இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, May 03, 2024

ஜீவபுத்தகத்தில் நமது பெயர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,181      💚 மே 04, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் ஆகும்போது நமது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதுகின்றார். இது மெய்யான ஒரு சத்தியமாகும்.   வேதாகம   பக்தர்கள்   பலரும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்

இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு  ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன.  உதாரணமாக,  பிறப்பு சான்றிதழ்,  ஆதார் கார்டு போன்றவைஆதார் அடையாள அட்டை  இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள  முடியாது எனும் நிலையே உள்ளதுஅரசாங்கத்திடம்  என்ன  காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு  முக்கியமாக  உள்ளது

எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே  பிறப்பு சான்றிதழைப்  பெற ஓடுகின்றனர்ஆதார் அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர்அன்பானவர்களேஇதுபோலவே  தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம்இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம்  உரிமையானவர்கள் எனும் பாஸ்போர்ட்இந்திய பாஸ்போர்ட்  உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால்  ஏற்றுக்கொள்வதைப்போலத்தான் இதுவும்.

இப்படித் தங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே  தேவனது பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்இதனை  வேதம் தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லைஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்  மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

மேலும், "மரித்தோராகிய     சிறியோரையும்   பெரியோரையும்  தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்அப்பொழுது  புஸ்தகங்கள் திறக்கப்பட்டனஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு  புஸ்தகமும்  திறக்கப்பட்டதுஅப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடுகின்றார். "அன்றியும்என் உத்தம கூட்டாளியேஅவர்களுக்கு  உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலை யாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட  மிகவும் பிரயாசப்பட்டார்கள்அவர்களுடைய நாமங்கள்  ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (  பிலிப்பியர் 4 : 3 )

பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை  அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை  செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார்அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார்அப்போது, "ஆகிலும்தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய  புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."(  யாத்திராகமம் 32 : 32 )

அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட  பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப்  பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கிஎனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோஅவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்." (  யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.

இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவாஅன்பானவர்களேதேவனிடம் நம்மைத் தாழ்த்தி  ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம்தேவன்தாமே நமது பெயரை  ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார்அந்த நிச்சயம் நம்மை  மகிழ்ச்சிப்படுத்தும். உலக அரசாங்க சட்டங்களுக்கு மதிப்பளித்து நமது பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்ற நாம் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டாமா? நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெற முயலுவோம். அப்போது கர்த்தர் நமது பெயரையும் ஜீவபுத்தகத்தில் எழுதுவார். 

ஆம் அன்பானவர்களே, ஜீவபுஸ்தகத்திலே  பெயர்  எழுதப்பட்டவனாகக்                 காணப்படாதவன்    நரக  அக்கினிக்கடலிலே  தள்ளப்படுவான் என்பதே வேதம் தெளிவாகக் கூறும் உண்மை. வெறுமனே கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டிராமல் நாம் கிறிஸ்தவர்கள்தான் என்பதனை தேவனுக்குமுன் பதிவுசெய்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Thursday, May 02, 2024

ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பலவீனமுள்ளது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,180       💚 மே 03, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚 


"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்ஆவி உற்சாகமுள்ளதுதான்மாம்சமோ பலவீனமுள்ளது ." (  மத்தேயு 26 : 41 )  

கெத்சமனே தோட்டத்தில் தான் காட்டிக்கொடுக்கப்படுமுன்  இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தைகள் இவைதான்  படப்போகும் பாடுகளும் மரணமும் இயேசுவின் கண்முன்  இருந்தனஅவரது மனம் மிகுந்த துக்கத்துக்குள்ளாக இருந்ததுஆனால் அவரது ஆவி சோர்ந்துபோகவில்லைசீடர்கள்  சோர்ந்துபோய் தூக்கக்கலக்கத்தில் இருந்தனர்.  அவர்களை  இயேசு உற்சாகப்படுத்தி ஜெபிக்கச்சொல்கின்றார்.  

