"விதைகளின் உள்ளே" 🌳
தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர். வீடுகளில் வேலைசெய்தும் மிகக் கடுமையான தொழில்களில் ஈடுபட்டும் வரும் பலர் தங்களுக்குக் கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். நாம்தாம் இப்படி ஆகிவிட்டோம் நமது குழந்தைகளாவது எதிர்காலத்தில் நல்ல நிலையில் வரவேண்டுமென்னும் கனவுடன் உழைக்கின்றனர்.
ஆம் அன்பானவர்களே, இதைவிட மேலானவராக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். உலகத் தாய் தகப்பன்மார் தங்களது இல்லாமையில் தியாகங்கள் செய்கின்றனர். ஆனால் கிறிஸ்துவோ தனது செல்வ நிலையை நமக்காகத் தியாகம் செய்து நம்மைப்போலானார்.
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 ) அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?
வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப் பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன் வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்? அத்தகைய பெற்றோர்களை நாம் இந்த உலகத்தில் பலவேளைகளில் சந்திக்கின்றோம் அல்லவா? சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியில், படிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தைத் துன்மார்க்கமாய் மகன் செலவளித்ததால் ஒரு தாய் மனம்பொறுக்காமல் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று வாசித்தேன்.
அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவேதான் வேதனைப்படுவார். நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.
அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன். என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )
Let us pray:
"Dear Jesus, I have lived carelessly, failing to recognize Your immense love. Forgive me. Today, I surrender myself to live a life pleasing unto You. Wash away my sins and accept me. Grant me Your Holy Spirit so I may continue to walk in a way that is acceptable in Your sight."
No matter how great a sinner we are, Christ is ready to accept us. He does not want His sacrifice for us to be in vain. Speak to Him openly in your loneliness. He will grant you a deep spiritual experience and accept you as His son or daughter.
“But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name.” (John 1:12, KJV)
Gospel Message by: Bro. M. Geo Prakash.jpg)
No comments:
Post a Comment