'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,174 💚 ஏப்ரல் 27, 2024 💚 சனிக்கிழமை 💚
"பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். "And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature." ( Mark 16 : 15 ) CONTACT ADDRESS :- 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India Cell-96889 33712 & 7639022747.
இடறல்
முற்றிலும் தேவனையே சார்ந்து வாழவேண்டும்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,173 💚 ஏப்ரல் 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
தேவன் தனது மக்கள் தங்கள் சுய பெலத்தையோ தங்களது செல்வத் திரட்சியையோ நம்பி வாழாமல் தன்னையே முற்றிலும் நம்பி தன்னையே சார்ந்து வாழவேண்டும் என விரும்புகின்றார். அப்படி வாழ்ந்தவர்தான் தாவீது. அதுதான் அவரது வளர்ச்சிக்குக்காரணம். ஆனால் இப்போது தாவீதுக்கு ஒரு விபரீதமான ஆசை சாத்தானால் ஏற்படுகின்றது. ராஜாவாகிய தனது கீழ் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஒரு ஆசை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று தனக்குக்கீழ் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதில் ஒரு அற்பப்பெருமை எண்ணம். இரண்டாவது எதிரிகள் போரிட்டு வருவார்களென்றால் போருக்குப் போகத்தக்க மக்கள் தன்னிடம் எவ்வளவுபேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவது.
தனது வாழ்வின் துவக்கமுதல் தேவனையே சார்ந்து வாழ்ந்தவர்தான் தாவீது. ஆடுகளுக்குப் பின்னாகத்திரிந்த ஒரு ஆட்டு இடையன். ஆனால் அவரைத் தேவன் ராஜாவாக உயர்த்தி இஸ்ரவேல்மீதும் யூதாவின் மீதும் ஆட்சிசெய்யவைத்தார். ஆனால், தாவீது இங்கு தனது பழைய விசுவாச நிலையிலிருந்து சற்று பின்வாங்கிவிட்டார். எந்த ஒரு ஆயுதமும் கையில் இல்லாமல் ஒரு கூழாங்கல்லால் மட்டுமே கோலியாத்தை வெற்றிகொள்ள தேவன் தனக்குத் துணைநின்றதை அவர் இப்போது மறந்துவிட்டார். ஆனால் இன்று தனது பலத்தை அறிய தனது மக்களை எண்ணிக் கணக்கிடத் துணிந்துவிட்டார். அதாவது தேவன்மேல் இருந்த பழைய விசுவாசம் அவருக்குக் குறைந்துவிட்டது. இது தேவனது பார்வைக்கு ஆகாத ஒரு செயலாகி விட்டது.
முன்புஅவர் தனது சுய பலத்தை நம்பாமல் தேவனையே நம்பி கோலியாத்தைஎதிர்த்தார்."நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்." ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு கோலியாத்தைக் கொன்றார்.
எனவே மக்களைக் கணக்கிடும்படி தாவீது செய்த "இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்." ( 1 நாளாகமம் 21 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர்கள் செய்யும் தேவனுக்கு விரோதமானச் செயல்களை மக்களையும் பாதிக்கும் என்பது இங்கு உணர்த்தப் படுகின்றது. எனவே தகுந்த ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.
அன்பானவர்களே, தேவன் நமது வாழ்வில் பல அற்புதங்கள் செய்திருக்கலாம், அதிசயமாக நம்மை வழிநடத்தியிருக்கலாம் ஆனால் அப்போது நாம் நமது விசுவாசத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று நம்மை நாமே சோதித்து அறியவேண்டியது அவசியம். தேவன், நாம் அவரையே சார்ந்து வாழவேண்டுமென விரும்புகின்றார். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நாம் விசுவாசத்தைவிட்டு நழுவி விடுவோம்.
எனவே சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்க்கவேண்டும். ஒருவேளை சூழ்நிலையை மாற்றாவிட்டால் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றுவார். இது நம்மைப்பார்க்கும் மற்றவர்களுக்கு அதிசயம்போலத் தெரியும்.
எனவே நூறு சதம் தேவனையே நம்பிவாழும் விசுவாச வரம்வேண்டி தேவனிடம் மன்றாடவேண்டியது நமது கடமை. அதுவே மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனித்துவம் மிக்கவர்களாக அடையாளம் காட்டும். தேவன்மீது மற்றவர்களும் விசுவாசம்கொள்ள இதுவே வழியாக இருக்கும்.
