Wednesday, November 23, 2022

Fragrance of Christ

 AATHAVAN 🖋️ 667 ⛪ November 25, 2022 Friday

"Now thanks be unto God, which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us in every place." ( 2 Corinthians 2 : 14 )

Once I read a book of witness by a woman named Bilquis who lived at the middle of the last century in Pakistan. She belongs to Islamic faith. Her husband held a cabinet position in the Government of Pakistan. This woman knew nothing about Jesus or Christianity. But she came to know Jesus through a servant girl who worked in his house. God guided this woman through dreams.

Before she could read the Bible properly, she had a dream one day. In the dream, a person dressed in white cloth came to her house to sell scent. Bilguis asked him about the aromatic ointments and the man took a particular bottle and gave it to Bilguis and asked her to use it regularly. When she opened the bottle, a wonderful aroma spread and filled her whole house. The man said,  "keep this" and left.

Bilguis did not understand the meaning of this dream. Yes, she don't understand anything about it. That evening she studied the scriptures. She had to study the Bible secretly because it was an Islamic country and her husband an Islamic. While reading like that, her eyes sopped at the verse we are  meditating today. "thanks be unto God, which always causeth us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us in every place." When she read the words, she understood the meaning of the dream. "I jumped with joy without control" she wrote.

"For we are unto God a sweet savour of Christ, in them that are saved, and in them that perish" ( 2 Corinthians 2 : 15 )

Beloved, Christ desires to make us triumphant in Christ always, and to spread through us everywhere the fragrance of the knowledge of him. That is, He wants the fragrance of Christ spread throughout the world through a life of witness.

In them that are saved, and in them that perish we are Christ's praise to God. He wants the depraved to know Him. Because he wants everyone to repent so that no one will be perished. Corrupted people are also likely to be converted by witnessing the lives of others in Christ.

Let us spread the fragrance of Christ in the world by our witness life.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

கிறிஸ்துவின் நறுமணம்

 ஆதவன் 🖋️ 667 ⛪ நவம்பர் 25,  2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்."( 2 கொரிந்தியர் 2 : 14 )

பாகிஸ்தான் நாட்டில் சென்ற நூற்றாண்டின் மத்தியகாலத்தில் வாழ்ந்தவர் பில்குய்ஸ் எனும் பெண்மணி பற்றி அவர்களது புத்தகத்தில் படித்தேன். அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். அவரது கணவர் பாகிஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சரவையில்  பதவி வகித்தவர். இந்தப் பெண்மணிக்கு இயேசுவைக் குறித்தோ கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்தோ ஏதும் தெரியாது. ஆனால் அவரது வீட்டில் வேலைசெய்த வேலைக்காரப் பெண்மணிமூலாம் இயேசுவை அறிந்துகொண்டார். அவரை தேவன் கனவு மூலமே வழிநடத்தினார். 

வேதாகமத்தை அவர்  சரியாக படித்து அறியுமுன்னமே ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வெண் ஆடை அணிந்த ஒருநபர் நறுமணத் தைலங்கள் ( Scent ) விற்பனை செய்ய அவரது வீட்டிற்கு வந்தார். பில்குய்ஸ் அவரிடம் அந்த நறுமணத் தைலங்களைக்குறித்து விசாரிக்கவே அவர் குறிப்பிட்ட ஒரு தைலத்தை எடுத்து பில்குய்ஸ் கையில் கொடுத்து நுகர்ந்து பார்க்கச் சொன்னார். அந்தத் தைல பாட்டிலைத் திறந்ததும் மிகச் சிறந்த நறுமணம் பரவி அவர் வீடு முழுவதும் நிரப்பிற்று. இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அவர் சென்றுவிட்டார்.

பில்குய்ஸ் அவர்களுக்கு இந்தக் கனவின் பொருள் விளங்கவில்லை. இதுபற்றி ஒன்றும் புரியவில்லை. அன்று மாலை அவர் வேதாகமத்தைப் படிக்கமுயன்றார். இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய கணவன் என்பதால் மறைத்து மறைத்துதான் வேதாகமத்தை அவர் படிக்கவேண்டியிருந்தது.  அப்படிப் படிக்கும்போது அவர் கண்ணில் பட்டது இன்றைய நமது தியானத்துக்குரிய வசனம். "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." எனும் வார்த்தைகளை வாசித்தபோது அவருக்குக் கனவின் பொருள் புரிந்தது. "நான் என்னை அறியாமல் துள்ளிக் குதித்துவிட்டேன்" என்று எழுதியுள்ளார் அவர். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 15 ) என்று தொடர்ந்து எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த கிறிஸ்து விரும்புகின்றார். அதாவது சாட்சியுள்ள ஒரு வாழ்க்கைமூலம் கிறிஸ்துவின் நறுமணம் உலகில் பரவிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." என்று கூறியுள்ளபடி கெட்டுப்போகிறவர்களும் அவரை அறிந்திடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். காரணம், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். கெட்டுப்போகிறவர்களும் கிறிஸ்துவுக்குள் மற்றவர்கள் வாழும் சாட்சி வாழ்க்கையைப் பார்த்து மனம் திரும்பிட வாய்ப்புண்டு.

நமது சாட்சி வாழ்வால் கிறிஸ்துவின் நறுமணம் உலகினில் பரவிடச் செய்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Tuesday, November 22, 2022

தேவ வல்லமை

 ஆதவன் 🖋️ 666 ⛪ நவம்பர் 24,  2022 வியாழக்கிழமை

"மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்". ( லுூக்கா 18 : 27 )

நாம் மனித அறிவினால் எல்லாவற்றையும் சிந்திக்கின்றோம். ஏனெனில் நாம் வாழும் சூழ்நிலை நம்மை அப்படிதான் சிந்திக்கத் தூண்டும். எனவேதான் நம் பல வேளைகளில் பிரச்னைகளைப் பார்த்துப்  பயந்து திகைக்கின்றோம். இயேசு கிறிஸ்து கூறும் இன்றைய வார்த்தைகள் நமக்கு கர்த்தர்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆம், தேவன் காலம், நேரம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர். அவரால் எல்லாம் கூடும்.

இயேசு செய்த அற்புதங்களில் மிகப்பெரிய அற்புதம், மரித்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட லாசரை நான்கு நாட்களுக்குப்பின்  உயிர்ப்பித்தது. ஒருவர் மரித்து இரண்டாம் நாளே அந்த உடலிலிருந்து துர் நாற்றம் வந்துவிடும். நான்காம் நாளில் சதைகள் அழுகிவிடும். ஆனால், அந்த அழுகிய உடலை தனது வார்த்தையால் எழும்பச் செய்தார் இயேசு கிறிஸ்து. ஆம், மனிதனால் கூடாதவைகள் தேவனால் கூடும்.   

நித்திய ஜீவனைக்குறித்தும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் குறித்தும் பேசும்போது இயேசு கிறிஸ்து, "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." ( லுூக்கா 18 : 25 ) அதாவது செல்வந்தர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பது இதன் பொருள். 

ஆனால், இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் அவரிடம் , "ஆண்டவரே, அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்படக்கூடும்?"  என்றார்கள். அவர்களுக்கு மறுமொழியாகத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தைக் கூறினார். அதாவது மனிதர்களால் இது முடியாததுபோலத் தெரியலாம் ஆனால் மரித்த லாசரை உயிர்பித்ததுபோல தேவனால் இது முடியும்.  

ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையை இயேசு கூறுகின்றார்.  "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்". ( லுூக்கா 18 : 17 ) அதாவது, ஒருவன் மனம் திரும்பி சிறு பிள்ளையைப் போன்ற மன நிலையினை அடைவானென்றால் அவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

தேவனை ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் பிச்சைக்காரர்களல்ல. ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தன். தாவீது மிகப்பெரிய ராஜா.  எசேக்கியா ஒரு ராஜா. இதுபோல புதிய ஏற்பாட்டிலும் இயேசுவின் மறைமுக சீடனாயிருந்த அரிமத்தியா ஊர் யோசேப்பு ஒரு செல்வந்தன்.  மேலும் இயேசு உலகினில் இருந்தபோது பல  செல்வந்த பெண்கள் அவரோடு இருந்து ஊழியத்துக்கு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏரோது ராஜாவின் செயலாளரான கூசாவின் மனைவியும் அவர்களுள் ஒருத்தி.   "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்." ( லுூக்கா 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

பரலோக ராஜ்யத்தில் நுழைய பணம் ஒரு அளவுகோலல்ல. ஏழையாக இருந்து அவருக்கு ஏற்பில்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் நரகத்துக்கு நேராகச் செல்லலாம். அதுபோல செல்வமுள்ள ஒருவர் தேவ நோக்கமறிந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை  வாழ்ந்து பரலோக ராஜ்யத்தைச் சேரலாம்.  

