DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, July 25, 2021

இருளும் ஒளியும்

                             - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 

 

ளியை விரும்பும் உயிரினங்களுக்கும் இருளை விரும்பும்      உயிரினங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு.   ஆந்தை,   கூகைதேள்,       கரப்பான்,   பூரான்          இவை போன்ற   உயிரினங்கள் ஒளியை விரும்புவதில்லை.  அவை எப்போதும்    இருளான இடங்களைத் தேடி பதுங்கி உயிர்வாழும்.  அடியிலும், மரப் பொந்துகளிலும்  அவை   தங்கியிருக்கும்.   அவை   மறைந்திருக்கும் அந்தக்  அகற்றினால் அவை உடனே இருளைத்தேடி ஓடும்.


திருடர்களைப்  பாருங்கள் அவர்கள்  எங்கே திருடச் சென்றாலும் அங்குள்ள விளக்குகளைத் தான்   முதலில் அணைப்பர்.ஆம்,  ஒளியான  இடத்தில இருளின் உயிர்களுக்கு இடமில்லை. ஒளியைவிட அவை இருளையே விரும்புகின்றன. இதனைத்தான் இயேசு கிறிஸ்து,   "பொல்லாங்குச் செய்கிறவன் எவனும் ஒளியைப்    பகைக்கிறான்தன் கிரியைகள்  கண்டிக்காத படிக்கு  ஒளியினிடத்தில்              வராதிருக்கிறான்".    (யோவான் - 3:20) என்று கூறினார்.


இன்று கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியையும் பாவத்தின் அந்தகாரத்தையும் நாம் விபரித்துச் சொல்லும்போது பலர் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். காரணம்,  அவர்களது பாவ வாழ்க்கை. பலரும் தங்களது பாவ வாழ்க்கையை நியாயப்படுத்துகின்றனர். "நான் என்ன பாவம் செய்தேன்?" எனக் கேள்வி  எழுப்புகின்றனர்.  அல்லது, "இதெல்லாம் பாவமா? உலகத்தில் எல்லோரும் இப்படித்தானே வாழ்கின்றனர்?" என்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் வாழ்க்கை மாற்றத்துக்கோ, கிறிஸ்துவை அறியவோ தயாராக இல்லை. 


இப்படிக் கிறிஸ்துவை நெருங்கிடத் தயங்கும் மக்கள் இறுதி நியாயத் தீர்ப்புநாளிலும் இப்படியே இருப்பர். ஆம், அவர்கள் கிறிஸ்துவின்  ஒளியினிடம் நெருங்க முடியாமல் இருளையே விரும்புவர்.   தேவன்அவர்களை  இருளான நரகத்தில் தள்ளுமுன் பாவிகளின் பாவ  வாழ்க்கையே அவர்களை                  இருளை நாடி ஓடச் செய்யும்.    


இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்ஒரு        திருமண வீட்டில்  மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்கும்போது நல்ல ஆடையை அணிந்துள்ள விருந்தினர்கள் மேடையில் ஏறி நேரடியாக மணமக்களை  வாழ்த்துவார்கள்மேடை வண்ண விளாக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும்ஆனால் அங்கு அரைகுறை ஆடையுடனோ நிர்வாணமாகவோ ஒரு மனிதன் வர நேர்ந்தால் அவன் மேடையில்  வருவானா?  வெட்கப்பட்டுத்  தன்  மானத்தை மறைக்க இருளான இடத்தைத் தேடி ஓடுவானல்லவா?


ஒளியான வாழ்க்கையைப்  பகைத்து இருளான பாவவாழ்க்கையில் வாழும் மனிதன் இப்படியே  இருப்பான்இரட்சிப்பின் ஆடை அணிந்தவர்கள்  மணவாளனான இயேசுவிடம் நெருங்கி உறவாட நெருங்கிட, இருளையே விரும்பி, இருளான பாவ வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஆடையில்லாத நிர்வாண மனிதன் ஒளியைக்கண்டு  இருளைத்தேடி ஓடுவது போலத் தானாகவே தனக்கும் பிசாசுகளும் ஆயத்தம் பண்ணப்பட்ட  இருளைத்  தேடி  ஓடுவான்ஆம் ஒளிக்கும் இருளுக்கும்    சம்மந்தமேது ?


இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியதுபோல,  "ஒளியானது உலகத்தில் வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள்  பொல்லாதவைகளாய்  இருக்கிறபடியால் அவர்கள் ஒளியைப்  பார்க்கிலும்  இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை தீர்ப்புக்கு  காரணமாயிருக்கிறது" (யோவான் -3:19)


யோவான் தனது சுவிசேஷத்தின் ஆரம்பத்திலேயே கிறிஸ்துவைக்குறித்து, "உலகத்திலே வந்து எந்த  மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த  மெய்யான ஒளி"    (யோவான் -1:9) என்று குறிப்பிடுகின்றார்.   மெய்யான   அந்த ஒளியிடம்  வரும் போது  மட்டுமே  எந்த  மனுஷனும்  பிரகாசமடைவான்.


சந்திரனுக்கு சுய  ஒளி கிடையாதுஆனால் அது  சூரியனையேச் சுற்றி, சூரியனுடைய ஒளியை  வாங்கி பூமிக்கு ஒளி கொடுக்கிறது.அதுபோலவே        கிறிஸ்து இல்லாத மனிதன் கிறிஸ்துவுக்குத்  தன்னை ஒப்புக் கொடுத்து நிலவானது சூரியனைச் சுற்றுவது போல கிறிஸ்து இயேசுவைப் பற்றிக்கொள்ளும் போது     நீதியின்  சூரியனான  அவரது ஒளியைப் பெற்று பிறருக்கு  ஒளி கொடுப்பவனாக மாறுகின்றான். "நான்   உலகத்திலிருக்கையில்   உலகத்துக்கு   ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9:5)   என்று கூறிய   இயேசு கிறிஸ்து "நீங்கள் உலகத்துக்கு   வெளிச்சமாக   இருக்கிறீர்கள்" (மத்தேயு - 5:14)  என்று இதனால்தான் கூறினார்.


நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து நம்மை ஒளியடையச்  செய்ய நம்மை அவருக்கு முற்றிலும்  ஒப்படைப்போம்.  நாம் இருளான வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தால் மனம் திரும்பி நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று ஒளியான கிறிஸ்துவை தரித்துக்கொள்ளவேண்டும்,  ஏற்கெனவே கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றவர்களாக இருந்தால் அது இருளடைந்திடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனவேதான்  இயேசு  கிறிஸ்து கூறினார், "உன்னிலுள்ள   வெளிச்சம் இருளாகாதபடிக்கு   எச்சரிக்கையாய்   இரு "    ( லூக்கா - 11:35)

Friday, July 23, 2021

நமது பிரதான ஆசாரியன்

 

                                        - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


ந்த உலகத்தில் இலவச ஆலோசனைகள் வழங்க பலர் தயாராக உள்ளனர். இத்தகைய மனிதர்கள் பிரச்சனைகள், கஷ்டங்களில் அகப்படும் பிற மனிதர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதும்  அந்த ஆலோசனைகளை  கடைபிடிக்காவிட்டால் அவர்களை விமரிசித்து  கேலி செய்வதும் உண்டு.  ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பிறருக்குக் கூறுவது எளிது. யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் கூறலாம். ஆனால் அப்படி ஆலோசனை கூறும் மனிதர்களுக்கு அதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.


"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மற்றவர்களுக்கு அறிவுரைகூறுவதிலும், மற்றவர்கள் செய்யும் செயல் தவறு என நிரூபிப்பதிலும்  தீவிரம் காட்டுபவர்கள்  தங்களுக்கு அதேபோன்ற பிரச்னை வரும்போது தாங்கள் மற்றவர்களை குறைகூறிய  அதே தவறைச் செய்வர்ஆம் சொல்லுவது எல்லோருக்கும் எளிது ஆனால் சொல்லியபடி வாழ்ந்துகாட்டுவதுதான் கடினம்


திருவள்ளுவரும் இதுபற்றிக் கூறும்போது, "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்" (குறள் - 664) என்று கூறியுள்ளார்


நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் பூமியில் வாழ்வதற்கும் , மறுமை இன்பத்தை அடைவதற்கும் பல அறிவுரைகளைக் கூறினார். இன்று  பலர்  'இயேசு கிறிஸ்துவின் போதனைகள்படி யாரும் வாழ முடியாது' என்று கூறுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து வெறும் போதனை செய்ததோடு நிற்கவில்லை, தனது போதனையின்படி வாழ்ந்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். அதனையே எபிரெய நிருப ஆசிரியர், " எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" என்று குறிப்பிட்டுகின்றார்.


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )


எல்லா விதத்திலும் என்று கூறும்போது, நமக்கு இன்று உலகினில் வரக்கூடிய அனைத்து வித சோதனைகளும் அவருக்கும் வந்தன  என்று பொருள். பண ஆசையினால் விழக்கூடிய சோதனை, பதவி ஆசையில் விழக்கூடிய வாய்ப்பு, இச்சையில் அகப்படும் வாய்ப்பு போன்ற சோதனைகள் அவருக்கும் வந்தன. ஆனால் அவர்  அவற்றில் அகப்படாமல் பாவமில்லாதவராய் இருந்தார். அதனால்தான் அவரால் நம்மையும் பாவத்திலிருந்து விடுக்க முடியும் என்று இந்த நிருப ஆசிரியர் கூறுகின்றார்.


"ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்". (  எபிரெயர் 2 : 18 )


ஒரு புதிய காட்டுவழிப் பாதை.அதனைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முன்பின் தெரியாத அந்தக் காட்டில் நமக்கு வழிகாட்ட அங்கு அந்த காட்டைப் பற்றியும் அங்குள்ள வழிகள், நீரோடைகள், பழ மரங்கள் பற்றியும் , ஆபத்தான இடங்கள் பற்றியும் தெரிந்த ஒரு மனிதன் நமக்கு வழிகாட்டக் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அன்பானவர்களே, அத்தகைய மனிதன் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


நாம் வெட்டிப்பேச்சு பேசும் அரசியல்வாதியைப்போல  உள்ள ஒரு தலைவரை நமக்குத் தலைவராகப் பெறவில்லை. நாம் பயணம் செய்யும் பாதையில் அவர் ஏற்கெனவே பயணம் செய்துவிட்டார். எனவே நமக்கு உதவி செய்ய அவரால் முடியும். இதுவே நமது கிறிஸ்தவ நம்பிக்கை.   


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். அவற்றைக்குறித்து அவரும் பரிதாபப்படுகின்றார். நாம் செய்யவேண்டியது நமது பலவீனங்களை அவரிடம் ஒத்துக்கொண்டு அவரது உதவியை நாடுவதே. 'ஆணடவரே என்னால் இந்தக் குறிப்பிட்டப் பாவ பழக்கத்தை விட முடியவில்லை, ஆண்டவரே பொருளாசை, பதவி ஆசை, இச்சை, பெருமை, பொறாமை ...என்று நம்மை அடிமைப்படுத்தும் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது உதவியை நாடுவோம். நமக்கு எல்லா விதத்திலும் உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார்


நாம் வெறும் ஜெபக் கிறிஸ்தவர்களாக, ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்பது போதாது. கிறிஸ்துவின் மூலம் அடையும் பெலன் நமது வாழ்வையே மாற்றக்கூடியது என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது குணங்கள் மாறவேண்டுமெனும் ஆவல் நமக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவினால் அது மாறிட வேண்டும். வெறும் உலக ஆசீர்வாதங்களையே வேண்டி நமது ஆத்துமத்தைப்  பாதாளத்துக்குச் சென்றிட வழி செய்துவிடக் கூடாது.