இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, November 22, 2022

H. A. கிருஷ்ணபிள்ளை

                         தொகுப்பு : சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ கம்பர் எனப் பெயர்பெற்ற ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (ஏப்ரல் 231827 - பெப்ரவரி 31900ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தவர், வைணவ சமயத்தவர் ஆவார். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. கிருஷ்ணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி குலவித்தையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகக் கற்று அறிந்தார். 

அக்காலகட்டத்தில் நெல்லையில் பல கிருத்தவ சங்கங்கள் சிறந்தமுறையில் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. அவ்வாறு வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் தொண்டு புரிந்துவந்தார். கிருத்தவ சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரம் என்ற சிற்றூரில் ஜி.யு. போப்  ஒரு கல்லூரி அமைத்து நடத்திவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல்லிடம்  ஒப்படைக்கபட்டது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருஷ்ண பிள்ளையைக் கால்டுவெல் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். 

சாயர்புரத்தில் வேலை யேற்று ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்றது. 

ஏற்கனவே இவரது உறவினர் சிலர், கிருத்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதன் செம்மையை அடிக்கடி இவரிடம் எடுத்துரைத்தனர் அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். இதனால் கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார்.

இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார் பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.

கிருஷ்ண பிள்ளை கிறிஸ்தவ நூல்களை விரும்பிப் படித்த காலத்தில் ஜான் பனியன் (1628-1688) எழுதிய தி பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (The Pilgrim's Progress) என்னும் நூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தன் சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் அந்நூல் சொல்வது போல உணர்ந்தார். இரண்டு பாகங்கள் கொண்ட அந்த நூலை அடிப்படையாக வைத்து இரட்சணிய யாத்திரிகம் என்னும் செய்யுளை இயற்றினார். மூலநூலை அப்படியே மொழியாக்கம் செய்யாமல் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளோடு இணைத்து தமிழ் கிறிஸ்தவ மரபின் முக்கியமான படைப்பாக எழுதினார்.

இரட்சணிய யாத்திரீகம் பாளையங்கோட்டையில் இருந்து வெளியான 'நற்போதகம்’ என்னும் இதழில் பகுதி பகுதியாக வெளியானது. இந்த நூல் 3800 செய்யுள்களைக் கொண்டது. அக்காலத்தில் புலவர்களின் திறமைக்கு சான்றாகக் கருதப்பட்ட  யமகம்,  திரிபு, சிலேடை, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று இதில் உள்ளது. ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலை எழுதிய நோக்கத்தை சொல்லும்போது "மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்" என்கிறார்.

இறைவனைப் புகழும் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திருஅகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், அவர் கிறிஸ்தவரான வரலாறு குறித்த தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் எழுதியுள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார்.

வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:

"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."

கிருத்தவ சமய சார்பான சிறந்த நூல்களை இலக்கியங்களைப் படைத்த இவர் 1900 ஆம் ஆண்டு தம் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார். 

கிருஷ்ணபிள்ளை இயற்றிய நூல்கள்:- 

செய்யுள் நூல்கள்

  • போற்றித் திருஅகவல்
  • இரட்சணிய யாத்திரீகம்
  • இரட்சணிய மனோகரம்
உரைநடை நூல்கள்
  • இலக்கண சூடாமணி
  • நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு
  • இரட்சணிய சமய நிர்ணயம்
தொகுப்பு நூல்கள்
  • காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
  • இரட்சணிய குறள்
  • இரட்சணிய பாலபோதனை

தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் ஜெபம்

 ஆதவன் 🖋️ 665 ⛪ நவம்பர் 23,  2022 புதன்கிழமை

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

மறுவுலக வாழ்வையே முக்கியப்படுத்தி நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். ஆனால் பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறிய வசனங்களுக்கும் உவமைகளுக்கும் உலகச் சம்பந்தமான பொருளையே எடுத்துக்கொள்கின்றனர்.

அப்படி மக்கள் தவறுதலாகப் பொருள்கொள்ளும் வசனங்களில் ஒன்றுதான் இன்றைய வசனம்.  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு இயேசு கிறிஸ்து தேவனுக்குப் பயப்படாத, மனிதர்களை மதியாத நியாதிபதி ஒருவனைக் குறிப்பிட்டுப்  பேசுகின்றார். இந்த அநீதியான நியாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் வேண்டி தொடர்ந்து மன்றாடுகின்றாள். அவளது உபத்திரவம் பொறுக்கமுடியாமல் அந்த அநீதியான நியாதிபதி அவளுக்கு நீதி வழங்குகின்றான். 

அதாவது இந்த விதவையைப்போல தேவனை நோக்கி இரவும் பகலும் நாம் தொடர்ந்து மன்றாடினால் நமது ஜெபத்தை தேவன் கேட்பார். என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

இந்த உவமையை எல்லோரும் தங்களுக்காக இயேசு கூறியதாக எண்ணி, தொடர்ந்து தங்களது உலகத் தேவைகளை தேவனிடம் கூறினால் அவை நிறைவேறும் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தெளிவாக வாசிக்கும்போது இயேசு கூறுவது புரியும். எல்லோரது ஜெபத்தையும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடாமல், "தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில்" என்று கூறுகின்றார். 

அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது கற்பனைகளின்படி வாழும் மீட்பு அனுபவம் பெற்றவர்கள். அத்தகைய மனிதர்கள் வேண்டுதல் செய்யும்போது தேவன் அதனைக்கேட்டு பதில் தருவார் என்கின்றார். அவரிடம் உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்யவேண்டுமென்றோ அப்படி  விண்ணப்பம்பண்ணும் உலகத் தேவைகள் எல்லாவற்றையும் அவர் தருவார் என்பதற்கோ  இயேசு கிறிஸ்து இந்த உவமையைக் கூறவில்லை. 

ஆவிக்குரிய மனிதர்கள் எப்போதும் தங்களது உலகத் தேவைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்தித்து அவற்றுக்கே முன்னுரிமைகொடுத்து வேண்டுதல் செய்வார்கள். 

அப்போஸ்தலரான யாக்கோபு எனவேதான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்று கூறுகின்றார். மட்டுமல்ல, "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 4 ) என்று கோபத்தில் கூறுகின்றார். 

அன்பானவர்களே, வேதாகமம் ஆவிக்குரிய புத்தகம். அதனை சாதாரண உலகப் புத்தகம்போலப் படித்து நாம் தவறான அர்த்தங்களைக்கொண்டு வாழக்கூடாது. தேவன் நமது ஜெபத்தைக் கேட்கவேண்டுமானால் முதலில் நாம் மனம்திரும்பி ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழும்போது நாம் ஆவிக்குரியவிதமான விண்ணப்பங்களைச் செய்வோம். அவர் அவைகளை நிறைவேற்றுவார்.  மட்டுமல்ல, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )" என்று இயேசு கூறியவாறு உலக ஆசீர்வாதங்களையும்  அவர் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார். . 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Prayer of elect people

 AATHAVAN 🖋️ 665 ⛪ Wednesday, November 23, 2022

"And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them? (Luke 18:7)

Jesus Christ came into the world to lead us to eternal life, emphasizing the afterlife. But generally all Christians take worldly meanings for the verses and parables of Jesus Christ.

Today's verse is one of those verses that people misunderstood. To explain to people that they should always pray without getting tired, Jesus Christ mentions about  a judge who does not fear God and does not respect people. A widow continually pleads with this unjust judge for justice. Unable to bear her torcher, the unjust judge gives her justice.

That is, if we continue to pray to God day and night like this widow, God will hear our prayer. Jesus Christ said.

Everyone thinks that Jesus told this parable for them, and they think that if they constantly tell God about their worldly needs, they will be fulfilled. But, when read clearly, what Jesus is saying becomes clear to us. Jesus Christ does not refer to everyone's prayer, but says "God reply his own elect"

That is, those who have been chosen by God, who have experienced the salvation according to His will. When such people pray, God hears and answers them. Jesus Christ did not tell this parable to ask Him for worldly needs or that He would give all the worldly needs of such requests.

