Monday, November 14, 2022

பொறாமை அதம்பண்ணும்

 ஆதவன் 🖋️ 657 ⛪ நவம்பர் 15,  2022 செவ்வாய்க்கிழமை

"கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்." ( யோபு 5 : 2 )

கோபம்,  பொறாமை எனும் இரண்டு குணங்களைப்பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது. கோபம் வருவதற்கு முக்கிய காரணம் பொறாமைதான். நம்மைவிட மற்றவர்கள் நன்றாக இருப்பது பலருக்குப் பிடிக்காது. இதுவே பொறாமைக்குணம். இப்படிபட்டப் பொறாமை கொள்பவன் தனது பொறாமையை கோபத்தில் வெளிப்படுத்துவான்.

இன்றைய தினசரி பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான பாவக் காரியங்களுக்குப்பின்னால் பொறாமையும் கோபமும் அடங்கியிருப்பதைக் காணலாம். 

தான் காதலிக்கும் பெண் மற்ற ஒருவனுக்குக் கிடைக்கக்கூடாது,  தன்னைவிட மற்றவர்கள் செல்வம் சேர்த்துவிடக்கூடாது, நல்ல ஆடையோ நகைகளையோ அணியக்கூடாது, எந்த இடத்திலும் நானே முன்னால் நிற்கவேண்டும், அடுத்தவர்கள் பதவி பெற்றுவிட்டால் அந்த இடத்தில நாம் இருக்கக்கூடாது, இவைபோன்றவையே பொறாமைக்குணம் கொண்டவர்களது எண்ணங்கள். இப்படிப் பொறாமை கொண்டவர்கள் கோபம் அதிகரிக்கும்போது  துணிந்து எந்தச் செயலையும் செய்வார்கள். 

கொலைகள்,  களவு, அடுத்தவர் சொத்தினை அபகரித்தல், கற்பழிப்பு, ஒருவரைக்குறித்து மேலதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதம் அனுப்புவது,  இவை எல்லாமே பெரும்பாலும் பொறாமையினால் ஏற்படும் கோபத்தின் விளைவுகளே இந்தக் . "கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்."

காயின் தனது சகோதரன் ஆபேலைப் கொலைசெய்யக் காரணம் பொறாமையே. இதனை அப்போஸ்தலரான யோவான், "பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே." ( 1 யோவான்  3 : 12 ) என்று கூறுகின்றார். புத்தியில்லாத அவனது செயல்   கர்த்தரது சாபத்துக்கு ஆளாக்கியது. "உலகத்தில் நிலையற்று அலைந்து திரிகிறவனாயிருப்பாய்" என்று சபித்தார் கர்த்தர்.   

மேலும், பொறாமை, கோபம் போன்ற குணங்கள் மனிதனை உடலளவில்  பாதிக்கும் என்று விஞ்ஞானமும் கூறுகின்றது. இரத்தக்கொதிப்பு,  இருதய நோய்கள், வயிறு சம்பந்தமான சில நோய்கள் ஏற்பட கோபமும் பொறாமையும் காரணமாயிருக்கின்றன. 

"பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதன் பண்ணும் என்பதற்கு  வதைக்கும் என்று பொருள். இதனை நாம் For wrath killeth the foolish man, and envy slayeth the silly one என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிக்கின்றோம்.  

பொறாமை பிசாசின் குணம். ஆதியில் தேவனோடு இருந்த லூசிபர் பெருமை, பொறாமை எனும் பாவத்தால்தான் நரகத்தில் தள்ளப்பட்டான். தேவனுக்குக் கிடைக்கும் ஆராதனையைக் கண்டு பொறாமைகொண்டான். அதுபோல  தனக்கும் ஆராதனை கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்த்தான். பொறாமையால் அழிந்தான்.  

அன்பானவர்களே, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் நம்மிடம் இருப்பதை உள்ளத்தின் உணர்ந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். இத்தகைய குணங்களை இருதயத்தில் வைத்துக்கொண்டு நாம் செய்யும் ஆராதனைகளும், கொடுக்கும் காணிக்கைகளும் கர்த்தருக்கு ஏற்புடையவை அல்ல.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Envy slayeth

 AATHAVAN 🖋️ 657 ⛪ November 15, 2022 Tuesday

"For wrath killeth the foolish man, and envy slayeth the silly one." ( Job 5 : 2 )

Today's verse talks about the two unwanted qualities of men, anger and jealousy. Jealousy is the main cause of anger. Many people don't like when others are better than them in worldly affairs. This is jealousy. Such a jealous person expresses his jealousy in anger.

Jealousy and anger can be seen behind most of the sinful things that appear in today's daily papers.

Jealousy occurs when the pretty woman one loves is given to someone else, when others add wealth, seeing others wearing nice clothes or jewelry, expecting honour and importance in all places and cannot bear if others get such position or honour,  these are the thoughts and acts of jealous people. Such jealous people will dare to do anything when their anger increases.

Murders, thefts, usurping other people's property, rape, sending complaint letters about someone in certain position to superiors, all these are mostly the result of anger caused by jealousy. But Bible says, "wrath killeth the foolish man, and envy slayeth the silly one." 

Cain killed his brother Abel out of jealousy. The apostle John writes, "Not as Cain, who was of that wicked one, and slew his brother. And wherefore slew he him? Because his own works were evil, and his brother's righteous." ( 1 John  3 : 12 ) His unwise action made him cursed by God. "You shall be a restless wanderer in the world," cursed the Lord.

Science also says that qualities like jealousy and anger affect a person physically. Anger and jealousy are the causes of blood clotting, heart diseases and some diseases related to stomach.

Today's verse says, "envy slayeth the silly one." Its means, envy will destroy a man bit by bit until completely destroying him. 

Jealousy is the devil's character. Lucifer, who was with God in the beginning, was cast into hell because of the sin of pride and envy. He was jealous of the worship that God was getting. He also expected to receive worship in the same way. He was destroyed by jealousy.

Beloved, if we feel in our heart that we have qualities like jealousy and anger, let us ask God for forgiveness. The prayers and offerings we make with such qualities in our hearts are not acceptable to the Lord.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Sunday, November 13, 2022

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்

 ஆதவன் 🖋️ 656 ⛪ நவம்பர் 14,  2022 திங்கள்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." ( சங்கீதம் 25 : 13 )

எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்க இருப்பதை அறிந்துகொள்வதில் எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் தேவன் மனிதர்களது எதிர்காலத்தை மறைவாகவே வைத்துள்ளார். ஆனால் அதனை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் பல விதங்களில் முயல்கின்றனர். மரித்த ஆவிகளிடம் குறி கேட்கின்றனர், குறிசொல்பவர்களையும், ஜோசியர்களையும் நாடி ஓடுகின்றனர். 

ஜோசியர்கள் கூறும் காரியங்கள் சில வேளைகளில் உண்மைபோலத் தோன்றும். காரணம் அவர்களில் பலர் நமது கடந்த காலத்தைக்குறித்துச் சரியாகச் சொல்வதுண்டு. அசுத்த ஆவிகளின் வல்லமைகளால் இது சாத்தியமாகின்றது. ஆனால், நமது எதிர்காலம் குறித்து நம்மை உருவாக்கிய கர்த்தர் மட்டுமே அறிவார். 

இன்றைய வசனத்தில் சங்கீத ஆசிரியர், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றார். அதாவது, நாம் கர்த்தருக்குப் பயப்படும் ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அவர் நமக்கு நாம் தெரிந்து நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார். நமக்கு வாழ்க்கையில் அவர் வைத்துள்ள சித்தத்தை வெளிப்படுத்துவார். 

ஜோசியக்காரர்கள் கூறுவதுபோல தேவன் கூறுவதில்லை. மாறாக, நம்மைக்குறித்த அவனது சித்தத்தை மட்டும் வெளிப்படுத்துவார். ஆபிரகாமிடம் இப்படித்தான் கூறினார். "உன் சந்ததியைக் கடற்கரை மணலைப்போலவும் வானத்து விண்மீன்களைப்போலவும் பெருகச் செய்வேன் என்று கூறினார். அதனை விசுவாசித்து ஆபிரகாம் தனது வாழ்க்கையை எதிர்கொண்டார். அதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றது.

அதுமட்டுமல்ல, "அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." என்று இந்த வசனம் கூறுகின்றது. கர்த்தருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழும்போது நமது ஆத்துமா நன்மைகளைக் காணும். மட்டுமல்ல, நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்கூட நல்லதொரு வாழ்க்கை வாழும். அதனையே "அவன் சந்ததி" என்று இன்றைய வசனத்தில்  கூறப்பட்டுள்ளது.   

அன்பானவர்களே, நாம் கர்த்தருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழும்போது மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு. விசுவாசத்தோடு கர்த்தரது  வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்த ஆபிரகாமை நினைத்துக்கொள்வோம். ஒரு தனி மனிதனாக இருந்த அவனை தேவன் ஒரு மிகப்பெரிய வலுவான தேசமாகவே மாற்றினார். இன்றைய வசனம் கூறுவதுபோல அவனது சந்ததி ஆசீர்வாதமான சந்ததியாக விளங்குகின்றது. 

கர்த்தருக்குப் பயப்படுத்தல் என்பது ஒருகாவல்துறை அதிகாரியைப்பார்த்தோ அல்லது ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்தோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. மாறாக, தீமைக்கு விலகி வாழ்வதே கர்த்தருக்குப் பயப்படுதல். 

அப்படி நாம் வாழும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல  தேவன் நமக்காக ஏற்பாடு செய்துள்ள வழியை அதாவது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்துவார். நமது சந்ததியும் இந்த உலகத்தில் ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை வாழும். இதனைத் தவிர்த்து அநியாய வாழ்க்கை வாழ்ந்து அதிக பொருள் சேர்த்து வைப்பதால் நமது சந்ததி வாழாது. கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம். மெய்யான  ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Fear of the Lord

 AATHAVAN 🖋️ 656 ⛪ November 14, 2022 Monday

"What man is he that feareth the LORD? him shall he teach in the way that he shall choose. His soul shall dwell at ease; and his seed shall inherit the earth. ( Psalms 25 : 12,13 )

Everyone has a desire to know what will happen to them in the future. But God has kept the future of mankind hidden. But in the interest of knowing it, many people try in many ways. They ask for signs from the spirits of the dead, seek fortune-tellers and soothsayers.

The things that astrologers say sometimes seem true. Because many of them are right about our past. This is made possible by the powers of unclean spirits. But only the Lord who created us knows about our future.

In today's verse, the psalmist says, "he that feareth the LORD? him shall he teach in the way that he shall choose." That is, if we live a righteous life fearing the Lord, He will show us the way we should know and walk. He will reveal His will for our lives.

God does not say as soothsayers say. Rather, He will only reveal His will for us. This is what he told Abraham. He said, "I will multiply your descendants like the sand of the seashore and like the stars of the sky." Abraham faced his life believing that. Today's verse says the same, "he that feareth the LORD? him shall he teach in the way that he shall choose."

Moreover, this verse says "His soul shall dwell at ease; and his seed shall inherit the earth." Our soul will see benefits when we live a life fearing the Lord. Not only that, our children and grandchildren will also live a better life. That is what is said in today's verse as "His seed".

Beloved, there is a great blessing when we live a life worthy of the Lord. Let us think of Abraham who obeyed God's word with faith. God turned him from a single man into a mighty nation. As today's verse says, his offspring are a blessed offspring.

Fear of the Lord does not mean a man's fear of a police officer or a student's fear of a teacher. Rather, fearing the Lord is living away from evil.

When we live like that, as today's verse says, God will reveal the way He has arranged for us, that is, the plan for the future. Our descendants will live a blessed life in this world. Apart from this, our progeny will not live because we live an unjust life and accumulate more material. Let's live a God-fearing life. Let us inherit true blessings.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Saturday, November 12, 2022

நித்திய விவாகம்

 ஆதவன் 🖋️ 655 ⛪ நவம்பர் 13,  2022 ஞாயிற்றுக்கிழமை

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." ( ஓசியா 2 : 19 )

தேவனுக்கும் மனிதனுக்குமான உறவு காதலன் காதலி உறவுபோலவும், கணவன் மனைவி உறவுபோலவும் உள்ளது. வேதாகமத்தில் பல வசனங்களை நாம் இதற்கு உதாரணம் கூறலாம். உன்னதப்பாட்டுப் புத்தகம் முழுவதும் இப்படியே எழுதப்பட்டுள்ளது.  

வெளிப்படுத்தின விசேஷத்தில் மணவாளன் மணவாட்டி என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபையும் விசுவாசிகளுமே மணவாட்டிகள். கிறிஸ்துவே மணவாளன். 

இன்று கர்த்தர் நமக்கு ஒரு வாக்குறுதி தருகின்றார். என்னோடு "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" என்கின்றார். நான் உன்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஒருவர் மற்றவரிடம் கூறுவதுபோல உள்ளது இது. அதாவது நம்மை அவருக்கு உரியவர்களாக மாற்றுவேன் என்கின்றார். மீட்பு அனுபவம் ஒருவர் பெறுகிறார் என்றால், அவரை தேவன் தனது மணவாட்டியாகத் தெரிந்துள்ளார் என்று பொருள்.

கிறிஸ்து ஒருவரைத் தெரிந்துகொள்வது அவரது கிருபையினால்தான். இதனையே இன்றைய வசனத்தில், "நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்று கூறப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும் கூறியுள்ளார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." ( எபேசியர் 2 : 8 ) ஆம், கிறிஸ்து நம்மைத் தெரிந்துகொண்டு அவரை நமக்கு வெளிப்படுத்துவது அவரது கிருபையினால்தான். 

இன்றைய வசனத்தில் நம்மை அவருக்கு மணவாட்டியாக அவர் தெரிந்துகொள்வேன் என்று கூறுகின்றார்.  "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 20 )

அன்பானவர்களே, இந்த உலகத்திலுள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரிய ஆசீர்வாதம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதுதான். நாம் ஒவ்வொருவரையுமே தனக்கு ஏற்புடையவர்களாக தெரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகின்றார். ஆனால் அதற்கு நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். நாம் நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  நமது உள்ளக்  கதவினை அவர் தட்டிக்கொண்டே இருக்கின்றார். நமது உள்ளமாகிய கதவினைத் திறக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

இயேசு நமது இதயக் கதவை எப்படித் தட்டுவார் என்று நீங்கள் எண்ணலாம்.  இரட்சிப்புக்கேற்ற பிரசங்கங்கள், கட்டுரைகள் இவற்றை நாம் கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் நமது இருதயத்தைத் தட்டுகின்றார். அவற்றுக்குச் செவிகொடுக்கும்போது அவர் நம்மிடம் வருகின்றார். 

அன்பானவர்களே, "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயார்; அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Betroth for ever

 AATHAVAN 🖋️ 655 ⛪ November 13, 2022 Sunday

"And I will betroth thee unto me for ever; yea, I will betroth thee unto me in righteousness, and in judgment, and in lovingkindness, and in mercies." ( Hosea 2 : 19 )

The relationship between God and man is like that of lovers and that of a husband and wife. We can cite many verses in the Bible as examples of this. This is how the whole book of Song of Songs is written.

It is said in the Book of Revelation, Bridegroom and Bride. Christ's church and believers are the Bride. Christ is the Bridegroom.

Today the Lord gives us a promise. He says to us, "I will betroth thee unto me for ever." It is like one saying to another that I am ready to accept you as my life partner. That is, He says that He will make us His own. If one experiences redemption, it means that God knows him / her as His bride.

We can know Christ by His grace only. This is what is said in today's verse, "I will betroth thee unto me in righteousness, and in judgment, and in lovingkindness, and in mercies." This is what the Apostle Paul also said. "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God" ( Ephesians 2 : 8 ) Yes, it is by His grace that Christ knows us and reveals Himself to us.

In today's verse he says that he will know us as his bride. "I will even betroth thee unto me in faithfulness: and thou shalt know the LORD.( Hosea 2 : 20 )

Beloved, the greatest of all blessings in this world is to know Christ. Christ wants to know each of us as acceptable to Him. But that requires our sins to be forgiven. It is necessary that we open our hearts to him without any hesitation. He keeps knocking on our inner door. All we have to do is to open the door for him to enter in. 

"Behold, I stand at the door, and knock: if any man hear my voice, and open the door, I will come in to him, and will sup with him, and he with me." ( Revelation 3 : 20 )

You may think how Jesus knocks on the door of our hearts? How can we know this? Dears, He touches our heart when we hear and read salvation sermons and articles. He comes to us when we listen to them and obey.

Beloved, "I will betroth thee unto me for ever; yea, I will betroth thee unto me in righteousness, and in judgment, and in lovingkindness, and in mercies." Says the Lord Jesus Christ.

He is ready to accept us; Are we ready to receive Him?

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712


Friday, November 11, 2022

கர்த்தரது வார்த்தை

 ஆதவன் 🖋️ 654 ⛪ நவம்பர் 12,  2022 சனிக்கிழமை

"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 )

கர்த்தருடைய வார்த்தையின் வல்லமைக்குக் காரணம் என்ன என்பதை இன்றைய வசனம் விளக்குகின்றது.  அதாவது, மனிதர்களது வாயிலிருந்த்து வருவனபோன்ற வார்த்தைகளல்ல கர்த்தரிடம் வருவது. அவை  சுத்தமான வார்த்தைகள். ஏழுமுறை உலையிலிட்டு உருக்கிய வெள்ளியைப்போன்றவை அவை. அதாவது, கர்த்தரது  வார்த்தையில் என்தப்பழுதும் இருபத்தில்லை. கவர்ச்சியோ ஏமாற்றோ இருப்பதில்லை. 

மனிதர்கள் நாம் பல்வேறு வார்த்தைகளைப் பேசுகின்றோம். ஆனால் நமது இதயத்து எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளைப் பலவேளைகளில் வெளியில் பேச முடிவதில்லை. ஆனால் கர்த்தரது  வார்த்தைகள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கின்றன.  

மட்டுமல்ல, அவர் என்ன பேசுகின்றாரோ அல்லது நினைக்கின்றாரோ அது அப்படியே எந்த மறைவுமின்றி வெளிவரும். காரணம் அவர் யாருக்கும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஆம், எனவே, "கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 33 : 4 )

கர்த்தரது வார்த்தைகள் இப்படி உண்மையும் உத்தமுமானவையாக இருப்பதால் அந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிவரும்போது அவர் என்ன நினைத்துச் சொல்கின்றாரோ அதுவாகவே வெளிவருகின்றது. உதாரணமாக நாம் கல்லைப் பார்த்துக் கல்  என்று சொல்கின்றோம். ஆனால் அவர் கல் என்று சொன்னால், அது கல்லாகவே வெளிவருகின்றது. இப்படித்தான் அவர் உலகினைப் படைத்தார். அவர் தனது வார்த்தையால் உலகினைப் படைத்தார் என்று வாசிக்கின்றோம். அவர் "உண்டாகட்டும்" என்று சொல்ல அனைத்தும் உண்டாயின.

"கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது." ( சங்கீதம் 33 : 6 )

அந்த தேவனுடைய வார்த்தைதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வேதம் கூறுகின்றது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என்று வாசிக்கின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையில் வல்லமை இருந்தது. அவர் சொல்ல அனைத்தும் நடந்தன. அவர் பிதாவாகிய தேவனுக்கு ஒப்பானவராகவே இருந்தார். 

"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 )

அன்பானவர்களே, நாம் அவரைப்போல நூறு சதவிகிதம் சுத்தச்  சொற்களை பேசாவிட்டாலும் அப்படிப் பேச நாம் முயன்றால் நமக்கு அவர் உதவுவார். சுத்தமான சொற்களைப் பேசும்போதுதான் நமது வார்த்தையில் வல்லமை வெளிப்படும்.

ஆண்டவரே வல்லமை தாரும் என்று ஜெபிக்கும் பலரும் இதனை எண்ணுவதில்லை. ஜெபித்துவிட்டு நமது வார்த்தையில் எந்த மாற்றமுமின்றி வாழ்வோமானால் நமது வார்த்தைகள் வெற்று வார்தைகளாகத்தான் இருக்கும். நமது வார்த்தையில் வல்லமை இருந்தால்தான் மற்றவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது அது அவர்களது இருதயத்தில் மாற்றத்தை உண்டாக்கும். 

நமது நாவினை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே, உம்மைப் போல சுத்த வார்த்தைகளைப் பேசுவதற்கு கிருபையினைத்தாரும் என்று வேண்டுவோம்.  அப்போது நமது வார்த்தைகளைத்  தேவன் கனம்பண்ணுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19

" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026       "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...