பாபிலோனில் கர்த்தரது சித்தம் செய்தல்

பாபிலோனில் கர்த்தரது  சித்தம் செய்தல்

                                   - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ன்று நமக்கு  வாழ்க்கையில் பலப் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து நம்மை அடிமைப்படுத்தலாம். நமக்கு  எதிரானச் செயலில் சிலர் ஈடுபடலாம். நாட்டை ஆளும் அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படலாம்,  நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சிலர் நமக்கு எதிராக மேலதிகாரிகளுக்கு நம்மைக்குறித்து குற்றச்சாட்டுகளைக் கூறலாம். ஆனால் கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றவன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் அதாவது அவனது வாழ்வில் பாபிலோன் போன்ற ஒரு சிறைப்பட்ட வாழ்க்கை வந்தாலும் அவருக்குச் சித்தமானதையே செய்வான்.  பிரச்னை வந்துவிட்டது, பணத்தேவை வந்துவிட்டது என்று  பணியிடத்தில் லஞ்சம் , வாங்கமாட்டான். குறுக்கு வழியில் ஆதாயம் தேடமாட்டான். கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமான பேச்சு மற்றும் செயல்களில் ஈடுபடமாட்டான். . மாறாகக் கர்த்தருக்குச் சித்தமானதையே செய்வான்.. 

இதனைத்தான் ஏசாயா மூலம் தேவன்  கூறுகின்றார்,  "நீங்களெல்லாரும்   கூடிவந்து  கேளுங்கள்;   கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்கு சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்அவன்  புயம்   கல்தேயரின்மேல்    இருக்கும்  என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?" (  ஏசாயா 48 : 14 )

பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றதுஇங்கு தேவன் நமக்கு உணர்த்துவதுஒருவன்  கர்த்தருக்குப்                      பிரியமான  வாழ்க்கை  வாழ்ந்தால் அவன் அவருக்குச் சித்தமானதை                 எத்தகைய     சூழ்நிலை    வந்தாலும்  அங்கும் செய்து  அவரதுநாமத்தை    மகிமைப்படுத்துவான்இடமோ   பிரச்சனைகளோ கர்த்தருக்குப் பிரியமாக  நடப்பவனைத்  தடைசெய்ய முடியாது. மட்டுமல்ல, அந்த இடத்தில்  தேவன் அவனை மற்றவர்களுக்கு மேலாக வைப்பார்.

ஏசாயா கூறிய இந்த வசனம் தானியேலுக்கு அப்படியே நிறைவேறியதை நாம் பார்க்கலாம். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் ஆண்டு நேபுகாத்நேச்சார் படையெடுத்துவந்து எருசலேம் தேவாலயத்திலுள்ள அனைத்துப்  பொன்னையும் வெள்ளியையும் கொள்ளையிட்டு, மக்களையும் கைதுசெய்து அடிமையாகப்  பாபிலோனுக்கு (காலத்தேயர் தேசத்துக்குகொண்டுசென்றான். (தானியேல் - 1) அப்படிக் கொண்டு போகப்பட்டவர்களில் தானியேல் ஒருவர்.

ஆனால் தேவன் அங்கு பெரிய செயல்புரிந்தார்நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அவன் அறிஞர்களைக் கூப்பிட்டு, "நான் ஒரு கனவு கண்டேன் எனக்கு நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் கூறவேண்டும்" எனக் கட்டளையிட்டான். அறிஞர்கள் ராஜாவிடம், "ராஜாவே நீர் கனவினைக்  கூறும் நாங்கள் அப்போது அதன் பொருளைக் கூறுவோம்என்றனர்ராஜா "இல்லை, நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் நீங்கள் கூறவேண்டும்" என்று கூறினான். "இது எந்த மனிதனலும் முடியாது தேவர்களால்தான் முடியும்" என்று கூறிவிட்டனர் அறிஞர்கள்

ஆனால் தானியேல் ராஜா கண்ட கனவினையும் அதன் பொருளையும் சரியாகக்  கூறினார்ஆம், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்  என்ற வசனத்தின்படி தான் அடிமையாக இருந்த  பாபிலோனில் தானியேல் இதனைச் செய்தார்.  

மட்டுமல்ல இந்த வசனம் கூறுகின்றது, "அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும்" என்றுஅதன்படி தானியேல் ராஜாவின்  கனவையும் அதன் விளக்கத்தையும் கூறியதால்,  "ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்". (  தானியேல் 2 : 48 )

இன்று நாம் வாழும் நாட்டில் பல சூழ்நிலைகள் நம்மை அடிமைப்படுத்தியுள்ளன. அரசியல் நிலைகள் உத்தமமான கிறிஸ்தவர்களுக்குச்  . சாதகமாக இல்லை.  பல வேளைகளில் நாமும் பாபிலோனில் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்ததுபோல வாழ்கின்றோம்.

அன்பானவர்களே, ஏசாயாவின் தீர்க்கதரிசனம், "கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்பது. நாமும் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால் தானியேலுக்கு நிறைவேறியதுபோல இந்தத் தீர்க்கதரிசனம் நமது வாழ்க்கையிலும் நிறைவேறும். நமது புயம் கல்தேயரின்மேல் (நமது எதிரிகள்மேல்) வெற்றிபெற்றதாக இருக்கும்ஆம் , எந்தவித அசாதாரணச் சூழ்நிலையிலும்  நாம் வெற்றிபெறமுடியும்.

"கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்று இந்த வசனம் கூறுவதுபோல முதலில் கர்த்தருக்குப்  பிரியமானவன் எனும் நிலையினை நாம்  பெறவேண்டும். இன்று துன்மார்க்க வாழ்க்கை வாழும் போலி கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் கர்த்தருடைய  சித்தம் இன்னதென்று தெரியாமலேயே செயல்பட முயல்கின்றனர். 

கிறிஸ்துவை அறியாத பெயர் கிறிஸ்தவர்கள், அல்லது தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மாம்சீக கிறிஸ்தவர்கள், போலி ஆவிக்குரிய சபை ஊழியர்கள்,  இன்று தேவையில்லாமல் எதிர் கருத்து கொண்ட மதத்தினரையும்  எதிர் கருத்து கொண்ட அரசியல் கட்சியினரையும் தேவையில்லாமல் எதிர்த்து கிறிஸ்தவ முறைமைகளை எதிரான கருத்துக்களைக் கூறுவதும்  செயல்படுவதும் பலப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றது.

ஆனால், எனக்குத் தெரிந்த பல உண்மையான ஊழியர்களும் ஆவிக்குரிய நண்பர்களும் இந்த வசனத்தின்படி கர்த்தருக்குச் சித்தமானதை இந்த அசாதாரண  சூழ்நிலையிலும் செய்து கர்த்தரது  நாமத்தை மகிமைப்படுத்தி வருகின்றனர். இந்த வசனம் இன்றும் உண்மையாகச் செயல்புரிவதைக் காண முடிகின்றது. 

வேதாகம வசனங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. அவை ஜீவனுள்ள தேவ வார்த்தைகள். அன்பானவர்களே,  பாவ மன்னிப்பைப் பெற்று, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்; அவருக்குச் சித்தமானதை பாபிலோன்போன்ற எந்த இக்கட்டானச் சூழ்நிலையிலும் செய்து தேவ நாமத்தை நாம் மகிமைப்படுத்த முடியும்.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்