மேலும் இன்றைய வசனம் உலகப் பிரச்சனைகளை எண்ணிக் கலங்கி நிற்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வசனமாகும். நம்மை அழுத்தும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லாததுபோலத் தெரியலாம் ஆனால் நாம் கலங்கிடத் தேவையில்லை. நமது விசுவாசத்தை உறுதிப்படுத்த இன்றைய வசனம்  உதவிடும். 

இஸ்ரவேல் மக்கள் பார்வோனுக்குத் தப்பிவிட வழியே இல்லாத சூழ்நிலையில்  செங்கடலைப் பிளந்து வழியுண்டாக்கி அவர்களை    தேவன் காப்பாற்றவில்லையா?  எனவே பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளை எண்ணிக் கலங்கவேண்டாம். பிரச்சனைகளுக்கு ஊடாக தேவன் இருக்கின்றார் என்பதை விசுவாசியுங்கள். தேவன் நமக்கு விடுதலை தருவார்.  ஆம், மனுஷரால் கூடாதவை தேவனால் கூடும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Power of God

 AATHAVAN 🖋️ 666 ⛪ November 24, 2022 Thursday

"The things which are impossible with men are possible with God." ( Luke 18 : 27 )

We think everything with human knowledge. Because the situation we live in makes us think like that. That is why many times we are afraid and bewildered by problems. Today's words of Jesus Christ will make us believe in God. Yes, God is beyond time and space. He can do everything.

The greatest miracle that Jesus performed was the resurrection of Lazarus four days after he had been dead and buried in the tomb. On the second day after a person dies, a bad smell comes from the body. On the fourth day the flesh rots. But Jesus Christ resurrected that rotten body with his word. Yes, God can do what is impossible for man.

When speaking of eternal life and entering the kingdom of heaven, Jesus Christ said, "For it is easier for a camel to go through a needle's eye, than for a rich man to enter into the kingdom of God." ( Luke 18 : 25 ) This means that the rich cannot enter the kingdom of heaven.

But the people heard the words of Jesus Christ and asked him, "Lord, then who can be saved?". It was in response to them that Jesus Christ said today's verse. That is, it may seem like it is impossible for humans but God can do it as He raised Lazarus from the dead.

But, Jesus states a condition for this. "Verily I say unto you, Whosoever shall not receive the kingdom of God as a little child shall in no wise enter therein." ( Luke 18 : 17 ) That is, if one repents and attains the state of mind of a little child, he can enter the kingdom of heaven.

All those who accepted God are not beggars. Abraham was very rich. David was the greatest king. Hezekiah was a king. Similarly, in the New Testament, Joseph of Arimathea, who was a hidden disciple of Jesus, was a rich man. And it is said that when Jesus was in the world, many rich women helped him in the ministry. In particular, the wife of Chuza, King Herod's secretary, was one of them. "And Joanna the wife of Chuza Herod's steward, and Susanna, and many others, which ministered unto him of their substance." ( Luke 8 : 3 ) we read.

Money is not a criterion to enter the kingdom of God. A poor can go straight to hell by engaging in activities that are not acceptable to God. Similarly, a rich person can live a life that is acceptable to God and join the kingdom of heaven.

And today's verse is a verse that gives comfort to those who are worried about the problems of the world. There may seem to be no escape from the problems that press upon us, but we need not panic. Today's verse will help to confirm our faith.

Didn't God save the Israelites by parting the Red Sea when there was no way to escape from Pharaoh ? So don't worry about problems and sufferings. Believe and see God through trouble. God will set us free. Yes, things which are impossible with men are possible with God.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

H. A. கிருஷ்ணபிள்ளை

                         தொகுப்பு : சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ கம்பர் எனப் பெயர்பெற்ற ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (ஏப்ரல் 231827 - பெப்ரவரி 31900ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தவர், வைணவ சமயத்தவர் ஆவார். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. கிருஷ்ணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி குலவித்தையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகக் கற்று அறிந்தார். 

அக்காலகட்டத்தில் நெல்லையில் பல கிருத்தவ சங்கங்கள் சிறந்தமுறையில் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. அவ்வாறு வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் தொண்டு புரிந்துவந்தார். கிருத்தவ சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரம் என்ற சிற்றூரில் ஜி.யு. போப்  ஒரு கல்லூரி அமைத்து நடத்திவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல்லிடம்  ஒப்படைக்கபட்டது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருஷ்ண பிள்ளையைக் கால்டுவெல் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். 

சாயர்புரத்தில் வேலை யேற்று ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்றது. 

ஏற்கனவே இவரது உறவினர் சிலர், கிருத்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதன் செம்மையை அடிக்கடி இவரிடம் எடுத்துரைத்தனர் அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். இதனால் கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார்.

இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார் பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.

கிருஷ்ண பிள்ளை கிறிஸ்தவ நூல்களை விரும்பிப் படித்த காலத்தில் ஜான் பனியன் (1628-1688) எழுதிய தி பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (The Pilgrim's Progress) என்னும் நூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தன் சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் அந்நூல் சொல்வது போல உணர்ந்தார். இரண்டு பாகங்கள் கொண்ட அந்த நூலை அடிப்படையாக வைத்து இரட்சணிய யாத்திரிகம் என்னும் செய்யுளை இயற்றினார். மூலநூலை அப்படியே மொழியாக்கம் செய்யாமல் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளோடு இணைத்து தமிழ் கிறிஸ்தவ மரபின் முக்கியமான படைப்பாக எழுதினார்.

இரட்சணிய யாத்திரீகம் பாளையங்கோட்டையில் இருந்து வெளியான 'நற்போதகம்’ என்னும் இதழில் பகுதி பகுதியாக வெளியானது. இந்த நூல் 3800 செய்யுள்களைக் கொண்டது. அக்காலத்தில் புலவர்களின் திறமைக்கு சான்றாகக் கருதப்பட்ட  யமகம்,  திரிபு, சிலேடை, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று இதில் உள்ளது. ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. நூலை எழுதிய நோக்கத்தை சொல்லும்போது "மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்" என்கிறார்.

இறைவனைப் புகழும் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திருஅகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், அவர் கிறிஸ்தவரான வரலாறு குறித்த தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் எழுதியுள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார்.

வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:

"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."

கிருத்தவ சமய சார்பான சிறந்த நூல்களை இலக்கியங்களைப் படைத்த இவர் 1900 ஆம் ஆண்டு தம் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார். 

கிருஷ்ணபிள்ளை இயற்றிய நூல்கள்:- 

செய்யுள் நூல்கள்

  • போற்றித் திருஅகவல்
  • இரட்சணிய யாத்திரீகம்
  • இரட்சணிய மனோகரம்
உரைநடை நூல்கள்
  • இலக்கண சூடாமணி
  • நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு
  • இரட்சணிய சமய நிர்ணயம்
தொகுப்பு நூல்கள்
  • காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
  • இரட்சணிய குறள்
  • இரட்சணிய பாலபோதனை

தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் ஜெபம்

 ஆதவன் 🖋️ 665 ⛪ நவம்பர் 23,  2022 புதன்கிழமை

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

மறுவுலக வாழ்வையே முக்கியப்படுத்தி நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். ஆனால் பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறிய வசனங்களுக்கும் உவமைகளுக்கும் உலகச் சம்பந்தமான பொருளையே எடுத்துக்கொள்கின்றனர்.

அப்படி மக்கள் தவறுதலாகப் பொருள்கொள்ளும் வசனங்களில் ஒன்றுதான் இன்றைய வசனம்.  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு இயேசு கிறிஸ்து தேவனுக்குப் பயப்படாத, மனிதர்களை மதியாத நியாதிபதி ஒருவனைக் குறிப்பிட்டுப்  பேசுகின்றார். இந்த அநீதியான நியாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் வேண்டி தொடர்ந்து மன்றாடுகின்றாள். அவளது உபத்திரவம் பொறுக்கமுடியாமல் அந்த அநீதியான நியாதிபதி அவளுக்கு நீதி வழங்குகின்றான். 

