இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, June 09, 2023

நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்

ஆதவன் 🔥 864🌻 ஜூன் 10, 2023  சனிக்கிழமை

"என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 :  23 )


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு கட்டளைகளையும் பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி பலிசெலுத்துவது ஒன்றுதான்   தேவனுக்கு   ஏற்புடைய  செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர்தேவனுக்குப் பலி செலுத்துவதற்குக் காட்டிய முக்கியதுவத்தை   தேவனுடைய வாக்குக்குக் கீழ்படிவதற்குச் செலுத்தவில்லை. 

அதாவது அவர்கள் பல கட்டளைகளையும் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். குறிப்பாக,   பலியிடுவது   சம்பந்தமான   கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்லபாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக்குறித்தும் நான்அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும் என்  வாக்குக்குச் செவிகொடுங்கள்." எரேமியா 7 :  22 )

சில வீடுகளில் மகன் தாய் தகப்பனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது வேண்டிய உறவினர்களை வைத்துப் பேசிப்பார்ப்பார்கள். அதற்கும் மகன் கீழ்ப்படியாமல் தாய் தகப்பனுக்கு விரோதமாகச் செயல்பட்டால் அந்தத் தாயும் தகப்பனும் மனம் வெதும்பி, "நீ என் மகனுமில்லை; நான் உனக்குத் தாயுமில்லை" எனக் கூறுவதுண்டு. அதுபோலவே தேவனும் கூறுகின்றார்,  "என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" என்று. செவிகொடுக்கவில்லையானால் நீங்கள் எனது மக்களல்ல என்று பொருள். 

அன்பானவர்களே,இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றதுபலகிறிஸ்தவ சபைகளில்   வருமானத்தில்  பத்தில் ஒன்று  காணிக்கைக் கொடுப்பது வலியுறுத்தப்படுவதன் அளவுக்கு  இயேசு கிறிஸ்து கூறிய தேவனுக்குக் கீழ்படிவதைக்குறித்துப் போதிப்பதில்லை.   இரக்கம்நீதி   இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது  கிடையாது. 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது

கிறிஸ்துவின் இந்த கட்டளைகளுக்கு   முரணான   வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத்  தடையானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். . ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித நேயத்துக்குக் கொடுப்போம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே  கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, June 08, 2023

கிரயத்துக்குக் (விலைக்கு) கொள்ளப்பட்டீர்களே....!

ஆதவன் 🔥 863🌻 ஜூன் 09, 2023  வெள்ளிக்கிழமை


"கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்." ( கலாத்தியர் 5 : 24 )

கிறிஸ்து இயேசு மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றவர்களது மன நிலையினை இன்றைய வசனம் விளக்குகின்றது. நாம் நமது பாவங்கள் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது அவருடையவர்கள் ஆகின்றோம். அதாவது, அப்போது அவர் நம்மை தனது இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார் என்று பொருள்.  

இதனை அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிரயத்துக்குக் (விலைக்கு)  கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 ) என்று கூறுகின்றார். எனவே நாம் கிறிஸ்துவினுடையவர்கள். இப்படி கிறித்துவினுடையவர்களான நாம் நமது உடலையும் அதன் ஆசைகளையும் கொன்றவர்கள் ஆகின்றோம். அதாவது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல நமது உடலையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்டோம். 

நாம் உண்மையாகவே ஆவிக்குரிய வாழ்வு வாழ்கின்றவர்களென்றால் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது இந்தக் குணம்தான். நமது உலக ஆசைகள் குறையும், உடலின் இச்சைகள் மறையும். இப்படி நான் ஒருமுறை ஒரு நண்பரிடம் கூறியபோது அவர் அப்படியானால் ஆவிக்குரிய சபைப் போதகர்கள் ஏன் விபச்சாரப் பாவத்திலும், பெண்கள் சம்பந்தமான வழக்குகளிலும்,  பண ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு போலீஸ் விசாரணையிலும் சிக்கியுள்ளனர்? என்று என்னிடம் கேட்டார். 

