Friday, May 23, 2014

உலகத்தை ஜெயித்தல்

உலகத்தை ஜெயித்தல் 

(இந்தக் கட்டுரை ஆதவன் பிப்ருவரி 2014 இதழில் பிரசுரமானது)

                     - - ஜியோ பிரகாஷ், ஆசிரியர், ஆதவன்  


லகத்தை வெல்ல வேண்டும் எனும் ஆசை பல மன்னர்களுக்கு இருந்தது. அந்த ஆசையே அவர்களது நிம்மதியைக் கெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் தொடர்ந்து பக்கத்துக்கு நாட்டுடன் போரிட்டுத் தங்கள் வாழ்கையை நிம்மதியின்றித் தொலைத்தனர். மாவீரன் அலெக்சாண்டர் ,நெப்போலியன் போன்றோர் பல நாடுகளைக் கைப்பற்றி வெற்றி சிறந்தாலும் அவர்களது வாழ்வின் இறுதி கவலையும் சஞ்சலமுமாகவே இருந்ததாகச்  சரித்திரம் கூறுகிறது. 

Alexander
இன்றும் மனிதர்களிடையே அந்த ஆசை அதிக அளவில் இருக்கிறது. அன்றைய நாடு பிடிக்கும் ஆசை இன்று உலக சாதனை புரிந்து யாரும் அடையாத இலக்கை அடைய வேண்டும் எனும் புதிய வடிவில் மனிதர்களை ஆட்டிப்  படைக்கிறது. 
இன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறவேண்டுமென்றும் அவரவர் விரும்பும் துறையில் சாதனைகள் புரிய வேண்டுமென்றும் மனிதர்கள் ஏங்குகின்றனர். அப்படியே சிலர் சாதனைகளும் புரிகின்றனர். ஆனால் உலக சாதனை புரிந்தவர்கள் அனைவரும் உலகை ஜெயித்தவர்களல்ல. மாறாகத் தாங்கள் சார்ந்துள்ளத் துறையில் வெற்றி பெற்றுள்ளனர் அவ்வளவே. 


Nepolian
ஆனால் அமைதியின் அண்ணலாக வாழ்ந்து காட்டிய அன்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்து "நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) என்று அறிக்கையிட்டார். மட்டுமல்ல தன்னை விசுவசிப்போர்களும் தன்னைப்போல வெற்றி பெற முடியும் என்று கூறினார். அதனை விசுவசித்து ஏற்றுக்கொண்ட அவரது சீடர்கள் அதே வெற்றியை அடைந்தனர். அந்தத் துணிவில்தான் அவரது அன்புச் சீடர் யோவான் "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவசிப்பவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" (1 யோவான் 5:5) என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த வசனம் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவசிப்பவன் மட்டுமே உலகத்தை ஜெயிக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. விசுவாசித்தல் எனபது வெறும் வார்த்தையால் இயேசுவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதல்ல. வாழ்க்கையால் அவரைப் பிரதிபலிப்பதையே கூறுகிறது. அதாவது அவரது வசனத்தின் படி வாழ வேண்டும்.

உலகத்தை ஜெயித்தல் எனபது ஆவிக்குரிய விதத்தில் வேறு பொருள் கொண்டது அதாவது உலக ஆசை,; இச்சை, புகழ், பெருமை, பாவம் இவற்றை வெல்வது. இப்படி உலகை வெல்பவனே வெற்றியாளன். எனவேதான் வேதம் கூறுகிறது "உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போம் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் பிழைத்திருப்பான்" (1யோவான் 2:17)

சாதாரண மனித முயற்சியால் உலகில் பொருள், புகழ், அந்தஸ்து, அதிகாரம் இவற்றைப் பெறலாம். ஆனால் இது உலகை வெல்வது அல்ல. காரணம் இத்தகைய உலக வெற்றியாளர்கள் பலரும் வாழ்க்கையில் தோல்வியாளர்களே. பல புகழ் பெற்ற நபர்கள், குறிப்பாகத்  திரைப்பட நடிக நடிகைகள் தங்களது துறையில் சாதனை புரிந்து புகழும் பணமும் அந்தஸ்த்தும் சேர்த்திருந்தாலும் நிம்மதியின்றித் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுக்கின்றனர். காரணம் அவர்கள் குறிப்பிட்டத் துறையில் வெற்றி பெற்றுள்ளனரே தவிர உலகை வெல்லவில்லை.

"தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தமாகவும் சுவிஷேசத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதனை இரட்சித்துக்கொள்ளுவான்" (மாற்கு-8:35) என்றார் இயேசுக்கிறிஸ்து. ஆம் தன் சுய ஆசையை நிறைவேற்றி வெற்றி பெற முயல்பவன் அப்படியே தன் வாழ்க்கையை இழந்து போவான்.

விதையானது மண்ணில் விழுந்து அழிவுற்றால்தான் அது மரமாகி நூறாகவும் ஆயிரமாகவும் பலன் தர முடியும். இதுதான் மனித வெற்றிக்கு அடிப்படை என்றார் இயேசு.

"கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும் " (யோவான் -12:24)

சுயம் சாகவேண்டியதே உலகை வெல்ல அடிப்படைத் தேவையாகும். பொருள் ஆசை, புகழ், மோகம், இச்சை, பெருமை இத்தகையக் குணங்கள் அழிவுற வேண்டும். இவற்றை அழிக்காதவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று கூறுவது பொய்யாகும்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் விசுவாசிகளில் பலரும் ஊழியர்கள், பாஸ்டர்கள், ரெவரென்ட்கள், கன்வென்ஷன் பிரசங்கிகள் பலரும் பணம், பொருள், புகழ், ஆசை, இச்சைகளை வைத்துக்கொண்டு பிற மதத்தினரும் கூட அருவருக்கும் செயல்பாடுகளையும் செய்கின்றனர்.

சினிமா நடிகர்களைப் போல தங்களுக்குத் தாங்களே போஸ்டர்களும் டிஜிட்டல் பேனர்களும் அடித்துப் பகட்டாகத் தங்களை வெளிப்படுத்தும் ஊழியர்கள் இன்னும் சுயத்தை அழிக்காதவர்களே. சாதாரண  மனிதருக்குள்ள தாழ்மை கூட இல்லாத இவர்கள் எப்படி ஒரு வெற்றி வாழ்க்கைக்கு விசுவாசிகளை வழி நடத்த முடியும்? உலகத்துக்குரிய செயல்களையே செய்து உலக ஆசீர்வாதத்தையே  இவர்கள் போதிக்கின்றனர். காரணம் "அவர்கள் உலகத்துக்குரியவர்கள். ஆகையால் உலகத்துக்குரியவைகளையே பேசுகிறார்கள்" (1 யோவான் - 4:5)

இந்தியாவின் நம்பர் ஒன் வார இதழாக இருந்த "குமுதம்" அன்று வாரம் 10 லட்சம் பிரதிகள் விற்பனையானது. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் திரு. சின்ன அண்ணாமலை என்பவர். ஆனால் அவர் இறந்த பின்புதான் அவரது முகம் பொது மக்களுக்குத் தெரிய வந்தது. அதுவரை அவர் தன்னை மறைத்துத் தாழ்மையாய் வாழ்ந்தார். ரேஷன் கடைக் கியூ வில் கூட அவரே காத்து நின்று பொருட்களை வாங்குவாராம். காரணம் பகட்டு ஆடம்பரம் இல்லாமலிருந்தால்தான் மக்களைப் படிக்க முடியும் என்றார் அவர். ஆனால் இன்று கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்க வேண்டிய ஊழியர்கள் பலர் ஆயிரம் பிரதி கூட விற்பனை ஆகாதத் தங்கள் பத்திரிகையின் அட்டையில் வருடம் இரு முறையாவது தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் வெளிச்சம் போட்டுக் காட்டி பெருமையடைந்து கொள்கின்றனர்.

ஊழியக்காரர் கூறும் கருது விசுவாசிகளுக்கு வேண்டியதே தவிர ஊழியக்காரரது குடும்பத்தைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அறிவிக்க முயல்வது பெருமையின் அடையாளமும் வாரிசு ஊழியத்தின் அடிதளமிடுவதுமேயாகும்.  

"உங்களை சுற்றிலும் இருக்கிற புற ஜாதிகளுடைய நீதி நியாயங்களின்படியாவது நடக்க வேண்டாமா?" (எசேக்கியேல் -5:7). அதாவது நம்மைச் சுற்றி வாழும் பிற மத மக்களுக்குள்ள நீதிகள் கூட இல்லாமல் இருந்துகொண்டு எப்படி கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்? ஏற்கெனவே அவர்கள் உங்களைவிட நற்குணங்கள் உள்ளவர்களாகத்தானே இருக்கின்றனர்? "இந்தியாவை இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்" எனக் கூச்சலெழுப்பும் இவர்களே இன்னும் இயேசுவுக்குச் சொந்தமாகவில்லையே?

