Thursday, July 06, 2023

தூக்க நிலையிலிருந்து எழும்பவேண்டும்/ Rise from sleep

ஆதவன் 🔥 894🌻 ஜூலை 10, 2023 திங்கள்கிழமை



"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." (எபேசியர் 5:14)



இன்றைய வசனத்தில் தூக்கம், மரித்தோர் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆவிக்குரிய தூக்கத்தையும் ஆவிக்குரிய மரணத்தையும் குறிப்பனவாக உள்ளன. 

தேவனை அறியவேண்டுமென்ற ஆர்வமில்லாமல் ஏனோதானோ என்று எல்லோரும் வாழ்வதுபோன்ற ஒரு வாழ்வு வாழ்ந்துகொண்டு குறிப்பிட்ட நாளில்மட்டும் ஆராதனைகளில் கலந்துகொண்டு, கடமைக்காக வேதாகமத்தில் சில பகுதிகளை அவ்வப்போது வாசித்துக்கொண்டு, எந்தவித ஆவிக்குரிய உணர்வோ இல்லாமல் வாழும் வாழ்க்கை ஆவிக்குரிய தூக்க வாழ்க்கை. 

உலக மனிதர்கள் செய்யும் அனைத்து அவலட்சணமான பாவ காரியங்களையும் செய்து  தேவனைப்பற்றிய எண்ணமோ அச்சமோ இல்லாமல் வாழும் வாழ்க்கை மரித்துப்போன வாழ்க்கை. இப்படி மரித்துப்போன மனிதர்கள் செய்யும் பாவ காரியங்களை  வெளியில் சொல்லுவதும்  அவலட்சணமாய் இருக்கிறது என்கிறார் பவுல் அடிகள். "அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே." எபேசியர் 5:12)

நாம் ஆவிக்குரிய தூக்கம் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் தேவனது பார்வையில் மரித்தவர்களே. எனவேதான்,  "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" என்று கூறப்பட்டுள்ளது. மரித்தவன் உணர்வற்றுக் கிடப்பதுபோலக் கிடக்காதே எழுந்திரு என்று தேவன் கூறுகின்றார். 

இன்று ஆவிக்குரிய தூக்கத்தில் வாழும் பலர் தங்களது மேலெழுந்தவாரியான பக்திச்  செயல்பாடுகளை பெரிதாகக் கருதுகின்றனர். எனவே, வாழ்வில் ஏதாவது துன்பமோ, பிரச்சனையோ வரும்போது, "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், கோயில்களுக்குப் போகிறேன், வேதாகமத்தை வாசிக்கிறேன்...எனக்கு ஏன் இந்தக் கஷ்டங்கள் .....ஆண்டவருக்குக் கண்ணில்லையா?" என்பார்கள். 

அன்பானவர்களே, முதலில் நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியுள்ளது என்று நிதானித்து அறியவேண்டும். தூங்கிக்கொண்டிருப்போமானால் தூக்க நிலையிலிருந்து எழும்பவேண்டும். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்று இன்றைய வசனம் சொல்கிறது. ஆம், நாம் பிரகாசிக்கப்பட வேண்டுமானால்   முதலில் நமது தூக்கத்திலிருந்தும், மரித்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தால் உயிர்பெற்றவர்களாக மாறி எழும்பவேண்டியதும் அவசியம். அப்போது நாம் பிரகாசமடைவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                     

                                                    RISE FROM SLEEP

AATHAVAN 🔥 894🌻 July 10, 2023 Monday

"Awake therefore, thou that sleepest, and arise from the dead, and Christ shall give thee light." (Ephesians 5:14)

In today's verse the words 'sleep' and 'dead' are used. These are symbolic of spiritual sleep and spiritual death.

A life of spiritual slumber is a life where one lives a life without any interest in knowing God, attends services only on certain days, reads some parts of the Bible for duty, and lives without any spiritual feeling.

A life that lives without any thought or fear of God, doing all the wretched sinful things that worldly men do, is a dead life. Paul says that it is shameful to speak out about the sins committed by dead people. " For it is shameful even to speak of those things which are done by them in secret" (Ephesians 5:12)

If we live in spiritual sleep, we are dead in God's view. That is why it is said, "Awake thou that sleepest, and arise from the dead." God says do not lie down like a dead person, get up.

Many who live in spiritual slumber today take their superficial devotional activities too seriously. So, when there is any trouble or problem in life they will murmur, “I am praying too much, go to temples, read the scriptures...why do I have these difficulties.....does the Lord not see?"

Beloved, first of all we need to take stock of our spiritual life. If you are sleeping, you should wake up from sleep. "Then Christ has said that he will make you shine." Today's verse says that. Yes, if we are to be enlightened, we must first rise from our sleep, and if we are dead, we must rise again. Then we will shine.

God's message:- ✍️ Brother. M. Geo Prakash             

                                                                           

விசுவாசத்தைக் காத்திடப் போராடுவோம்/ Fight for Faith

ஆதவன் 🔥 893🌻 ஜூலை 09, 2023 ஞாயிற்றுக்கிழமை


"விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்" ( 1 தீமோத்தேயு 6 : 12 )




நாம் ஒவ்வொருவரும் நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வைப் பெறவே அழைக்கப்பட்டுள்ளோம். அந்த நித்தியஜீவனைப் பெறவேண்டுமானால் நாம் விசுவாசத்தில் நிலைநிற்கவேண்டியது அவசியம். ஆனால், இந்த உலகத்தில் நமது விசுவாசத்தைக் குலைத்திடப்  பல்வேறு தடைகள் நம்மை எதிர்கொள்ளும். நாம் அவைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெறவேண்டும். இதனையே தனது சீடனான தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலரான பவுல் அறிவுரையாகக் கூறுகின்றார்.  

இப்படி விசுவாசத்தைவிட்டு நம்மை வழுவச்செய்யும் முக்கியமான காரணம் பண ஆசை அல்லது பொருளாசை.  எனவேதான் பவுல் அடிகள் இதன் முந்தய வசனங்களில் கூறுகின்றார், "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

பண ஆசை கொண்டு அலைவது தங்களைத் தாங்களே கத்தியால் குத்திக்கொள்வதுபோன்றது. தற்கொலை செய்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். நித்திய ஜீவனுக்கு நேராகச் செல்வதைவிட்டு நாம் தவறான பாதையில் செல்வது ஆத்தும மரணத்தையே கொண்டு வரும். எனவேதான் பவுல் அப்போஸ்தலர் இதனைத் தங்களைத் தாங்களே குத்திக்கொள்வதற்கு ஒப்பிடுகின்றார். 

பணத்தைத் தேடி அலைவதைவிட்டு நித்தியஜீவனுக்கு நேராக நாம் செல்லவேண்டும். நாம் ஏற்கெனவே முந்திய தியானங்களில் பணம் சம்பாதிப்பதற்கும் பண ஆசைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தியானித்துளோம். பண வெறியைவிட்டு நாம் நித்திய ஜீவனை அடைந்திட முயலவேண்டும். இதனையே அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதுகின்றார். "நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு." ( 1 தீமோத்தேயு 6 : 11)

நீதி, தேவபக்தி,  விசுவாசம்,  அன்பு,  பொறுமை,  சாந்தகுணம் இவையே நித்தியஜீவனுக்கு நேராக நம்மை நடத்தும் பண்புகள்.  இவைகளை அடையும்படியே நாம் முன்னுரிமை கொடுத்து முயலவேண்டும். மேலும், படிப்பு, உழைப்பு பற்றி நமது குழந்தைகளுக்குப் போதிப்பதுபோல இந்தக் குணங்களையும் தேவன்மேலுள்ள விசுவாசத்தையும் அவர்களில் வளர்க்க நாம் முயலவேண்டும்.  

நமது முன்மாதிரியான வாழ்க்கையும் முக்கியம். நமது விசுவாச வாழ்வு நமது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அமையும். ஆம், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி  நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதனை மறந்திடாமல் நமது விசுவாசத்தைக் காத்திடத் துணிவுடன் போராடுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712          

                                Fight for Faith 

AATHAVAN 🔥 893🌻 July 09, 2023 Sunday

“Fight the good fight of faith, lay hold on eternal life, whereunto thou art also called, and hast professed a good profession before many witnesses.” ( 1 Timothy 6 : 12 )

Each of us is called to receive eternal life. If we are to receive that eternal life, we must stand in the faith. But in this world, we face various obstacles that can shake our faith. We must fight against them and win. This is what the apostle Paul advises his disciple Timothy.

The main reason that makes us slip away from faith is the desire for money or materialism. That is why Paul says in the preceding verses, "“For the love of money is the root of all evil: which while some coveted after, they have erred from the faith, and pierced themselves through with many sorrows.” ( 1 Timothy 6 : 10 )                                                                                                              

Wandering around with the desire for money is like stabbing yourself with a knife. This is what suicidal people do. If we take the wrong path instead of going straight to eternal life, it will lead to soul death. That is why the apostle Paul likens it to stabbing themselves.

We must stop chasing after money and go straight to eternal life. We have already meditated on the differences between earning money and desire for money in previous meditations. We should try to get rid of money obsession and attain eternal life. This is what the apostle Paul continues to write. "But thou, O man of God, flee these things; and follow after righteousness, godliness, faith, love, patience, meekness.” ( 1 Timothy 6 : 11 )

Righteousness, godliness, faith, love, patience, and meekness are the qualities that lead us straight to eternal life. We should prioritize and try to achieve these. Also, as we teach our children about study and work, we should try to develop these qualities and faith in God in them.

Our role models are also important. Our lives of faith set an example for our children. Yes, let us fight boldly to guard our faith without forgetting that we are called to fight the good fight of faith and lay hold on eternal life.

God's message:- ✍️ Brother. M. Geo Prakash                                                                                                  

Wednesday, July 05, 2023

மதவாதிகளா, ஆன்மீகவாதிகளா?/ Religious or spiritual?

ஆதவன் 🔥 892🌻 ஜூலை 08, 2023 சனிக்கிழமை

".......எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )



தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் நாங்கள்தான் என்று யூதர்களுக்கு ஒரு பெருமை இருந்தது. தாங்களே தேவனுக்குப் பிரியமான மக்கள் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணிக்கொண்டனர். இதனைத் தவறு என்று பேதுருவுக்கு அவரை கொர்நேலியுவிடம் அனுப்புமுன் தேவன் அவருக்குத் தெளிவுபடுத்தினார்.   தேவனுக்கு யாரையும் சுத்தமாக்க முடியும் எனவே எவரையும் நீ தீட்டாக எண்ணாதே என்று விளக்கினார் தேவன்.  "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 15 )

இதனை உணர்ந்துகொண்டபின்பு, ".......எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 ) என்கிறார் பேதுரு.

இந்த நிலைமைதான் இன்றும்  கிறிஸ்தவத்தில் தொடருகின்றது. ஒவ்வொரு சபைப்பிரிவும் மற்றவர்களை 
அசுத்தமானவையாகவும்   தீட்டானவைகளாகவுமே பார்க்கின்றன. ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்று கூட்டங்களில் பேசும் குருக்கள், ஊழியர்கள்  தனிப்பட்டமுறையில் மதவெறியர்களாகவும் ஜாதி வெறியர்களாகவும், மொழி வெறியர்களாகவும்  இருக்கின்றனர்.  கிறிஸ்துவைப்போல பிறரை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனநிலை இவர்களுக்கு இல்லை.  

இதுவே கிறிஸ்தவத்தின் சாபக்கேடு. கசப்பான இந்த மனநிலை இருக்கும் எவரும் கிறிஸ்துவை அறியமுடியாது அவரது மீட்பு அனுபவத்தையும் பெறமுடியாது.  இதனையே பேதுருவுக்கு அன்று  உணர்த்திய தேவன் இன்று  நமக்கும் உணர்த்துகின்றார்.  

எனவே, மன ஒருமைப்பாட்டுடன் நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அவரை அறிவிக்கவேண்டும்.  யாரையும் அற்பமாகவோ, வேண்டாதவர்களாகவோ நாம் எண்ணிவிடக்கூடாது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று கூறுகின்றார். எந்த மனிதனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்த நாம் முயலவேண்டுமேயல்லாமல் மதவெறிகொண்டு அலையக்கூடாது.

மேலும், இன்று கிறிஸ்தவர்களுக்கிடையேயுள்ள பிரிவினை தவிர மற்றவர்களால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், அடக்குமுறைகள் எல்லாவற்றையும் தேவன் அறிவார். ஆனால், இவர்களுக்கு மனம்திரும்ப அவகாசம் கொடுப்போம் என்று தேவன் அவர்களுக்கு அவகாசம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.  அதனால் பிற்காலத்தில்  ஒருவேளை இவர்கள் மனம்திரும்பலாம். எனவே ஒருவரையும், ஒரு சபைப் பிரிவினரையும்  தீட்டானவர்கள் அசுத்தமானவர்கள் என்று நாம் ஒதுக்கவேண்டாம். தற்போது என்னிடம் நெருக்கமாக இருப்பவரும், தேவனுக்கென்று வைராக்கியமாக ஊழியம் செய்து வருபவருமான இந்து மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவை அறிந்துகொண்ட  சகோ. சொர்ணகுமார் என்பவர் ஒருகாலத்தில் ஆர். எஸ்.எஸ். ன் மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்து கிறிஸ்தவத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்தான். இப்படிப் பலர் உள்ளனர்.

எனவே, குறுகிய மதவெறியை விட்டு, மதவாதிகளாக இருப்தைவிட்டு ஆன்மீகவாதிகளாக மாறுவோம். எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்  சொல்லவேண்டாம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712               


Religious or spiritual?

AATHAVAN 🔥 892🌻 Saturday, July 08, 2023

“And he said unto them, Ye know how that it is an unlawful thing for a man that is a Jew to keep company, or come unto one of another nation; but God hath shewed me that I should not call any man common or unclean.” ( Acts 10 : 28 )

The Jews had a pride that they were God's chosen people. They considered themselves to be people favored by God and treated others as insignificant. God made it clear to Peter that this was wrong before he sent him to Cornelius. God explained that God can make anyone clean, so do not consider anyone unclean. "What God hath cleansed, that call not thou common.” ( Acts 10 : 15 )

After realizing this, "...... God hath shewed me that I should not call any man common or unclean.” (Acts 10:28) says Peter.

This situation continues in Christianity today. Each denomination see other as impure and unclean. Priests and Christian ministers who talk about unity and harmony in church meetings are personally bigots, caste fanatics and language fanatics. They do not have the true attitude of Christ-like acceptance of others.

This is the curse of Christianity. Anyone with this bitter mindset cannot know Christ and experience His redemption. This is what God told Peter that day and tells us today.

Therefore, we must accept Christ with singleness of mind; He should be notified. We should not treat anyone as insignificant or unwanted. This is what the apostle Paul says, " Whom we preach, warning every man, and teaching every man in all wisdom; that we may present every man perfect in Christ Jesus” ( Colossians 1 : 28 ) We must not seek to make any man the elect in Christ, nor be fanatical.

Also, God knows all the violence and oppression against Christians by others, apart from the division among Christians today. But God is giving them time to repent. So, they may change their mind later. So let us not single out a single person or a group of church members as unclean. Bro. Sornakumar , who is close to me now and who is serving God zealously, came to know Christ from Hinduism. He was  once a member of  R.S.S. and the person in charge of the student wing and worked against Christianity. There are many such examples.

So, let's leave narrow sectarianism and become spiritualists. Do not call any man impure or impure.

God's message:- ✍️ Brother. M. Geo Prakash                                                                                                            

Tuesday, July 04, 2023

பாவத்திலிருந்து விடுதலை / Freedom from Sins

ஆதவன் 🔥 891🌻 ஜூலை 07, 2023 வெள்ளிக்கிழமை


"ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய் கொண்டவனுமாயிருக்கிறான்" ( 1 தீமோத்தேயு 6 : 3, 4 )

இன்றுபோல பவுல் அப்போஸ்தலரது காலத்திலும் பல்வேறு தவறான உபதேசங்களும் வழிகாட்டுதல்களும்  கிறிஸ்துவை விசுவாசித்த மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இவைகளையே பவுல் வேற்றுமையான உபதேசங்கள் என்று கூறுகின்றார். இப்படி வேற்றுமையான உபதேசங்களைப்  போதிப்பவர்கள் இறுமாப்புள்ளவர்களும், ஒன்றும் அறியாதவர்களும் வீண் தர்க்கங்கள் வாக்குவாதங்கள் செய்வதை நோய்போல கொண்டவர்களுமே.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, ஆத்தும இரட்சிப்பு, நித்தியஜீவன் இந்த அடிப்படை உபதேசங்களை போதிக்காமல் அதாவது இத்தகைய  இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் முன்னுரிமைகொடுத்து போதிக்காமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். 

இப்படிச் சொல்வதால் எப்போதும் இவைகளையே போதிக்கவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, இந்தச் சத்தியங்கள்தான் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.  

அன்பானவர்களே, இன்று இதுபோல வேத வசனங்களைப் புரட்டித் தங்களுக்கேற்றாற்போல பிரசங்கிக்கும் ஆசீர்வாத  ஊழியர்கள் பலர் உண்டு. சமூக வலைத் தளங்களில் உலாவரும் பல பிரசங்கங்கள் இத்தகையவையே. வேத வசனங்களைக் கோர்வையாக, அவை என்னச் சொல்லவருகின்றன என்பதை உணராமல் குறிப்பிட்ட வசன  எண்ணை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள் இவர்கள். 

வேதாகமம்,  அதிகாரம், வசனங்கள் எனப் பிரிக்கப்பட்டது 12ஆம் நூற்றாண்டில்தான். அவற்றை தோல் சுருளில் எழுதியவர்கள் தொடர்ச்சியாகவே எழுதினர்.   எனவே தொடர்ச்சியாக வாசிக்கும்போதுதான் எழுதப்பட்டதன் கருத்து நமக்குத் தெரியும்.  ஆசீர்வாத வசனங்களைப் பொறுக்கியெடுத்துப் போதிப்பவர்கள் அந்த வசனத்தின் முற்பகுதி, பிற்பகுதியைச் சேர்த்து வாசித்தால்தான் உண்மையான பொருள் புரியும். இத்தகைய ஊழியர்களுக்கு நாம் சொல்லிக்கொடுத்தாலும் புரியாது, நம்மிடம் தர்க்கம்தான் செய்வார்கள். 

இதற்கு என்ன காரணம் என்பதனையும் பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார்.  அவை என்னவென்றால், கெட்ட சிந்தனை, வாழ்க்கையில் உண்மையில்லாமை, ஊழியத்தை வருமானம் ஈட்டக்கூடியத் தொழிலாக எண்ணுவது இவைகளே. எனவே மாறுபாடான போதனைகளைக் கொடுக்கும் ஊழியர்களை விட்டு நாம் விலகவேண்டுமென்கிறார். "கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 5 )  

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் உபதேசிக்காமல் வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவர்களைப் புறக்கணித்து ஆத்துமாவைக் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


Freedom from sin, soul salvation, eternal life

AATHAVAN 🔥 891🌻 Friday, July 07, 2023

If any man teach otherwise, and consent not to wholesome words, even the words of our Lord Jesus Christ, and to the doctrine which is according to godliness; He is proud, knowing nothing, but doting about questions and strifes of words, whereof cometh envy, strife, railings, evil surmising, ( 1 Timothy 6 : 3, 4 )

As today, during the time of Paul's apostles, various false teachings and guidelines were spread among people who believed in Christ. These are what Paul calls different doctrines. Those who preach such diverse teachings are those who are haughty, those who know nothing, and those who have vain arguments and arguments like a disease.

If he teaches different doctrines, without prioritizing these basic teachings of forgiveness of sins, freedom from sin, and soul salvation, and eternal life, that is, the healthy verses of Jesus Christ and the doctrines of godly devotion, then he is arrogant, ignorant, and sick of arguments and arguments.

This does not mean that we should always teach these things; On the contrary, it is these truths that should be given priority. 

Dear ones, today there are many servants of God who flip through the scriptures and preach according to themselves. Many of the sermons circulating on social media are similar. They are saying only a certain number of verses, combining the Scriptures, without realizing what they are about to say.

It was only in the 12th century that the Bible was divided into chapters and verses. Those who wrote them on leather rolls wrote them continuously.   Therefore, it is only when we read continuously that we come to know the meaning of what is written.  Those who pick up and teach the blessed verses will understand the true meaning only if they read the first and the latter parts of the verse together. Even if we clarify this to such so called servants of God, they will not understand, they will argue with us.