அன்பானவர்களே ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் எல்லோரும் ஆவிக்குரியவர்கள் அல்ல. அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெறாமலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்பவர்கள். இதுவே கிறிஸ்தவத்தையும் ஆவிக்குரிய மேலான நிலையினையும் கிறிஸ்தவர்களே அறியமுடியாமல் போகக் காரணம். பிரபல ஊழியர்களும்கூட இப்படி இருப்பதால் கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர் கூட கிறிஸ்துவை அறியமுடியவில்லை.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்."( ரோமர் 9 : 7,8 ) என்று கூறுகின்றார். அதாவது, இத்தகையவர்கள் தங்களை தேவனுடைய பிள்ளைகள், ஆவிக்குரியவர்கள்  என்று கூறிக்கொள்கின்றனர்.  (அதாவது பெயரளவில் கிறிஸ்தவர்கள்) ஆனால், இத்தகையவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

"நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்." ( கலாத்தியர் 5 : 25 ) என்று பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் பிழைத்திருப்போமென்றால் ஆவிக்கேற்றபடி நடப்போம். 

அன்பானவர்களே, நாம் மற்றவர்களையும் ஊழியர்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேவனது வார்த்தைகளைக் கவனிப்போம், அந்த வார்த்தைகள் நம்மில் செயல்பட இடம்கொடுப்போம். கிறிஸ்துவினுடையவர்களாக நாம் வாழும்போது நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்களாக நாம் மாறுவோம். மற்றவர்களுக்கும் சாட்சியாக விளங்குவோம்.  அத்தகைய வாழ்வு வாழ நமக்கு உதவுபவரே பரிசுத்த ஆவியானவர். வசனத்தை விசுவாசிக்கும்போது நம்மில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, June 06, 2023

கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது

ஆதவன் 🔥 862🌻 ஜூன் 08, 2023  வியாழக்கிழமை


"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." ( 1 பேதுரு 1 : 17 )

இந்த உலக வாழ்க்கையுடன் நமது வாழ்வு முடிந்துவிடுவதில்லை. உடல் அழிந்தாலும் அழியாத நமது ஆன்மா இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் செய்த செயல்களுக்கேற்ப நித்திய பரலோக பேரின்பத்துக்கோ அல்லது நித்திய நரக அக்கினிக்கோ செல்லவேண்டியிருக்கும். ஆனால் இதனைப் பெரும்பாலானோர் நம்புவதில்லை. இந்த உலகத்தில் வாழ்வதுதான் பரலோகமும் நரகமும் என்கின்றனர். இந்த உலகத்தில் செழிப்புடன் வாழ்வது பரலோக வாழ்க்கையென்றும் துன்பப்படுவது நரக வாழ்க்கையென்றும் கூறிக்கொள்கின்றனர். 

நித்திய நியாயத்தீர்ப்பையும் மறுவுலக வாழ்வையும் குறித்து இயேசு கிறிஸ்து பல உவமைகள் கூறியுள்ளார். செல்வந்தனும் ஏழை லாசரும் பற்றிய உவமை மிகத் தெளிவாக நமக்கு இதனை உணரவைக்கும். ஆனாலும் பலரும் இதனை ஒரு கதையாக எண்ணிக்கொள்கின்றனர்.  இதற்காகவே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய வசனத்தில்  "பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." என்று கூறுகின்றார்.

இந்த உலகத்தில் நாமெல்லோரும் பரதேசிகள். அதாவது குடியுரிமை இல்லாதவர்கள். நமது குறியுரிமை நாம் ஏற்கனவே கூறியபடி பரலோகம் அல்லது நித்திய நரகம். எனவே இப்படி பரதேசிகளாய் இந்த பூமியில் வாழும் நாள்வரை பயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். 

நமது கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது; எதார்த்தமானது. அவரது கண்களுக்கு நாம் செய்யும் எந்த அநியாயச் செயலும், பேச்சும் தப்பிடாது.  அவர் மனிதர்களைப்போல கண்டபடி நியாயம் தீர்க்கமாட்டார். எதார்த்தமாய் செய்யபட்டக் காரியத்தின் உண்மை நிலையினை அறிந்து மனிதர்களை நியாயம்தீர்ப்பார்.  "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11 : 4 )

இந்த நியாயம் தீர்க்கும் உரிமையினை பிதாவாகிய தேவன் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 )

வேதாகமம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலும் ஈஸா நபி (இயேசு கிறிஸ்து) உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 7 )

அன்பானவர்களே, நியாயத் தீர்ப்பு உண்மையானது, நீதியானது எனவே அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்வோம். நீதி, நியாயம், பரிசுத்தத்தோடு வாழ்வோம். "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." ( 2 கொரிந்தியர் 5 : 10 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, June 05, 2023

கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு

ஆதவன் 🔥 861🌻 ஜூன் 07, 2023  புதன்கிழமை

".....................தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதனால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்." ( நீதிமொழிகள் 30 : 8, 9 )


இன்றைய தியான வசனம் வாழ்வின் எதார்த்தத்தை உலகக் கண்ணோட்டத்தில் பார்த்து கூறப்பட்ட வசனமாகும். செல்வமும் வேண்டாம், தரித்திரமும் வேண்டாம், கர்த்தர் நம்மோடு இருந்தால் போதும் என்று நமக்கு ஒரு சிந்தனையினைத் தருகின்றது.

அதிக அளவு செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டால் செல்வத்தின் செருக்கில் நான் கர்த்தரை மறுதலித்து, கர்த்தரா அவர் யார்? என்று ஒருவேளைச் சொல்லிவிடுவேன். அதுபோல தரித்திரம் அடைந்துவிட்டேனென்றால், நான் ஒருவேளைத் திருடுவேன் கர்த்தரது பெயரை வீணாகக் கூறி பொய் ஆணையிட்டு கார்த்தரைவிட்டுத் தூரமாய்ப் போய்விடுவேன். எனவே அன்றன்றுள்ள உணவின் படியை எனக்கு அளந்து என்னைத் திருப்தியாக்கும் என்று வேண்டுகின்றார் இந்த நூலின் ஆசிரியர்.

சாலமோன் அரசரால் அக்காலத்தில் வழக்கத்திலிருந்த முறைமைகளைப்பார்த்து எழுதப்பட்ட சில நீதிமொழிகளும் இதர ஞானிகளால் எழுதப்பட்ட நீதி போதனைகளும் கலந்த  தொகுப்புதான் நீதிமொழிகள் நூல். கர்த்தரைவிட்டுப் பின்மாறிய சாலமோனின் தொகுப்பான இந்த நூலில் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முரணான பல நீதிமொழிகள் உள்ளன. இன்றைய வசனம் அத்தகையவற்றுள் ஒன்று.  

ஆம், இந்த வசனம் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் முற்றிலும் எல்லோரது வாழ்விலும் சரியாக இருக்க முடியாது. காரணம், அரசர்களாக இருந்து நாட்டை ஆட்சிசெய்த தாவீது, எசேக்கியா போன்றவர்கள் செல்வச் செருக்கடைந்து கர்த்தரை மறுதலிக்கவில்லை. அதுபோல அப்போஸ்தலரான பவுல் போன்றவர்கள் ஒன்றுமில்லாத நிலையிலும் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தனர்.

அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுகின்றார், "............நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 11, 12, 13 )

ஆம், செல்வம் இருப்பதும் இல்லாமலிருப்பதும் பெரிய காரியமல்ல, கர்த்தர் நம்மோடு இருப்பதே முக்கியம்.  "பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று பவுல் அடிகள் கூறுவதுபோல அதிக செல்வமிருந்தாலும் நம்மைப் பெலப்படுத்துகின்ற  கிறிஸ்துவினால் நாம் கர்த்தரை மறுதலிக்காத வாழ்க்கை வாழ முடியும்; வறுமை, இல்லாமையிலும் நாம் உண்மையுள்ள வாழ்க்கை வாழமுடியும்.

எனவே நாம் கார்த்தரைவிட்டு எந்த நிலையிலும் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.  நம்மைப் பெலப்படுத்துகின்ற கர்த்தரால் எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடியும். அவர் நம்மோடு இருப்பாரானால் எந்தச் சூழ்நிலையும் நம்மைச் சேதப்படுத்தாது. 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 04, 2023

கர்த்தரது முகத்தைத் தேடுபவர்களாக வாழ்வோம்.

ஆதவன் 🔥 860🌻 ஜூன் 06, 2023  செவ்வாய்க்கிழமை


"ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்."( நீதிமொழிகள் 29 : 26 )

மனிதர்கள் பெரும்பாலும் இந்த உலகத்து அதிகாரங்களையே பெரிதாக எண்ணி வாழ்கின்றனர். சாதாரண வார்டு கவுன்சிலர் தங்களது உறவினராகவோ தெரிந்தவராகவோ இருந்துவிட்டால்போதும் சிலரை பிடித்து நிறுத்த முடியாது. இந்த மொத்த நாடே அவர்கள் கையில் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். இன்றைய வசனம் கர்த்தரை நம்புவதைவிட்டு விட்டு  அதிகார பலத்தில் இருப்பவர்களை நம்பி நாம் செயல்படுவது கர்த்தரது பார்வையில் ஏற்புடையதல்ல என்பதை விளக்குகின்றது.

ஆட்சி செய்பவர்களது முகத்தைப் பார்த்துவிடவேண்டும் என எண்ணும் மக்கள் இரு பிரிவாக இருக்கின்றனர். ஒரு சிலர் நமது தலைவரைப் பார்த்துவிடவேண்டுமென எண்ணுபவர்கள்.  முதலமைச்சரோ பிரதமரோ வரும்போது பலர் சென்று கூடுவது அவர்களைப் பார்த்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில்தான்.  ஆனால் பலர் ஆட்சி செய்கிறவருடைய  முகதரிசனத்தை ஏதாவது சலுகையோ உதவியையோ பெறுவதற்குத்   தேடுகிறவர்கள்.  மாவட்ட ஆட்சியாளர், முதல்வர், பிரதமர் இவர்களைச் சந்தித்துத் தங்கள் தேவையைப் பூர்த்திச் செய்திட பல்வேறு முறைகளில் சிபாரிசுகளை நாடுகின்றனர். 

இன்றைய வசனம் கூறுகின்றது, ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும் என்று. அதாவது எப்படி முயற்சி செய்தாலும் கர்த்தர் நினைப்பதே முடிவில் நமது வாழ்வில் சாத்தியமாகிடும். எனவே அன்பானவர்களே, அதிகாரத்திலுள்ளவர்களது முகத்தை எதிர்பார்த்து வாழ்வதைவிட, கர்த்தரையே நம்பி அவர்மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்.

"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்தபோதும் ராஜாவாக ஆனபின்பும் கர்த்தரையே நோக்கிப் பார்ப்பவராக இருந்தார். அதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 )
 
ஆளுகை செய்கிறவர்களுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்களாக வாழாமல் கர்த்தரது முகத்தரிசனத்தைத் தேடுபவர்களாக வாழ்வோம். அப்போது நமது வாழ்வில் கர்த்தர் நமது தேவைகளைச் சந்தித்து வழி நடத்துவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நீங்கி வாழ.....

ஆதவன் 🔥 859🌻 ஜூன் 05, 2023  திங்கள்கிழமை

"அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 11 )


பொதுவாக இன்றைய நாட்களில் ஆலயங்களில் பிரசங்கத்தைக் கவனித்துக் கேட்பவர்கள் மிகக் குறைவு. கடமைக்காக ஆராதனையில் விசுவாசிகள் கலந்துகொள்கின்றனரேத் தவிர அங்கு சொல்லப்படும் பிரசங்கங்களைப்  பெரும்பாலும் கவனித்துக் கேட்பதில்லை. அதுபோலவே  பல போதகர்களும், குருக்களும் கடமைக்காக பிரசங்கம் என்று ஏதோ கூறி மக்களை வழிநடத்துகின்றனர். இதனால் பிரசங்கத்தை மக்களும் ஆர்வமாய்க் கேட்பதில்லை. அது மக்கள் தூங்குவதற்கான நேரமாக பல வேளைகளில் மாறிவிடுகின்றது.