எனவே சுயம் பகட்டு அழிய வேண்டும். அதுவே உலகை ஜெயிக்க அடிப்படையாகும் 

அன்று மோசே பார்வோனின் மகளின் மகனாக அரண்மனையிலேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் செல்வம், செழிப்பு, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதனைவிடத் தன்  மக்களுக்காக அனைத்தையும் இழக்கத் தயாரானார். ஆம் அவர் தன்  சுயத்தை அழித்தார். அநித்தியமான் உலக இன்பங்களைவிட மேலானவைகளையே நாடினார். கோதுமை மணியாக மடியத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அரண்மனை வாழ்கையைத் துறந்து வறண்ட பூமியில் ஆடு மேய்க்கும் தொழிலைத் தெரிந்துகொண்டார். இதனை வேதம் பின்வருமாறு கூறுகிறது:

"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனின் குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையேத் தெரிந்துகொண்டு இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களை விட கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாகியமென்று எண்ணினான்." (எபிரெயர் - 11:24-26)

இந்த மோசே தான் தேவனால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டார். "என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்" எனத் தேவனால் பாராட்டப்பட்டார். (எண்ணாகமம் 12:7) தேவன் அவரோடு முகமுகமாய்ப் பேசினார். அவர் தேவனுடையச் சாயலைக் கண்டார். "என் தாசனாகிய மோசே" என்று தேவனால் அழைக்கப்பட்டார்.  (எண்ணாகமம் 12:8) விதையாக மடியும்போதே விருச்சமாக எழ முடியும் எனும் இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு முன் உதாரணமானார்.  

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதற்கு மேலும் ஒரு உதாரணம். எல்லாவற்றுக்கும் மேலாக  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் சிலுவையின் மரணமட்டும் தன்னைத் தாழ்த்தியதால் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக  அவரை உயர்த்தினார். (பிலிப்பியர் 2:8-9) எனவேதான் அவர் ஜெய கிறிஸ்துவாக நான் உலகை ஜெயித்தேன் என அறிக்கையிட்டார்.

அன்பானவர்களே நம்மிடம் உலகபிரகாரமாக பலத் திறமைகள் இருக்கலாம். இவற்றை பிறர் பாராட்டலாம் அரசு விருதுகள் கிடைக்கலாம் ஆனால் "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையாக எண்ணுகிறேன்" (பிலிப்பியர் 3:11) எனப் பவுல் அடிகளைப்போல விட்டு விடும் போதுதான் நாம் உலகை ஜெயிக்கிறோம். அப்போது நாமும் "நல்லப் போராட்டத்தைப் போராடினேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப் பட்டிருக்கிறது" (2 திமோத்தேயு 4:7;;,8) என விசுவாசத்தோடு கூற முடியும்.

ஜெயிப்பவனுக்கு இந்த உலகம் சான்றிதழ்கள் கோப்பைகள் பண முடிச்சுகள் பட்டங்கள் கொடுத்து கௌரவிக்கும். ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெயிக்கிறவனுக்கு என்ன கிடைக்கும்? அதனை வேதம் பின்வருமாறு கூறுகிறது:

தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருச்சதின் கனி உண்ணக் கொடுக்கப்படும் (வெளி 2:7)

அவனை இரண்டாம் மரணம் சேதப்படுத்துவதில்லை (வெளி 2: 11)

இயேசு பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல அதிகாரம் கொடுக்கப்படும் (வெளி 2: 26) 

வெண் வஸ்திரம் உடுத்தப்படும் (வெளி 3: 5)   

ஜீவ புத்தகத்திலிருந்து அவனது பெயர் அழிக்கப்படமாட்டது (வெளி 3: 5)  

இயேசு கிறிஸ்து ஜெயம் பெற்று பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடு கூட இருப்பதுபோல ஜெயிப்பவனும் இயேசு கிறிஸ்துவோடு கூட சிங்காசனத்தில் உட்காரும்படி தேவன் அருள் செய்வார்  (வெளி 3: 21)

ஆம். "கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால் அவருடனே கூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்" (ரோமர் 6:8)       



     

                     

              
     

Tuesday, May 06, 2014

Three Important Words : (3)Salvation - by Zac Poonen (Tamil)

Salvation From The Love Of Money - Zac Poonen (Tamil)

God Placed Us In Christ by Zac Poonen (Tamil)

Christ Is Building His Church By Zac Poonen (Tamil)

The Holy Spirit Brings Us Freedom - Zac Poonen (Tamil)

Prophecy And Prayer - Zac Poonen (Tamil)

Using The Name Of Jesus By Zac Poonen English and Tamil Christian Messages

Inspirational Easter Quotes

Inspirational Easter Quotes

Easter brings us close to our family and friends, giving us another reason to celebrate the joy and pleasure of unison. Observed throughout the globe by the Christian community, Easter is welcomed with immense vigor, grandeur and magnificence. People do not miss any chance to be together with friends and relatives. Hence, parties and gifts form the main source of celebrations on Easter. While presenting gifts, you can add a touch of inspiration by including some inspirational quotes that would motivate the recipient to think greatly about the significance of Easter. Given here are some inspirational quotations and sayings that will help you move beyond your sins and look forward for salvation.

Motivational Quotations On Easter
  • Easter says you can put truth in a grave, but it won’t stay there. - Clarence W. Hall
  • Easter is a time to rejoice, be thankful, be assured that all is forgiven so life extends beyond the soil of earth. - Byron Pulsifer
  • The great gift of Easter is hope – Christian hope which makes us have that confidence in God, in his ultimate triumph, and in his goodness and love, which nothing can shake. - Basil C. Hume
  • Prejudices subsist in people's imagination long after they have been destroyed by their experience. - Ernest Dimnet
  • Easter is the demonstration of God that life is essentially spiritual and timeless. - Charles M. Crowe
  • On Easter Day, the veil between time and eternity thins to gossamer. - Douglas Horton
  • But from this earth, this grave, this dust, My God shall raise me up, I trust. - Walter Raleigh
  • You give but little when you give of your possessions. It is when you give of yourself that you truly give. - Kahlil Gibran
  • We live and die; Christ died and lived! - John Stott
  • The resurrection gives my life meaning and direction and the opportunity to start over no matter what my circumstances. - Robert Flatt
  • Life is a great big canvas, and you should throw all the paint on it you can. - Danny Kaye
  • Think like a man of action, act like a man of thought. - Henri Louis Bergson
  • God loved the birds and invented trees. Man loved the birds and invented cages. - Jacques Deval
  • True silence is the rest of the mind, and is to the spirit what sleep is to the body, nourishment and refreshment. - William Penn
  • Earth's saddest day and gladdest day were just three days apart! - Susan Coolidge
  • The joyful news that He is risen does not change the contemporary world. Still before us lie work, discipline, sacrifice. But the fact of Easter gives us the spiritual power to do the work, accept the discipline, and make the sacrifice. - Henry Knox Sherrill
  • Those have a short Lent, who owes money to be paid at Easter. - Benjamin Franklin




Monday, February 10, 2014

மெய்யான கிறிஸ்துமஸ்

மெய்யான கிறிஸ்துமஸ் 


(இக்கட்டுரை "ஆதவன்" டிசம்பர் 2013 இதழில் பிரசுரமானது)


- எம். ஜியோ பிரகாஷ்  

பொய்யும் , கபடமும், ஏமாற்றும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று  ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட உலக மனிதர்களது போக்கிலேயே சென்றுகொண்டிருக்கின்றனர். ஜெபம், வழிபாடு, ஜெபக்கூட்டங்கள், காணி க்கையளிதல்  போன்ற செயல்பாடுகள் இருந்தாலும் ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரிடமும் ஆவிக்குரிய நற்குனங்களி ல்லை.

"எல்லோரும் இப்படிதானே வாழ்கிறார்கள்?" எனத் தங்களை நியாயபடுதுவோ ரும், "வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி எவரும் உலகில் வாழமுடியாது" எனக் கூறும் பலரும் உலகப் பிரகாரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டேத் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூரிக்கொள்கின்றனர்.

இதனைப் பற்றிய ஒருத் தெளிவை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் பெற வேண்டியது இன்றையச் சூழ்நிலையில் அவசியமாகிறது.

"எல்லோரும் இப்படித்தான் வாழ்கிறார்கள்" என்றுக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் மனிதர்கள் பலரும் தங்களைக்கொண்டே  மற்றவர்களையும் அளவிடுகின்ற்றனர். காமாலைக் கண்ணனுக்குக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். 

விபசார எண்ணமும் செயல்பாடுகளும் உள்ளவனுக்கு எல்லோரும் தன்னைப்போல விபச்சாரம் செய்வதாகவும், ஏமாற்றும், புரட்டும், லஞ்சமும் பித்தலாட்டமும் செய்பவனுக்கு எல்லோரும் அதுபோலச் செய்வதாக்கவும்தான் தெரியும். ஆனால் இது ஒரு மாய எண்ணமே.

இதுபோலவே பலரும் வேதத்தில் கூறியுள்ளபடி யாரும் வாழ முடியாது எனக் கூறுகின்றனர். தேவன் தனது பிள்ளைகளுக்கு வாழ முடியாத ஒரு வழியைக் காட்டுவாரா என அவர்கள் எண்ணிப்பாரப்பதில்லை.

தனது ஒரு வயதுக் குழந்தையை எந்தத் தகப்பனும் ஆறு இட்லிகளைத் தின்ன வற்புறுதமாட்டான். அல்லது ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் தெரு நல்லியில்போய் ஒரு குடம் தண்ணீர் எடுத்துவரச்  சொல்லமாட்டான். தனது குழந்தையால் எதைச் செய்ய முடியும் என்றும் எதைச் செய்ய முடியாது என்றும் ஒரு உலகத் தகப்பனுக்கேத் தெரியும்போது பரமத் தகபனுக்குத் தனது குழந்தையின் சக்தி என்னவென்று தெரியாமலிருக்குமா?   .

ஒருமுறை ஒரு பிரசங்கியாரே  இப்படி பிரசங்கிக்கக் கேட்டேன்.. "இயேசு கிறிஸ்து தேவ குமாரன், எனவே அவர் பரிசுத்தமாய் வாழ்ந்தார். நாம் சாதாரண மனிதர்கள் எனவே அவரைப்போல வாழ முடியாது"

இயேசு கிறிஸ்துக் கூறினார், " பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும்,  யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (அப்போஸ்தலர் -1:8)

பரிசுத்த ஆவி நம்மில் வரும்போது இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக வாழ முடியும் என்பதால்தான் இயேசுக் கிறிஸ்து இப்படிக் கூறினார்.

இயேசுக் கிறிஸ்துவின் வசனங்களை விசுவாசிப்போமெனில், அந்த வார்த்தைகள் உண்மையுளளவை என்று .  ஏற்றுக் கொள்வோமெனில் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மால் முடியும்.

பழைய ஏறபாட்டுப பரிசுத்தவான்கள் தவிர புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை எண்ணிப் பாருங்கள். இவர்களால் ஒரு பரிசுத்தமுள்ள சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடிந்ததென்றால் ஏன் நம்மால் அப்படி   வாழ முடியாது?

எனவே, இத்தகைய எண்ணங்களும் போதனைகளும் மாயையே. இப்படிப் "பொய்யான மாயையைப் பின்பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்" (யோனா - 2:8). தேவனது வார்த்தைகளை ஏற்க மறுப்பது பொய்யான மாயையைப் பின்பற்றுவதுதான். இது தேவ கிருபையை நாம் இழக்கச் செய்கிறது. 

அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களை உலகத்திலிருந்து அழிக்கும் எண்ணம்கொண்டு அலைந்தவர். ஆனால் அததகையக்  கொலைவெறி கொண் டப் பவுலைத்  தேவன் சாந்த குணமுள்ளவராக மாற்றினார். இயேசு கிறிஸ்துவின் குணநலன்களைக் கொண்டவராக மாற்றினார். எனவேதான் அவர், "எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது:" (1 கொரிந்தியர் 2:16) என்று கூறுகிறார். மேலும், "நான் கிறிஸ்துவைப் பின் பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்"  (1 கொரிந்தியர் 11:1) என்று நமக்கும் வழி காட்டுகிறார்.

 பவுலை இத்தகையக் குணமுள்ளவராக  மாற்றிய தேவன் நம்மை ஏன்  மாற்ற முடியாது? தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லையே?

யூதர்களால் கல்லெறியுண்டு மரணமடையும் வேளையிலும் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்து, இயேசு கிறிஸ்து  சிலுவை மரணமடையும்போது தன்னைச் சிலுவையில் அறையும்போது தன்னைச சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னிக்க பிதாவிடம் பரிந்து பேசி ஜெபித்ததைப்பொல பரிசுத்த ஸ்தேவானால் ஜெபிக்க முடிந்தது. "ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்" (அப் - 7:60)  என்பது கிறிஸ்துவைப் பிரதிபலித்த  வாழ்க்கைதானே ?

இயேசு கிறிஸ்துவைபபோல வாழ  உண்மையான மன விருப்பம்கொண்டு வாழவோமெனில்   தேவனது   பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.

இன்று பிரசங்கி மார்களும் பல ஊழியர்களும், விசுவாசிகளும் தேவன் நோயைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கின்றனர்; பேயை ஓட்டுவார்  என்று விசுவாசிக்கின்றனர்; அற்புத அதிசயங்களை தேவன் செய்வார் என்று   விசுவாசிக்கின்றனர்; ஆனால் அவரைப்போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்வார் என்பதை மட்டும் விசுவசிக்க மறுக்கின்றனர்.

இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்ற வேண்டுமானால் பொருளாதார இழப்பைச சந்திக்க வேண்டியிருக்கும் எனும் எண்ணமே. தங்கள் மனம் இந்தப்   பொருளாதார இழப்பை ஏற்றுக்கொள்ளது யென்பதால் பலரும் ஏசுக் கிறிஸ்துவின் போதனையின்படி வாழ முடியாது என்று தங்களைத  தாங்களே நியாயப் படுத்திக்கொள்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி அற்புத அதிசயங்கள் நடந்ததாகக் காண்பித்தால் அதிகக்  கூட்டமும் காணிக்கையும் சேர்கிறது. அவரைப்போல வாழ்வதால் பெரிதாக என்ன கிடைத்துவிடும் எனும் எண்ணமே இத்தகைய மனிதர்களின் ஆழ்மனதில் நிலைகொண்டுள்ளது.

ஒரு ஐ. ஏ. எஸ் அதிகாரி தனது பிள்ளைத தன்னைப்போல ஒரு .ஐ. ஏ. எஸ் அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறார்.  ஒரு மருத்துவர் தனது பிள்ளை மருத்துவராக வேண்டுமென விரும்புகிறார். ஏன் ஒரு  சாதாரண வேலை செய்யும் மனிதன் கூடத்  தனது பிள்ளை  மேலான ஒரு   உயரநத   பதவியை  அடைய வேண்டுமென விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் மன விருப்பமும் இதுதான் 

அவர் பிதாவோடு இணைந்திருந்ததைபபோல   நாமும்  இணைந்திருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். " நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாம் நம்மில் ஒன்றாய் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்" (யோவான் - 17:21) என்று பிதாவிடம் நமக்காக விண்ணப்பம் செய்தார்.

இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தில் நமக்கு விசுவாசம் இருக்குமானால்  நம்மையும் அவர் தன்னைப்போல பரிசுத்தம் பண்ணுவார் என்பதையும் விசுவாசிக்க முடியும். இயேசு கிறிஸ்துவைப்போல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு அதனை வாஞ்சித்து வாழ்வொமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.

தேவனது வல்லமையென்பது   நோயைக் குனமக்குவதிலும் பேயை ஓட்டுவதிலும்  அற்புத அதிசயங்களைச செய்வதிலும் வெளிப்படுவதில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் இவற்றைச செய்ய முடியும். பார்வோன்முன் நின்ற மந்திரவாதிகளும் மோசே மூலமாக கர்த்தர் செய்த அதிசயங்களுக்கு இணையான அதிசயங்களை  முதலில்   செய்தனர்.(யாத்திராகமம் - 7)

எனவே மெய்யான வல்லமை எனபது நமது உள்ளான மனிதனில் பெரிய மாற்றத்தை அடைவதும் அதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்வு வாழ்வதுமேயாகும். இத்தகைய ஒரு சாட்சி வாழ்வை கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கில்லதவர்கள் வாழ முடியாது.

சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் அனைவருக்கும் பொதுவான விஷயங்கள். இயேசு கிறிஸ்துவைப் போன்ற சாட்சி வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு இவை சவாலாக இருக்கும். ஆனால் கிறிஸ்து இத்தகைய துன்பங்களைக் கடந்தேச் சென்றார்.. " எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான் ஆசாரியன்" (எபிரெயர் - 4:15) இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரிகை.  இயேசு கிறிஸ்துவிடம் இந்த வல்லமையையே முதன் முதலில் கேட்போம். இத்தகைய சாட்சி வாழ்வுக்கு வழி காட்டவும் உதவிடவுமே  வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் இயேசு கிறிஸ்துவாக இந்த பூமியில் அவதரித்தார்.

இந்த கிறிஸ்துமஸ் நாளில் இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தேவனது பரிசுத்தக் கரத்தில் ஒப்புவிப்போம். இதுவே கிறிஸ்து நம் உள்ளத்தில்   பிறக்கும் மெய்யான கிறிஸ்துமஸாக இருக்கும்.

  

 

 





  



    

  




சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...