ஆதவன் 🔥 882🌻 ஜூன் 28, 2023 புதன்கிழமை
Monday, June 26, 2023
பண ஆசை அல்லது பொருளாசை
தேவனே விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறார்.
ஆதவன் 🔥 881🌻 ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை
Sunday, June 25, 2023
யார் என்னை விடுதலையாக்குவார்?
ஆதவன் 🔥 880🌻 ஜூன் 26, 2023 திங்கள்கிழமை
Saturday, June 24, 2023
தேவ நீதியில் வாழ ஒப்புக்கொடுப்போம்!!
ஆதவன் 🔥 879🌻 ஜூன் 25, 2023 ஞாயிற்றுக்கிழமை
Thursday, June 22, 2023
பொறுமை வேண்டியதாயிருக்கிறது!
ஆதவன் 🔥 878🌻 ஜூன் 24, 2023 சனிக்கிழமை
Wednesday, June 21, 2023
அவரோடேகூட மரிக்கும்படி போவோம்
ஆதவன் 🔥 877🌻 ஜூன் 23, 2023 வெள்ளிக்கிழமை
"அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றார்."( யோவான் 11 : 16 )
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சி
ஆதவன் 🔥 876🌻 ஜூன் 22, 2023 வியாழக்கிழமை
பலரும் கர்த்தரிடம் விசுவாசமும் நம்பிக்கையுமாய் இருப்பது பெரும்பாலும் வாழ்வில் நல்லதே தொடர்ந்து நடக்கும்போதுதான். எதிர்மறையான வாழ்க்கை சூழல் ஏற்படும்போது பெரும்பாலும் பலரும் நிலை குலைந்து விடுகின்றனர். நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், தேவனுக்கு ஏற்றபடிதான் வாழ்கின்றேன், எனக்கு ஏன் இந்தத் துன்பம்? ஏன் எனக்கு மட்டும் பிரச்சனைமேல் பிரச்னை வருகின்றது? என தேவனையே கேள்விகேட்கத் துணிந்துவிடுகின்றனர்.
ஆனால், வேதாகம பக்தர்கள் பலரும் உயர்வோ தாழ்வோ வறுமையோ இல்லாமையே எதுவாக இருந்தாலும் கர்த்தரே போதும் என்று வாழ்ந்தனர்.
ஆபகூக் தீர்க்கதரிசி "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3 : 17, 18) என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.
கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருத்தல் என்பது என்ன வந்தாலும் அவர்மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல் அவரையே நம்பி வாழ்வது. பக்தனான யோபு கூறுவதுபோல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று துணிந்து நிற்பது.
அடுத்து இங்குக் கூறப்பட்டுள்ள இன்னொரு விஷயம், வெறும் விசுவாசம் மட்டுமல்ல, 'உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து' என்று கூறப்பட்டுள்ளபடி நமது வழிகள் கர்த்தரது வழியாக இருக்கவேண்டியது அவசியம். நமது வாழ்வை அவரது வழியில் நடத்த ஒப்புவித்துவிடவேண்டும். மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. நமது இருதயத்தின் வேண்டுதல்கள் தேவனுக்கேற்றவேண்டுதல்களாக இருக்கவேண்டும். அப்போது அவர் அவற்றை நிறைவேற்றுவார். அதற்குமேலும் நிறைவேற்றுவார்.
அன்பானவர்களே, நான் இப்படிக் கூறுவது பலருக்கும் வெற்று உபதேசம்போல இருக்கலாம். ஆனால் எனது அனுபவத்திலிருந்து கூறப்பட்டுள்ள வார்த்தைகளே இவை. எனது ஆவிக்குரிய 30 வருட வாழ்வின் அனுபவத்தில் கண்டு உணர்ந்தவை. துன்பங்கள் வரும்போது மனது சோர்ந்துபோவது தவிர்க்கமுடியாதது. நானும் மனம் சோர்ந்து போயிருக்கிறேன். ஆனால் அவிசுவாசம் ஏற்பட்டதில்லை. ஒரு துன்பம் அல்லது பிரச்சனை ஏற்படும்போது விசுவாசமாய் இருக்கும்போது ஏதாவது ஒரு அற்புதமான காரியம் செய்து நாம் நமது விசுவாசத்தை விட்டுவிடாமலிருக்க அவர் உதவுவார்.
ஆம்,"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". தேவ வசனம் பொய்யாய் இராது. அவரது வார்த்தைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. "
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - எசேக்கியேல் 13 : 10 / Ezekiel 13:10
" ஆதவன் " தியானம் - 1980 ஜூலை 10, வெள்ளி 2026 "சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...
.jpg)
.jpg)
%20(1).jpg)



.jpg)