Spiritual beings will not  always pray for their worldly needs. Spiritual people think and pray for spiritual things.

That is why the apostle James said, "Ye ask, and receive not, because ye ask amiss, that ye may consume it upon your lusts." ( James 4 : 3 ) Not only that he says in anger, "Ye adulterers and adulteresses, know ye not that the friendship of the world is enmity with God? whosoever therefore will be a friend of the world is the enemy of God." ( James 4 : 4 ) 

Beloved, the Bible is a spiritual book. We should not read it like an ordinary worldly book and live with wrong meanings. If God wants to hear our prayers, we must first repent and live a spiritual life. When we live like that, we only make spiritual requests. He will fulfill them. Not only that, he will meet our worldly needs also. "But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you." ( Matthew 6 : 33 ) as Jesus said, He will bless us with worldly blessings.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Monday, November 21, 2022

கொழுப்பு

 ஆதவன் 🖋️ 664 ⛪ நவம்பர் 22,  2022 செவ்வாய்க்கிழமை

"இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 )

மனிதனது உடலில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சேர்வது பல்வேறு நோய்களை உருவாகும். குறிப்பாக இருதய நோய் ஏற்பட கொழுப்பே முக்கிய காரணமாய் இருக்கின்றது. இங்கு இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய கொழுப்பைக்  குறித்துக் கூறுகின்றார். ஆவிக்குரிய காரியங்களைக் கேட்டு உணராமல் இருக்கின்ற மக்களைப்பார்த்து அவர்கள் இருதயம் கொழுத்திருக்கின்றது என்கின்றார். 

கொழுப்பு இரத்த ஓட்டத்தைத் தடைசெய்வதுபோல ஆவிக்குரிய கொழுப்பு தேவ சத்தியங்களை அறியக் கூடாதபடிக்கு மனிதர்களது இருதயத்தைத் தடைசெய்கின்றது. இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து ஏசாயா கூறிய வார்த்தைகளிலிருந்து எடுத்துப் பேசுகின்றார். ( ஏசாயா 6 : 10 )

உடலில் கொழுப்புத் தேங்கிடக் காரணம் நாம் உண்ணும் உணவு முறைகளும் சரியான உடல் உழைப்பு இல்லாததும். அதுபோல இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும் பாவ காரியங்களை நாம் செய்வதுதான் தேவையற்ற உணவை உண்பது. ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபாடில்லாமல் வாழ்வதே உடல் உழைப்பு இல்லாமல் வாழ்வது. இதனால் நமது இருதயத்திலும் ஆன்மாவிலும் கொழுப்புச் சேர்ந்து  விடுகின்றது. 

இப்படிச் சேரும் கொழுப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதையே இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது ஆத்துமாவில் கொழுப்புச் சேர்வது கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், தேவன் நம்மை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக இருதயத்தைக் கொழுக்கும்படிச் செய்துவிடுகின்றது.  


இதன் பாதிப்புத்தான் காதால் மந்தமாய்க் கேட்பதும் நமது கண்களை மூடிப்போடுவதும். அதாவது, ஆவிக்குரிய மேலான சத்தியங்களை அறியாமலும் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியாமலும் செய்துவிடுகின்றது. 

அன்பானவர்களே, நமது இருதயத்தைக் கொழுக்க வைத்து ஆத்தும நோயை உருவாகும் இந்தக் கொழுப்பை நாம் அகற்றவேண்டியது அவசியம். உடல் கொழுப்பை அகற்றிட, பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டி சிகிர்ச்சைகள் உள்ளன. அந்தச் சிகிர்சைகள் அதிகப் பணச் செலவு உள்ளவை. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இலவசமாய் இந்தக் கொழுப்பை அகற்றுகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் மீட்பு நம்மை புதிய மனிதனாக்கும். ஆத்தும கொழுப்புகள் மறைந்து நாம் அவரது மகிமையைக் காணும்படி நமது கண்களையும் அவரது குரலைக் கேட்டு நடக்கும்படி நமது காதுகளையும் திறந்துவிடும். ஆம், மீட்பு அனுபவமே நமது ஆத்தும கொழுப்பை அகற்றும். 