Paul also tells us what is the reason for this.  These are bad thinking, lack of reality in life, and thinking of the ministry as an income-generating profession. Therefore, he suggests that we should turn away from servants who give contradictory teachings. " Perverse disputing of men of corrupt minds, and destitute of the truth, supposing that gain is godliness: from such withdraw thyself.” ( 1 Timothy 6 : 5 )

Let us  keep our  soul by rejecting those who teach diverse doctrines.

God's message:- ✍️ Brother. M. Geo Prakash                                                                                                             Contact:- 9688933712


Monday, July 03, 2023

விசுவாசத்தினாலே நோவா பேழையை உண்டுபண்ணினான்

 ஆதவன் 🔥 890🌻 ஜூலை 06, 2023 வியாழக்கிழமை

"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது." ( எபிரெயர் 10 : 38 )


இந்த உலகத்தில் நீதியாக வாழும் மனிதர்கள் பலர் உள்ளனர். நீதி வாழ்க்கைக்கும் ஒரு மனிதன் சார்ந்திருக்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம்கிடையாது. எல்லா மத நம்பிக்கைக் கொண்டவர்களிலும் நீதியாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்று. அதாவது, நீதியாக வாழ்வதால் மட்டும் ஒருவன் பிழைப்பதில்லை, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால்தான் பிழைக்கிறான். 

அந்த விசுவாசத்திலிருந்து பின்வாங்கினால் அவன் நீதிமானாக இருந்தாலும் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் கர்த்தர். காரணம், நீதிமானாக வாழ்வது என்பது வேறு, கர்த்தர்மேல் வைக்கும் விசுவாசம் என்பது வேறு. கர்த்தர்மேல் நாம் வைக்கும் விசுவாசம்தான் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கவும் பாவத்தை மேற்கொள்ளவும் உதவும். ஏனெனில் பாவத்துக்காக தனது இரத்தத்தைச் சிந்தியவர் கிறிஸ்து.  இப்படி கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமே ஆவியின் பிரமாணம். அதுவே நம்மைப் பாவம், மரணம் இவைகளிலிருந்து விடுவிக்கமுடியும்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று எழுதுகின்றார். இப்படி, "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்." ( ரோமர் 8 : 4 )

எனவே அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியதும் அவசியம். 

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது என்று நாம் வாசித்துள்ளோம். (எபிரெயர் 11:1) ஆம், காணாதவைகளின்மேல் நமது நிச்சயம் கர்த்தரை விசுவாசிப்பதால்மட்டுமே வரும். நோவா  நீதிமானாக மட்டுமல்லாமல் கர்த்தர்மேல் பூரண விசுவாசமுள்ளவனாக இருந்ததால் ஆசீர்வாதம்பெற்றார். 

"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்." ( எபிரெயர் 11 : 7 )

விசுவாசத்தினாலுண்டாகும் நீதி எனும் வார்த்தைகளை மேற்படி வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.  ஆம், மனித நீதி வேறு, விசுவாசத்தினால் வரும் தேவநீதியென்பது வேறு. அதுவே பாவத்தை மேற்கொள்ள உதவுவது. எனவே, நீதியுள்ள வாழ்க்கையோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தையும் விட்டுவிடாமல் உறுதியாக இருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                               

பாரம்பரியங்களா, தேவனது வார்த்தைகளா?

ஆதவன் 🔥 889🌻 ஜூலை 05, 2023 புதன்கிழமை


"சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." ( 1 தீமோத்தேயு 4 : 7 )



"உண்மை தனது கால் செருப்பை அணியுமுன் பொய்யானது உலகத்தையே சுற்றிவந்துவிடும்" என்று கூறினார் பிரபல சுவிசேஷகரும் நற்செய்தியாளரும் இறையியல் அறிஞருமான சார்லஸ் ஸ்பர்ஜன்.  இதுவே இன்று கிறிஸ்தவத்தில் நடந்துகொண்டிருக்கிறது.  பொய்யும், கட்டுக்கதைகளும் மேலோங்கி தேவனது வார்த்தைகளையும் தேவபக்தியையும் தடுப்பவையாக இருக்கின்றன.  பல்வேறு தவறான போதனைகள், செயல்பாடுகள் இவைகளுக்குக் காரணம் பாரம்பரியம் எனும் பல தவறான எண்ணங்களும் செயல்களும். இத்தகைய  "சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

கிறிஸ்தவத்தில் உள்ள சபைப் பிரிவினைகளுக்கு ஒரு முக்கிய  காரணம் தேவனுடைய வார்த்தைகளைவிட பாரம்பரியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். ஆம், பாரம்பரியத்தைக் காப்பதற்காக நாம் தேவனது கட்டளைகளை அவமாக்குகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார்.  "பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்". ( மாற்கு 7 : 9 ) என்றார். 

ஒரு சட்டப் பிரச்னை ஏற்படுகின்றதென்றால் நாம் சட்ட புத்தகத்தைத்தான் பார்த்து நமது பிரச்சனைக்குத் தீர்வு காண்கின்றோம். இதுபோல நமது வேத புத்தகம்தான் நமக்குச் சட்டப் புத்தகம். ஏனெனில் வேத வார்த்தைகள் தேவனது வார்த்தைகள். இவை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசியவை. (2 பேதுரு 1:21)  எனவே இந்தத் தேவனுடைய வார்த்தைகள் தான்  நமக்கு இறுதித்தீர்வேத்  தவிர பாராம்பரியங்களல்ல.