அதாவது இந்த விதவையைப்போல தேவனை நோக்கி இரவும் பகலும் நாம் தொடர்ந்து மன்றாடினால் நமது ஜெபத்தை தேவன் கேட்பார். என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

இந்த உவமையை எல்லோரும் தங்களுக்காக இயேசு கூறியதாக எண்ணி, தொடர்ந்து தங்களது உலகத் தேவைகளை தேவனிடம் கூறினால் அவை நிறைவேறும் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தெளிவாக வாசிக்கும்போது இயேசு கூறுவது புரியும். எல்லோரது ஜெபத்தையும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடாமல், "தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில்" என்று கூறுகின்றார். 

அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது கற்பனைகளின்படி வாழும் மீட்பு அனுபவம் பெற்றவர்கள். அத்தகைய மனிதர்கள் வேண்டுதல் செய்யும்போது தேவன் அதனைக்கேட்டு பதில் தருவார் என்கின்றார். அவரிடம் உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்யவேண்டுமென்றோ அப்படி  விண்ணப்பம்பண்ணும் உலகத் தேவைகள் எல்லாவற்றையும் அவர் தருவார் என்பதற்கோ  இயேசு கிறிஸ்து இந்த உவமையைக் கூறவில்லை. 

ஆவிக்குரிய மனிதர்கள் எப்போதும் தங்களது உலகத் தேவைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்தித்து அவற்றுக்கே முன்னுரிமைகொடுத்து வேண்டுதல் செய்வார்கள். 

அப்போஸ்தலரான யாக்கோபு எனவேதான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்று கூறுகின்றார். மட்டுமல்ல, "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 4 ) என்று கோபத்தில் கூறுகின்றார். 

அன்பானவர்களே, வேதாகமம் ஆவிக்குரிய புத்தகம். அதனை சாதாரண உலகப் புத்தகம்போலப் படித்து நாம் தவறான அர்த்தங்களைக்கொண்டு வாழக்கூடாது. தேவன் நமது ஜெபத்தைக் கேட்கவேண்டுமானால் முதலில் நாம் மனம்திரும்பி ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழும்போது நாம் ஆவிக்குரியவிதமான விண்ணப்பங்களைச் செய்வோம். அவர் அவைகளை நிறைவேற்றுவார்.  மட்டுமல்ல, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )" என்று இயேசு கூறியவாறு உலக ஆசீர்வாதங்களையும்  அவர் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார். . 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Prayer of elect people

 AATHAVAN 🖋️ 665 ⛪ Wednesday, November 23, 2022

"And shall not God avenge his own elect, which cry day and night unto him, though he bear long with them? (Luke 18:7)

Jesus Christ came into the world to lead us to eternal life, emphasizing the afterlife. But generally all Christians take worldly meanings for the verses and parables of Jesus Christ.

Today's verse is one of those verses that people misunderstood. To explain to people that they should always pray without getting tired, Jesus Christ mentions about  a judge who does not fear God and does not respect people. A widow continually pleads with this unjust judge for justice. Unable to bear her torcher, the unjust judge gives her justice.

That is, if we continue to pray to God day and night like this widow, God will hear our prayer. Jesus Christ said.

Everyone thinks that Jesus told this parable for them, and they think that if they constantly tell God about their worldly needs, they will be fulfilled. But, when read clearly, what Jesus is saying becomes clear to us. Jesus Christ does not refer to everyone's prayer, but says "God reply his own elect"

That is, those who have been chosen by God, who have experienced the salvation according to His will. When such people pray, God hears and answers them. Jesus Christ did not tell this parable to ask Him for worldly needs or that He would give all the worldly needs of such requests.

Spiritual beings will not  always pray for their worldly needs. Spiritual people think and pray for spiritual things.

That is why the apostle James said, "Ye ask, and receive not, because ye ask amiss, that ye may consume it upon your lusts." ( James 4 : 3 ) Not only that he says in anger, "Ye adulterers and adulteresses, know ye not that the friendship of the world is enmity with God? whosoever therefore will be a friend of the world is the enemy of God." ( James 4 : 4 ) 

Beloved, the Bible is a spiritual book. We should not read it like an ordinary worldly book and live with wrong meanings. If God wants to hear our prayers, we must first repent and live a spiritual life. When we live like that, we only make spiritual requests. He will fulfill them. Not only that, he will meet our worldly needs also. "But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you." ( Matthew 6 : 33 ) as Jesus said, He will bless us with worldly blessings.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

" ஆதவன் " தியானம் - 1978 ஜூலை 08, புதன் 2026       "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் ...