ஆனால், சிகிர்ச்சைக்குப்பின்னால் எப்படி ஒரு பத்திய வாழ்க்கை வாழ்கின்றோமோ அதுபோன்ற ஒரு ஆவிக்குரிய பத்திய வாழ்க்கையைத் தொடர்ந்து நாம்  வாழ வேண்டியது அவசியம். அத்தகைய வாழ்க்கை வாழ வாழ நமது கண்களும் காதுகளும் மேலும் தூய்மையடைந்து கொழுத்த இருதயம் லெகுவான இதயமாக மாறி அதில் தேவன் வந்து தாங்கும் ஆலயமாக மாறிட எந்தத் தடையும் இல்லாத ஒன்றாக மாறிடும். 

இதற்கு, முதலில் நமது இருதயத்தில் கொழுப்பு இருப்பதை உணர்ந்துக்ள்ளவேண்டும்; அது மறையவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும்,  சிகிர்சைக்கு மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அப்போது மட்டுமே நாம் குணமாக முடியும்.  அன்பானவர்களே,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது கொழுப்புச் சேர்ந்த  இருதயத்தில் இலவச  பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டிசெய்திட ஒப்புக்கொடுப்போம். ஆவிக்குரிய தெளிவுள்ள புதுவாழ்வு பெறுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Fat Accumulation

AATHAVAN 🖋️ 664 ⛪ November 22, 2022 Tuesday

"For this people's heart is waxed gross, and their ears are dull of hearing, and their eyes they have closed; lest at any time they should see with their eyes and hear with their ears, and should understand with their heart, and should be converted, and I should heal them." ( Matthew 13 : 15 )

Excessive accumulation of fat in the human body can cause various diseases. Fat is a major cause for heart related diseases in particular. Here Jesus Christ is talking about spiritual fat accumulation. He says that people who hear and do not understand spiritual things have fat in their hearts.

Just as fat clogs the blood flow, spiritual fat clogs the hearts of men from knowing God's truths. Today's verse spoken by Jesus Christ was quoted from the words of Isaiah. (Isaiah 6:10)

The reasons for fat accumulation in the body are the diet we eat and lack of proper physical activity. Similarly, what we do in this world that spoils our spiritual life is what is meant by eating unnecessary food. To live without involvement in spiritual things is referred to live without physical labor. This causes fat to accumulate in our heart and soul.

Jesus Christ tells us in today's verse what kind of damage this accumulation of fat causes. That is, adding fat to the soul causes the heart to become fat so that the eyes cannot see, the ears cannot hear, the heart does not feel and repent, and God could not make us healthy.

The effect of this is to listen dully with our ears and close our eyes. That is, it makes us ignorant of higher spiritual truths and unable to live a spiritual life.

Beloved, it is necessary for us to get rid of this fat that fattens our heart and causes spiritual disease. There are bypass and angioplasty surgeries to remove body fat. Those treatments cost a lot of money. But the Lord Jesus Christ removes this fat freely.

Redemption by the blood of Jesus Christ is the treatment. it is free. it makes us a new man. The fat of the soul will be removed and our eyes will be opened to see His glory and our ears to hear His voice to walk in right path. Yes, the experience of redemption will remove our soul fat.

But it is necessary that, afterwards we continue to live a controlled life in food as we live a life after a physical surgery. If we live like that, our eyes and ears will become more pure and the fat heart will turn into a lean heart into which God will reside and make it a temple. 

For this, we must first realize that there is fat in our hearts; We should have the willingness to let it go, and we have to willingly come forward to the treatment. Only then we can be healed. Beloved, let the Lord Jesus Christ do a free bypass, angioplasty in our fatty heart. Let us be renewed in spiritual clarity.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Sunday, November 20, 2022

வானத்தைப் பார்

 ஆதவன் 🖋️ 663 ⛪ நவம்பர் 21,  2022 திங்கள்கிழமை

"எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." ( ரோமர் 1 : 20 )

இன்றுள்ள விஞ்ஞான யுகத்தில் மனிதனது புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பலர் கடவுள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். "கடவுள் என்பது கற்பனை; மனிதனைக் கடவுள் படைக்கவில்லை, கடவுளை மனிதன்தான்  படைத்தான்." என்ற தப்பறையான போதனைக்கு இளைஞர்கள் அதிகம் இழுக்கப்படுகின்றனர்.  

ஆனால், உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். இன்றைய வசனம் கூறுவதைப்போல, காணப்படாத அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகளை உண்டாக்கப்பட்டப் பொருட்களில் கண்டு தேவனை நம்பினர். இப்படிக் காணத் தவறினால் நியாயத் தீர்ப்பில் தேவனிடம் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது 

இதுவரைப் உலகினில் பிறந்த மனிதர்களிலேயே அதிக அறிவாளி (I Q )  ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் (1879 - 1955). அவர் குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்காவிட்டாலும், ஒரு மிகப்பெரிய சக்தி இந்தப் பிரபஞ்சத்தை நடத்துகின்றது என்பதை ஒத்துக்கொண்டார். இயற்கையாக தானாக பிரபஞ்சம் அமைந்த்திட வாய்ப்பில்லை என்கின்றார் அவர்.

நிகழ்தகவு கோட்பாடு (Probability Theory) எனும் மிகப்பெரிய விஞ்ஞான கோட்பாட்டினைக் கண்டறிந்த பாஸ்கல் (1623 - 1662) அவர் கண்டறிந்து கூறுவது நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. அவர் கூறுகின்றார், "ஒவ்வொவொரு  மனிதனது இருதயத்திலும் கடவுள் உருவாக்கிவைத்துள்ள வெற்றிடம் ஒன்று உள்ளது. இந்த வெற்றிடத்தை உருவாக்கப்பட்ட எந்த உலகப் பொருளினாலும் நிரப்பிட முடியாது. கிறிஸ்து வெளிப்படுத்திய கடவுளால் மட்டுமே இந்த  வெற்றிடத்தை நிரப்பிட  முடியும்." என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

சர் ஐசக் நியூட்டன் (1642 - 1727) அவர்களைப்பற்றி ஒரு சம்பவம் படித்தேன். ஒருமுறை அவர் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது வேதாகமத்தைப் படித்து ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அவர் யார் என்பதை அறியாமல் அவரிடம், "ஐயா, விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இன்னும் வேதாகமத்தையும் ஜெபத்தையும் நம்புகிறீர்களே என்று கிண்டலாகக் கூறி, ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகக் கூறினான். பாருங்கள் மனிதன் இப்படியெல்லாம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கின்றான், நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள்........ஐயா கடவுள் என்று எதுவும் கிடையாது என்றான்".   

நியூட்டன் அவனிடம் எதுவும் தர்க்கம் செய்யவில்லை. தான் இறங்கும் இடம் வந்தபோது தனது அடையாள அட்டையை அவனிடம் கொடுத்து, என்னை இந்த முகவரியில் வந்து பாருங்கள், நாம் விரிவாகப்  பேசலாம்  என்றபடி இறங்கிச் சென்றுவிட்டார். அந்த முகவரியைப் பார்த்த இளைஞன் திடுக்கிட்டான். தன்னிடம் பேசிக்கொண்டிருந்தனர் நியூட்டன் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. 

அவர் கொடுத்த முகவரியத் தேடித் கண்டுபிடித்து அங்கு சென்றான் அந்த இளைஞன். நியூட்டனின் விஞ்ஞான கூடத்தின்  ஒரு அறையில்  இந்தப் பிரபஞ்சத்தை அவர் செயற்கையாக உருவாக்கி வைத்திருந்தார்.  காந்த சக்தியின்மூலம் சூரியன், கோள்கள், சந்திரன், பூமி இவை அந்தரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இளைஞன் ஆச்சரியத்துடன், "ஐயா, இவைகளை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? என்று கேட்டான். அவனுக்குப் பதிலாக நியூட்டன், "இல்லை, இவை தானாக வந்துவிட்டன. ஒருநாள் நான் உறங்கி விழித்துப் பார்க்கும்போது இவைகள் இங்கு வந்திருந்தன" என்றார். 

"அது எப்படி ஐயா தானாக இவை  வரும்? நீங்கள்தான் உருவாகியிருக்கிறீர்கள்" என்றான் இளைஞன். "நான் உருவாக்க வில்லை. தானாகத்தான் வந்தன" என்றார் நியூட்டன். அந்த இளைஞன் நியூட்டன் தன்னைக் கிண்டல் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.  அவனிடம் நியூட்டன் கூறினார், " தம்பி இந்தச் சிறிய அறையினுள் இந்த மாதிரி உருவங்கள் தானாக வந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகின்றாய், அப்படியிருக்கும்போது உண்மையான இவைகள் எப்படித் தானாகத் தோன்றியிருக்கமுடியும்?  அந்த இளைஞன் வெட்கப்பட்டு நியூட்டன் கூறியதை ஏற்றுக்கொண்டான்.

"இந்த ஆண்ட சராசரங்கள், சூரியன், கிரகங்கள், பூமி , பால்வீதி இவை இயற்கையில் தோன்றிட வாய்ப்பில்லை. இவற்றுக்குப்பின் மிகப்பெரிய தேவ ஞானம் இருக்கின்றது" என்கின்றார் நியூட்டன். 

கடவுள் நம்பிக்கையற்றவர்களாக நீங்கள் இருந்தால் அல்லது விசுவாசக் குறைவு ஏற்படும்போது இரவுவேளைகளில்  மொட்டை மாடியில் படுத்து வானத்தைப் பாருங்கள். 

"பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது." ( சங்கீதம் 19 : 2 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Look at the sky

AATHAVAN 🖋️ 663 ⛪ November 21, 2022 Monday

"For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead; so that they are without excuse. ( Romans 1 : 20 )

In today's scientific age, many people are losing their faith in God by seeing the new discoveries of man. "Concept of God is only imagination of men; God did not created man; rather,  God was created by man." Young people are more drawn to this false teaching of the atheists. 

But, in fact, the greatest scientists have been believers in God. As today's verse says, they believed in God by seeing His invisible eternal power, Godhead, in created things. If you fail to see this, you cannot make an excuse to God in the judgment day. 

Albert Einstein (1879 - 1955) is the most intelligent person ever born. Although he did not espouse a particular religion, he accepted that a greater power runs the universe. He says that there is no possibility of creation of the universe by nature.

Pascal (1623 - 1662), who discovered the greatest scientific theory called Probability Theory, makes us wonder by what he discovered and said. He says very clearly that, "There is a God shaped vacuum in the heart of every human being which cannot be filled by any created things, but only by God, the creator made known through Jesus. 

I read an incident about Sir Isaac Newton (1642 - 1727). Once while traveling by train he was reading the scriptures and praying. The young man sitting next to him, not knowing who he was, said to him, "Sir, science has grown so much. You still believe in the Bible and prayer". To prove his stand, he  boasted about an invention made by Isaac Newton, without knowing he was talking to Newton itself. "See, man makes all these inventions, and you are still praying. . . .Sir, there is no such thing as God." he said.

Newton did not argue with him. When he got to his landing place, he gave the man his visiting card and asked him to come and see him at the address and said, "we can talk in detail". The young man was shocked to see the address. Only then did he realize that it was Newton who was talking to him.

The young man searched for the address given by Newton and went there. Newton has artificially created universe in a room of his science lab. Sun, planets, moon and earth were orbiting in space due to magnetic force. The young man asked in surprise, "Sir, did you make these?" Instead, Newton replied, "No, they came by themselves. One day when I woke up from sleep, these were here."

"Sir, how can these things come automatically? You have created them," said the young man. "I didn't create it. It just came," said Newton. The young man understood that Newton was teasing him. Newton said to him, "Brother, you are sure that such model universe could not have appeared in this little room by themselves, how then could the real ones have appeared by themselves?" The young man was ashamed and accepted Newton's words.

"This universe, sun, planets, earth, milky way are not likely to appear in nature. There is a great divine wisdom behind these," says Newton.

If you are an atheist or lack faith, lie on the terrace at night and look at the sky. "Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge."( Psalms 19 : 2 )

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Saturday, November 19, 2022

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை

 ஆதவன் 🖋️ 662 ⛪ நவம்பர் 20,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிரியமானவர்களேகர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும்ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்." (  2 பேதுரு 3 : 8 )

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையைப் பற்றிக் கூறும்போது அப்போஸ்தலரான பேதுரு மேற்படி வசனத்தைக் கூறுகின்றார்இந்த வசனம் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான விதியான 'காலமும் இடமும்என்பதை தன்னுள் கொண்டுள்ளது.

காலமும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைநாம் இருக்கும் இடத்தின் அடிப்படையிலேயே காலம் செயல்படும்நமது பூமியில் நாம் கணக்கிடும் நாள்ஆண்டு இவை சூரியனை அடிப்படையாகக் கொண்டவைஅதாவது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஓர் ஆண்டு எனக் கணக்கிடுகின்றோம்நமது வயதும் அதனடிப்படையில் மாறுகின்றதுஆனால் நாம் இருக்கும் இந்த இடத்தினை மாற்றும்போது காலக் கணக்கும் மாறிவிடுகின்றது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த கோட்பாடு நேரமும் இடமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறதுஐன்ஸ்டீன் மேலும் கூறினார்நமது பிரபஞ்சத்திற்கு வேக வரம்பு உள்ளதுஒளியின் வேகத்தை விட வேறு எதுவும் வேகமாக பயணிக்க முடியாது (வினாடிக்கு 186,000 மைல்கள்). அப்படி நாம் பயணித்தோமானால் என்ன நடக்கும்உதாரணமாக அப்படி ஒருவர் விண்வெளியில் ஓர் ஆண்டு பயணித்து ஓர் ஆண்டு கழித்து திரும்பி வருவாரென்றால் அவரது வயது ஒரு ஆண்டுதான் கூடியிருக்கும்ஆனால் அவர் அப்படித் திரும்பி வரும்போது பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்அவர் பயணத்தைக் துவங்கியபோது பூமியில் இருந்த மக்கள் அழிந்து பல தலைமுறை மாறியிருக்கும்.

இதுதான் கர்த்தரது கணக்கும் மனிதர்கள் நமது கணக்கும்பேதுருவுக்குத் தேவன் இந்த சத்தியத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி பலரும் பலவிதங்களில் கேள்வி கேட்டனர்இதனைப் பேதுரு பின்வருமாறு கூறுகின்றார்: "அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கேபிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே". ( 2 பேதுரு 3 : 4 )

தன்னிடம் கேள்வி எழுப்பிய மக்களுக்குப் பேதுரு இந்த வசனங்கள் மூலம் பதிலளிக்கிறார்தேவனது காலக் கணிப்பு ஒருபுறம்மறுபுறம் தேவனது பொறுமைஅதாவது ஒருவரும் அழிந்து கெட்டுபோய்விடக்கூடாது எனும் எண்ணம்எனவே தேவன் தனது வருகையைத் தாமதப்படுத்துகின்றார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பிநம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

அன்பானவர்களேகிறிஸ்துவின் வருகை உண்மை என்பதற்கு பேதுரு குறிப்பிட்டுள்ள நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞானபூர்வமான வசனமே சாட்சி.

கிறிஸ்து நமது காலத்தில் வந்து நம்மை சந்திக்கலாம் அல்லது நாம் மரித்து அவர்முன் போய் நிற்கலாம்எனவே அவரை சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்நமது வாழ்வை சீர்தூக்கிப் பாப்போம்கிறிஸ்துவை சந்திக்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712