வழிபாடுகளைவிட தேவனது வார்த்தைகள் முக்கியமானவை. தேவ வார்த்தைகள்தான் நம்மை வழிநடத்த முடியுமேத்தவிர வழிபாடுகளல்ல. ஆனால், இன்று யாரோ எழுதிய பிரசங்கக் குறிப்பேடுகளை வாங்கிவைத்து அதன் அடிப்படையில்தான் பலரும் பிரசங்கிக்கின்றனர். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி அவர்கொடுக்கும் செய்தியைப் பெற்று போதிப்பவனே தேவ செய்தியைக் கொடுக்க முடியும். ஆனால் இத்தகைய அனுபவமுள்ள ஊழியர்கள் இன்று மிகக் குறைவு.  

பேரேயா நகரத்து மக்களைப்பற்றி இன்றைய வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  பவுல் பிரசங்கித்ததை அந்த மக்கள் மன ஆசையுடன் கேட்டனர்; ஏற்றுக்கொண்டனர். மட்டுமல்ல, "காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பிரசங்கத்தைக் கேட்டு பிரசங்கம் செய்தவர் சொன்ன  கருத்துக்கள்  சரிதானா என்று தினம்தோறும் ஆராய்ந்து பார்த்தார்கள்.

இந்த குணம் நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப்பார்ப்போம். பெரும்பாலும் மக்களிடம் இந்த குணம் இல்லாததால் இன்று பல ஊழியர்கள் வேதத்துக்கு முரணான போதனைகளைத் துணிந்து மக்களுக்குக் கொடுக்கின்றனர். "சொன்னவன் சொன்னான்; கேட்டவனுக்கு மதி எங்கே போனது?" என்பார்கள் பெரியவர்கள். அதுபோல பல கிறிஸ்தவர்களும் மதியற்றவர்களாக இருக்கின்றனர். அவர் ஏதாவது சொல்லிவிட்டுப் போகட்டும்,  நாம் தூங்குவோம் எனும் நிலைமையில் இருக்கின்றனர்.  

அன்பானவர்களே, "ஆதவன்" தினசரி தியானங்களில் நான் எழுதுவதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று நான் கூறுவதில்லை; எண்ணுவதுமில்லை. பேரேயா மக்களைப்போல நான் எழுதும் செய்திகள் வேதத்துக்கு ஏற்புடையதுதானா? என்று ஒப்பிட்டுப்பாருங்கள். நான் கூறுவது வேதாகமத்துக்கு முரணானதாக இருந்தால் எடுத்துக்கூறுங்கள் திருத்திக்கொள்வேன். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, இப்படி பேரேயா மக்கள் ஆராய்ந்து பார்த்ததனால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். ஆம், வேத ஆராய்ச்சி நம்மை நற்குணசாலிகளாக மாற்றும். தவறான போதனைகள், தவறான ஊழியர்களை அடையாளம்காட்டும்.  

ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி வேண்டுமென்றால் நாம் நல்ல ஊழியர்களது செய்திகளைக் கேட்கவேண்டும்; வாசிக்கவேண்டும். அவர்கள் கூறுவதை கேட்பதுமட்டுமல்ல, அவை உண்மைதானா? சரியானதுதானா? என்று வேதத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்க்கவேண்டும். இப்படிச்செய்யும்போதுதான்  நாம் ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நீங்கி  தெளிவுள்ள உண்மையான நற்குணமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ முடியும்.    

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, June 03, 2023

கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனை

ஆதவன் 🔥 858🌻 ஜூன் 04, 2023  ஞாயிற்றுக்கிழமை


"கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்". ( 2 கொரிந்தியர் 2 : 16 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவினை நல்ல வாசனைக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். இதனை இன்றைய வசனத்துக்கு இரண்டு வசனங்களுக்கு முன்பு குறிப்பிடுகின்றார். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 ) என்று.

கிறிஸ்துவை பிரதிபலிக்கும்போது நாம் அவரது வாசனையை உலகிற்கு வீசுகின்றோம். இயேசு கிறிஸ்துவை பலர்  வெறுக்கக் காரணம் அவர்களது பாவ உணர்வு. இதனையே இயேசு கிறிஸ்து, பொல்லாங்கு செய்பவன் எவனும் ஒளியைப் பகைக்கின்றான்  என்று குறிப்பிட்டார்.  

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்."( யோவான் 3 : 20 ). பாவிகளது பாவ வாழ்க்கை வெளிச்சத்திடம் வரும்போது வெளியரங்கமாகிவிடும் எனவே அவர்கள் கிறிஸ்துவிடம் நெருங்கிவரத் தயங்குகின்றார்கள்.   அவரை அறியும் வாசனையை வெறுக்கிறார்கள். அது அவர்களுக்குத் துர்நாற்றமாகத் தெரிகின்றது.

இப்படி, "கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக" இருக்கிறார் கிறிஸ்து. "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. ஆம், கழுதைபோல வாழ விரும்புகிறவர்களுக்கு ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக கிறிஸ்து இருக்கிறார் என்று புரியாது. 

சாக்கடையில் புரண்டு மலத்தைத் தின்று வாழும் பன்றிக்கு அந்த துர்நாற்றம் நறுமணமாகத் தெரியும். அதுபோல உலக ஆசையிலும் பாவத்திலும் வாழ்பவர்களுக்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அவர்கள் மெய்யான நறுமணமான கிறிஸ்துவை அறியமாட்டார்கள்.

ஆனால் அதற்காக பாவத்தில் வாழும் மனிதர்களை உணர்வூட்டாமல் தேவ வசனத்தைப் பலரும் புரட்டிக் கலப்பாய் பேசுவதைப்போல நாங்கள் பேசுவதிலை என்கிறார் அப்போஸ்தலரான பவுல். "அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 17 ) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ; அவர்களுக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் துர்நாற்றமாகத் தெரிந்தாலும் கவலைப்படாமல் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கலப்பில்லாமல் பேசுவோம் வாழ்வாக்குவோம். அப்போது, கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக இருந்தாலும்  இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு நாம்  ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, June 02, 2023

கர்த்தரை நம்புகிறவர்கள் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்

ஆதவன் 🌞 857🌻 ஜூன் 03, 2023  சனிக்கிழமை


"கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல்   நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்".   (  சங்கீதம் 125 : 1 )

இந்தியாவின் வடஎல்லை இமய மலைத் தொடர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மலைகள் இயற்கை பாதுகாப்பு அரண்கள். எதிரிகளிடமிருந்து அவை நம்மைப் பாதுகாக்கின்றன. மேலும், பெரு வெள்ளமோபுயலோ மலைகளை நகர்த்திட முடியாது. அவை உறுதியாக என்றென்றும் நிலைத்திருப்பவை. நமது நாட்டின் இமயமலையைப் போல இஸ்ரவேல் நாட்டில் சீயோன் மலை சிறப்புவாய்ந்த மலையாக  உள்ளதுஇந்தமலை ஜெருசலேம் நகரைச் சுற்றி மதில்போல அமைந்துள்ளதுஎனவேதான் அடுத்த வசனம் கூறுகிறது:-

"பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல்கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." (  சங்கீதம் 125 : 2 )

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்இன்று  பிரபல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்களைப்  பாதுகாக்க கறுப்புப் பூனைப் படை வீரர்களை வைத்துள்ளனர்அதற்காகக் கோடிக்கணக்கானப் பணத்தையும் செலவழிக்கின்றனர்ஆனால் ஒருவனைக் கர்த்தர் பாதுகாக்காவிட்டால் எந்தப் பாதுகாப்பும் அவனைப் காக்க முடியாது. "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலர் விழித்திருக்கிறது விருதா " (சங்கீதம் - 127:2). 

நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது மரணம் எப்படி சம்பவித்தது தெரியுமாதனது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஒரு ராணுவ வீரன்தான் அவரைச் சுட்டுக் கொன்றான்.  வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு வீரனே அவரைச் சுட்டுக் கொன்றான். ஆம் மனிதன் நம்பும் பாதுகாப்பு இப்படித்தான் விபரீத பாதுகாப்பாக இருக்கும்.