தைரியமாய் அவரிடம் சேர்வோம்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,172 💚 ஏப்ரல் 25, 2024 💚 வியாழக்கிழமை 💚
உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,171 💚 ஏப்ரல் 24, 2024 💚 புதன்கிழமை 💚
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,170 💚 ஏப்ரல் 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )
நமது ஜெபம் தேவனால் கேட்கப்படவேண்டுமானால் தேவன் கூறும் ஒரு நிபந்தனை நாம் பிறரது குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பதே. அதாவது பிறருடன் இணக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும். வெறுப்பையும் கசப்பையும் பிறர்மேல் வைத்துக்கொண்டு நாம் ஜெபிப்பது அர்த்தமற்ற ஜெபம். "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;" ( லுூக்கா 11 : 4 ) என்று கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்.
இப்படி பிறர்மேல் எந்தக் கசப்புமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்து வாழ்பவர்களே நீதிமான்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இத்தகைய "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.
இப்படித்தான் தானியேல் தீர்க்கத்தரிசி ஜெபித்துக் கொண்டிருந்தார். தனது பாவங்களுக்காகவும் மக்களது பாவங்களுக்காகவும் தானியேல் விண்ணப்பம் செய்தார். இதனை நாம், "இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்." ( தானியேல் 9 : 20 ) என்று தானியேல் கூறுவதிலிருந்து அறியலாம்.
"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்ற வசனத்தின்படி தானியேல் ஊக்கமாய் "ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன் வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். ( தானியேல் 9 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது தானியேலின் ஜெபம் தேவ சந்நிதியை எட்டிய அதே நொடியில் தேவன் காபிரியேல் தூதன் மூலம் அந்த ஜெபத்துக்குப் பதிலையும் கொடுத்தனுப்பினார். "நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்;" ( தானியேல் 9 : 23 ) என்று காபிரியேல் தூதன் கூறுகின்றார்.
அன்பானவர்களே, தானியேல் போல நாம் நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் அதே வேளையில் தானியேலைபோல தேவனுக்கு முன்பாகவும் உலக காரியங்களிலும் குற்றமற்றவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். ( தானியேல் 6 : 22 ) அப்படி நாம் பரிசுத்தமாய் நம்மைக் காத்துகொண்டு ஜெபிக்கும்போது தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் தருவார். "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு" இப்படிச் செய்யுங்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நாம் நமது வியாதிகளிலிருந்தும் , பிரச்சனைகளிலிருந்தும் விடுதலையடைவோம்.
தானியேலின் ஜெபத்துக்கு ஜெபித்த அதே நேரம் பதிலளித்த தேவன் நமது ஜெபத்துக்கும் நிச்சயம் பதிலளிப்பார். ஆம், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,169 💚 ஏப்ரல் 22, 2024 💚 திங்கள்கிழமை 💚
இரவிலே நடந்தால் இடறுவான் .
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,168 💚 ஏப்ரல் 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
எப்போது வாக்குத்தத்தங்களுக்கு உரிமையடைகின்றோம்?
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7
" ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11, வியாழன் "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...
-
நம்மை விசாரிக்கிற தேவன் ! சகோ. எம். ஜியோ பிரகாஷ் ந மது தேவன் நம்மை விசாரிக்கி...
-
சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவ பெலனா அல்லது பைத்தியமா ? சகோ. டி . ஜான் ஜெயசீலன் இயேசு கிறிஸ்துவின் ரெகோபோத் ஊழியங்கள் சாத்த...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,397 'ஆதவன்' 💚டிசம்பர் 05 , 2024. 💚வியாழக்கிழமை "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்...
-
ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு? - சகோ. எம். ஜியோ பிரகாஷ் தே வன் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் எனும் மூன்று கூறுள்ளவனா...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,573 'ஆதவன்' 💚மே 29 , 2025. 💚 வியாழக்கிழமை "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோல...
-
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் சகோ . எம் . ஜியோ பிரகாஷ் (இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பி...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,413 'ஆதவன்' 💚டிசம்பர் 21 , 2024. 💚சனிக்கிழமை "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக...
.jpeg)



.jpeg)
.jpg)
.jpg)
