith the Lord GOD." (Ezekiel 20:44)

Today's meditation scripture presents words that clearly illustrate God's unique mercy. Instead of saying, "I will punish you according to your corrupt doings and wicked ways," God says, "I will extend grace to you; then you will know Me."

God’s words sound like a classroom teacher telling students: "Even if you do not study, even if you come without completing your homework, even if you score low marks, and even if you act disorderly, I will not punish you; thereby you will realize that I am a good teacher."

Yes, beloved, this verse brings home the magnitude of our God's mercy. Though God hates sin, He loves the sinner. That is why He longs for them to repent in whatever way possible and shows such gracious mercy. Therefore:

"He hath not dealt with us after our sins; nor rewarded us according to our iniquities." (Psalm 103:10)

It was because He showed such mercy that David sang praises to Him in the Psalms, and the Apostle Paul was redeemed.

Paul arrested those who preached in the name of Christ, executed them, and laid waste to churches. When Stephen was stoned to death, Saul (who became Paul) consented to it. Yet, as today's meditation scripture says, God did not deal with him according to his wicked ways or corrupt doings; instead, He showed him grace.

None of us are pure or holy before God. We all stand only by His grace. That is why the Psalmist says:

"If thou, LORD, shouldest mark iniquities, O Lord, who shall stand?" (Psalm 130:3)

The Apostle Paul affirms this very truth:

"Among whom also we all had our conversation in times past in the lusts of our flesh, fulfilling the desires of the flesh and of the mind; and were by nature the children of wrath, even as others. But God, who is rich in mercy, for his great love wherewith he loved us, even when we were dead in sins, hath quickened us together with Christ, (by grace ye are saved;)" (Ephesians 2:3-5)

Though what the teacher said earlier might sound strange, there is a strong possibility that many students could become good individuals through such a teacher. Generally, many students drop out of school out of fear of strict discipline. However, students often express deep appreciation for teachers with this kind of heart later in life. Yes, those who cannot be reformed by punishment can be transformed by love. This is precisely what our God does.

We endure and stand today because He has not dealt with us according to our wicked ways and corrupt doings, but has bestowed His grace upon us. Let us acknowledge our past sins, saying, "Lord, if You should mark my iniquities, how could I stand, O Lord?" and live a life filled with heartfelt gratitude to Him.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எசேக்கியேல் 20 : 44 / Ezekiel 20:44

  தியானம் - 2009 " ஆதவன் " ஆகஸ்ட் 09  ஞாயிறு 2026 "இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட ...