❤️லொன்ஜினஸ் (Longinus)

          

யேசு கிறிஸ்துவின் விலாவினை ஈட்டியால் குத்திய ரோம படைவீரரின் பெயர் லொன்ஜினஸ் என்பது. அப்போஸ்தாலிக் மற்றும் சில இன்றைய கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் இவர் கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பியவர் என்றும்  குறிப்பிடப்படுகிறார். இவரது பெயர் முதன்முதலில் நிக்கோதேமு எழுதிய சுவிசேஷத்தில் (ANCIENT CHIRISTIAN WRITINGS) குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மரபில் இந்த ஈட்டி “புனித உருவிசா” என அழைக்கப்படுகிறது, மேலும் நிக்கோதேமு சுவிசேஷம்  யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலுவை மரண நிகழ்ச்சியோடு ஒத்திருக்கின்றது. இந்தப் போர் வீரனின் செயல் இயேசுவின் ஐந்து புனித காயங்களில் கடைசியாக நிகழ்ந்த காயத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

இந்தப் போர்வீரனுக்கு பரிசுத்த  வேதாகமங்களில் பெயர் வழங்கப்படவில்லை; ஆனால் சில பழங்கால கிறிஸ்தவ எழுத்துக்களில் அவர் ஒரு நூற்றுவர் தலைவர் என்று விவரிக்கப்படுகிறார். அவர் “இயேசு தேவனுடைய மகன்” என்று அறிக்கையிட்டு முதலாவதாக மாறிய ரோமர் என்று கருதப்படுகிறார். காலப்போக்கில் லொன்ஜினஸின் பற்றிய செய்திகள் வளர்ந்து, இயேசுவின் சிலுவை மரணத்துக்குப்பின் அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என்றும் கூறப்பட்டுள்ளது.  

பத்து நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டச் சில குறிப்புகளில் இவரை “மங்கல்பார்வையாளர்” எனக் குறிப்பிடும் குறிப்புகள் உள்ளன. லொன்ஜினஸுக்கு பார்வை குறைபாடு இருந்தது எனவும்  அவர் இயேசுவை ஈட்டியால் குத்தியபோது தெறித்த பரிசுத்த இரத்தம் அவரது கண்களில் பட்டதால் கண்களுக்கு அதிசயமாகக்   குணம் கொடுத்தது எனவும்  இதனடிப்படையில் லொன்ஜினஸ் இயேசுவில் விசுவாசம் கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வாஷிங்டன், டி.சி.–இல் உள்ள ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் “புனித யோவான் குமார சபை” லொன்ஜினஸின் எலும்புத் துண்டைப் புனிதப் பொருள் எனப் பாதுகாத்து வருகின்றது.  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...