நமது தேவன் நம்முடைய தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர்நாம் வறுமையிலோநோயிலோஅல்லது எதிரிகள் குறித்த பயத்தாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் நமக்கு நிச்சயம் விடுதலை உண்டுமனிதர்கள் நாம் செல்வந்தர்களையும் நல்ல வசதி படைத்தவர்களையும்தான் நமது நினைவில் வைத்திருப்போம்யாராவது நம்  வீட்டிற்கு அடிக்கடி பிச்சைக் கேட்டு வரும் பிச்சைக்காரரை நினைவில்வைத்துக் கொண்டிருப்போமாஅவர்கள் பிச்சைக் கேட்கும்போது கொடுத்துவிட்டு அப்படியே அவர்களை மறந்து விடுவோம்

ஆனால் தேவன் அப்படியல்லஅவர் நமது எந்தவித தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர்நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது. (  சங்கீதம் 136 : 23 ) என வேதம் கூறவில்லையாதேவன் நம்மை நினைப்பதால்அவரோடு நெருங்கிய தொடர்பில் நாம் இருப்போமானால் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்போம்எந்த விதப் பிரச்சனைகள்துன்பங்கள்நோய்கள்வந்தாலும் நமது உள்ளம் கலங்காது , அசையாது.

சீயோன் மலையை இரண்டு விதமாக இன்றைய தியான சங்கீதம் வசனம்  குறிப்பிடுகின்றது. 

1. எருசலேமைச் சுற்றிலும் மலையானது பாதுகாப்பாக இருப்பதுபோல கர்த்தர் நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்;

2. கர்த்தரை நம்பி நாம் வாழும்போது மலை எந்தப் பேரிடருக்கும் அசையாமல் இருப்பதுபோல அசையாமல் இருப்போம்.   

கர்த்தரையே நம்புவோம்; அசையாமல் உறுதியுடன் பாதுகாப்பாக இருப்போம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, June 01, 2023

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு

 ஆதவன் 🔥 856🌻 ஜூன் 02, 2023  வெள்ளிக்கிழமை      

  

".....................சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 22 )

மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது கிறிஸ்துவை முன்னிறுத்தி பிரசங்கிப்பதும், அவரைப்போல வாழ நாம் தகுதியாகவேண்டுமென்று விருப்பி சத்தியத்தைச் சொல்வதுமாகும். இயேசு கிறிஸ்துவிடம் வந்துவிட்டால் உடனேயே கார், பங்களா, மாடமாளிகை,  பொருளாதார செழிப்பு இவையெல்லாம் கிடைக்கும் என்று பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சகமாகும். உபத்திரவமில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை. கிறிஸ்து நமக்கு உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தை வாக்களித்தார்.அந்த சமாதானத்தைப் பெற்று மகிழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அந்த சமாதானத்திற்கு பணமோ செல்வ செழிப்போ காரணமாயிருக்க முடியாது. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் இயேசு கிறிஸ்து கூறினார்.

இதனையே அப்போஸ்தலர்களும் பவுலும் இங்குக் கூறுகின்றார்கள் . "லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள். " ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 21, 22 ) என்று வாசிக்கின்றோம். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடம் அப்போஸ்தலரான பவுலும் சீடர்களும் இப்படிப் போதித்தார்கள். அவர்கள் செழிப்பையோ உலக ஆசீர்வாதங்களையோ போதிக்கவில்லை. 

இன்று இப்படி புதிய கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவேண்டுமென்று நான் கூறவில்லை, மாறாக, தவறான உபதேசம் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறேன்.  உலக ஆசீர்வாதத்துக்கும் கிறிஸ்து இயேசு அளிக்கும் இரட்சிப்பு அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை. உண்மையான மீட்பு அனுபவம் பெற்றவனது  எண்ணம் கிறிஸ்துவைப்பற்றியே இருக்கும். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தெளிவாகக் கூறுகின்றது, அவர்கள்  சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்று. அதாவது எந்த இக்கட்டு, பிரச்சனைகள், பாடுகள் வந்தாலும் விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்கவேண்டுமென்று அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். 

நமது சபைகளுக்கு அதிக மக்கள் வரவேண்டுமென்பதற்காக ஆசீர்வாதங்களையே கூறிக்கொண்டு விசுவாசிகளை நரகத்தின் மக்களாக்கிவிடக் கூடாது. 

ஆம், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த்தான்  தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.  அந்த உபாத்திரவங்களைத் தங்கத்தக்கப் பலத்தை ஆவியானவர் தருவார்.  அவரே தொடர்ந்து நம்மை வழிநடத்தவும் செய்வார். அன்பானவர்களே, சோதனைகளை மேற்கொண்டு வாழும்போதுதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியதுபோல நாமும் உலகத்தை ஜெயிக்கமுடியம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, May 31, 2023

ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை

ஆதவன் 🌞 855🌻 ஜூன் 01, 2023  வியாழக்கிழமை       

 "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 : 10 )


ஒரு உலக அரசாங்கம் ஒருவரைப் பதவியில் வைத்துள்ளது என்றால் அந்தப் பணியாளருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சந்திப்பது மட்டுமல்ல, அவர்களது பாதுகாப்புக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.  பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவர்கள்,  வருவாய்த்துறை அதிகாரிகள், நீதிபதிகள், போன்றோருக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிப்பதை நீங்கள்  பார்த்திருக்கலாம். இந்த பாதுகாப்பு அவர்கள் தங்கள் பணியைத் தடையில்லாமல் செய்ய உதவுகின்றது.   

இதுபோலவே தேவன் தனது பிள்ளைகள் உலகத்தில் தங்கள் பணிகளைச் செய்யவும் பாவமில்லாத வாழ்க்கைவாழவும் வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். பவுல் அப்போஸ்தலர் ஊழியத்தில் பயமில்லாமல் தொடர்ந்திட தேவன் அவரைத் திடப்படுத்துகின்றார். பவுலே , "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.")

ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்குமே கர்த்தர் இப்படிக்  கூடவே இருந்து பாதுகாப்பளிக்கின்றார்; உதவுகின்றார். கர்த்தர் இப்படி நம்மோடு இருந்துச்செய்யும் காரியம் சிலவேளைகளில் நாமே கண்டு வியக்கத்தக்கதாகவும் நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்குப் பார்க்கவே பயங்கரமானதாகவும் இருக்கும்.  மோசே அற்பமான மனிதனாகவே காணப்பட்டார். அவரைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு பெரியதாகத் தெரியவில்லை. எனவேதான் சொந்த இஸ்ரவேலரே அவருக்கு எதிராக செயல்பட முயன்றனர். ஆனால் மோசேக்கு தேவன் வாக்களித்திருந்தார். "உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்." ( யாத்திராகமம் 34 : 10 ) என்று. 

அப்படியே எகிப்தியரும் அவருக்கு எதிராக முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களும் கண்டு பயப்படத்தக்கக் காரியங்களை தேவன் மோசே மூலம் செய்தார்.  

இதுபோல மோசேக்குப்பின் யோசுவாவுக்கு தேவன் வாக்களித்தார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) அப்படியே கைவிடாமலிருந்து காப்பாற்றினார். இந்த யோசுவா மூலமே இஸ்ரவேல் கோத்திரங்கள் கானான் தேசத்தில் தங்கள் தங்கள் உடைமைகளைப் பெற்றார்கள்.

அன்பானவர்களே, எனவே நாம் சூழ்நிலைகளைப்  பார்த்துக் கலங்கிடாமல் கர்த்தர்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோம்.  பவுலுக்கு வாக்களித்து நடத்தியவர்,  மோசேயுடனிருந்து பயங்கரமான காரியங்களைச்  செய்தவர், யோசுவாவை எவரும் எதிர்க்கமுடியாதவாறு பலப்படுத்தியவர் நம்மோடும் இருக்கின்றார்.  தேவன் ஆள் பார்த்துச் செயல்படுபவரல்ல. எனவே அவர் மேல் விசுவாசம்கொண்டு வாழும் நம்மையும் அதுபோல காத்து, பலப்படுத்தி நடத்திடுவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com