Friday, August 21, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 119 : 71 / Psalm 119:71

 தியானம் - 2023

"ஆதவன்" ஆகஸ்ட் 23  ஞாயிறு 2026


"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் நல்லவை என்று யாரும் கூறமாட்டார்கள். பொதுவாக நாம் எல்லா காரியங்களிலும் உபத்திரவப்படாமல் எளிதாக எதையும் அடைந்திடவே விரும்புவோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. உபத்திரவங்கள் மூலமே நாம் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப்  பெறுகின்றோம். தற்போது நாம்  உபத்திரவப்படுவதுபோலத் தெரிந்தாலும் பிற்காலத்தில் சங்கீத ஆசிரியர் கூறுவதுபோல நாமும், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்று கூறுவோம். 

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். தேர்வுபோன்ற சோதனைகள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் முன்னேற உதவுகின்றன. 

நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவந்த உடனேயே என்னோடு பயின்ற மாணவர்கள் பலரும், எனது ஊரில் என்வயதுடைய பலரும் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அது அப்போது எனக்கு மிகப்பெரிய துன்பமாகத் தெரிந்தது. சோர்ந்துபோய், மனம் வெறுத்துப் போயிருந்தேன். தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதுகூடப் பிடிக்கவில்லை.  கவலையுடன் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். ஆனால், அந்தச் சூழல்தான் நான் தேவனை அறிய உதவியது. பின்னர் நான் கூறினேன், "எனக்கு உலகவேலை கிடைக்காமல் போனது நல்லது, கிடைத்திருந்தால் நான் தேவனை அறிந்திருக்கமாட்டேன்." ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது நன்மைக்காகத் தேவன் இப்படி நம்மை உபத்திரவத்தின் பாதையில் நடத்துவார். 

இப்படி தேவன் நம்மை உபத்திரவப்படுத்துவது நமது  நன்மைக்கே. இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவேதான்  அப்படி நான் உபாத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2023

"AATHAVAN" — August 23

Sunday, 2026

"It is good for me that I have been afflicted; that I might learn thy statutes." — Psalm 119:71

No one would say that afflictions are good. Generally, we desire to attain everything easily without suffering through anything. But spiritual life is not like that. It is through afflictions that we receive higher spiritual experiences. Even if it seems right now that we are suffering, in the future, like the Psalmist, we too will say, "It is good for me that I have been afflicted."

In schools and colleges, examinations are conducted for students. Exams are a test—a test to determine whether a student is eligible to proceed to higher studies. When we undergo a test, we advance to the next stage of life. Furthermore, when these exams bring us to the next level, our joy increases. Tests like examinations help us progress more and more in our spiritual life.

Immediately after I graduated from college, many students who studied with me and many people of my age in my hometown joined good jobs and started earning. But I did not get any job. That seemed like a huge distress to me at the time. I was discouraged and heart-broken. I did not even like going to functions at the homes of acquaintances or relatives. I stayed shut inside my house with sorrow. However, it was that very situation that helped me know God. Later I said, "It is good that I did not get a worldly job; if I had gotten one, I would not have known God." Yes, beloved, sometimes God leads us on the path of affliction for our own good.

God bringing us through affliction in this manner is for our benefit. This is why the devotee Job also says, "When he hath tried me, I shall come forth as gold." (Job 23:10) Gold extracted from a gold mine initially looks like ordinary dirt. It is put into the fire and melted to be converted into gold. We do not know the path of suffering that the beautiful, shining gold ornaments in jewellery shops have passed through. They are refined in fire, beaten, and bent to be shaped into jewellery. Only then do they shine beautifully in jewellery shops to attract onlookers.

In our spiritual life as well, if we are to become suitable and acceptable to God, it is essential to overcome the tests God gives us. That is why the Apostle James says:

"Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him." — James 1:12

Realizing this, the Psalmist says, "It is good for me that I have been afflicted; that I might learn thy statutes." We learn the methods of obeying God's statutes—that is, His commandments—through afflictions. That is why this Psalmist says that it was good that he was afflicted.

It is natural for us to be caught in troubles and sorrows. But instead of being discouraged by troubles like others, we should try to understand the messages God gives us through those troubles. We must try to correct our life's paths. Yes, it is good for us to be afflicted, so that we learn God's statutes.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 14 : 9 / Hosea 14:9

  தியானம் - 2024 " ஆதவன் " ஆகஸ்ட் 24   திங்கள் 2026 "இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன...