Monday, August 28, 2017

Goliath's Skull Found Near Jerusalem


Goliath's Skull Found Near Jerusalem


'The Kingdom Times, Belfast, May 1994, carried the story of how a leading archaeologist had found Goliath's skull in a valley west of Jerusalem with the stone from David's slingshot still embedded in his forehead! Dr. Richard Martin says the discovery proves that David's battle with the 10-foot giant happened just like the Bible said it did, 1,000 years before the birth of Yahshua.

'This is the archaeological find of the century, if not of all time,' Dr. Martin told reporters at a conference in Jerusalem. 'Many people, including scholars and clergymen, would have us believe that the biblical account of David and Goliath is little more than an interesting piece of fiction,' he said.

'But we found this skull in the valley of Elah, in the foothills of the Judean mountains, where David's battle with Goliath was said to have taken place. Even more intriguing, the skull is HUGE and clearly belonged to a man of ENORMOUS STATUE. 'And if you believe the Bible, you know that Goliath was 9 feet 8 inches tall.

'But the most telling piece of evidence is the small round rock we found embedded in the forehead. The Bible tells that David killed Goliath with a stone flung from a leather sling.

'Dr. Martin found the skull during an archaeological survey 20 miles south-west of Jerusalem on 23rd March, 1993. He and his assistants instantly realized that the find was important; but it was only when they had performed tests which showed the skull to be between 2,900 and 3,000 years old that they began to think they had found the remains of Goliath.

'The Bible places the battle between David and Goliath around 990 B.C., or 1,000 years before the birth of Yahshua,' Dr. Martin said.

'According to the Bible the battle began as a band of Israelites were preparing to fight a band of Philistines in the Valley of Elah.

'At that point in history it was common for enemies to avoid massive casualties by allowing one man fron each side to fight for their respective armies. To quote the Bible, Goliath, challenged the Israelites to 'choose a man and let him come to me. If he be able to fight with me and kill me, then we will be your servants. But if I...kill him, then you will serve us.'

'David answered the challenge and killed Goliath with a single stone thrown from a leather sling. When Goliath hit the ground, David chopped off his head with Goliath's own sword.

'As I said before, the skull that we found had a rock stuck in the forehead. There was also evidence to suggest that the head had been SEVERED from the body by a sharp object, most likely a sword. There can be little doubt that this is Goliath's skull. To be perfectly frank, I'm staking my career on it,' said Dr. Martin.'
-- Michael A. Clark, Wake Up! July/August 1994.

 

Bible Places - Elah Valley, Adullam

Elah Valley



View from 

Azekah






The best view of the valley is from the commanding hilltop of Azekah.  This strategic city was wisely fortified by Rehoboam, and it was one of the last cities to fall to the Babylonians in the invasion of Judah in 586 BC.  The valley below is the location of the battle of David and Goliath.



Elah Tree




The valley gets it name from the Elah tree, a type of oak or terebinth tree.  This large and old Elah tree still remains in the valley, reminding visitors of the day when trees proliferated in the Shephelah (cf. 1 Kings 10:27).



Adullam


Located on the east end of the valley is the site of Adullam.  This place proved to be the perfect place for David to hide in his initial flight from Saul.  As it today rests on the border between pre-1967 Israel and the West Bank, so in David’s day, this site was apparently in “no-man’s land” where he could stay safely out of the path of Saul or the Philistines.


Cave of Adullam



1 Samuel 22 says that David hid in the “cave of Adullam.”  Today there are many caves at the site and it’s not clear which one or ones David used, as many have been used and modified in the years since.  While he was here, 400 men who were in debt, distress or discontent, gathered around David.


View of Valley from Socoh


This panoramic view of the Elah Valley from the south is an approximate view of what the Philistine army saw as they faced the Israelites in the battle commonly known as “David vs. Goliath.”  The Philistines were encamped on the south side of the valley and King Saul’s forces occupied the hill on the northern side.




Thursday, August 17, 2017

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள்


சகோ . பி . சாலமோன் செல்வராஜ்,
திருமறை ஆராச்சியாளர், 
கிறிஸ்துவின் சபை, நாகர்கோவில்   

ன்றய உலகில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் போல மாறுபட்ட பல்வேறு பிரிவினைகள், கோட்பாடுகள் கொண்ட வேறு மார்க்கங்கள் எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆயிரக்கணக்கான பிரிவினைகள் தவிர,  வீட்டுக்கு வீடு தனி நபர் ஊழியங்கள் நடைபெறுகின்றன. மட்டுமல்ல இந்த ஊழியங்கள் பலவற்றிலும் வேதாகமத்தை வெவ்வேறு  விதங்களில் பொருள் விளக்கி தாங்கள் சொல்பவைகளே சரி, மற்றவர்கள் எல்லாம் தவறான வழிகாட்டிகள் என்று குறைகூறும் போக்கும் காணப்படுகிறது.

மண் சட்டிகளையோ பிளாஸ்டிக்கையோ  யாரும் போலியாகத் தயாரிப்பதில்லை. ஆனால் விலை உயர்ந்த தங்க நகைகளுக்குப் போலிகள் உண்டு. ரூபாய் நோட்டுகளுக்குப் போலிகள் உண்டு. ஆம், விலைமதிக்க முடியாத பொருள்களுக்குத்தான் போலிகள் உருவாகும்.  விலைமதிப்பில்லாததும்  தேவன் தானே சாட்சி கொடுத்ததுமாஇருக்கிற  பெரிதான இரட்சிப்பை (எபிரேயர் - 2:4) பிரசித்திப் படுத்தும் கிறிஸ்தவ மார்க்கத்திலும் எனவே போலிகள் அதிகரித்திருப்பது ஆச்சரியமான விசயமல்ல.

ஆனால் இந்த வேறுபாடுகள் மற்றும் முரண்பாடான போதனைகளுக்கு அடிப்படை காரணம் எது என்று ஆராய்ந்து பார்ப்போமானால் அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கிடையிலான வேறுபாடு மற்றும் அவற்றின் அடிப்படை நோக்கம் பற்றி அறியாதிருப்பதே என்பது விளங்கும்.

இன்று எலியாவைப் போல தேவன்மேல் பக்தி வைராக்கியமாக இருக்கவேண்டியது அவசியமே தவிர எலியாவைப்போல் இரக்கமற்ற கொலைகாரனாக ஒருவன் இருக்கக் கூடாது. தாவீதைப்போல தேவன்மேல் அன்பு கொண்டவனாக இருக்கவேண்டியது அவசியமே தவிர அவரைப்போல இரத்தக்கறை  படிந்த கரத்தினனாக நாம் வாழ முடியாது; வாழக் கூடாது. இப்படி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கால சம்பவங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இவற்றைப் புரிந்துகொண்டால்தான் கிறிஸ்தவத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பரலோக ராஜ்யத்துக்காடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும்   எடுத்துக் கொடுக்கிற வீட்டு எஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாய் இருக்கிறான் " (மத்தேயு - 3:52)

பழைய ஏற்பாடு 

தேவன் உலகினைப் படைத்த விதம், மனிதனுக்கும் தேவனுக்கும் இருந்த உறவு, அந்த உறவில் ஏற்பட்டப் பிரிவு மற்றும் அந்தப் பிரிவினை சரி செய்ய  தேவன் ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேவன் குறிப்பிட்ட மக்கள் இனத்தை தெரிந்துகொண்டு  எப்படி தனது வல்லமையான கரத்தால் அதனைச் செய்தார். அந்தக் குறிப்பிட்ட மக்களுக்கு தனிப்பட்ட சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்து வழிநடத்தினார். அந்தத் திட்டத்தின் இறுதி செயல்பாடாக அவர் தனது ஒரே குமாரனை இயேசு கிறிஸ்துவாக பூமியில் பிறக்கவைக்க இருப்பதை தனது தீர்க்கத்தரிசிகள் மூலம்  வெளிப்படுத்தினார் என்பவற்றை பழைய ஏற்பாடு விளக்குகிறது. குறிப்பாக பழைய ஏற்பாடு தேவனது பலம் வல்லமை இவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

புதிய ஏற்பாடு 

தேவனது ஒரே குமாரனான இயேசு கிறிஸ்து பூமியில் எப்படி பிதாவின் திட்டத்தினைச் செயல்படுத்தினார், முறிந்துபோன தேவ மனித உறவை எப்படி சரி செய்தார். விலைமதிப்பிடமுடியாத தனது பரிசுத்த இரத்ததால் பாவ மன்னிப்பை ஏற்படுத்தி பிதாவோடு நம்மை எப்படி ஒப்புரவாகினார் என்பதை புதிய ஏற்பாடு விளக்குகிறது.

புதிய ஏற்பாடு தேவனது கிருபையை  அடிப்படையாகக் கொண்டது 

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள் 

பழைய ஏற்பாடு 
புதிய ஏற்பாடு 

யூத மார்க்கம் என அழைக்கப்பட்டது (கலா-1:13,14)
கிறிஸ்தவ மார்க்கம் என அழைக்கப்படுகிறது (அப்.9:2)
மோசே எனும் மத்தியஸ்தர் மூலம் அருளப்பட்டது (உபா - 5:5)
இயேசு கிறிஸ்து எனும் மத்தியஸ்தர் மூலம் அருளப்பட்டது (1 திமோ -2:5)
முதலாம் உடன்படிக்கை (எபிரே - 9:1)
இரண்டாம் உடன்படிக்கை (எபிரே - 8:7)
தற்காலிக உடன்படிக்கை (எபிரே - 8:13)
நித்திய உடன்படிக்கை (எபிரே - 13:20)
மோசேயின் பிரமாணம் (1கொரி -9:9)
கிறிஸ்துவின் பிரமாணம் (கலா-6:2)
அடிமைத்தனத்தின் நுகம் (கலா-6:2)
விடுதலை அளிக்கக்கூடிய சட்டம் (யாக் -1:25)
பிழையுள்ள பலவீனமான பிரமாணம் (எபிரே - 8:7)
பிழையற்ற பூரண ராஜரீக பிரமாணம் (யாக் -1:25)
ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை  (எபிரே - 7:19)
மனிதனைப் பூரணப்படுத்தும் சட்டம் (எபிரே - 7:19)
பாரமான சுமையாய் இருந்தது (அப் - 7:19) 
 பாரமற்றது, எளிதானது (மத்  - 11:30)
பழமையான எழுத்தின் பிரமாணம் (ரோமர் - 7:6)
புதுமையான ஆவியின் பிரமாணம் (ரோமர் - 7:6)
வரப்போகும் நன்மைகளின் நிழல் (எபிரே - 10:1)
வந்துவிட்ட உண்மையின் சட்டம் (எபிரே - 10:1)
 நிழலும் சாயலுமானது (எபிரே - 8:5)
கிறிஸ்துவைப்பற்றிய நிஜ உருவம் (கொலோ - 2:17)
விசுவாசத்துக்குரிய ஒன்றல்ல (கலா-3:12)
விசுவாசத்துக்குரிய பிரமாணம்  (கலா-3:11)
கிரியையின் பிரமாணம் (ரோமர் - 3:27)
விசுவாசப்  பிரமாணம்  (ரோமர் - 3:27)
மனிதனை நீதிமானாக்குவதில்லை (கலா-2:16)
மனிதனை நீதிமானாக்கும்   (கலா-2:16)
இடித்துப்போடப்பட்ட  பிரமாணம்  (கலா-2:16)
நிலை நிறுத்தப்பட்டப்  பிரமாணம் (எபிரே - 10:9)
பாவத்தின் கீழ் மனிதனை அடைத்துப்போட்டது (கலா-3:32)
பாவ மன்னிப்பினை அளிக்கிறது (எபிரே - 1:7)
கோப ஆக்கினையை உண்டாக்குகிறது  (ரோமர் - 4:15)
தேவ சமாதானத்தைத் தருகிறது (ரோமர் - 5:1)
சாபத்துக்கு உட்படுத்துகிறது (கலா-3:10)
சாபத்திலிருந்து மனிதனை மீட்கிறது  (கலா-3:13)
மீறுதல் பெருகும்படி வந்தது (ரோமர் - 5:20)
கிருபை பெருகும்படி வந்தது (ரோமர் - 5:20)
பாவங்கள் உண்டு என ஞாபகப்படுத்தும் பிரமாணம் (எபிரே - 10:2)
பாவங்கள் இனி நினைக்கப்படுவதில்லை (எபிரே - 8:12)
கொல்லும் பிரமாணம் (2 கொரி - 3:6)
உயிர்ப்பிக்கும் பிரமாணம் (2 கொரி - 3:6)
கிறிஸ்துவினால் நீக்கப்பட்டது (2 கொரி - 3:14)
கிறிஸ்துவினால் நிலைநிறுத்தப்பட்டது (எபிரே - 10:9, 30)
ஒழிந்துபோகும் மகிமையின் ஊழியம் (2 கொரி - 3:8)
நிலைத்திருக்கும் மகிமையின் ஊழியம்  (2 கொரி - 3:10,11)
இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்டபோது இது அமுலுக்கு வந்தது (1 ராஜா 8:9)
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது இது அமுலுக்கு வந்தது (எபிரே - 9:16,17)
வளமான கானான் தேசம் இவ்வுலக செழிப்பான ஆசீர்வாதங்கள் அடங்கியிருந்தன (உபா 5:33) 
இந்த வாழ்விலும் இனி வரும் வாழ்விலும் தேவனது பராமரிப்பு இதில் அடங்கியிருக்கிறது (1 பேதுரு - 1:4,5)
மாம்ச ஜென்மத்தினால் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருந்தனர் (ரோமர் - 9:3,4)
ஆவிக்குரிய பிறப்பால் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர்  (யோவான் - 1:13)
விருத்தசேதனம் என்பது சரீர அடையாளமாய் இருந்தது (ஆதி  - 17:11) 
பரிசுத்த ஆவியானவரின் வரமே முத்திரையாய்  இருக்கிறது (எபே  - 1:13)
மாம்ச சமந்தமான கட்டளை (எபிரே - 7:16)
ஜீவனைத் தரும் ஆவியின் பிரமாணம் (ரோமர் - 8:2)
மரணத்துக்கேதுவான ஊழியம் (2 கொரி - 3:7)
நீதியைக் கொடுக்கும் ஊழியம் (2 கொரி - 3:8,9)

தேவ ஊழியன்


தேவ ஊழியன் 

     - எம். ஜியோ பிரகாஷ் 

தேவ ஊழியனுக்குரிய தகுதிகளாக வேதத்தில் நாம் காண்பவை:-  

1.ஜெபத்தில் நிலைத்திருப்பவன், விழித்திருப்பவன் (கொலோ 4:2, 1 தெச - 5:17)

2. வேத அறிவு மிக்கவன்  (கொலோ 4:6)

3. தேவனோடு நடப்பவன் (1.கொரி -11:1)

4. பேச்சும் பிரசாங்கமும் ஆவியின் பெலத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவன்  (1.கொரி -2:5)

5. தேவனின் உடன் ஆளாகப் பணி  செய்பவன் (1.கொரி -3:9)

6. தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறவன் (1.கொரி -9:27)

7. சுவிசேஷ அறிவிப்புப் பணியை பெருமைக்காகச் செய்யாமல் கடமை எனக் கருதிச்  செய்பவன்  (1.கொரி -9:16)

8. எல்லாருக்கும் எல்லாமாக இருக்க முயல்பவன்  (1.கொரி -9:22)

9. கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் (1.கொரி -11:1)

10. தேவ வசனத்தை தேவன் அருளியபடியே பிரசங்கிப்பவன் (2.கொரி -2:17, 1 பேதுரு 4:11)

11. பிறருக்கு இடறல் செய்யாமலிருப்பவன் (1.கொரி -6:3)

12. மாம்ச இச்சைகளை (உடல் ஆசைகளை) சிலுவையில் அறைந்தவன் (கலா 5:24)

13.  மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்றே ஊழியம் செய்பவன் (எபே  6:8)

14. மனுஷருக்குப் பிரியமாயிருக்க  விரும்பி பார்வைக்கு ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் ஊழியம் செய்பவன் (எபே  6:6)

15. கிறிஸ்துவின் குரலைத் தன்னுள் கேட்கும் அனுபவம் உள்ளவன் (2.கொரி -13:3)

16. குற்றம்சாட்டப்படாதவன் (தீத்து 17:9)

17. தன் சுய விருப்பத்தின்படி எதுவும் செய்யாதவன் (தீத்து 17:9)

18. முன்கோபமில்லாதவன் (தீத்து 17:9)

19. மதுபான பிரிய மில்லாதவன் (1.திமோ 3:3)

20. இழிவான ஆதாயத்தைத் தேடாதவன் (1.திமோ 3:3)

21. களவு செய்யாதவன் ( ரோமர் 2:21)

22. விபச்சாரம் செய்யாதவன் ( ரோமர் 2:22)

23. தேவனால் அழைப்பு பெற்றவன் (எபி 5:4)

Monday, July 31, 2017

ஆவிக்குரிய துணுக்கு சிந்தனைகள்




ஆவிக்குரிய துணுக்கு சிந்தனைகள் 



றும்பு ஒன்று இமய மலையைப் பார்க்கச் சென்றது. அடிவாரத்தில் மலையின் மேல் நின்றுகொண்டு தன்னால் முடிந்தமட்டும் பார்த்தது. ஆனால் அதன் சிறிய கண்ணுக்கு ஒரு அங்குல தூரம்தான் பார்க்க முடிந்தது. எறும்பு சொன்னது, "எல்லோரும் உலகிலேயே பெரிய மலை இமய மலை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு மலையே இல்லை. நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்." இப்படித்தான் மனிதன் கடவுளை பார்ப்பதும் உள்ளது. தனது மட்டமான அறிவினைக் கொண்டு கடவுளைப் பார்க்க முயலுகிறான். ஆனால் அந்தக் கடவுள் தன்னிலும் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அவனால் காண முடிவதில்லை. மனிதன் தனது இயலாமையை தனது தகுதியின்மையை ஒப்புக்கொண்டு தன்னை அவருக்கு ஒப்புவித்தால் தேவன் அவனுக்கு வெளிப்படுவார்.


கிறிஸ்துவுக்குள் உண்மையாய் நடக்க முயன்றாலும் துன்பங்கள் ஏன் தொடர்கின்றன? எனப் பலரும் எண்ணி சோர்ந்து போவதுண்டு. சாது சுந்தர் சிங் அவர்களுக்கு கிறிஸ்து இதனைப் பின்வருமாறு வெளிப்படுத்திக் கொடுத்தார். 
கசப்பான கனிகளைத் தரும் மரம் நல்ல கனிகளைத் தரவேண்டுமானால் கசப்பான மரத்தின் கிளைகளை வெட்டிச் சரிப்படுத்தி இனிப்பான கனி தரும் மரத்தின் கிளைகளுடன் ஒட்டுப் போடவேண்டும். இப்படி ஒட்ட வைப்பதில் இரண்டு மரங்களும் வலியை அனுபவித்ததாக வேண்டும். மனிதனும் தன்னிலுள்ள கசப்பான கெட்டக் குணங்கள் மாறி ஆவிக்குரிய பரிசுத்த ஜீவனாகி கனிகளைத் தரவேண்டுமானால் கிறிஸ்து நமக்காகத் துன்பங்களை அனுபவித்ததுபோல கிறிஸ்து தரும் சிலுவையின் துன்பங்களை அனுபவிக்கவேண்டியது அவசியமாகிறது.

Wednesday, July 19, 2017

தேவனுக்கு உகந்த ஊழியராக.........


தேவனுக்கு உகந்த ஊழியராக.....

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ ஊழியர்கள் பலரது வாழ்க்கை சாட்சியற்றதாக இருக்கக் காரணங்கள்  பல உண்டு. இப்படி கிறிஸ்தவ ஊழியர்கள் இருப்பதால் இவர்களே கிறிஸ்தவத்துக்கு தடைக் கற்களாக இருக்கின்றனர். எனது இருபத்திநான்கு  கால ஆவிக்குரிய வாழ்க்கையில் பல ஊழியர்களோடு பழகியும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்த அனுபவத்திலும் பல காரியங்களை கண்டறிந்துள்ளேன்.    அதன்மூலம் ஒருவர் சிறப்பான ஊழியராக இருக்க வேண்டுமானால் அவரிடம் சில அடிப்படைக் காரியங்கள் அல்லது தகுதிகள்  இருந்தாக வேண்டும் என்பதை அனுபவம் மூலம்  அறிந்துகொண்டேன்.   அவை என்னவென்றால்...

1. தனிப்பட்ட ஜெபம் ஊழியர்களுக்கு மிக மிக அவசியம். ஒருவர் தனியாக எந்த அளவு ஜெபிக்கிறாரோ அதனைப் பொறுத்துதான்  அவரது ஊழியம்  இருக்கும். கடமைக்காக பிரசங்கிக்கச் செல்லும் முன் மட்டும் ஜெபித்துச் செல்லும் ஊழியன் அற்ப ஊழியனாக தானாகவே தன்னை வெளிப்படுத்திவிடுவான். 

2. கடமைக்காக வேதத்தைப் படிக்காமல் தேவனை அறியும் ஆவலில் அதனைப் படிக்கும் ஊழியனிடம்தான் தேவ வெளிப்படுத்தல்கள் இருக்கும். அத்தகைய ஊழியன்தான்  மனிதர்களை திருப்திப்படுத்தப் போதிக்காமல் தேவன் சொன்னதைப்  போதிப்பவனாக இருப்பான். 

3. தான் வாழும் சமூகத்தில் நல்ல ஒரு சாட்சி உள்ள வாழ்க்கை வாழ்பவனாக இருக்கவேண்டும். தாறுமாறான வாழ்க்கை வாழ்பவனை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

4. ஊழியன் தனது உடை விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தரமான எளிய உடையே போதும். சினிமா நடிகர்களைப்போல உடை உடுத்தவேண்டும் எனப் பல ஊழியர்களும் எண்ணுகின்றனர்.  பிரபல ஊழியர்களின் இந்த பகட்டு இன்று பல சிறிய ஊழியர்களிடமும்  பரவியுள்ளது. கிறிஸ்துவை உண்மையாய் போதிப்பவன் இந்தப் பகட்டுக்கு அப்பாற்பட்டவனாகவே இருப்பான். 

5. இயல்பாக பேசுவதைவிட பல ஊழியர்களும் செயற்கையான முறையில் பேசி தங்களை உயர்ந்தவர்களாக கட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய மாய்மால பேச்சை பேசுவதை தவிர்த்தல் வேண்டும். 

6. சில ஊழியர்கள் தங்களது அங்க சேஷ்டைகள் மூலம் தங்களை சிறந்த போதகர் என வெளிக்காட்ட முயல்கின்றனர். (கண்களை உருட்டுதல், புருவத்தை வளைத்து நடித்தல், தோள்பட்டையை குலுக்குதல், கைகளை அபிநயித்து பேசுதல் போன்ற செயல்கள்) இது பல வேளைகளில் கேலிக்  கூத்தாக  இருக்கிறது. உண்மைக்கு நடிப்பு தேவையில்லை. எனவே அங்க சேஷ்டைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

7. உண்மையைப் பேசுங்கள். பிறர் உங்களை வல்லமை உள்ளவர்கள் என எண்ண வேண்டுமென பொய் தரிசனங்களையும் பொய் அனுபவங்களையும் கூறாதிருங்கள்.

8. அடுத்தவர் சட்டைப் பையில் உள்ளதற்கு ஆசைப் படாதிருங்கள். இன்று பல ஊழியர்களும் அப்படி ஆசைப் படுவதால் தான்  அவர்களது பிரசங்கத்தில் தேவ செய்தியைவிட காணிக்கை பற்றிய உபதேசமே மேலோங்கி நிற்கிறது.

9. பிற ஊழியர்களைக் காப்பியடிக்காதிருங்கள். இந்தக் காப்பியடித்தல்தான்  கிறிஸ்தவ ஊழியத்தினை இன்று  கெடுத்திருக்கிறது. நாம்  காப்பியடிக்க வேண்டியது கிறிஸ்துவை மட்டுமே. 

10. உண்மையாய், நேர்மையாய், போதுமென்ற மன நிறைவுடன் வாழுங்கள்.


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...