இது மேலான ஆவிக்குரிய ஒரு அனுபவத்துக்காக இயேசு கிறிஸ்து காட்டும் ஒரு வழிநாம் உடலளவிலும் மனதளவிலும்  சோர்ந்துபோகும்போது பலவேளைகளில் நம்மால்  ஜெபிக்க முடியவதில்லை. ஜெபிக்கவேண்டுமென்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் நம்மால் ஜெபிக்கமுடியாத வேளைகள் வருவதுண்டு. காரணம், நமது உடல் பலவீனம். இதனையே இயேசு கிறிஸ்து,"ஆவி உற்சாகமுள்ளதுதான்மாம்சமோ பலவீனமுள்ளது" என்று கூறுகின்றார். நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அத்தகைய சோர்வு நமக்கு வரும்போது அந்த சோர்வுக்கு மத்தியிலும் நாம்  தேவனைத் தேடும் ஆவலோடு  இருப்போமானால் தேவனுடைய  ஆவியானவர்  நமக்காக வேண்டுதல் செய்வார்.

அப்போஸ்தலரான பவுலும் இதுபற்றிக் கூறுகின்றார். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு  உதவிசெய்கிறார்நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய  தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்." (  ரோமர் 8 : 26 ) 

வெறும் உலக ஆசீர்வாதத்துக்காக மட்டுமே நாம் ஜெபித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தை நாம் பெற  முடியாதுநோய்களுக்காகவும்பொருளாதார  ஆசீர்வாதத்துக்காகவும்,   கடன் பிரச்சனை தீரவும்நம் பிள்ளைகளுடைய வேலைக்காகவும்திருமணத்துக்காகவும் மட்டுமே நாம் ஜெபித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தைப்  பெற முடியாதுஆனால் ஆவிக்குரிய வாஞ்சையோடு ஆதாவது நான் இன்னும்  பரிசுத்தமாகவேண்டுமென்டும் ஆவலோடுதேவனை இன்னும்  கிட்டிச் சேரவேண்டுமெனும் ஆவலோடு  விண்ணப்பம் செய்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறலாம்

அதாவது ஆவியின் சிந்தனையோடு ஜெபித்தால் தேவனுடைய  ஆவியானவர் நமக்காக விண்ணப்பம்செய்வார். அதனை நமது வாழ்வில் நாம் கண்டுணரலாம். "ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் ,  இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை  இன்னதென்று அறிவார்." (  ரோமர் 8 : 27 )     

இயேசு கிறிஸ்து இத்தகைய ஆவிக்குரிய மேலான எண்ணமுடன் இருந்ததால் அவரது பாடுகளைத் தாங்கத்தக்கப் பலத்தை  ஆவியானவரின் மன்றாட்டினால் பெற்றுக்கொண்டார்

அன்பானவர்களேஆவிக்குரிய சோர்வோஉடல்சோர்வோ  நம்மைத் தாக்கும்போது அப்படியே இருக்குமிடத்திலிருந்து நமக்குமுடிந்தமட்டும் ஜெபித்தால் போதும்நமது உள்ளத்தின்  ஆழத்தினை அறிந்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பம்  செய்வார்நமது உள்ளம் தேவனை நேசிக்கும் உற்சாக்கத்துடன்  இருந்தால் போதும்ஆவிக்குரிய வாழ்வில் எந்த சோர்வும் நம்மை தேவனைவிட்டு விலக்கிட முடியாது

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Wednesday, May 01, 2024

வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,179       💚 மே 02, 2024 💚 வியாழக்கிழமை 💚


"கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 10, 11)

நாம் மெய்யாக ஒருவரிடம் அன்புள்ளவர்களாய் இருந்தால் அவர்கள் என்ன விரும்புகின்றார்களோ அவைகளைச் செய்ய தயாராக இருப்போம்.  நமக்கு வேண்டியவர்கள் நமது வீட்டிற்கு வருகின்றார்களென்றால் வீட்டில் அனைத்தையும் சரிப்படுத்துவோம். அதுபோல கர்த்தரோடு நாம் ஐக்கியமுள்ளவர்களென்றால் கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நாம் சோதித்துப் பார்ப்பவர்களாகவும் அவற்றைச் செயல்படுத்துகின்றவர்களாகவுமாக இருப்போம். 

இன்றைய தியான வசனத்துக்கு முன்னதாக  அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 8 ) அதாவது கர்த்தரை அறியாமல் நாம் வாழ்ந்தபோது அந்தகார இருள் நம்மைச் சூழ்ந்திருந்தது. இப்போதோ கர்த்தரை அறிந்து நம்மில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளதால், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் என்கின்றார். 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்" என்று. ஆவியின் கனிகள் இல்லாதவன் கிறிஸ்துவை உடையவனல்ல. "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) நற்குணம், நீதிச் செயல்கள் மற்றும் உண்மையில்லாத செயல்கள் அனைத்துமே அந்தகாரச் செயல்பாடுகள். 

எனவே அன்பானவர்களே, நாம் எந்தச் செயல்களைச் செய்தாலும் அந்தச் செயல்கள்  உண்மையும், நீதியும் உள்ளவையாக இருக்கின்றதா என்று சோதித்துப்பார்த்துச் செய்யவேண்டும்.  இதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்" என்று கூறுகின்றது. 

இன்று கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில்தான் முரண்பட்டு வாழ்கின்றார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.  பலரிடம் ஆவியின் கனிகள் இல்லை. ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவதுதான் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை என்று எண்ணிக்கொள்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் கிறிஸ்தவத்தை பத்தோடு பதினொன்றாக ஒரு மதமாகவே  எண்ணிக்கொள்கின்றனர். 

எனவே நாம் நம்மையே சோதித்துக்கொள்வோம். கனியற்ற அந்தகாரச் செயல்பாடுகள் நம்மிடம் இருந்தால் அவைகளை தேவனிடம் அறிக்கையிட்டு மெய்யான மனம்திரும்பிய வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Tuesday, April 30, 2024

தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் தெரியும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,178      💚 மே 01, 2024 💚 புதன்கிழமை 💚


"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்." ( பிலிப்பியர் 4 : 11, 12 )

சிலருக்கு எவ்வளவு அதிகமான செல்வமோ, பெரிய பதவியோ இருந்தாலும் திருப்தி இருக்காது. காரணம், மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு மற்றவர்களுக்குள்ளது போல தங்களுக்கு இல்லையே எனும் மனநிலைதான் காரணம். இத்தகைய மனிதர்களுக்கு ஒருபோதும் மனமகிழ்சி இருக்கமுடியாது. 

அப்போஸ்தலரான பவுல் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர். ஆனால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் அற்பமும் குப்பையுமாக  எண்ணித் துறந்தவர். காரணம், கிறிஸ்துவின் மகிமைக்குமுன் அவரது செல்வமோ பதவியோ அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கிறிஸ்துவுக்காக அவர்பட்ட பாடுகள் எண்ணிலடங்காதவை. இன்றைய வசனத்தை அவர் குளிரூட்டப்பட்ட அறையில் (Air Condition )  இருந்துகொண்டு எழுதவில்லை. கிறிஸ்துவுக்காக அவர் பட்ட பாடுகளை அவர் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்" ( 2 கொரிந்தியர் 11 : 23-25 )

"அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்." ( 2 கொரிந்தியர் 11 : 26, 27 )

அன்பானவர்களே, எனவே நமது துன்பங்களை நாம் பவுல் அப்போஸ்தலர் பட்டத் துன்பங்களுடன் ஒப்பிடும்போது நமக்கு ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும். ஆவிக்குரிய மக்களாகிய நாம் இத்தகைய மனமுள்ளவர்களாக வாழவேண்டுமேத்தவிர நம்மைவிட உலக செல்வத்திலும், பதவியிலும் உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.   ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ மேலான அனுபவங்களும்  மேன்மைகளும் உண்டு. கிறிஸ்துவுக்குள் வாழும்போது இன்றும் நாம் அவற்றை அனுபவிக்க முடியும். ஆனால் செல்வமும் பதவியும் மட்டுமே வாழ்க்கை என எண்ணுபவர்கள் இவற்றை  அனுபவிப்பதில்லை. 

இதுவே மனமகிழ்ச்சி. இத்தகைய மனமகிழ்ச்சியை அனுபவித்ததால்தான் பவுல் அப்போஸ்தலர் தனக்கு வந்த  பாடுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை அறிவித்தார்.  இதுபோலவே, கிறிஸ்துவை அறிவிக்கும் கிறிஸ்தவ ஊழியன் என்பவனும் பாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவனாக இருக்கவேண்டும்.  இதுவே வேதம் நமக்குக் காண்பிக்கும் கிறிஸ்தவ வழிமுறை. கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய அனுபவங்களில் வளரும்போது மட்டுமே நாம் இத்தகைய மனநிலையினை அடைந்திட முடியும். ஆம், சிலுவைகள் இல்லாமல் உயிர்ப்பு இல்லை.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்