கிறிஸ்தவத்திலுள்ள அனைத்துச் சபைப் பிரிவுகளிலும் இத்தகைய பல பாரம்பரியங்கள் உள்ளன. சில சபைகளில் இவை அதிகமாகவும் சில சபைகளில் சற்றுக் குறைவாகவும் பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும் இன்று பல்வேறு பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. 

இதனையே இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்." ( மாற்கு 7 : 7 ) என்கின்றார். 

அன்பானவர்களே, பாரம்பரியங்கள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தராது; நமக்கு இரட்சிப்பைத் தராது. தேவனுடைய வார்த்தைகளே நம்மை விடுவிக்கமுடியும். நாம் வேதாகமத்தை ஆழமாக வாசிக்கும்போது எந்தெந்த விதங்களில் நாம் பாரம்பரியத்துக்கு அடிமையாகியுள்ளோம் என்பது புரியும். எந்த ஒரு சபைப் பிரிவிலுள்ள குறிப்பிட்ட தவறான பாரம்பரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டு விளக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் நமக்குப் புத்தியைத் தந்துள்ளார். எனவே, நாமே அவைகளை நிதானித்து அறிந்துகொள்ளலாம். 

ஆம் இந்தப் பாரம்பரியங்களெல்லாம் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாய் இருக்கிற கட்டுக்கதைகள். இவைகளைவிட்டு தேவபக்தியாய் வாழ முயற்சிபண்ணுவது அவசியம். தேவனது வார்த்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமைகொடுத்து நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம். அப்போதுதான் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                   

Sunday, July 02, 2023

கர்த்தரைப் பின்பற்றுவதில் எலிசாவின் உறுதி

ஆதவன் 🔥 888🌻 ஜூலை 04, 2023 செவ்வாய்க்கிழமை



"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல." 
( லுூக்கா 9 : 62 )


கிறிஸ்து தனது அடியார்களிடம் உறுதியான நிலையான அன்பை எதிர்பார்க்கின்றார்.  ஒரு சில நாட்கள் முழு விசுவாசிகளாக இருந்துவிட்டுப் பின்னர் தேவைக்கேற்ப கிறிஸ்துவைப் பயன்படுத்த விரும்புபவர்களை அவர் தனக்கு ஏற்புடையவர்களாய்க் கருதுவதில்லை.

இன்று நாம் உலகினில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பரவலாகப் பார்க்க முடியும். அதாவது தங்கள்  தேவைக்காக நம்மைப் பயன்படுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின்னர் நம்மைக்கொண்டு ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால்  வெட்கமில்லாமல் மீண்டும் நம்மிடம் வருவார்கள்.  ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களை அருவெறுக்கிறார். தேவைக்காக தன்னைப் பயன்படுத்துபவர்களையல்ல, மாறாக, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்". ( யோபு 13 : 15 ) என்று அவரைவிட்டுப்  பின்மாறாமல் இருப்போரை தேவன் அதிகமாக நேசிக்கிறார். 

இன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் இப்படி இருக்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் போலியான காதலையே வளர்த்துக்கொண்டு பின்னர் அவரவர் தேவைக்கேற்ப பிரிந்து வேறு வாழ்க்கையினுள் பிரவேசிக்கின்றனர். 

இயேசு கிறிஸ்து கூறிய மேற்படி வசனத்தின்படி வாழ பழைய ஏற்பாட்டுக்காலத்திலேயே எலிசா தீர்க்கதரிசி முடிவெடுத்தார். எலியா, எலிசாவை சந்தித்தபோது எலிசா தனது வயலில் ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தார். எலியா அவரை ஊழியத்துக்கு அழைத்தபோது எலிசா உடனே அவரிடம், "நான் சென்று எனது வீட்டாரிடம் விடைபெற்று வருகிறேன்" என்று கூறி தனது வீட்டிற்குச் சென்று திரும்பிவந்து மக்களுக்கு விருந்து வைக்கிறார். 

இதனை நாம் பின்வருமாறு வாசிக்கிறோம். "அப்பொழுது அவன், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்." ( 1 இராஜாக்கள் 19 : 21 )  

அன்பானவர்களே, ஏர்மாடுகளும் ஏரும் இருக்குமானால் ஒருவேளை ஊழியத்தில் வரும் இடர்பாடுகளைக் கண்டு பின்மாறி மீண்டும் உழவுசெய்யச் செல்ல  மனம் வந்துவிடும். எனவே முதலில் நாம் நமது ஏர்மாடுகளையும்  ஏரையும் அழித்துவிடுவோம் என்று முடிவெடுத்தார் எலிசா. ஆம், கர்த்தரைப் பின்பற்றுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார். எந்தவிதத்திலும் பின்மாற்றம் நமது வாழ்வில் வராது என்று அவர் உறுதியாக நம்பியதால்தான் இப்படிச் செய்தார். 

கலப்பையின்மேல் (கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில்) தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் இயேசு கிறிஸ்து. ஆனால் எலிசாவோ கர்த்தருக்காக தனக்கு  இருந்த  கலப்பையையும் மாடுகளையும் அழித்துவிட்டு கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். 

