இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, August 02, 2021

பாபிலோனில் கர்த்தரது சித்தம் செய்தல்

பாபிலோனில் கர்த்தரது  சித்தம் செய்தல்

                                   - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ன்று நமக்கு  வாழ்க்கையில் பலப் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து நம்மை அடிமைப்படுத்தலாம். நமக்கு  எதிரானச் செயலில் சிலர் ஈடுபடலாம். நாட்டை ஆளும் அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படலாம்,  நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சிலர் நமக்கு எதிராக மேலதிகாரிகளுக்கு நம்மைக்குறித்து குற்றச்சாட்டுகளைக் கூறலாம். ஆனால் கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றவன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் அதாவது அவனது வாழ்வில் பாபிலோன் போன்ற ஒரு சிறைப்பட்ட வாழ்க்கை வந்தாலும் அவருக்குச் சித்தமானதையே செய்வான்.  பிரச்னை வந்துவிட்டது, பணத்தேவை வந்துவிட்டது என்று  பணியிடத்தில் லஞ்சம் , வாங்கமாட்டான். குறுக்கு வழியில் ஆதாயம் தேடமாட்டான். கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமான பேச்சு மற்றும் செயல்களில் ஈடுபடமாட்டான். . மாறாகக் கர்த்தருக்குச் சித்தமானதையே செய்வான்.. 

இதனைத்தான் ஏசாயா மூலம் தேவன்  கூறுகின்றார்,  "நீங்களெல்லாரும்   கூடிவந்து  கேளுங்கள்;   கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்கு சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்அவன்  புயம்   கல்தேயரின்மேல்    இருக்கும்  என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?" (  ஏசாயா 48 : 14 )

பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றதுஇங்கு தேவன் நமக்கு உணர்த்துவதுஒருவன்  கர்த்தருக்குப்                      பிரியமான  வாழ்க்கை  வாழ்ந்தால் அவன் அவருக்குச் சித்தமானதை                 எத்தகைய     சூழ்நிலை    வந்தாலும்  அங்கும் செய்து  அவரதுநாமத்தை    மகிமைப்படுத்துவான்இடமோ   பிரச்சனைகளோ கர்த்தருக்குப் பிரியமாக  நடப்பவனைத்  தடைசெய்ய முடியாது. மட்டுமல்ல, அந்த இடத்தில்  தேவன் அவனை மற்றவர்களுக்கு மேலாக வைப்பார்.

ஏசாயா கூறிய இந்த வசனம் தானியேலுக்கு அப்படியே நிறைவேறியதை நாம் பார்க்கலாம். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் ஆண்டு நேபுகாத்நேச்சார் படையெடுத்துவந்து எருசலேம் தேவாலயத்திலுள்ள அனைத்துப்  பொன்னையும் வெள்ளியையும் கொள்ளையிட்டு, மக்களையும் கைதுசெய்து அடிமையாகப்  பாபிலோனுக்கு (காலத்தேயர் தேசத்துக்குகொண்டுசென்றான். (தானியேல் - 1) அப்படிக் கொண்டு போகப்பட்டவர்களில் தானியேல் ஒருவர்.

ஆனால் தேவன் அங்கு பெரிய செயல்புரிந்தார்நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அவன் அறிஞர்களைக் கூப்பிட்டு, "நான் ஒரு கனவு கண்டேன் எனக்கு நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் கூறவேண்டும்" எனக் கட்டளையிட்டான். அறிஞர்கள் ராஜாவிடம், "ராஜாவே நீர் கனவினைக்  கூறும் நாங்கள் அப்போது அதன் பொருளைக் கூறுவோம்என்றனர்ராஜா "இல்லை, நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் நீங்கள் கூறவேண்டும்" என்று கூறினான். "இது எந்த மனிதனலும் முடியாது தேவர்களால்தான் முடியும்" என்று கூறிவிட்டனர் அறிஞர்கள்

ஆனால் தானியேல் ராஜா கண்ட கனவினையும் அதன் பொருளையும் சரியாகக்  கூறினார்ஆம், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்  என்ற வசனத்தின்படி தான் அடிமையாக இருந்த  பாபிலோனில் தானியேல் இதனைச் செய்தார்.  

மட்டுமல்ல இந்த வசனம் கூறுகின்றது, "அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும்" என்றுஅதன்படி தானியேல் ராஜாவின்  கனவையும் அதன் விளக்கத்தையும் கூறியதால்,  "ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்". (  தானியேல் 2 : 48 )

இன்று நாம் வாழும் நாட்டில் பல சூழ்நிலைகள் நம்மை அடிமைப்படுத்தியுள்ளன. அரசியல் நிலைகள் உத்தமமான கிறிஸ்தவர்களுக்குச்  . சாதகமாக இல்லை.  பல வேளைகளில் நாமும் பாபிலோனில் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்ததுபோல வாழ்கின்றோம்.

அன்பானவர்களே, ஏசாயாவின் தீர்க்கதரிசனம், "கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்பது. நாமும் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால் தானியேலுக்கு நிறைவேறியதுபோல இந்தத் தீர்க்கதரிசனம் நமது வாழ்க்கையிலும் நிறைவேறும். நமது புயம் கல்தேயரின்மேல் (நமது எதிரிகள்மேல்) வெற்றிபெற்றதாக இருக்கும்ஆம் , எந்தவித அசாதாரணச் சூழ்நிலையிலும்  நாம் வெற்றிபெறமுடியும்.

"கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்று இந்த வசனம் கூறுவதுபோல முதலில் கர்த்தருக்குப்  பிரியமானவன் எனும் நிலையினை நாம்  பெறவேண்டும். இன்று துன்மார்க்க வாழ்க்கை வாழும் போலி கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் கர்த்தருடைய  சித்தம் இன்னதென்று தெரியாமலேயே செயல்பட முயல்கின்றனர். 

கிறிஸ்துவை அறியாத பெயர் கிறிஸ்தவர்கள், அல்லது தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மாம்சீக கிறிஸ்தவர்கள், போலி ஆவிக்குரிய சபை ஊழியர்கள்,  இன்று தேவையில்லாமல் எதிர் கருத்து கொண்ட மதத்தினரையும்  எதிர் கருத்து கொண்ட அரசியல் கட்சியினரையும் தேவையில்லாமல் எதிர்த்து கிறிஸ்தவ முறைமைகளை எதிரான கருத்துக்களைக் கூறுவதும்  செயல்படுவதும் பலப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றது.

ஆனால், எனக்குத் தெரிந்த பல உண்மையான ஊழியர்களும் ஆவிக்குரிய நண்பர்களும் இந்த வசனத்தின்படி கர்த்தருக்குச் சித்தமானதை இந்த அசாதாரண  சூழ்நிலையிலும் செய்து கர்த்தரது  நாமத்தை மகிமைப்படுத்தி வருகின்றனர். இந்த வசனம் இன்றும் உண்மையாகச் செயல்புரிவதைக் காண முடிகின்றது. 

வேதாகம வசனங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. அவை ஜீவனுள்ள தேவ வார்த்தைகள். அன்பானவர்களே,  பாவ மன்னிப்பைப் பெற்று, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்; அவருக்குச் சித்தமானதை பாபிலோன்போன்ற எந்த இக்கட்டானச் சூழ்நிலையிலும் செய்து தேவ நாமத்தை நாம் மகிமைப்படுத்த முடியும்.

மொழிப பிரச்னை

 

                                       - சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

"மீப காலங்களில் தமிழகத்தில் நிலவிவரும் மொழிப்  பிரச்சினை குறித்து நீங்கள் ஏன் எதுவும் எழுதவில்லை ? தமிழ் தமிழ் என்று ஒரு கூட்டம் மக்கள் தமிழ் பற்று கொண்டு  எழுதுவதும் பேசுவதுமாக இருக்கின்றனர். தமிழ்தான்  உலகின் முதல்மொழி என்று மெய்ப்பிக்க பிரயாசப்படுகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் என்ன  செய்வது? அதுகுறித்து நீங்கள் ஏன் ஒன்றும் எழுதவில்லை?" என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்

இயேசு கிறிஸ்து கூறிய முதல் அன்புக்கட்டளையே , "உன்னிடத்தில் அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூருவாயாக என்பதுதான். எனவே நாம் எல்லோரிடமும் அன்பாக இருக்கவேண்டியது அவசியம்இதனடிப்படையில் பார்த்தால் நமது மொழியை நம் நேசிப்பதுபோல மற்றவர்களுக்கும் அவர்களது மொழியினை நேசிக்க உரிமை உண்டு. அதனை நாம் மதிக்க வேண்டும். ஆனால் ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது கிறிஸ்தவ கட்டளைக்கு முரணானது

நாம் இன்று இந்தப் பரந்த உலகத்தில், ஆசியா கண்டத்தில், இந்தியப் பெருநாட்டின் தென்பகுதியில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில், குறிப்பிட்ட ஒரு இனத்தில் , குறிப்பிட்ட ஒரு தாய் தந்தையருக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வேண்டுமென்பது  தேவனது முன்குறித்தல்அதன்படி நாம் பிறந்துள்ளோம்

