இயேசு கிறிஸ்துவின் விலாவினை ஈட்டியால் குத்திய ரோம படைவீரரின் பெயர் லொன்ஜினஸ் என்பது. அப்போஸ்தாலிக் மற்றும் சில இன்றைய கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் இவர் கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பியவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பெயர் முதன்முதலில் நிக்கோதேமு எழுதிய சுவிசேஷத்தில் (ANCIENT CHIRISTIAN WRITINGS) குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மரபில் இந்த ஈட்டி “புனித உருவிசா” என அழைக்கப்படுகிறது, மேலும் நிக்கோதேமு சுவிசேஷம் யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலுவை மரண நிகழ்ச்சியோடு ஒத்திருக்கின்றது. இந்தப் போர் வீரனின் செயல் இயேசுவின் ஐந்து புனித காயங்களில் கடைசியாக நிகழ்ந்த காயத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

No comments:
Post a Comment