தேவன் எனக்குத் தருவதால் அவரை விசுவாசிக்கிறேன் என்பதல்ல விசுவாசம்.  என்னிடம் இருப்பவை அனைத்தும் போனாலும் பின்மாறாமல் அவரையே நம்புவேன் என்பதே உறுதியான  விசுவாசம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                               

Friday, June 30, 2023

கர்த்தரை முன்னிறுத்திச் செயல்படுதல்

ஆதவன் 🔥 887🌻 ஜூலை 03, 2023 திங்கள்கிழமை


"அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன். " ( ஆதியாகமம் 14 : 22 ) என்றான். 

சோதோமின் ராஜாவும் அவனோடு வேறு சில ராஜாக்களும் சேர்ந்து ஆபிராமின் (ஆபிரகாம்) சகோதரனது மகனாகிய  லோத்துவையும் அவனது உடைமைகளையும் கைபற்றிச் சென்றுவிட்டனர். ஆபிராம் அதனைக் கேள்விப்பட்டபோது தனது ஆட்களுடன் சென்று போரிட்டு எதிரி ராஜாக்களை வென்று லோத்துவையும் அவனது சொத்துக்களையும் மீட்டுக்கொண்டார். எதிரி நாட்டு ராஜாவின் சொத்துக்களையும் அந்நாட்டின் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டார்.

அப்போது சோதோமின் ராஜா ஆபிராமிடம், எங்களிடமிருந்து நீர் கைப்பற்றிய பொருட்களை வேண்டுமானால் வைத்துக்கொள்ளும் ஆனால் நீர் கைதுசெய்துள்ள எங்களது நாட்டு மக்களை திருப்பித் தந்துவிடும் என்று கேட்கிறான்.  

இந்தச் சூழ்நிலையில் ஆபிராம் கர்த்தரை முன்னிறுத்திப் பார்க்கின்றார்.  சோதோமின் ராஜா கூறுவதுபோல கைப்பற்றிய பொருட்களை வைத்துக்கொண்டால் ஒருவேளை பிற்காலத்தில் , " நான்தான் ஆபிராமைச் செல்வந்தனாக்கினேன்; அவனிடமுள்ளவையெல்லாம் எனது சொத்துக்களே " என்று சோதோமின் ராஜா கூறுவான். அப்படிக் கூறுவது கர்த்தரை அவமதிப்பதுபோலாகிவிடும். ஏனெனில் கர்த்தர், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 2 ) என்று ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஆசீர்வாதத்தைக் வாக்களித்திருந்தார்.  

எனவே, "ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்." என்று அந்தச் சொத்துக்களை ஆபிராம் மறுத்துவிட்டார். 

அன்பானவர்களே, இன்று நாங்கள் ஆவிக்குரிய மக்கள் என்றும் ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம் என்றும்  கூறிக்கொள்ளும் பலர், அரசாங்க பதவியில் இருந்துகொண்டு கைக்கூலி, லஞ்சம், ஏமாற்று வழிகளில் பொருள்சேர்த்து பின்னர் , "கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார்" எனச் சாட்சியும் கூறுகின்றனர்.   லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இது கிறிஸ்துவை அவமானப்படுத்துவதல்லவா? 

ஆபிரகாமின் வாழ்வில் பல விசுவாச அறிக்கைகளும் செயல்களும் இருந்தன. இதனாலேயே ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம். அவரது வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆம் அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல உண்மையான ஒரு வாழ்வு வாழ்வோம். குறுக்கு வழியில் முயலாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும்படி அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருப்போம். அப்போதுதான் நமது வாழ்வு ஒரு சாட்சியுள்ள வாழ்வாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                

Thursday, June 29, 2023

தடைகளை நீக்கிப்போடுகிறவர்

ஆதவன் 🔥 886🌻 ஜூலை 02, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )


இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் நமது தேவனுக்கு "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் அவர் நீக்கிப்போட வல்லவராய் இருக்கிறார். 

இஸ்ரவேல் மக்களை மோசே எகிப்திலிருந்து விடுவிக்க பார்வோன் பல முறை தடை செய்தான். அவனது கரத்திலிருந்து அவர்களை விடுவித்து கர்த்தர் வழி நடத்தினார். கானானை நோக்கிய அவர்களது பயணத்தில் முதலில் வந்தத் தடை செங்கடல். ஆனால் அதனைக் கால் நனையாமல் அவர்களை தேவன் கடைக்கச் செய்தார். தடையாய் நின்ற எரிகோவின் மதில்கள் துதியினால் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு எதிர்த்துவந்த வல்லமைமிக்க பல அரசர்கள் அழிந்துபோயினர். ஆம், நமது தேவன் தடைகளை நீக்கிப்போடுகிறவர்.  

அப்போஸ்தலர்களது வாழ்விலும் தேவன் இப்படித் தடைகளை நீக்கிப்போடுவதைப்  பார்க்கின்றோம். பேதுருவை சிறைச்சாலை அடைத்துவைக்க முடியவில்லை. பவுலையும் சீலாவையம் சிறைச்சாலையின் தொழுமரம்  தொடர்ந்து கட்டிவைக்க முடியவில்லை. அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் வந்த பல்வேறு இடர்கள்,  தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரால் தகர்ந்தன. அதே கர்த்தர் மாறாதவராக இன்றும் இருக்கிறார்.