மட்டுமல்ல, சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணியுள்ளார் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. குறிப்பிட்ட வகை இரத்தம் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு ஒரு மாதிரிதான் உள்ளது. உதாரணமாக பி பாசிட்டிவ் வகை இரத்தமுள்ள ஒரு இந்தியனுக்கு அதே பி பாசிட்டிவ் வகை இரத்தமுள்ள அமெரிக்கனும் ஆபிரிக்கனும் இரத்தம் தானம் அளிக்கலாம். எல்கைப்பிரிவுகள் மனிதர் வகுத்ததே தவிர மனிதர்கள்  குடியிருப்பின் எல்லைகளையும் தேவனே குறித்திருக்கின்றார்

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணிபூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்துமுன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;" ( அப்போஸ்தலருடைய  நடபடிகள் 17 : 26 ) 

எனவே அன்பானவர்களே, நமது மொழி குறித்தோ, ஜாதி குறித்தோ , நாட்டைக் குறித்தோ நாம் பெருமைப்படுவது அவசியமற்றது. தேவன்  நாம் இங்கு  பிறக்கவேண்டுமென்று முன் குறித்ததால்தான் நாம் இன்று இங்கு பிறந்துள்ளோமே தவிர அவர் வேறு இடத்தில நம்மைப் பிறக்கச்  செய்திருந்தால் நாம் அங்கு பிறந்திருப்போம்இன்று இந்த எண்ணம் இல்லாததால்தான் நாட்டில் பல்வேறு கலவரங்கள் ஏற்படுகின்றன.

உலகின் முதல் மொழி எங்கள் மொழிதான் என்று பெருமை நாம் பேசிக்கொள்ளலாம். அப்படியே  இருந்தாலும் அதனால் வேறு என்ன சாதித்துவிடப்போகிறோம் ? தமிழகத்தின் வறுமை ஒழிந்துவிடுமா?அவலட்சண ஆபாச செயல்பாடுகள் நாட்டில் குறைந்துவிடுமா? மேலும் "முந்தினோர் பிந்தினோராகவும் பிந்தினோர் முந்தினோராகவும் இருப்பர்".  என்று இயேசு கிறிஸ்து கூறியதை 'நமது மொழிதான் முதன்மையானது' என்று கூறுவோர் மறந்துவிடக்கூடாது. அன்பானவர்களே, எப்போதுமே தேவனுடைய பார்வை வேறு மனிதர்கள் பார்வை வேறு. "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்;"(  1 சாமுவேல் 16 : 7 ) என்று தேவன் கூறவில்லையா

இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் " நான் உலகின் முதல் மொழியாகிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன்" என்று கூறி நரகத்துக்குத் தப்பிக்க முடியுமா? தேவன் நமது வாழ்க்கையைப் பார்க்கின்றார்.  ஆம் அன்பானவர்களே, குறுகிய மனநிலை நம்மிடமிருந்து அகன்றால் அது நாம் கிறிஸ்துவுக்குள்  இருக்கின்றோம் என்பதற்கு ஒரு அடையாளம். மேன்மைபாராட்டுகிறவன் தான் கர்த்தரை  அறிந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்.  

இதுபோலவே, நான் பாரம்பரிய கிறிஸ்தவன் என்பதிலோ, நான் ஆவிக்குரிய  சபைக்குச் செல்கின்றேன் என்பதிலோ ஒரு பெருமையும் இல்லை.  கிறிஸ்துவுக்குள்  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் புது  பிறப்பாக மாறுவதே முக்கியம்.  அப்படிப் புது பிறப்பு அல்லது மறுபிறப்பு அடைந்தவன் தன்னைக்குறித்தோ தனது இனம், மொழி, பாரம்பரியம் குறித்தோ  மேன்மை பாராட்டமாட்டான்.    

குறுகிய மனப்பான்மையினைக்  களைந்து தேவனது பார்வையில் அனைத்தையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அதற்கு முதலில் தேவனது இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவதற்கு முயலவேண்டும். நமது பார்வைகளும் உலக நடப்புகளைக்குறித்த நமது எண்ணங்களும் அப்போது மாறும்பிறரை வெறுக்கும் மனநிலை மறையும்.  அப்போது மட்டுமே தேவனது ஆசீர்வாதத்தினை நாம் பெற முடியும்