ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023 ஞாயிற்றுக்கிழமை
ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023 ஞாயிற்றுக்கிழமை
ஆதவன் 🌞 829🌻 மே 06, 2023 சனிக்கிழமை
வெற்று ஆராதனைக் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் கூறும் அறிவுரைதான் மேற்படி வசனம். இன்று பலரும் தேவனை அரசியல் தலைவனைப்போலவே எண்ணிச் செயல்படுகின்றனர். அரசியல் தலைவனுக்கு அவன் வரும்போது அவனைப் புகழ்ந்து ஆரவாரக் குரலெழுப்பினாலே போதும், அவன் உள்ளம் மகிழுவான். ஆனால் நமது தேவன் அப்படிப்பட்டவரல்ல; அவர் உள்ளான மனித மனங்களைப் பார்கின்றவர். வெற்றுப் புகழ்ச்சிக் கீதங்களும் அல்லேலூயா எனும் அலறல்களும் அவரை மகிழ்ச்சியடையச் செய்யாது.
தேவன் தனது வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பார். நடுங்குகிறவன் என்றால் குளிரால் நடுங்குவதுபோல நடுங்குவதல்ல, கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டுமெனும் அச்ச் உணர்வுடன் செயல்படுவது; பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்போது தேவனுக்கு அஞ்சி அவற்றில் ஈடுபடாமல் இருப்பது.
சின்னக் கற்பனையோ பெரிய கற்பனையோ என்று பார்க்காமல், தேவன் விரும்பாத எந்தச் செயலையும் செய்யாமல் தவிர்ப்பதையே தேவன் விரும்புகின்றார்.
சவுல் அமெலேக்கியரை எதிர்த்துப் போரிடச் சென்றான். அப்படிச் செல்லும்போது, அமெலேக்கியரை வெற்றிகொள்ளும்போது அவர்களையும் அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசி மூலம் சவுலுக்குச் சொல்லியிருந்தார். ஆனால் சவுல் போரில் வெற்றிபெற்றபோது தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.அவன் தரமான ஆடு மாடுகளை தனக்கென்று உயிரோடு வைத்துக்கொண்டு அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான்.
சாமுவேல் அதுபற்றி சவுலிடம் கேட்டபோது சவுல், ஆடுமாடுகளில் நலமானவைகளை தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்ததாகக் கூறினான். ( 1 சாமுவேல் 15 : 15 ) அதற்கு மறுமொழியாகவே சாமுவேல், இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.
பலர் இன்று சவுலைப்போலவே இருக்கின்றனர். காணிக்கைகளையும், ஆலய காரியங்களுக்கும் ஊழியங்களுக்கு, ஊழியர்களுக்கு, மிஷனரி பணிகளுக்கு அள்ளி வழங்குவதையும் தாராளமாக, பெருமையாகச் செய்கின்றனர். ஆனால் தேவனது வார்த்தை இவர்களது வாழ்வில் செயலாவதில்லை. தாழ்மை, பொறுமை, அன்பு, விட்டுக்கொடுத்தல் என்று எந்த கிறிஸ்தவ பண்புகளும் இவர்களுக்கு இருப்பதில்லை.
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஊழலிலும் லஞ்சத்திலும், அடிதடி அரசியலிலும், கணவன் மனைவி சண்டையிலும் ஈடுபட்டுக்கொண்டு ஞாயிறு ஆராதனையில் உருக்கமுடன் வேண்டுதல் செய்வது, பாடுவது கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?
ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும்கூட பல விசுவாசிகள் இத்தகைய தேவனுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. வாழ்க்கை இத்தகைய மாற்றமில்லாத ஆராதனைகள் தேவனுக்கு ஏற்புடைய ஆராதனைகளல்ல.
"நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண்காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்...........உங்கள் சபைக் கூட்டத்தையும் நான் சகிக்கமாட்டேன்." (ஏசாயா - 1 : 12, 13 ) என்கின்றார் கர்த்தராகிய பரிசுத்தர்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
ஆதவன் 🌞 828🌻 மே 05, 2023 வெள்ளிக்கிழமை
.jpg)
"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து....." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 12 )
ஆதவன் 🌞 827🌻 மே 04, 2023 வியாழக்கிழமை
ஆதவன் 🌞 826🌻 மே 03, 2023 புதன்கிழமை
ஆதவன் 🌞 825🌻 மே 02, 2023 செவ்வாய்க்கிழமை
"என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்." ( உன்னதப்பாட்டு 5 : 3 )
ஆதவன் 🌞 824🌻 மே 01, 2023 திங்கள்கிழமை
"சரீரமுயற்சிஅற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )
" ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026 "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...