அன்பானவர்களே, நமது வாழ்வில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளைக்கண்டு நாம் தயங்கி ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்திடக் கூடாது. நமது தேவன் வல்லமைமிக்கப் பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் தகர்த்துப்போட வல்லவர் அவர். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் என்று. நமக்குமுன் கர்த்தர் செல்கிறார் எனும் விசுவாசத்தோடு பயணத்தைக் தொடர்வோம்.

நமது தேவன் தனது பிள்ளைகளாகிய நம்மை ஒரு ராஜாபோல நடத்துகின்றார். நமது நாட்டின் பிரதமரோ, முதல்வரோ வருகிறார்களென்றால் முதலில் அவர்கள் வரும் சாலைகளிலுள்ள குண்டு குழிகள், தடைகள் அகற்றப்பட்டு அவர்கள் பயணம் செய்ய லெகுவாக்கப்படும். நமது கர்த்தர் நம்மை ராஜாபோல நடத்துவதால் நமக்குமுன் சென்று நமது பயணப் பாதையிலுள்ள தடைகளைச் சரிசெய்து நமக்குமுன் ஒரு பாதுகாவலர்போல நடந்து செல்கிறார். இதுவே கிறிஸ்துவின் அன்பு. 

எனவே அன்பானவர்களே, நாம் எதனையும் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது  ராஜா நமக்கு  முன்பாகப் போகிறார். அந்த விசுவாசத்தோடு அவரைப் பின்தொடர்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                         

Wednesday, June 28, 2023

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்

ஆதவன் 🔥 885🌻 ஜூலை 01, 2023 சனிக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

அன்பானவர்களே, மனிதர்களால் பிடிக்கப்பட்டுக் கட்டி வைக்கப்பட்டிருக்கும்  யானைக்குத் தனது பலம் தெரியாது என்பார்கள்.  எனவே அது தன்னைவிட பலமடங்கு பலம் குறைந்த பாகனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொல்படி கேட்கின்றது. தன்னைக் கட்டி வைத்திருக்கும் சிறிய சங்கிலியை அதன் பலத்தால் அறுத்துவிட அதனால் முடியும். ஆனால் அது அப்படிச் செய்வதில்லை. காரணம் தனது  சுய பலம் அதற்குத் தெரியாது. 

இதுபோலவே பலவேளைகளில் ஆவிக்குரிய நாமும் இருக்கின்றோம். நம்மோடு கர்த்தர் இருப்பதும் அவரால் நம்மை விடுவிக்கவும், எந்தச் சூழ்நிலையினையும் நாம் கடந்துவரச் செய்யவும்  முடியும் என்பதையும்  பல வேளைகளில் நாம் உணருவதில்லை.  எனவே நாம் சலித்துக்கொள்கின்றோம். "என்ன ஆண்டவர்........நம்ம  தலையில ஆண்டவன் இப்படி எழுதிவிட்டான்; அநுபவிச்சுதான் தீரணும்..." என எண்ணிக்கொள்கின்றோம். 

இதுபோலவே கிதியோனும் இருந்தான்.  கர்த்தருடைய தூதன் பராக்கிரமசாலியே என்று கூறியதும் கிதியோன், "ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 13 )

அதனால் ஆண்டவர் அவனைத் திடப்படுத்தினார். "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, நாம் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவோ, வல்லமைமிக்க ஊழியனாகவோ, புகழ்பெற்றவராகவோ இருக்கவேண்டியது அவசியமில்லை. நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய  பலம் போதும். காரணம் நம் ஒவ்வொருவரது நிலையினையும் தேவன் அறிவார்; நமக்கு உதவுவார்.

ஆனால் அதற்கு, முதலில் நமக்குக்   கிதியோனைப்போல ஒரு தாழ்மையான இருதயம் தேவை. கிதியோனது தாழ்மையான உள்ளத்தை தேவன் அறிந்திருந்ததால்தான் அவனோடு இருந்தார். "தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்" என்று வேதம் கூறவில்லையா? கிதியோனின் இந்த தாழ்ந்த இருதயம் அவனது பதிலில் தெரிகின்றது.  "அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 ) எனது குடும்பமும் நானும் மிக எளிமையானவர்கள் என்று தன்னைத் தாழ்த்துகின்றான் கிதியோன். 

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

இப்படியே அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்துவோடுள்ள நெருக்கத்தினால் நம்பிக்கைகொண்டு விசுவாசத்தோடு கூறுகின்றார்,  "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 13 )

ஆம் அன்பானவர்களே, கிதியோனைப்போல ஒரு தாழ்மையான உள்ளமும் அப்போஸ்தலரான பவுலைப்போல ஒரு விசுவாசமுள்ளத் தூய்மையான வாழ்வும் நமக்கு மிகமிகத்தேவை. அப்படி இருப்போமானால் கிதியோனிடமிருந்தும் பவுலிடமிருந்தும் அவர்களைப் பலப்படுத்தியதுபோல நம்மையும் பலப்படுத்திப் பயன்படுத்துவார். கர்த்தர் நம்மைப்பார்த்தும், "பராக்கிரமசாலியே நான் உன்னோடே இருக்கிறேன்"  என்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                               

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...